Jump to content

சித்திரைக்கு யாழ் வருவோம், நாங்கள் நலம்


Recommended Posts

சித்திரைக்கு யாழ் வருவோம், நாங்கள் நலம்.

இது எனக்கு நேரடியாக கிடைத்த தகவல், இதை உங்கள் விமர்ச்னத்துக்கான தரவில்லை, எனது மன திருப்திக்கு தருகின்றேன்,

எனக்கு தெரிந்த அம்மா ஒருவரின் மகன் 10 ற்கு மேற்பட்ட வருடமாக புலிகள் இயக்கத்தில் இருந்தவர், அவர் இறந்து விட்டார் என

கிரிகைகளும் செய்து முடிந்து விட்டது, ஆனால் அவர் இப்போது தொலைபேசி மூலம் அவரது தாயாருக்கு தொடர்புகொண்டு

"நாங்கள் நலம், சித்திரைக்கு யாழ்ப்பாணம் வருவோம், சிறிது பணம் அனுப்பவும்" என்று கூறி இருக்கின்றார், அவர் இன்னும் இலங்கையில் தான் இருக்கிற்ர்,

இதை கேட்டவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியில் தான் இதை அடிக்கிறேன்,

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

தங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்

எல்லோரும் வரணும்

இறைவனை வேண்டுகின்றேன்

எமக்காக போராட கூப்பிடவில்லை

தங்கள் உயிர் இருக்கிறது என்பது போதும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி மகிழ்வாக் இருக்கிறது............பிரிந்தவர் ..... கூடினால் பேசவும் வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்ததும் சிலரை விடுதலை செய்யக்கூடும். எல்லாம் தேர்தல் முடிவில்தான் தங்கியிருக்கின்றது. பலர் சேமமாக இருக்கின்றார்கள்போலத் தெரிகின்றது. நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. எங்கள் காவல் தெய்வங்கள் உயிருடன் இருந்தால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வங்களுக்கு வாழ்த்துக்கள் .....நலமுடன் வருவீர்....தயவு செய்து அவர்கள் வருகையை கொச்சைப்படுத்த வேண்டாம்

Link to comment
Share on other sites

யாருக்கும் சொல்லாமல் மக்களுடன் கலந்து இருப்பது தான் சமயோசிதமானது. இல்லையேல் எப்போதும் ஒட்டுகுழுக்களாலும் அரசபடைகளாலும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கும் சொல்லாமல் மக்களுடன் கலந்து இருப்பது தான் சமயோசிதமானது. இல்லையேல் எப்போதும் ஒட்டுகுழுக்களாலும் அரசபடைகளாலும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கும்.

உண்மை தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தொடங்கப்படலாம் என்பது ஒரு புறமிருக்க, அதைத் தக்க வைப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நிறையவே கடினமான பணிகள் உண்டு. இவ்வளவு பலத்தோடு இருந்தபோதும் எம்மால் எதிரியின் படுகோரமான மனிதப்படுகொலைகளையும், தடைசெய்யப்பட்ட ஆயுதப் பிரயோகத்தையும் தடுக்க முடியாமல் இருந்தது. மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் என்னும்போது, இதே போன்றதொரு அழிவை அவன் தரமாட்டன் என்பது என்ன நிச்சயம்??

இப்படியான அழிவுகளைத் தடுக்கக் கூடிய வகையில் புலம்பெயர் தமிழர்கள் கொண்டிருக்கின்ற சக்தி ஒரு வேளை உதவக் கூடும். எனி வரும் போராட்டம் ஆயுதம் தூக்கித் தான் நடக்க வேண்டும் என்றில்லை. எம் புலம்பெயர் மக்களின் பலத்தாலும் நிச்சயம் முடியும் என்றே நம்புகின்றேன்.

