Jump to content

தமிழ் கடை முதலாளிக்கும், அவரது மனைவிக்கும் 14 மாதங்கள் சிறைத் தண்டனை


Recommended Posts

தமிழ் கடை முதலாளி அல்பிரேட் ஜீவராஜா, அவரது மனைவி ஆன் ஜீவராஜாவுக்கும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 14 மாதங்கள் சிறைத் தண்டனை Norwich Crown Court ல் வழங்கப்பட்டது.

இவர்களின் வாடிக்கையாளரான 73 வயதுடைய முதியவர் (Gwyn Badham-Davies) ஒருவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாட்டரி ஐந்து இலக்கங்களுடன் £156 659 தொகையக்கு அதிஷ்டசாலியானார். அவர் அல்பிரேட் ஜீவராஜா என்பவரின் கடையில் தனது அதிஷ்டச் சீட்டுடன் சென்றுள்ளார். அங்கு கடைக்காரரின் மனைவியிடம் (ஆன் ஜீவராஜா) தனது சீட்டைக் கொடுத்துள்ளார். ஆனும் சீட்டை அந்த வயதான வாடிக்கையாளரிடம் இருந்து பெற்று, அவர் வெறும் £10 மட்டுமே வென்றதா சொல்லி காசைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு அந்தத் தொகையை ( £156 659) தாம் பெற்றுக் கொள்ள முற்பட்டு இருக்கிறார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு, தாமே அந்தச் சீட்டை வாங்கியதாக £156 659 தொகைக்கு உரிமை கோரியுள்ளார்கள். அதில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அந்த லாட்டரி சீட்டு எங்கே வாங்கியது என்று உரிமை கோரியவர்களால் திட்டவட்டமாகக் கூறமுடியாமல் போய்விட்டது. 14 மாதச் சிறைத்தண்டனை முடியும் வரை இவர்களின் 10 வயது மகளை அவர்களது உறவினர்கள் பராமரித்துக் கொள்ளுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Gwyn Badham-Davies க்கு கிடைக்க வேண்டிய முழுத்தொகையும் அவருக்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மூலம்... http://www.dailymail...y-winnings.html

Link to comment
Share on other sites

£156 659 தொகையக்கு என்ன வான்கலாம் சார்?????? வீடு வான்க கானுமோ :unsure:

அப எனகும் இபிடிதான் நடன்ததோ????????

:( :( :(

வீடு வாங்கலாமோ இல்லையோ... ஒரு நல்ல தமிழ் வாத்தியாரை வைத்து அழகான தமிழைத் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ளலாம்... (சும்மா பகிடிக்குக் கோவிக்கக் கூடாது... :D)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வாங்கலாமோ இல்லையோ... ஒரு நல்ல தமிழ் வாத்தியாரை வைத்து அழகான தமிழைத் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ளலாம்... (சும்மா பகிடிக்குக் கோவிக்கக் கூடாது... :D)

நித்திரை கொள்பவரை எழுப்பமுடியும்

நித்திரைபோல் நடிப்பவரை....???? :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை லட்சம் பவுண்ஸ் பரிசு பெற்றவருக்கு, வெறும் பத்து பவுண்ஸ்சுடன், அல்வா கொடுக்க நினைத்திருக்கிறார்களே..... :o

நல்ல காலம், அந்த வயது போன தம்பதிகள் உசாராக இருந்ததால்.... குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடிந்தது.

இப்படிப் பட்டவர்களின் செய்கையால்.... தமிழ்க் கடைக்கே வெள்ளைக்காரன் வராமல் விடப் போகின்றான்.

Link to comment
Share on other sites

ஒரு வயதான உழைப்பாளியை ஏமாற்றி உள்ளார்கள். கேவலமானவர்கள்.

இன்று தினசரியிலும் வந்தது. இவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ தமிழ் ஆக்கள் காசு பார்க்கிறதில கெட்டிக்காரர்கள். கள்ள மட்டை என்றால் என்ன.. சீட்டு என்றால் என்ன.. இப்படி களவெடுக்கிறது என்றால் என்ன.. உதுகளால இப்ப போற இடமெல்லாம்.. சட்டதிட்டங்களும் கடுமையாகிட்டு வருகுது.

முந்தி எல்லாம் வங்கிக் கணக்குத் திறக்க.. சும்மா ஒரு ஆள் அடையாளம் இருந்தா போதும். இப்ப அதைக் கொண்டுவா.. இதைக் கொண்டுவா.. இரண்டு கிழமை பொறு.. கடவுளே. நம்ம சனத்தில சிலதுகள் செய்யுற கூத்தால எல்லோருக்கும் பாதிப்பு..!

இதுகள் திருந்துங்கள்..என்று நினைக்கிறீங்க...???! :):(

Link to comment
Share on other sites

14 மாதத் தண்டனை போதாது. இவர்களின் பிள்ளை பாவம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.