Jump to content

மௌனம் கலைகிறது....நடராஜா குருபரன்


Recommended Posts

ஆராவது ஒருத்தர் எண்டாலும் கருணா ஏன் புலிகளை விட்டு பிரிந்தார் என்ற உண்மை காரணத்தை சொல்லுங்கவனப்பா.? :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவற்றை வாசித்தால் எனக்கு இவர்கள்மீது பரிதாபம் தான் வருகிறது.

புலிகள் வென்றிருந்தால் இந்தப்பேனாக்கள் எப்படி எழுதித்தள்ளியிருக்கும்....???

புலிகளால் ஏற்படாத ஒரு தோல்வியை வைத்துக்கொண்டு....... என்ன வெல்லாம் கற்பனை செய்கிறார்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை புலிகளில் இருந்து பிரிப்பதற்கான பங்கு வகித்தவர்களில் முக்கியமானவர் ராஜன் சத்திய மூர்த்தி ஆனால் இங்கு குருபரன் அவரை புனிதராக்கி இருக்கிறார்...சத்திய மூர்த்தியை உள் கட்சி பூசல்கள் காரண்மாக கருணா அணியினரே போட்டார்கள் என அந்த நேரம் கதைத்தார்கள்

Link to comment
Share on other sites

வன்னியில் நிகழ்ந்த ஒரு ஊடகச் சந்திப்புக்காக சென்றிருந்த வேளையில் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் அலுவலகத்தில் திரு கிங்ஸ்லி ராஜநாயகம் தனது மனைவி மற்றும் மகள் மற்றும் அவரது உறவினர்கள் சிலருடன் ஒரு ஓரத்தில் வேண்டத் தகாதவர்களாகக் காத்திருந்தனர்.

அவர் யார் எனத் தெரியாத போதும் தயா மாஸ்ரர் இவர்தான் கிங்ஸ்லி ராஜநாயகம் எனக் காட்டியது இப்போது ஞாபகம் வருகிறது.

புலிகளின் தலைமையுடன், தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு அந்தச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்க தேர்தலில் வெற்றி பெற்ற கிங்ஸ்லி ராஜநாயகம் புலிகளின் அரசியற் துறை அலுவலகத்தில் ஒரு ஓரத்தில் காத்திருந்தார்.ஆனால் பா. அரியநேந்திரன் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார். இதற்கு இன்னுமொரு காரணமும் அப்பொழுது புலிகளால் முன்வைக்கப்பட்டது. வன்னித் தரப்பிற்கு ஆதரவாக இருந்த அரியநேந்திரனை தோலிவியுறுச் செய்து கிங்ஸ்லி ராஜநாயகத்தை கருணா தரப்பினர் செயற்கையாக வெல்ல வைத்தனர் என்பதே அது. இந்த நிலையில் வற்புறுத்திக் கடிதத்தை வாங்கிய பின்பும் கூட புலிகள் அவரைச் சுட்டுக் கொன்றனர். இது குறித்து இவரது மரண வீட்டில் இவரது மகள் "நீங்களே பட்டியலில் இணைத்து பின்னர் நீங்களே ராஜினாமாச் செய்யச் சொல்லி பின்னர் நீங்களே கொன்றும் விட்டீர்களே” என வேதனையையுடன் கதறியதாக என் மட்டுநகர் நண்பர் சொன்னதும் இப்பொழுது ஞாபகம் வருகிறது. இதுவும் சமாதான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதனால் யுத்த நிறுத்த மீறலாகக் கொள்ளப்பட்டது. (அடிக்குறிப்பு 1)

புலி அழிந்ததன் முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கௌரவப்படுத்தவில்லை. அதனால் தமிழரின் போராட்டம் அழியணும் என்று எந்த தமிழனும் விரும்பமாட்டான். :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை புலிகளில் இருந்து பிரிப்பதற்கான பங்கு வகித்தவர்களில் முக்கியமானவர் ராஜன் சத்திய மூர்த்தி ஆனால் இங்கு குருபரன் அவரை புனிதராக்கி இருக்கிறார்...சத்திய மூர்த்தியை உள் கட்சி பூசல்கள் காரண்மாக கருணா அணியினரே போட்டார்கள் என அந்த நேரம் கதைத்தார்கள்

குருபரன் ராஜன் சத்தியமூர்த்தியைப் புனிதராக்கவில்லை. போட்டுத்தள்ளும் அரசியல் பலமடங்கு எதிரிகளை அதிகரித்ததைத்தான் சொல்ல வருகின்றார்.

தமிழரின் விடுதலைக்கு தமிழர்கள் செய்த பாதகங்கள்தான் அதிகம்.. அதைத் தமிழர்கள் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருபரன் ராஜன் சத்தியமூர்த்தியைப் புனிதராக்கவில்லை. போட்டுத்தள்ளும் அரசியல் பலமடங்கு எதிரிகளை அதிகரித்ததைத்தான் சொல்ல வருகின்றார்.

தமிழரின் விடுதலைக்கு தமிழர்கள் செய்த பாதகங்கள்தான் அதிகம்.. அதைத் தமிழர்கள் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றார்கள்..

நான் புலிகள் செய்தது எல்லாம் சரியென்டோ அல்லது அவர்கள் எல்லோரையும் போட்டுத் தள்ளினது சரியென்டோ சொல்லவில்லை ஆனால் ச.மூ என்னென்ன செய்தவர் என குருபரனுக்கு தெரியும் அப்படித் தெரிந்தும் கருணாவுக்கு ஆதரவு கொடுத்த ஒரே காரணத்தால் தான் ச.மூ சுடப்பட்டார் என சொல்றார் பாருங்கோ அங்க தான் நிற்கிறார் குருபரன்...உண்மை தெரிந்தவர்கள் எல்லோரும் இறந்து விட்டார்கள் என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் போல கருணா இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்பது அவருக்கு தெரியல்ல

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடத்தலும் - கடத்தலின் பின்னணிகளும் - மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்

அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரென்பதற்காக ஊடக தர்மம் வளைந்து கொடுக்க வேண்டுமென்று அன்றைக்கே நினைத்த ஒருவர் இன்றைக்கு ஊடக அமைச்சராக இருப்பது இலங்கையினதும் எங்களினதும் துரதிஸ்டம். ஆனால் பல்வேறு தரப்பினருக்கும் களங்களை வழங்குவதன் மூலமே மக்கள் உண்மைகளையும் யாதார்த்தத்தையும் உணர்ந்துகொள்ள முடியுமென்று நம்புகிறவனாக அன்றைக்கே நானிருந்தேன்

எனது முந்தைய தொடரில் என்னையும் இலங்கை அரசே கடத்தியது எனத் தெரிவித்திருந்தேன். இலங்கை அரசாங்கத்தின் குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிவரும் பல்வேறு புலனாய்வுக் குழுக்களில் ஒன்றே என்னைத் துணை ஆயுதக்குழு ஒன்றின் உதவியுடன் ஓகஸ்ட் 2008 இல் என்னைக் கடத்திச் சென்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பதவிக்கு வந்தபின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து யுத்தம் ஆரம்பித்தது. யுத்தம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள் கொழும்பில் கடத்தப்பட்ட முதலாவது ஊடகவியலாளனாக நான் இருந்தேன்.

2005ன் பிற்பகுதியில் சந்திரிக்கா குமாரணதுங்க ஆட்சியில் சிவராம் கொல்லப்பட்டார். அவரின் பின் கொல்லப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது நபராக நான் இருந்தேன் என்பதை நினைக்கும் போது கடத்தப்பட்ட அந்தக்கணங்களை மீட்கும் போது இதயம் உறைந்து போகிறது. அந்தக் கணங்கள் எவ்வளவு கொடுமையானவை என்பதனை அனுபவித்தவர்களால் மட்டுமே உணரமுடியும். இலங்கையில் கடந்த நாற்பது வருடங்களாக இத்தகைய மனித்தன்மைக்கு விரோதமான செயல்கள் சர்வ சாதாரணமாக அரசாலும் போராளிக்குழுக்களாலும் நிகழ்த்தப்பட்டே வருகின்றன. அதிஸ்டவசமாக நானும் இன்னும் சிலரும் முதலைகளின் வாயிலிருந்து மீண்டிருக்கிறோம். அந்தக்கணங்களை நினைவுகூருகிறோம். ஆனால் துரதிருஸ்ட வசமாக அந்தக்கணங்களை நீனைவுகூரப் பாக்கியமில்லாமல் மனிதர்கள் ஆயிரக்கணக்கில் மடிந்தும் போயிருக்கிறார்கள்.