முதலில் உலகத்தை எம் பக்கம் மாற்றுவதற்கு, இளையோர்களாகட்டும், கல்விமான்களாகட்டும், பலம் வாய்ந்த அமைப்புக்களில் வேலை வாய்புத் தேடிச் செல்லுங்கள்.. உங்கள் குழந்தைகளைப் பொறியிலளார் ஆகவும், வைத்தியராகவும் மட்டும் கனவு காணாமல், சட்டத்தினூடும், மனித உரிமைகள் சார்ந்த அமைப்புக்களோடு பணியாற்ற வழி ஏற்படுத்துங்கள். எந்த ஐநாவோ, அல்லது அது சார்ந்த எந்த அமைப்புக்களோ எம் மக்களின் அழிவுக்கு மௌனித்திருந்தனனவோ, அந்த அமைப்புக்களின் செயற்பாட்டில் ஆதிக்கம் செலுத்துவதே பலமாக அமையும்.

இது ஒரு நாள், 2 நாள் செயற்திட்டமல்ல, ஆண்டுகள் பல பிடிக்கலாம். ஆனால் தமிழன் என்பவன் என்றைக்குமே வீழ்ந்து கிடப்பவனல்ல என்பதை யும், அவன் மீண்டும் வளர்ந்து வருவான் என்பதையும் எம்மால் நிச்சயம் நிருபிக்க முடியும்.

முக்கியமான ஊடகத்துறையில் கால்பதிப்பதும் மிக்க முக்கியத்துவமானது. வெறுமனே தமிழ் செய்திகளையே மட்டும் மையமாக நின்று விடாமல் பிறமொழிகளில் கால் பதித்து, அதுக்குள்ளும் ஆதிகக்ம் செலுத்தும் நிலையை அடைய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நாள், 2 நாள் செயற்திட்டமல்ல, ஆண்டுகள் பல பிடிக்கலாம். ஆனால் தமிழன் என்பவன் என்றைக்குமே வீழ்ந்து கிடப்பவனல்ல என்பதை யும், அவன் மீண்டும் வளர்ந்து வருவான் என்பதையும் எம்மால் நிச்சயம் நிருபிக்க முடியும்.

முக்கியமான ஊடகத்துறையில் கால்பதிப்பதும் மிக்க முக்கியத்துவமானது. வெறுமனே தமிழ் செய்திகளையே மட்டும் மையமாக நின்று விடாமல் பிறமொழிகளில் கால் பதித்து, அதுக்குள்ளும் ஆதிகக்ம் செலுத்தும் நிலையை அடைய வேண்டும்

நன்றி தூயவன் பலகாலத்துக்குபின் தங்கள் கருத்துக்கு...

தமிழரின் போராட்டம் தொடரும்

வேறு வழி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி.நீண்ட நாட்களின் பின் தூயவன் ஆக்கபூர்வமான கருத்தோடு மீண்டும் வந்ததற்கு நன்றி.

இன்னுமொரு ஆயதப் போராட்டம் தவிர்க்க முடியாததே.நாம் விரும்பியோ விரும்பாமலோ அது நடந்தால்தான் தமிழினம் ஒற்றுமையாக இருக்கும் என்பதை கடந்த சில மாத சம்பவங்களே சாட்சி.எதிரியை எதிர்க்க மட்டுமல்ல தமிழரை ஒற்றுமைப் படுத்தவும் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக மீண்டும் முன்னெடுக்கப் படலாம்.அரசியல் போராட்டத்தை சர்வதேச அளவில் வலிமையாகச் செய்வோமானால் ஆயதப் போராட்டம் இன்றியே நாம் எமது உரிமைகளைப் பெறலாம்.ஏனெனில் இது வரை நடந்த ஆயுதப்போராட்டமானது தனது உச்சப் பங்களிப்பைச் செய்து விட்டு மௌனித்திருக்கிறது.அதாவது எமது பிரச்சனையைச் சர்வதேச மயப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொய்ய விடாமல் நாம் அரசியல் போராட்டத்தை சர்வதேச சமுகத்துடன் இணைந்து தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.எல்லாவற்றுக்கும் எமக்குத் தேவை ஒற்றுமை.அது நாடு கடந்த தமிழீழமாய் இருந்தால் என்ன வட்டுக்கோட்டைத் தீர்மானமாக இருந்தால் என்ன.எல்லோரும் ஒன்றுபடுவோம்.அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

Link to comment
Share on other sites

ஆயுதப் போராட்டம் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமில்லை. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் தாயக மக்களிடத்திலில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விளக்கமாக எழுதி வருகின்றவர்களையும்

வரவிடாமல் பண்ணாதீர்கள்!!

