Jump to content

விடுதலைப் புலிகள் மீண்டும் வந்தனரா? - சுபத்ரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ltte.jpg

முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டு, புலிகள் இயக்கத்தின் இராணுவ வல்லாண்மை முற்றாகவே அழிக்கப்பட்டு விட்டதாக, 2009 மே மாதம் அரசாங்கம் பிரகடனம் செய்தது.

ஆனால், இன்று வரை, புலிகளை வைத்து பூச்சாண்டி காட்டும் பழக்கத்தில் இருந்து மட்டும் அரசாங்கத்தினால் விடுபட முடியவில்லை.

எதற்கெடுத்தாலும் புலிகள் என்று குற்றஞ்சாட்டும் கடந்த முப்பதாண்டு காலபழக்க தோஷத்தில் இருந்து புலிகளால் ஏற்பட்ட காய்ச்சலில் இருந்து – அரசாங்கம் இன்னும் மீளவில்லை.

மனிதஉரிமைகள் பற்றிப் பேசினால், உடனடியாக அவர்களுக்குப் புலிகள் நிதி வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படும். அரசுக்கு எதிரான ஏதாவது கருத்தை முன்வைத்தால் புலிகளோடு முடிச்சுப் போட்டு குற்றம்சாட்டப்படும்.

இது தான் போர் முடிந்த – புலிகள் அழிக்கப்பட்ட – மூன்றாண்டுகளில் நடந்து வருகிறது.

புலிகளை தமிழ் மக்கள் மறந்து போக நினைத்தாலும், அரசாங்கம் அதற்கு அனுமதிக்காது என்றளவுக்கு புலிகளை வைத்துப் பிரசாரம் நடத்தப்படுகிறது.

ஜெனீவா தீர்மானத்துக்கும் வெளிநாடுகளில் உள்ள புலிகளே பின்னணியில் இருந்ததாகவும், அவர்கள் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய பொய்யான தகவல்களின் அடிப்படையில் தான், அமெரிக்கா ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததாகவும் அரசாங்கம் கூறியது.

அழிந்துபோன புலிகள் இயக்கம் அமெரிக்காவையே வளைத்துப் போடும் அளவுக்கு வெளிநாடுகளில் செயற்படுகிறது என்று கூறினால் – அது அரசாங்கத்துக்குத் தான் அவமானம் என்பதை அரசில் உள்ளவர்கள் எவரும் கருத்தில் கொள்ளவில்லை.

இந்தியாவில் பயிற்சி பெற்ற 150 விடுதலைப் புலிகள் நாடு திரும்பியுள்ளதாகவும், சீர்குலைவு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆங்கில, சிங்கள ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் கசிய விடப்பட்டன.

இந்தச் செய்திகளின் பின்னணியில் இருந்தது அரச புலனாய்வுச் சேவை தான். இதனை அந்த ஊடகங்களே தமது செய்தியில் ஆதாரம் காட்டியிருந்தன. இந்தச் செய்திகளுக்கு வலுவூட்டும் விதத்தில் திருகோணமலையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர். ்

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், கடந்த மாத நடுப்பகுதியில் குச்சவெளிப் பகுதியில் இடம்பெற்ற ஈ.பி.டி.பி உறுப்பினர் முத்து எனப்படும் ரகுநாதனின் கொலை தான்.

அவரது சடலம் அருகே கிடந்த – ’எல்.ரி.ரி.ஈ’ என்ற ஒரு சிறுகுறிப்புத் தான் மீண்டும் புலிப்பூச்சாண்டி காட்டப்படக் காரணமானது.

கொலை செய்தவர்கள் திசை திருப்புவதற்காக இவ்வாறு செய்திருக்கலாம். இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், அவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சிப் பெற்றுத் திரும்பியதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் 3 இரகசிய முகாம்களில் பயிற்சி பெற்ற 150 புலிகள் நாசவேலைகளை மேற்கொள்ள வடக்கு, கிழக்கில் பதுங்கியுள்ளதாகவும், அவர்களே ஈ.பி.டி.பி உறுப்பினரையும் வேறு பலரையும் கொலை செய்திருப்பதாக நம்பப்படுவதாகவும் கதை கட்டப்பட்டது.

கடந்த 5 மாதங்களில் காணாமற்போயுள்ள 30 பேர் பற்றிய தகவல்களைத் தருமாறு ஜெனிவாவில் அரசிடம் கோரப்பட்டிருந்தது. இதுபற்றி அமெரிக்காவும் தனியாக விளக்கம் கோரியுள்ளது.