மகிந்த சகோதரர்களின் ஆட்சியில் ஊடகத்துறையில் முதலாவது பலிக்கடாவாக நான் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணங்களைத்தேட வேண்டுமாயின் சூரியன் செய்திப் பிரிவினது அர்பணிப்புடன் கூடிய ஊடக வரலாற்றைச் சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

இலங்கையின் இலத்திரனியல் ஊடக வரலாற்றில் அதுவும் மிகவும் இக்கட்டான ஒரு சூழலில் மக்களின் பங்களிப்புடன் கூடிய மக்களுக்கான ஒரு ஊடகமாகச் சூரியன் செய்திகள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்தது.

2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி சூரியனில் நான் இணைந்து கொண்டேன். ஏற்கனவே முன்னர் எனது தொடரில் குறிப்பிட்டது போன்று நான் இணைந்து ஒரு சில நாட்களில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் தலைவர் குமார் பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை சில நிமிட இடைவெளியில் வானொலியில் அறிவித்திருந்தோம். இந்தத் தகவல் எனது தனிப்பட்ட தொடர்பொன்றினூடாகவே எனக்குக் கிடைக்க அதனை உடனடியாகச் செய்தியாக அறிவித்திருந்தோம். விரைவானதும் நம்பகமானதுமான செய்தி அளிக்கைக்கு அது ஒரு உதாரணமாக அமைந்தது. மேலும் ஒரு ஊடகவியலாளனுக்கு இருக்க வேண்டிய தனிப்பட்ட வலையமைப்பை நான் கொண்டிருந்ததையும் சூரியன் நிர்வாகம் உணர்ந்துகொண்டது. சூரியன் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆகியிருந்தபோதும் அது விரைவாக மக்களை அணுகிக்கொண்டிருந்தது. மக்களின் பங்களிப்புக்கள் ஊக்குவிக்கப்பட்டு சூரியன் மக்கள் வானொலியாக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. நான் இணைவதற்கு முன்னரேயே சூரியனின் பிரதம செய்தி ஆசிரியர், மற்றும் செய்தி ஆசிரியர்கள், சூரியனின் செய்தி முகாமையாளர் அறிவிப்பாளர்கள் எல்லோரும் தமது தொழிலை வயிற்றுப் பிழைப்புக்கானது என எண்ணாமல் ஊதியம் பெறும் தொழில் என்பதற்கு அப்பால் உணர்வுள்ளவர்களாக தொழிற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தகையதொரு உணர்வுள்ள துடிப்புள்ள செயற்பாட்டாளர்களோடு இணைந்துகொண்டபோது சூரியனில் எனது பங்களிப்பும் ஆழமாகியது.

சூரியனில் நான் இணைவதற்கு முதற் காரணியாக இருந்த றமணன் சூரியன் ஊடக வாழ்வு குறித்த தனது அனுபவப் பதிவில் பின்வருமாறு கூறுவார்: குரு அண்ணாவின் கடந்த கால போராட்ட வாழ்வு மற்றும் சரிநிகர் காரணமாக அவர் கொண்டிருந்த ஊடகத் தொடர்புகள் என்பன காரணமாக தமிழ் ஊடகத்துறையில் வரலாறு தெரிந்த ஒரு சில ஊடகவியலாளர்களில் ஒருவராக குரு அண்ணா இனம் காணப்பட்டார்

சூரியனில் குறுங்கால ஒப்பந்த அடிப்படையில் இணைந்த நான் குறுகிய காலப் பகுதியில் நிரந்தரமாக்கப்பட்டதுடன் எனது செயற்பாடுகள் காரணமாக சூரியன் செய்திப்பிரிவின் பிரதம ஆசிரியராகவும் தரமுயர்த்தப்பட்டேன்.

நான் இணைந்து கொண்ட 2000 ஆண்டில் தொடங்கி 2002ல் சமாதானப்பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் காலம் வரையிலான பகுதி மிகவும் கடினமான காலப்பகுதியாகும். அக்காலத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஆட்சிசெய்ய அனுருத்த ரத்வத்தை பாதுகாப்பு அமைச்சராகவிருந்தார். இந்த 2 வருட காலப்பகுதி கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியாகும். ஆனையிறவு முகாம் நிர்மூலமாக்கப்பட்டது, கட்டுநாயக்கா வான்படைத் தளம் தாக்கப்பட்டது உள்ளிட்ட மிக முக்கியமான தாக்குதல்கள் நிகழ்ந்த காலம் அது. இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் கடுமையான செய்தித் தணிக்கையும் நடைமுறையில் இருந்தது.

செய்தித் தணிக்கை நடைமுறையில் இருந்த போதும் கூட அவற்றையும் மீறி நாசூக்காகச் செய்திகளை மக்களிடம் கொண்டு சென்றோம். கட்டுநாயக்கா தாக்குதலின் போது எமது அறிவிப்பாளர் ஒருவர் சிங்களச் செய்தியாளர்களுடன் சென்று துணிவுடன் நேரடியாகத் தகவல்களைப் பெற்று வானொலிக்குத் தந்துகொண்டிருந்தார். ஆனையிறவு புலிகள் வசம் வீழ்ந்த போது தணிக்கையையும் மீறி ஆனையிறவின் வரலாற்றைக் கூறியதன் ஊடாக அந்தச் செய்தியை மக்களுக்கு விளங்க வைத்தோம். பிந்துனுவௌ புனர்வாழ்வு முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த செய்தியையும் விசேட நிகழ்ச்சியாகச் செய்தோம். அப்போது மலையகத்தில் எழுந்த வன்முறைகளுக்குச் சூரியன் அளித்த செய்திகளே காரணம் எனக் ஹற்றனில் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் அமரர் சந்திரசேகரனின் பல போராட்டங்களுக்கும், மலையகத்தில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கும் சூரியன் செய்திகள் வழியமைத்துக் கொடுத்ததாகச் குற்றம் சாட்டப்பட்து. இதனை யடுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்காவின் உத்தரவின் பேரில் அன்றய ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா என்னையும் அப்போது தமிழ் சிங்கள செய்திகள் அனைத்தினதும் மேலாளராக இருந்த சந்தன திலகரத்னவையும் அழைத்து நீண்ட நேரம் உரையாடி இருந்தார். உலக வர்த்தக மையத்தில் இருந்த ஊடக அமைச்சில் நடந்த உரையாடலில் சூரியனின் செய்திகளே மலையகத்தின் எழுச்சிக்கும் அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு காரணம் எனத் தமக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் ஜனாதிபதி சந்திரிக்கா உடனடியாக உங்களுடன் பேசும்படி கூறியதாகவும் யாப்பா அப்பொழுது தெரிவித்திருந்தார். அத்துடன் வன்முறைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கத்திற்கு சூரியன் செய்திகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சூரியனின் பிரதான செய்திகள், மணித்தியாலச் செய்திகள், உடனடிச் செய்திகள் மட்டுமன்றி ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30ற்கு நடைபெற்ற சூரியப்பார்வைகள் நிகழ்ச்சி, 2004களில் ஆரம்பிக்கப்பட்ட சனிக் கிழமைகளில் இடம்பெற்ற விழுதுகள் நிகழ்ச்சி என யாவுமே மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டவையாக விளங்கியிருந்தன.

இது பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி 'செய்தியின் அரசியலும் அரசியற் செய்திகளும்' என்ற தனது குறிப்பொன்றில் கூறும் போது: இலங்கையின் பண்பலை ஒலிபரப்பு தவிர்க்க முடியாதபடி இன்றியமையாத முக்கியத்துவம் பெற்றுவிட்ட சூழலில் இந்தப் பண்பலை ஒலிபரப்பின் பிரதான தள கவர்ச்சிகளுக்கு (ஜனரஞ்சகப் பாடல்கள் - தமிழில் இது சினிமாப் பாடல்தான் (சினிமாப் பாடல் பண்பாடு) அப்பாலே போய் இந்த ஒலிபரப்புகளின் பாடல் அம்சத்தை முக்கியத்துவப் படுத்தாத அரசியல் விடயங்கள் பற்றிச் சொல்லப்படுவதாக இன்று சூரியன் பண்பலை ஒலிபரப்பு 'தமிழ் நேயர்களின்' முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் எவ்வித கணக்கீட்டிற்கும் அவசியம் இல்லை.