வாழ்த்துக்கள்

வாத்தியார்

...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவுமில்லை. அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தியும் தாயக மக்களிடத்திலில்லை.

" நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்"

எந்த ஆயுதம் கொண்டு போராடுவது என்பதை நாம் தேர்வு செய்யலாம். எமது போராட்டபாதை என்பது எந்த கோணத்திலும் இருக்கலாம். அகிம்சையாக இருக்கலாம் அதையும் கொஞ்சம் தாண்டி ஜேசுவின் சிர்த்தாந்தம்பேசி மறு கன்னத்தையும் காட்டலாம். நாம் எமது போராட்டத்தை தொடர்வது ஒன்றே குறியென்றால் அதில் ஒன்றை தேர்வு செய்து போராடலாம் அல்லது அடிமைகளாக எவ்வாறு வாழ்வது என்பதற்கு தினம்தினம் தயார் செய்தலும் ஒரு போராட்டம்தான் அந்த போராட்த்தையும் தொடரலாம்.

ஆனால் நாம் எதிரியை வெல்ல வேண்டும் எமது போராட்டம் வெல்ல வேண்டும் என்றால். எங்களது தீர்மானங்கள் எதிரியை வைத்தே வரையபடவேண்டும். "நாம் எந்த ஆயுதத்தை கையிலெடுப்பது என்பதை அவனே தீர்மானிப்பான்". ஆயுத போராட்டம் அழிவுகளை கொடுக்க கூடியது. ஒரு போரில் அழிவு என்பது இரண்டு பகுதிக்கும் இருக்க கூடியது தமிழுழ விடுதலைபோரில் அது தமிழ்பகுதிக்கே உரித்தானதாகவே இருந்தது. எதிரியின் கொடுமைகளை தர்மத்தின் பெயரால் பொறுத்தருள பட்டிருக்கின்றது. போராட்டம் எமது நிலப்பகுதியிலேயே நடத்தபட்டது போர்களங்கள் எமது தெரிவாக இருக்கவில்லை எதிரியின் தேர்வாகவே இருந்தது. கிட்டதட்ட ஒரு தற்காப்பு போரே இதுவரை நடந்தது எதிரியின் அழிவு போரில் இருந்து மக்களையும் போராளிகளையும் பாதுகாப்பது அதற்காக ஒரு பாரிய நிலபரப்பை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற பாதையிலேயே இருந்தது.

கடந்தகால தவறுகள் திருத்தபட வேண்டுமே தவிர போர் வெல்ல வேண்டும் என்றால் ஓரே வழிதான் உண்டு.

போர் வெல்ல வேண்டுமா வேண்டாமா என்பதுதான் விடைகாணபட வேண்டிய கேள்வியே தவிர. இந்த ஜனநாயகம் தலைவிரித்தாடும் முதலாளித்துவ உலகில் வேறந்த தேர்வும் வழியாகது என்று நான் சொல்லவில்லை................ ஒவ்வொரு நாளும் தொலைகாட்சி செய்திகள் அதைதான் சொல்கின்றன நேரடியாக அல்ல மறைமுகமாக.

Link to comment
Share on other sites

" நாம் எந்த ஆயுதத்தை கையில் எடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்"

எந்த ஆயுதம் கொண்டு போராடுவது என்பதை நாம் தேர்வு செய்யலாம். எமது போராட்டபாதை என்பது எந்த கோணத்திலும் இருக்கலாம். அகிம்சையாக இருக்கலாம் அதையும் கொஞ்சம் தாண்டி ஜேசுவின் சிர்த்தாந்தம்பேசி மறு கன்னத்தையும் காட்டலாம். நாம் எமது போராட்டத்தை தொடர்வது ஒன்றே குறியென்றால் அதில் ஒன்றை தேர்வு செய்து போராடலாம் அல்லது அடிமைகளாக எவ்வாறு வாழ்வது என்பதற்கு தினம்தினம் தயார் செய்தலும் ஒரு போராட்டம்தான் அந்த போராட்த்தையும் தொடரலாம்.