அதைவிடப் போருக்குப் பின்னர் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள், கொலைகள் பற்றிய கேள்விகளும் அரசதரப்புக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், ஈ.பி.டி.பி உறுப்பினரை மட்டுமன்றி, வேறு பலரையும் புலிகளே கொலை செய்திருக்கலாம் என்ற செய்தியானது, எல்லாப் பழிகளையும் புலிகள் மீது போட்டுத் தப்பிக் கொள்ளும் தந்திரமாகவும் கருதலாம்.

தமிழ்நாட்டில் இரகசிய முகாம்களில் புலிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியானதும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், அது அடிப்படையற்ற – முற்றிலும் தவறான – ஆதாரமற்ற செய்தி என்று மறுத்தது.

தமிழ்நாடு காவல்துறை ஆணையாளரும், மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரமும் இந்த செய்தியை நிராகரித்தனர்.

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்த விவகாரத்தினால், இந்தியா தொடர்பாக, கொழும்பு அவ்வளவு திருப்தியான நிலையில் இல்லை.

இத்தகைய நிலையில் இந்தச் செய்தி புதுடெல்லியை அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தம்மைச் சீண்டிப் பார்க்கும் வேலையாக இருக்கலாம் என்று புதுடெல்லி சந்தேகித்திருந்தாலும் ஆச்சரியமில்லை…

ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்ததற்காக, இந்தியா மீது கோபமும் இல்லை, குறையும் இல்லை, உறவுகளில் மாற்றமும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் கூறினாலும், ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர், இருநாடுகளுக்கும் இடையில் வெளித் தெரியாத இடைவெளி ஒன்று இருக்கவே செய்கிறது.

தமிழ்நாட்டின் நெருக்கடியின் பேரில் தான் ஜெனிவா தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது என்ற சீற்றத்தின் வெளிப்பாடாக, புலிகளுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கலாம்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால், அது பாரதூரமான விடயமாகவே பார்க்கப்படும். இது மத்திய அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதனை நன்றாகக் கணித்தே, இந்தச் செய்தி கசிய விடப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத்துறையே இந்த சந்தேகத்தை முதலில் வெளியிட்டது. பின்னர், அவ்வாறு இல்லை இராணுவப் பேச்சாளர் மறுத்தாலும், இந்தத் தகவலை வெளியிட்ட ஊடகங்களுக்கு எந்த மறுப்பையும் அனுப்பவில்லை.

அதைவிட, இந்திய – இலங்கைப் புலனாய்வுத் துறைகளுக்கு இடையில் நெருக்கமான உறவுகள் பேணப்படுகின்ற தகவல்கள் பரிமாறப்படுகின்ற போதும், இப்படி ஒரு செய்தி இந்தியாவுக்கு கொடுக்கப்படவில்லை.

ஊடகங்களில் செய்தி கசிய விடப்பட்டது தான், இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணம். இந்தியாவை குறிப்பாக, தமிழ்நாட்டை சிக்கலில் மாட்டி வைக்கவே இந்த முயற்சி. அடுத்து, இந்தப் பிரசாரத்தின் பின்னர் மீண்டும் புலிகள் வந்து விட்டதாக தேடுதல்களும் நடத்தப்பட்டன.

ஜெனீவா தீர்மானம் படைக்குறைப்பை வலியுறுத்த, அரசாங்கமோ மீண்டும் தேடுதல்களை நடத்தி இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தியது. மீண்டும் புலிகள் வந்து விட்டதாகக் கூறி அரசபடைகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் மக்களைப் பீதி கொள்ள வைக்கும் வகையில் அமைந்தன.

புலிகளின் அடிப்படைக் கட்டுமானங்கள் ஒன்று கூட மிச்சமில்லாமல் துடைத்தழிக்கப்பட்டு விட்ட பின்னர், 150 புலிகள் வந்து குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாக தகவல் வெளியிடப்பட்டது சாதாரணமானதல்ல.

இது தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு புலிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியில் இருந்து அரசாங்கம் இன்னமும் மாறிவிடவில்லை என்பதற்கான உதாரணம்.

இதனை மனதில் கொண்டு தான் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, அழிந்து போன புலிகளைப் பற்றிப் பேசிப் கொண்டிருக்காமல், வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைப் பற்றி பேசுங்கள் என்று சினந்து கொண்டார்.

ஆனாலும் அரசாங்கத்துக்குப் புலிகளை வைத்துப் பூச்சாண்டி காட்டியே பழகிப் போய் விட்டது. தம் மீதான நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் புலிகள் தான் அவர்களுக்கு நினைவில் வருகின்றனர். மாற்று உபாயம் ஒன்று அகப்படும் வரையில் இந்த மாயையில் இருந்து அரசினால் விடுபடவே முடியாது.

http://www.vannionli...-post_8775.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.