சூரியனில் வரும் நாளந்த செய்திகள், அரசியல் விமர்சனங்கள் ஆகியன சினிமா பாடல் பண்பாட்டிற்குள் நிற்க விரும்பாதவர்களுக்கு கூட அவர்களது ஒழுங்கான கேட்புக்கு ( டுளைவநசniபெ) உரித்தாகி விட்டன. இவ்வாறு தொடர்ந்து செல்லும் பேராசிரியர் இப்படிக் கூறுகிறார் ' இனக்குழும அடையாளம் மேலிருந்து திணிக்கப்படம் இலங்கையில் தமிழ் நேயர்கள் தங்களுக்கு முக்கியமான விடயங்கள் பற்றி தரவுகள், தகவல்கள், விளக்கங்கள் பற்றி அறிய விரும்புவது இயல்பெ. சூரியன் செய்திகள் அந்தத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இலங்கையின் தமிழ் நிலைப்பட்ட, தமிழ்ப் பிரதேச நிலைப்பட்ட செய்திகளை தெரிவிப்பதில் இவர்கள் ஆர்வம் காட்டுவது இவர்களது கேட்டுணர் ஈர்ப்பை வளர்த்து உறுதிப்படுத்தி உள்ளது.

இதற்கு மேலேபோய் தமிழ் இருப்பு பற்றிய பிரச்சனைகளை எடுத்துக் கூறுவதும் விவாதிப்பதும் முக்கிய நிகழ்ச்சிகளாகி உள்ளன. ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணியில் இருந்து 10மணி வரை ஒலிபரப்பாகும்; சூரியப் பார்வையில் ஒரு பார்வைச் செழுமையும் உன்னிப்பும் உண்டு.சனிக்கிழமை காலையில் விழுதுகள் நிகழச்சியில் ஒரு படி மேல் சென்று சில காத்திரமான அரசியல் விவாதிப்புக்களை செம்மையாக நடத்துகின்றது.

பண்பலை நுகர்வோர் ஒலிபரப்பின் ஊடே அரசியல் நுகர்வை மிகுந்த சாதுரியத்துடன் கொண்டுவந்துள்ள சூரியன் செய்தியாளர்களுக்கும் ஒலிபரப்பாளர்களுக்கும் எனது நன்றிகள்.” எனக் கூறினார்.

2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்ந்தங்கள் குறித்துக் கூட இலங்கையின் அனைத்து ஊடகங்களுக்கும் முன்னதாகக் காலையில் சூரியனே அறிவித்தது.

எனது ஒன்பதாவது தொடரில் குறிப்பிட்டது போன்று இலங்கையில் ஏதாவதொன்று நிகழ்வதற்கு முன்பு அது பற்றிச் சூரியனுக்கு அறிவித்து விடுவார்கள் என இராணுவப்படைத்தரப்பு கோபம் கொள்ளுமளவுக்கு சூரியன் செய்திகளின் விரைவுத்தன்மை இருந்தது.

இதுமட்டுமல்ல இலங்கையின் இலத்திரனியல் ஊடக வரலாற்றில் தமிழ்ச் செய்திப்பிரிவொன்று அதனை இயக்கிய நிறுவனத்தின் சிங்கள ஆங்கில மொழிமூல செய்திப் பிரிவுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் ஒரு முழுமையான செய்திப்பிரிவாக இயங்கியது சூரியனிலேயே ஆகும். தனக்கான சுதந்திரத்தை தன்னகத்தே கொண்டிருந்த செய்திப்பிரிவாக சூரியனின் தமிழ்ச் செய்திப் பிரிவே விளங்கியது. அதன் முழு அதிகாரமும் கொண்ட செய்திமுகாமையாளராக நான் கடமையாற்றினேன். ஏனைய மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படாத தமிழிலேயே செய்திகளை உருவாக்குகின்ற செய்திப்பிரிவாக நாங்கள் இயங்கினோம். இந்த குறிப்பான நிலைமைக்கு (இன்று பல்வேறு நெருக்குதல்களால் இந்த முழு நிறுவனமும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளபோதும்) சூரியன் நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரும் தற்போதைய நிறுவனத் தலைவருமான றேனேர்சில்வா அவர்களது தனிப்பட்ட துணிவே காரணம் என்பதை நன்றியோடு கூற விரும்புகிறேன்.

mow11.1.png

எமக்கு வழங்கிய சுயமாக இயங்கும் அதிகாரத்துக்கு எதிராக நிறுவனத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் தமிழ்ப் பிரிவு தமிழ் நேயர்களுக்கு எது தேவைப்படுகிறதோ அதனை வழங்கட்டும் ஏனைய மொழிகளின் திணிப்பு வேண்டாம் என எமது நிறுவனத்தலைவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டிருந்தார். மிக நெருக்கடியான காலத்தில் அவர் காட்டிய துணிவும் எடுத்த முடிவுமே சூரியன் செய்திப்பிரிவு அக்காலத்தின் கண்ணாடியாக விளங்கக் காரணமாகியிருந்தது.

ஆனால் இந்த நிலைப்பாடுகாரணமாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரணதுங்க ஆட்சியில் தொடங்கி என்னைக் கடத்தும் வரையிலும் பின்னர் 2007ல் மகிந்த சோதரர்கள் இந்த நிறுவனத்தை மூடும் வரையிலும் இந்த நிறுவனத்திற்குத் தொல்லைகள் தொடர்ந்தே சென்றன.

இவ்விடத்தில் எனது மௌனம் கலைகிறது தொடர் 10 இனை வாசித்த ஒரு வாசகர் எனக்கு எழுதிய கடிதத்தையும் பகிரவிரும்புகிறேன். சூரியன் வானொலியும் அதில் என் பங்களிப்பும் அன்று அதன் வாசகர்களிடையே என்னவிதமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு இது ஒரு உரைகல்.

அன்பின் குரு அண்ணாவிற்க்கு அன்பும் பாராட்டுதலும் கலந்த எனது இனிய வணக்கம்!

உங்களின் 'மௌனம் கலைகிறது-10' தொடரை படித்தவுடன் இதனை உங்களுக்கு எழுதுகிறேன். சரியான சந்தர்ப்பத்தில், பொருத்தமான நேரத்தில் உங்கள் மௌனத்தை நீங்கள் கலைத்திருப்பதானது ஜனநாயகத்தை விரும்புகின்ற, தனிமனித உரிமையையும் பாதுகாப்பையும் பாதுகாக்க நினைக்கின்ற என்னைப்போன்ற ஆயிரமாயிரம் பேருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

உங்கள் கடத்தல் இடம்பெற்றபோது நான் யாழ்பல்கலையில் மாணவன், ஒவ்வொரு வார இறுதியிலும் உங்கள் நிகழ்ச்சியை கேட்டுவிட்டுத்தான் அடுத்தவேலை... அப்படி ஒருநாள் காலையில் சூரியனோடு இணைந்திருக்கையில்தான் லோசன் மிகவும் பதட்டத்துடன் உங்கள் கடத்தல் பற்றிய செய்தியை சொல்லிவிட்டு கலையகத்திலிருந்து உடனடியாக செல்கின்றார்..... அந்த நிமிடத்திலிருந்தே என்னைப்போன்று ஊடகத்துறையை ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற ஆயிரமாயிரம் பேருக்கும், நாட்டின் அரசியல் களநிலவரங்களை சரியாக புரிந்துகொண்ட லட்சக்கணக்கான சாதாரண பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும் இது மஹிந்த கொம்பனியின் வேலைதான் என்று. அக்காலகட்டத்தில் நாட்டின் அடிமட்ட மக்களோடு இணைந்திருந்தவன் என்ற ரீதியில் நானிதைச் சொல்கிறேன்.