ஆனால் நாம் எதிரியை வெல்ல வேண்டும் எமது போராட்டம் வெல்ல வேண்டும் என்றால். எங்களது தீர்மானங்கள் எதிரியை வைத்தே வரையபடவேண்டும். "நாம் எந்த ஆயுதத்தை கையிலெடுப்பது என்பதை அவனே தீர்மானிப்பான்". ஆயுத போராட்டம் அழிவுகளை கொடுக்க கூடியது. ஒரு போரில் அழிவு என்பது இரண்டு பகுதிக்கும் இருக்க கூடியது தமிழுழ விடுதலைபோரில் அது தமிழ்பகுதிக்கே உரித்தானதாகவே இருந்தது. எதிரியின் கொடுமைகளை தர்மத்தின் பெயரால் பொறுத்தருள பட்டிருக்கின்றது. போராட்டம் எமது நிலப்பகுதியிலேயே நடத்தபட்டது போர்களங்கள் எமது தெரிவாக இருக்கவில்லை எதிரியின் தேர்வாகவே இருந்தது. கிட்டதட்ட ஒரு தற்காப்பு போரே இதுவரை நடந்தது எதிரியின் அழிவு போரில் இருந்து மக்களையும் போராளிகளையும் பாதுகாப்பது அதற்காக ஒரு பாரிய நிலபரப்பை கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற பாதையிலேயே இருந்தது.

கடந்தகால தவறுகள் திருத்தபட வேண்டுமே தவிர போர் வெல்ல வேண்டும் என்றால் ஓரே வழிதான் உண்டு.

போர் வெல்ல வேண்டுமா வேண்டாமா என்பதுதான் விடைகாணபட வேண்டிய கேள்வியே தவிர. இந்த ஜனநாயகம் தலைவிரித்தாடும் முதலாளித்துவ உலகில் வேறந்த தேர்வும் வழியாகது என்று நான் சொல்லவில்லை................ ஒவ்வொரு நாளும் தொலைகாட்சி செய்திகள் அதைதான் சொல்கின்றன நேரடியாக அல்ல மறைமுகமாக.

ஈழத்தமிழருக்குக் கிடைத்த தலைமைபோன்று, இனிவரும் காலங்களில் ஒரு தலைமை உருவாக்கம் பெறும்வரை, எந்தவழியிலான போராட்டங்களும் சாத்தியமில்லை. எதிர எந்தவகையானவன் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில் போராட்டத்தை எங்கிருந்து நடத்திச் செல்வது.

மக்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் கருத்துக்களை விடுவோம். நமது சொந்தக் கருத்தில் போராடுவதற்கான சக்தி எமது மக்களிடத்தில் இருக்கின்றதா? இன்னும் ஒரு சகாப்தங்கள் சென்றாலும் இந்தப் போரின் வடுக்களை மறக்கடிப்பதற்கு முடியாது எனத்தான் நினைக்கின்றேன். போரின் பாதிப்புகள் தெரியாத, இழப்புகளின் வலி தெரியாத ஒரு காலத்தில்தான் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது போர், அதனாலான அழிவுகளை நேரடியாக அனுபவித்த மக்களை மீண்டும் போரில் ஈடுபடுத்த இலகுவில் யாராலும் முடியாது.

எதிரியே போராட்ட வழியைத் தீர்மானித்தாலும் அதன் தேவை வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதற்கான சாத்தியங்கள் பிராந்திய ரீதியில் இப்போது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வந்துசேர ஓட்ட போட்டிகள் முடிவுக்கு வந்திடும்.

வெத்தில சாப்பிட்டு வீட்டோட இருந்து 6 வருசம் இளைப்பாறுங்கோ. :rolleyes:

Link to comment
Share on other sites

நீங்கள் வந்துசேர ஓட்ட போட்டிகள் முடிவுக்கு வந்திடும்.

வெத்தில சாப்பிட்டு வீட்டோட இருந்து 6 வருசம் இளைப்பாறுங்கோ. :lol:

ஏன் தாடிக்காரன் வேட்டியை தூக்கி பிடித்து கொண்டு போராட்டத்தை நடாத்த மாட்டாரோ? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய துயவனுக்கு 11 பச்சைபுள்ளி

நல்ல கருத்து என்று சொன்ன விசுகண்ணைக்கு சிவப்பு புள்ளி

யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமாகி போய்விட்டது............. என்ன எழுதுகிறார்கள் என்பதெல்லாம் யார் பார்த்தார்?