ஊடகத்துறையால் தமக்கு கிடைதிருக்கும் மக்கள் செல்வாக்கையும், பிரபல்யத்தையும் வைத்துக்கொண்டு பிழைப்பு நடாத்துகின்ற ஒரு புது நாகரீகம் தமிழ்நாட்டைப்போன்று நமது நாட்டிலும் வளர்ந்துவருகின்றது என்பதை ஒரு கவலைக்குரிய விடயமாகவே நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் உங்களை போன்ற ஊடகத்தை உயிரிலும் மேலாக நேசிக்கின்றவர்கள் மகிந்த கொம்பனி போன்றவர்களின் முகத்தை மட்டுமல்லாது எமது ஊடகத்துறையில் இருக்கின்ற புல்லுருவிகளினதும் போலியான முகங்களையும் கிழித்தெறியவேண்டும். அப்படியான ஒரு சூழலில் நீங்கள் அப்படி நடந்துகொண்டதும், இப்போதய சூழலில் நீங்கள் உங்கள் மௌனத்தை கலைத்திருப்பதானதும் பாராட்டுக்குரியதே. இதுவும் ஒரு வாக்குமூலமாக சர்வதேசத்தால் பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் பணி தொடரட்டும்.....

நன்றி

இப்படிக்கு,

வி....

பி.குறிப்பு:- நான் இதனை நேற்றுமுந்தினமே எழுதிவிட்டேன். ஆனால் என்னால் இதனை உடனடியாக உங்கள் தளத்தில் பதிவுசெய்யமுடியவில்லை. காரணம் நான் .... அதனால்தான் இதனை தனிப்பட்டரீதியில் உங்களுக்கு எழுதுகிறேன். இந்த நிலை மாறவேண்டும் அண்ணா! உங்களால் முடிந்தால் இதனையோ அல்லது இதன் சாரம்சத்தையோ உங்கள் தளத்தில் பதிவுசெய்யுங்கள்....

இந்த நிலையில் 2005ஆம் ஆண்டு கடைசியில் ஒருநாள் எனது நண்பர் ஒருவர் தன்னை உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என இன்னுமொரு நண்பர் ஒருவரூடாகத் தகவல் அனுப்பி இருந்தார். (சமூகத்தில் பிரபலமான இவர் அநாட்டில் இருப்பதால் இங்கு பெரைக் குறிப்பிடவில்லை.) நான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினேன். விபரமாக விடயங்களைக் கூறித் தொலைபேசியில் உரையாட முடியாதென அவர் கூறியமையால் விடையத்தின் கனதியை உணர்ந்து கொண்டு எனது நண்பன் சிவகுமாரையும் அழைத்து அவனுடன் மோட்டார்வண்டியில் சுற்றுவழிகளால் அவரது வீட்டிக்கு நேரடியாகவே சென்றோம்.

25 பெயர்களைக்கொண்ட கொலைப்பட்டியல் ஒன்றை இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளதாகத் தகவல் ஒன்று அவருக்கு வந்ததாகவும் அதில் எனது பெயரே முதலாவதாக உள்ளதாக அறிவதாக அவர் கலவரமுடன் தெரிவித்தார். அது உண்மையா பொய்யாவென்பதை என்பதைத் தனக்கு உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும் மிகக் கவனமாக இருங்கள் என அவர் கூறினார். இந்தத்தகவலையடுத்து ஒருசில நாட்களிலேயே நான் தமிழகம் சென்று 10 நாட்கள் அங்கு தங்கியிருந்தேன்...

பின்னர் நான் கட்த்தப்பட்ட போது நிகழ்ந்த விசாரணையின் போது நீ ஏன் அண்மையில் தமிழகம் சென்று வந்தாய் என அரச புலனாய்வாளர்கள் என்னைக் கேட்டபோது நான் இந்தியா செல்லாமல் இருந்திருந்தால் அப்போதே கடத்தப்பட்டிருப்பேன் என்பதை உணர்ந்தேன். என் ஆயுளுக்கு ஒரு நீடிப்பைத்தந்த அந்த நண்பரை நான் நன்றியுடன் இங்கு நினைவுகூருகிறேன்.

2006ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இருந்து புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நிகழ்ந்த சமாதானப்பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானது. இந்தகாலத்திலும் சூரியனின் செய்தியிடல் விரைவானதாகவும் நம்பகமானதாகவும் இருந்தது.

திருகோணமலையில் ஆரம்பித்த யுத்தம் குறித்தும், அதன் போது முஸ்லீம்கள் மூதூரில் இருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டது குறித்தும், பிரான்ஸ் தொண்டர் நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை குறித்தும் சூரியன் பல அம்பலப் படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.

மூதூரில் இடம்பெற்ற கடுமையான மோதலில் பிரான்ஸ் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் ஒரே இடத்தில் கொல்லப்பட்டுச் சடலமாகக் கிடப்பதை எமது செய்தியாளர் அந்தக் கட்டடத்தின் கூரையில் இருந்து அவதானித்து தனது கையடக்கத் தொலைபேசியூடாக எமது நேரடி வானொலி ஒலிபரப்புக்கு வழங்கினார் என்பது பலருக்குக் தெரியாது. எமது செய்தியாளர் தனது உயிரையும் துச்சமென மதித்து அச்செய்தியை வழங்கிய பின்னரே ஏனைய அனைத்து ஊடகங்களும் அதனை அறிந்து கொண்டன.

இந்தக் காலப்பகுதியில் இலங்கை வந்து திருகோணமலை சென்ற சர்வதேசச் செய்தி நிறுவனம் ஒன்றின் ஊடகவியலாளர் விழுதுகள் நிகழ்ச்சியை கேட்டுவிட்டு அந்த நிகழ்ச்சியை மிக அருமையாக செய்திருந்தீர்கள் எனப் பாராட்டியிருந்தார்.

யுத்தம் ஆரம்பிப்பதற்கு முதல் ஆனால் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முறுகல் நிலை மெதுவாக வெளித் தெரிய ஆரம்பித்த போது திருகோணமலையில் சம்பூர் பகுதிக்கான உணவு விநியோகத்தில் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தபோது அப்போதைய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் இப்போதைய ஊடகத் துறை அமைச்சருமான ஹெகலிய றம்புக்வெலவிடம் உலக வர்த்தக மையத்தில் ஒரு செவ்வியை எடுத்திருந்தேன்.

அதன் பின்னர் அவர் கூறிய கருத்துகள் குறித்து விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலனுடனும் ஒரு செவ்வியை எடுத்திருந்தேன். பின்னர் இவற்றை ஒலிபரப்பினேன்.

இவை ஒலிபரப்பாகிய சில நிமிடங்களில் எனது கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஹெகலிய றம்புக்வெல நான் ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர். எழிலன் விடுதலைப் புலிகளின் திருமலை அரசியற்துறைப் பொறுப்பாளர் எப்படி எனது செவ்விக்குப் பின் நான் கூறியவைகள் பொய் எனக்கூறும் எழிலனின் செவ்வியை நீ ஒலிபரப்புவாய் எனக் கேட்டு இருந்தார்.

ஒருபக்கத்தின் செய்திகளை மட்டும் ஒலிபரப்பும் பக்கசார்பான பத்திரிகையாளனாக இருப்பதில் உள்ள உடன்பாடின்மை காரணமாகவே புலிகள் பக்கத்து அபிப்பிராயங்களையும் பதிவுசெய்து ஒலிபரப்பியிருந்தேன். இந்த வகையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தீவிர புலியெதிப்புவாதிகளின் கருத்துக்களுக்கும் எமது வானோலியில் திறந்த களம் வளங்கப்பட்டிருந்தது. அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரென்பதற்காக ஊடகதர்மம் வளைந்து போகவேண்டுமென் நினைத்தவர் ஒருவர் இன்றைக்கு ஊடக அமைச்சராக இருப்பது இலங்கையினதும் எங்களினதும் துரதிஸ்டம். ஆனால் பல்வேறு தரப்பினருக்கும் களங்களை வழங்குவதன் மூலமே மக்கள் உண்மைகளையும் யாதார்தத்தையும் உணர்ந்துகொள்ள முடியுமென்று நம்புகிறவனாக அன்றைக்கே நானிருந்தேன்.

ஆயினும் ஊடக தர்மம் குறித்து ஹெகலிய றம்புக்வெல அவர்களுக்கு பாடமெடுப்பது பலன் தராது என்பதனால் சட்டரீதியாகப் பொருந்தக்கூடிய பதில் ஒன்றை அவருக்குத் தெரிவித்தேன்:

புலிகள் மீது உத்தியோகபூர்வமாகத் தடையை நீங்கள் இன்னும் விதிக்கவில்லை. சமாதானப் பேச்சுக்கள் உத்தியோக பூர்வமாக இன்னும் முறியவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுடனான தொலைபேசிகள் துண்டிக்கப்படவில்லை எல்லாவற்றிற்கும் மேலாகப் புலிகளுடன் ஊடகங்கள் தொடர்பு கொள்ளக் கூடாது என இன்னும் அரசாங்கம் அறிவிக்கவில்லை. இப்போதும் சமாதான கால நடைமுறைகளே தொடர்கின்ன எனவேதான் அவர்களிடம் செவ்வியைப்பெற்று ஓலிபரப்பினேன் . என்றேன்.

ஆனால் ஹெகலிய றம்புக்வெல அவர்கள் எனது பதிலை ஏற்காது தனது செவ்வியின் பின் எழிலனது செவ்வியை ஒலிபரப்பியதன் மூலம் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக் கடுமையான தொனியிற் கூறிக் கோபம் கொண்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

பின்னர் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அரளிமாளிகையில் மகிந்த ராஜபக்ச சந்திக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தபோது அங்கு பிரசன்னமாகியிருந்த ஹெகலிய றம்புக்வெல எழிலனின் பேட்டியை சூரியன் ஒலிபரப்பிய சம்பவத்தை ஒரு குற்றச்சாட்டாக எனது நிறுவனத் தலைவரிடம் முன்வைத்திருந்ததை எனது கடத்தலின் பின் வெளிவந்த சண்டே லீடர் பத்திரிகையில் லசந்த விக்கிரமதுங்க அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்.

ஹெகலிய றம்புக்வெல அவர்களுடனான தொலைபேசி உரையாடல் நிகழ்ந்து சில நாட்களின் பின் ஒருநாள் உலக வர்த்தக மையத்தின் 35ஆவது மாடியில் அமைந்துள்ள எமது நிறுவனத்திற்கு வந்த ஒருவர் நடராஜா குருபரனைச் சந்திக்க வேண்டும் எனவும் தான் லையன்ஸ்கிளப்பில்(lionsclup) இருந்து வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அலுவலக வரவேற்பாளர் என்னைத் தொலைபேசியில் அழைத்து தகவலைத்தெரிவித்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது படையினருக்குரிய முடிவெட்டுடன் படையினர் அணியும் சப்பாத்தும் அணிந்த “லயன்ஸ்கிளப் உறுப்பினர்” எனக்காகக் காத்திருந்தார்.

சிங்களத்திலேயே அவர் உரையாடலை ஆரம்பித்தார்.

“ கொழும்பில் உள்ள லயன்ஸ் கிளப்பில் இருந்து வந்திருக்கிறேன். நாம் திருகோணமலையில் உள்ள வறிய மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம். அதற்கு உங்களுடைய உதவி வேண்டும்என்றார்.

என்ன உதவியெனக் கேட்டபோது அந்தப் பகுதியில் இருந்து தொடர்பொன்று எடுத்து தாருங்கள் எனக் கேட்டார். நான் சொன்னேன் தனிப்பட்ட வகையில்எனக்கு அந்தப்பகுதியில் எவருடனும் தொடர்பில்லை. நீங்கள் லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்தவர் என்கிறீர்கள் எனெவே திருகோணமலையில் உள்ள லயன்ஸ் கிளப்புடன் தொடர்பு கொண்டீர்கள் என்றால் விடயம் இலகுவாகிவிடும். அவர்கள் சகல உதவிகளையும் செய்வார்கள். எனக் கூறினேன்.

உண்மையிலும் அவர் என்னைச்சரியாக அடையாளம் காண்பதற்கும் திருகோணமலையில் உள்ள புலிகளுடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா எனத்துருவுதற்கும் குறிப்பாக எழிலனுக்கும் எனக்கும் உள்ள உறவு என்ன என்பதைக் கணக்கிடுவதற்குமே புலனாய்வாளராகிய அந்த “ லயன்ஸ்கிளப் உறுப்பினர் அன்றைக்கு வந்திருந்தார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/76391/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'

மரணத்தின் வாசல் வரை....மௌனம் கலைகிறது 12

புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துடைய அரசியல்வாதிகள் தொடங்கி மலையகமக்களின் பிரதிநிதிகள் முஸ்லீம்மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினக் கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்திய அரசியல்வாதிகள் வரை யாவருக்கும் ஊடகதர்மத்தின் அடிப்படையிலும் சனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டும் களங்களைத் தன்னுணர்வுடன் சூரியனில் வழங்கியிருந்தேன்.'

Wednesday 30th August 2006 The Island

Island%20Hackeem%201.JPG

Island%20Hackeem%202.JPG

Island%20Hackeem%203.JPG

உலக வர்த்தக மையத்தில் அமைந்திருந்த சூரியன் அலுவலகத்திற்கு லயன்ஸ் கிளப் உறுப்பினர் எனக்கூறிக்கொண்டு வருகைதந்த என்னை படைப் புலனாய்வாளர் ஒருவர் நேரடியாகப்பார்த்து உரையாடிச் சென்ற பின்னர் என்னையும் எமது சூரியன் எவ் எம் வானொலியின் செய்திகளையும் முழுமையாக கண்காணிக்கும் படலத்தில் அரச புலனாய்வாளர்கள் களம் இறங்கி இருந்தனர்.

யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின் ஒருதடவை கடல் மார்க்கமாக இடம்பெற்ற ஆட்கடத்தல் குறித்த மிக முக்கியமான செய்தி ஒன்றை எனது செய்தி அறிக்கையில் வெளியிட்டு இருந்தேன். அந்தச்செய்தியில் அக்கடத்தல் எவ்வாறு இடம்பெற்றது என்ற விபரம் துல்லியமாக இடம்பெற்றிருந்தது. இந்தத்தகவலை அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியாக இருந்த எனது சிங்கள நண்பர் ஒருவர் மூலமாகப் பெற்றிருந்தேன் இந்தச் செய்தி அன்றைய காலைச்செய்தியாக ஒலிபரப்பாகிய அன்று மாலை கடற்படையின் அப்போதைய ஊடகப் பேச்சாளராக இருந்தவர் (தகநாயக்கா என நினைக்கிறேன் பெயர் சரியாக ஞாபகம் இல்லை) எனது கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு அந்தச் செய்தி எப்படிக் கிடைத்தது என்றும் அதனை ஏன் தம்மிடம் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தவில்லை எனவும் கடுமையான தொனியில் பல கேள்விகளைக் கேட்டு மிரட்டியிருந்தார்.

இதேபோன்று இன்னும் பல சம்பவங்கள் நான் கடத்தப்படுவதற்கு முன்பு இடம்பெற்றிருந்தன.

மீண்டும் யுத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் கொழும்பு துறைமுக உயர்பாதுகாப்பு வலையப்பகுதிக்குள் புலிகளின் மூன்று தாக்குதல் படகுகள் உட்பிரவேசித்து தாக்குதலை நடத்த முற்பட்டிருந்தன. ஆயினும் கடற்படையினர் விழிப்பாக இருந்ததனைக் கண்ட புலிகள் சிறு துப்பாக்கிச்சண்டையின் பின் தப்பித்துச் சென்று விட்டார்கள்.

அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து எல்லா ஊடகங்களுமே குளப்பத்தில் இருந்த போது அன்ரைய காலைச் செய்தியில் அந்தத் தாக்குதல் முனைப்பு தொடர்பான முழு விபரத்தையும் நான் துணிந்து வெளியிட்டிருந்தேன். ஆயினும் இந்தச் செய்தியை அரச படைகளின் பேச்சாளர்கள் மறுத்திருந்ததுடன் அந்தச் செய்தி வெளியிடப்பட்டமை தொடர்பாகக் கடுமையான கோபத்தையும் கொண்டிருந்தனர். காரணம் வத்தளை நீர்கொழும்புப் பக்கமாக இருந்து வந்த மீனவப் படகுகளை ஒத்த புலிகளின் படகுகள் அதியுயர் பாதுகாப்பு வலையமான துறைமுகத்துள் புகுந்தமை வெளித்தெரிவது அரசாங்கத்திற்கு பெரும் சங்கடத்தை அளிக்கும் செயலாக இருந்தது. அதனால் அச்செய்தி வெளியில் கசியாமல் தடுக்கவே படையினர் முனைந்தனர். ஆனால் எமது செய்தி அறிக்கையில் அது வெளியிடப்பட்டவுடன் படையினர் கடுமையான கோபம் அடைந்தனர்.