ஈழத்தமிழருக்குக் கிடைத்த தலைமைபோன்று, இனிவரும் காலங்களில் ஒரு தலைமை உருவாக்கம் பெறும்வரை, எந்தவழியிலான போராட்டங்களும் சாத்தியமில்லை. எதிர எந்தவகையானவன் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலையில் போராட்டத்தை எங்கிருந்து நடத்திச் செல்வது.

மக்கள், ஊடகங்கள் ஆகியவற்றின் கருத்துக்களை விடுவோம். நமது சொந்தக் கருத்தில் போராடுவதற்கான சக்தி எமது மக்களிடத்தில் இருக்கின்றதா? இன்னும் ஒரு சகாப்தங்கள் சென்றாலும் இந்தப் போரின் வடுக்களை மறக்கடிப்பதற்கு முடியாது எனத்தான் நினைக்கின்றேன். போரின் பாதிப்புகள் தெரியாத, இழப்புகளின் வலி தெரியாத ஒரு காலத்தில்தான் எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது போர், அதனாலான அழிவுகளை நேரடியாக அனுபவித்த மக்களை மீண்டும் போரில் ஈடுபடுத்த இலகுவில் யாராலும் முடியாது.

எதிரியே போராட்ட வழியைத் தீர்மானித்தாலும் அதன் தேவை வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதற்கான சாத்தியங்கள் பிராந்திய ரீதியில் இப்போது இல்லை.

சாத்தியம் இல்லை என்றால்?

1972ல் தான் அதற்கான சாத்தியங்கள் இல்லாமலே இருந்தது என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தாடிக்காரன் வேட்டியை தூக்கி பிடித்து கொண்டு போராட்டத்தை நடாத்த மாட்டாரோ? :rolleyes::lol:

அண்ணை போராடாமல் நிண்டுபிடிச்சிருக்கேலாது...85 எண்டு பாத்தாலும் 25 வருசம். :lol:

Link to comment
Share on other sites

அண்ணை போராடாமல் நிண்டுபிடிச்சிருக்கேலாது...85 எண்டு பாத்தாலும் 25 வருசம். :lol:

ஓமண்னை மகிந்தவின்ரை வேட்டிக்குள்ளே இருந்த படியால் (இப்பவும் தான்) தப்பி பிழைச்சு இருக்கிறார். சா என்ன கேவலம் கெட்ட வாழ்க்கை இந்தாள் வாழுது. :rolleyes::lol:

இப்ப என்றாலும் வெளியில் வரலாம் தானே. சனத்துக்கு பயமாக்கும். கல்லால் எறிந்து கொல்லி போடும் என்று. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமண்னை மகிந்தவின்ரை வேட்டிக்குள்ளே இருந்த படியால் (இப்பவும் தான்) தப்பி பிழைச்சு இருக்கிறார். சா என்ன கேவலம் கெட்ட வாழ்க்கை இந்தாள் வாழுது. :rolleyes::lol:

இப்ப என்றாலும் வெளியில் வரலாம் தானே. சனத்துக்கு பயமாக்கும். கல்லால் எறிந்து கொல்லி போடும் என்று. :lol:

கண்ணாடி வீட்டுக்க இருந்து கல்லெறியாதையண்ணை தலைவற்ற சிலமன கானேல்ல....அது பிரச்சனையா வந்திச்சு பிரச்சாரமே பம்மாத்தெண்டு புறூவாகிடும் எல்லாருக்கும் ஆபத்து. :lol::D

Link to comment
Share on other sites

கண்ணாடி வீட்டுக்க இருந்து கல்லெறியாதையண்ணை தலைவற்ற சிலமன கானேல்ல....அது பிரச்சனையா வந்திச்சு பிரச்சாரமே பம்மாத்தெண்டு புறூவாகிடும் எல்லாருக்கும் ஆபத்து. :rolleyes::lol:

தாடிக்கு பக்கத்தில் வாற கூலிப்படை கீழே கண்ணி வெடி இருக்கோ என்று இப்போதும் தேடுவது ஆச்சரியாமக இல்லை ??? :lol: ஏதோ ஒரு செய்தி சொல்கிரமாதிரி இருக்கல்லோ அண்ணை. :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.