முன்பு ஒருமுறை என்னுடன் தொடர்பு கொண்ட அதே கடற்படைப் பேச்சாளர் மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரத்துக்கத்தினார். அந்தச் செய்தியை துறைமுகத்துள் இருந்தே பெற்றுக் கொண்டேன் எனவும் மேலும் அந்தச் சம்பவம் நிகழவில்லை எனப்படையினர் மறுத்ததனையும் எமது மதியச்செய்தியில் ஒலிபரப்பி விட்டோம் எனவும் நான் பதிலளித்திருந்தேன்.

இன்னுமொரு சம்பவத்தையும் இங்கு நினைவுகூரலாம். வடமாராட்சியில் பொது மக்களின் வீடுகள் சில எரியூட்டப்பட்டமை தொடர்பாக செய்தி ஒன்றை எமது அப்போதைய யாழ்ச்செய்தியாளர் வழங்கியிருந்தார். அந்த எரியூட்டலின் பின்னணியில் படையினரே இருந்தார்கள் என்பதனையும் ஆதாரபூர்வமாக அந்த செய்தியில் ஒலிபரப்பி இருந்தோம். இது மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கியிருந்ததோடு எனது வேலைக்கும் ஆபத்து ஏற்படும் நிலையை தோற்றுவித்துமிருந்தது.

இந்த செய்தி பொய்யானது என இராணுவப் பேச்சாளர் என்னுடன் வாதிட்டிருந்ததுடன் எமது சிங்கள பிரிவின் செய்தியாளர்களுக்கும் கூறி கோபப்பட்டு உள்ளார். அதனால் இந்தப் பிரச்சனை எமது அலுவல நிர்வாக மட்டத்திலான கூட்டத்திலும் எதிரொலித்தது. குருபரன் எமது படையினரைப் பற்றித் தவறான செய்தியை பிரசுரித்திருக்கிறார் எனவும் இது எமது நிறுவனத்தையே பாதிக்கும் என என் முன்னிலையிலேயே ஒரு கடும்போக்கு சக உத்தியோகத்தர் ஒருவர் எனது தலைமை நிர்வாக அதிகாரியிடம் முறைப்பாடு செய்தார். எமது முகாமைத்துவப் பணிப்பாளர் அந்தச் செய்தி குறித்து ஒரு மெல்லிய சிரிப்புடன் என்னிடம் விளக்கம் கேட்டு இருந்தார். எனினும் இது குறித்து ஏற்கனவே சகல ஆதாரங்களையும் திரட்டி ஒரு கோர்ப்பாக எடுத்து சென்றிருந்ததால் அதனை உடனடியாகவே அவரிடம் கையளித்தேன். அவற்றைப் பரிசீலித்துப் பார்த்த பின் செய்தியளிப்பதென்றால் இப்படித்தான் செய்தி அளிக்கவேண்டும். வெளியிடுகிற செய்திகளுக்கு தகுந்த ஆதாரங்களை வைத்திருந்தால் அதனால் வரும் விளைவுகளை என்னால் பிரச்சனையின்றி எதிர்கொள்ளமுடியும் என எமது தலைமை நிர்வாகி கூறிய போது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே கடுமையான நிசப்தம் நிலவியது.

ஓவ்வொரு தடவையும் யுத்தம் ஆரம்பிக்கப்படும் போது உடனடியான நேரடியான தாக்கங்களை அனுபவிக்கும் தமிழ்ச் சமூக நிறுவனங்களில் யாழ் பல்கலைக் கழகம் மிக முக்கியமானது. 1983களில் இருந்து யுத்தத்தை நடத்திய இலங்கை அரசாங்கங்களின் படைத் தரப்புகளால் யாழ் பல்கலைக் கழகமும் அதன் மாணவர்களும் அடைந்த துன்பங்கள் அளவிட முடியாதவை. அந்த வகையில் 2005 இல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போதும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது படைத்தரப்பினர் கடுமையான அழுத்தங்களையும் தாக்குதல்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தி இருந்தனர். இது சம்பந்தமான செய்திகள் யாவற்றையும் உடனுக்குடன் சூரியனே வெளியிட்டு வந்தது.

ஒரு முறை பல்கலைக்கழக மாணவர் ஒருவரோ இருவரோ சரியாக ஞாபகம் இல்லை திருநெல்வேலி பரமெஸ்வராச் சந்திக்கு அருகாமையில் படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுக் காணாமல் போன செய்தியை ஒலிபரப்பி இருந்தேன்.

அன்றிரவு எனது வீட்டுத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் 'ஆ... மேக்க கொட்டியா கெதர னேத' எனத் தொடங்கி பின்னர் தமிழில் பேசினார். மட்டக்குளியில் இருந்து கதைப்பதாக கூறிய அவர் தான் முதலில் பகிடியாகப் பேசியதாகவும் திருநெல்வேலியில் காணாமல் போனவர் தமது உறவினர் என்றும் அவர் கடத்தப்பட்ட தகவல் எப்படி வந்தது என்றும் மேலதிக தகவலைப் பெற அவருடன் தொடர்பை ஏற்படுத்தி தருவீர்களா எனவும் கேட்டார். மனதுக்குள் சிரித்தபடி இந்தத் தகவல் பல்கலைக்கழக வட்டாரங்களில் இருந்து தான் வந்தது. இதனைக் கடத்தப்பட்டவர்களுடைய உறவினர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் தகவல் யாரூடாகக் கிடைத்தது என்பதனை படையினர் மட்டுமல்ல ஆண்டவன் கேட்டால் கூட நாங்கள் சொல்ல மாட்டோமென்றேன். 'ஓ அப்படியா' மீண்டும் தனது குரலை கடுமையாக்கிய அவர் சரி சரி பார்ப்பம் நீங்கள் எல்லாம் புலிகள் தானே எத்தனை நாளுக்கு ஆடப் போகிறீர்கள் எனக் கூறி அந்த அரசபடைகளின் தமிழ் எடுபிடி தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

இப்படி வீட்டு தொலைபேசிக்கும் அலுவலகத் தொலைபேசிக்கும் கையடக்கத் தொலைபேசிக்கும் எத்தனையோ மிரட்டல் அழைப்புக்கள் வந்தன. அரசாங்க அமைச்சர், இராணுவப் பேச்சாளர், கடற்படைப் பேச்சாளர் புலனாய்வுப்படையினர் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பெயர் சொல்லியும் சொல்லாமலும் வந்த எல்லாக்குரல்களுக்கும் ஒரு ஊடகவியலாளனின் நேர்மையுடனும் தர்மத்துடனும் நான் கடத்தப்படும் வரை பதில் அளித்துக்கொண்டேதானிருந்தேன்.

இன்னும் ஒருநாள், நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த போது எனது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட ஒருவர் சிங்களத்தில் மிக மரியாதையுடன் நீங்கள் நடராஜா குருபரன் தானே உங்களது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உங்கள் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொண்டேன். தெகிவளை குவாரி றோட்டில் மிகப் பெரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. உங்களது வானொலியில் உடனடி இடையீட்டுச் செய்தியாக வழங்கலாம் உடன் வருகிறீர்களா? எனக் கேட்டார். இந்த குவாரி றோட்டில் தான் ஊடகவியலாளர் சம்பத் லக்மல் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு சடலமாக போடப்பட்டு இருந்தார்.

எனது உள்ளுணர்வு அவர் எதற்கோ வலைவிரிப்பதாகச் சொல்லவே இப்போது என்னால் வர முடியாது நான் அலுவலகத்தில் இரவுக் கடமையில் இருப்பவருக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அவர் பொலிஸ் மற்றும் வைத்தியசாலைகளுடன் தொடர்பு கொண்டு செய்தியின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்பட்டால் அதனைச் செய்தியாக ஒலிபரப்புவார் எனக் கூறி அழைப்பைத் துண்டித்து விட்டேன். மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் எனது தொலைபேசியை எடுக்காமல் அதன் இயக்கத்தை நிறுத்தி விட்டேன். மறு நாள் விசாரித்தபோது அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை எனவும் அறிந்து கொண்டேன்.

இவை தவிரவும் நான் விடுதலைப்போராட்ட அமைப்பில் இருந்த போது எனக்கு நண்பர்களாக இருந்த பலரிடம் கூட படைப் புலனாய்வாளர்கள் என்னைப்பற்றி பலமுறை விசாரித்து இருந்திருக்கிறார்கள். உலக வர்த்தக மையத்தில் 35 ஆவது மாடியில் புலிகளின் அலுவலகம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு குருபரன்தான் பொறுப்பெனவும் இராணுவத்தரப்பு என் நண்பர்களிடம் கூறியிருக்கிறது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து எனக்காக வாதாடிய நண்பர்கள் அதனை எனக்கு தெரிவித்துமிருந்தார்கள்.

இப்படியே எனக்கு எதிராகத் அரசபடை தொடர்ந்த புலனாய்வு யுத்தம் ஒருநாள் எனது வீட்டிற்குள்ளும் வந்தது.

ஒருநாள் அதிகாலை 1.45 மணியிருக்கும் வீட்டின் அழைப்புமணி அலறியது. எழுத்து கதவருகில் வந்து யார் என்று கேட்ட போது மீரிகானா பொலிசில் இருந்து வந்திருக்கிறோம். கதவைத்திறவுங்கள் எனக் கூறினார்கள். கதவைத் திறந்தேன். போலிஸ் உடையிலும் சாதாரண உடையுடனும் ஏகே 47 துப்பாக்கியுடனும் துப்பாக்கி இல்லாமலும் 10ற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். சிலர் வீட்டின் உள்ளே சென்று எதனையோ தேடினார்கள். சிலர் கூரையின் மீது ஏறித் தேடினார்கள். சிலர் வீட்டை சுற்றி நின்றார்கள். என்னுடன் சாதாரணமான முறையில் உரையாடுவது போல உரையாடி நான் வேலைக்கு செல்லும் நேரம் திரும்பும் நேரம் போன்றவற்றையும் கேட்டுப்பெற்றுக் கொண்டார்கள்.

தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனைக்காக வந்ததாகவும் பயப்பட வேண்டாம் எனவும் கூறிப்போனார்கள். அதே அதிகாலை 2.15 இருக்கும் மீண்டும் அழைப்புமணி அலறியது. நாங்கள் கல்கிசைப் பொலிசில் இருந்து வந்திருக்கிறோம். சற்று முன்னர் யாராவது பொலிஸ் உடையில் வந்தார்களா எனக் கேட்டார்கள். (வந்தவர்களில் ஒரு உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர். அவரைக் கல்கிசைப் பொலிஸ்நிலையத்தில் கண்டிருக்கிறேன்.) 'ஆம் யார் சொன்னார்கள்' எனக் கேட்டேன் உங்கள் அயல் வீட்டவர்கள் சிலர் கல்கிஸைப் பொலிஸ் நிலையத்தைத்தொடர்பு கொண்டு சாதாரண உடையுடனும் பொலிஸ் உடையுடனும் சில ஆயுதங்களுடன் வந்து உங்கள் கதவைத் தட்டிக் கரைச்சல் தருவதாக முறைப்பாடு செய்தார்கள். அதுதான் வந்தோம் எனக் கூறினார்கள்.

ஆம் வந்தார்கள் வந்தவர்கள் தாம் மீரிகானா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்கள் வீட்டைச் சோதனை செய்தார்கள் பின் திரும்பிச் சென்றுவிட்டார்கள். என நான் கூறினேன்.

இந்தப்பகுதிக்குப் பொலிஸ் வருவதாக இருந்தால் அது கல்கிசைப் பொலிஸிலிருந்தது தான் வரமுடியும். தாங்கள் அப்படியான நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவே இது வேறு ஏதாவது ஒரு குழுவாக இருக்கலாம் எனக் கூறிப் போனார்கள்.

உண்மையில் வீட்டுக்கு முதலில் வந்து சென்றவர்கள் அரச படைகளோ பொலிசோ அல்ல என்னும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான நாடகத்தையே கல்கிசைப்பொலிஸ் அன்று அதிகாலையில் ஆடியிருந்தது.

ஆனால் நானோ ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்கிற மெல்லிய உணர்வைத்தவிர கடத்தப்படப்போகிறேனென்ற உணர்வோ எனது மரண நாள் எண்ணப்படுகிறதேன்ற வலிமையான உணர்வோ இல்லாமல் எதுவுமே நடக்காதவன் போல் காலை எழுந்து வழமை போல் அலுவலகம் சென்றேன்.

எனது வீடு அமைந்திருந்த ஒழுங்கையில் அதன் அயலில் நாய்கள் அளவுக்கதிகமாக குரைத்த நாட்கள் எல்லாம் எனது மரணத்திற்கு குறிவைக்கப்பட்ட நாட்கள் என்பதை உணராதிருந்திருக்கிறேன் என்பதை எத்தனை நாட்கள் என்னைப் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதை என்னை கடத்தி வைத்திருந்த போது தொடுத்த கேள்விகளின் போதேயே உணர்ந்து கொண்டேன்.

என்னைக் கடத்திய அதிகாலைக்கு முதல் நாள் வேறு எங்காவது சென்று படுத்ததாயா? அதிகாலையில் வீட்டில் வாகனம் இல்லையே எனக் கேட்டிருந்தார்கள்.

அது போல ஏன் வேலை முடிந்து நேரே வீடு செல்லாமல் வெள்ளவத்தை சென்று பின் வீடு செல்கிறாய் எனக்கேட்டிருந்தார்கள்?

வேலை முடிந்து செல்லும் வழியில் அனேகமாக வெள்ளவைத்தையில் உள்ள என் உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வது வழமை அதுபற்றியே ஏன் வேலை முடிந்ததும் வெள்ளவத்தைபோய் பின் வீட்டுக்குப் போவாய் எனக்கேட்டிருந்தார்கள்.

உண்மையில் எனக்கெதிரான மிரட்டல்கள் வர ஆரம்பித்ததில் இருந்து என்னை யாராவது பின் தொடரக்கூடும் என்பதனை உணர்ந்து கொண்டு அவதானமாக இருந்தேன். எனது வேலைக்கு செல்லும் நேரமோ வேலையில் இருந்து வீடு திரும்பும் நேரமோ ஒழுங்கற்றவையாக எவராலும் ஊகிக்க முடியாதவையாக அமையும் படி பேணியிருந்தேன்.

இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்த போதும் இவற்றைப் பகிரங்கப்படுத்தி எனக்கு சுய விளம்பரம் தேடவோ அல்லது வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் பெறவோ விரும்பவில்லை. நான் கடத்தப்படும் வரை கொழும்பில் எனக்கென ஒரு இருப்பிருந்தது. இலங்கையில் வாழவதனால் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளைத்தவிர நானும் எனது குடுப்பமும் வேரறாத வாழ்க்கையை கொண்டிருந்தோம்.

எனக்கு தரப்பட்ட நெருக்கடிகளைப் பெரிதுபடுத்தினால் இலங்கையில் வாழும் சூழல் அற்றுப் போய்விடும் என்பதை உணர்ந்திருந்தேன்.

ஆனால் நான் கடத்தப்பட்டதும் விடுவிக்கப்பட்டதும் ஒரு நாடகமென்று கிண்டல் செய்து என்னைக் காயப்படுத்தியவர்கள் பலர். கடத்தப்பட்டவரைக் காலையில் பிணமாகத்தானே காண்பது வழக்கம் ஆனால் இவர் மட்டும் எப்படி உயிருடன் வந்தார் எனச் சிலர் ஆய்வில் ஈடுபட்டு இருந்தார்கள். இன்னும் சிலர் புலிகளுக்கு வக்காலத்து வாங்கியவருக்கு 'இதுவும் வேணும் இன்னமும் வேணும்' எனக்கூறினார்கள்.

புலிகளை அடியோடு வெறுத்தவர்களும், சில ஈ.பீ.டீ.பீ உறுப்பினர்களும் என்னைப் புலியாகவே சித்தரித்து அதனாற்தான் நான் கடத்தப்பட்டதாகவும் விவாதித்தார்கள்.

'எங்கட பெடியள் மற்றும் எங்கடை ஊடகவியலாளர்கள்

(ஊடகவியலாளர் சின்ன பாலா போன்றோரை) புலிகள் சுட்ட போது உந்தப் புலி ஆதரவாளர்கள் அதனை எல்லாம் ஆதரிச்சவர்கள்தானே! இப்ப தங்கடையாள் கடத்தப்பட்டவுடனே குமுறுகினம்' என ஈ.பீ.டீ.பீ.யின் பாக்றோட் முகாமில் உரையாடப்பட்டதாகவும் நான் கடத்தப்பட்டது தொடர்பாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்ததாகவும் அந்த முகாமில் இருந்த என்னுடன் நல்ல தொடர்பைக்கொண்டிருந்த ஒரு ஈ.பீ.டி.பீ உறுப்பினர் ஒருவர் சொல்லிக் கவலையடைந்தார்.

புலிகளைத் தனிப்பட்ட வெறுப்புணர்வின் காரணமாக எதிர்த்தவர்கள் அரசியல் ரீதியான காரணங்களுக்காக வெறுத்தவர்கள் அரசை ஆதரித்த தமிழர் என யாவருக்கும் சூரியன் வானோலி அவர்களது கருத்தை தணிக்கை இன்றி தெரிவிக்க முழுமையான இடமளித்திருந்தது. புலிகள் வடக்கு கிழக்கில் பலமாக இருந்த காலப்பகுதியில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை கொண்ட அரசியல் வாதிகளுக்கும் புத்திஜீவிகளுக்கும் சூரியன் அளித்த சனநாயக ரீதியான களம் போன்று இலங்கையின் அரச வானொலி கூட களம் அளிக்க வில்லை.

இங்கே சில முக்கியமான சில சம்பவங்களை நினைவு கூரலாம்.

ஈ.பீ.டீ.பீ.யின் அரசியல்செயற்பாட்டாளராக மாறிய ஊடகவியலாளரும் எழுத்ததாளருமான சின்னபாலா என்கிற பாலநடராஜ ஐயர் புலிகளால் சுடப்பட்ட போது அது குறித்தும், ஊடகவியலாளர் றேலங்கியும் அவரது கணவரும் புளொட் உறுப்பினருமான செல்வராஜாவும் சுடப்பட்ட போது அது குறித்தும் ஊடகவியலாளர்களின் கொலை என்ற வகையில் அவற்றைக் கண்டித்து தனித்தனியாக சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் பலரையும் இணைத்துக் கருத்துக்களை பரிமாறும் ஒரு நிகழ்ச்சியை நடாத்தியிருந்தேன்.

மூதூரில் யுத்தம் வெடித்து முஸ்லீம்கள் அங்கிருந்து வெளியேறிய போது ஆண்களையும் பெண்களையும் பிரித்து தனித்தனியாக இரண்டு வழிகளால் புலிகள் வெளியேற்றினர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட ஆண்களில் சிலரைப் புலிகள் சிறைப்பிடித்துச்சென்று காணாமல் போகச்செய்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர்களின் உறவினர்களின் கண்ணீரை உடனடியாகவே சூரியன் தனது விழுதுகள் நிகழ்ச்சியில் பதிவு செய்திருந்தது. எந்த ஊடகமும் செய்யாத ஒன்றை நாம் அன்று செய்திருந்தோம்.

நான் சூரியனில் இணைந்த 2000 ஆண்டில் இருந்து நாட்டை விட்டு வெளியேறும் வரை இலங்கையில் புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துடைய அரசியல்வாதிகள் தொடங்கி மலையகமக்களின் பிரதிநிதிகள் முஸ்லீம்மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினக்கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்திய அரசியல்வாதிகள் வரை யாவருக்கும் ஊடகதர்மத்தின் அடிப்படையிலும் சனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டும் களங்களைத் தன்னுணர்வுடன் சூரியனில் வழங்கியிருந்தேன்.

நிலைமை இவ்வாறிருக்க என்னைப்புலியாக அல்லது புலி ஆதரவாளனாக முத்திரை குத்துவதற்கு இவர்கள் முயன்றமை விசித்திரமானது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை விழுதுகள் நிகழ்ச்சிக்கு அழைத்தால் வானொலியில் வந்து மூச்சு விடாமல் புலிகளைக் கண்டபடி திட்டுவார். ஜே.வீ.பி சந்திரசேகரனை நிகழ்ச்சிக்கு அழைத்தால் தொடங்கியதில் இருந்து முடியும் வரை கொலைகாரப்புலிகள் பாசிசப்புலிகள், வன்னிப்புலிகள் என வாய்க்கு வந்தபடி திட்டுவார். ஆனந்தசங்கரி, பத்மநாபா ஈபீ.ஆர்.எல்.எவ் சுகு, சித்தார்த்தன் போன்றோரை அழைத்தால் அவர்கள் வந்து புலிகளின் செயற்பாடுகளை மிகக்கடுமையாக விமர்சிப்பார்கள். அரசாங்கத்துடன் இருந்த முஸ்லீம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தால் முஸ்லீம்களின் வெளியேற்றம் பற்றி பேசி புலிகளை கடுமையாக விமர்சிப்பார்கள்.

புலிகளுக்கெதிரானவர்களின் கருத்துக்களும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் நான் விழிப்புடனேயே இருந்தேன். இங்கே இன்னுமொரு விடையத்தையும் நான் பதிவு செய்யவேண்டும். புலிகள் மீது வசவு பாடும் நிகழ்வாக இருந்தாலும் சரி அவர்கள் மீதான அரசியல் விமர்சன நிகழ்வாக இருந்தாலும் சரி அவற்றைச் செய்வதால் எனக்கு ஆபத்து ஏற்படுமேன அவர்கள் என்னை ஒரு போதும் மிரட்டவில்லை.

நான் ஊடகவியலாளனாக இலங்கையில் இருந்த காலத்தில் புலிகளின் தரப்பில் இருந்து இரண்டு தடவைகள் மட்டுமே மிரட்டல்கள் வந்திருந்தன.

ஆனையிறவு யுத்தத்தில் கேணல் பானு கொல்லப்பட்டதாக ஒரு செய்தியை அவ்யுத்தகாலத்தில் ஒலிபரப்பியிருந்தோம். எமது செய்தியாளரின் தகவலில் இருந்த தவறுகாரணமாக அது நிகழ்ந்தது. தவறான செய்தியை ஒலிபரப்பியமைக்காக என்னைத் தூஸணவார்த்தைகளால் புலிகள் திட்டியிருந்தனர். அது ஒரு சம்பவம். மற்றைய சம்பவத்தில் புளியங்குளத்தில் இருந்து எமக்கு அனுப்பிய ஒரு செய்தியை அதன் தன்மை கருதி நாங்கள் சூரியனின் செய்தியில் சேர்க்கவில்லை. அதனால் கோபமடைந்த புளியங்குள பகுதியில் செயற்பட்ட போராளி ஒருவர் புளியங்குளத்தில் ஏ9 வீதியில் அமைந்திருந்த புலிகளின் பிரதான அலுவலகத்தில் இருந்துதொடர்புகொண்டு கோபமாகப் பேசியிருந்தார். பதிலுக்கு நானும் 'தம்பி நீர் வந்து எனது கதிரையில் இரும் நான் புலிகளின் குரலில் வேலைக்கு வருகிறேன்' எனக்கோபமாக சொல்லியதோடு தயா மாஸ்ரருடன் நான் நேரடியாக பேசுகிறேன் எனச் சொல்லி தொலைபேசி அழைப்பை துண்டித்திருந்தேன். உடனே தயா மாஸ்ரருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் முறையற்ற அணுகு முறையைக்கூறினேன். ' உவங்கள் விசரன்கள். உவங்கடை கதையை விட்டுட்டு நீங்கள் உங்கட வேலையை பாருங்கள்' எனக்கூறியிருந்தார்.

இந்த இரண்டு சம்பவங்களையும் தவிர வேறு எந்தப் பொழுதிலும் புலிகள் எம்மை நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவோ மிரட்டவோ தங்களது ஆளுமைக்குள் கொண்டுவரமுயலவோ இல்லை.

ஆனால் அரச படையினரும், அவர்களுடன் இணைந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களும் எனக்கு எல்லா வகையிலும் நெருக்குவாரங்களையும் அச்சமூட்டல்களையும் வழங்கி இறுதியில் எனக்கு மரணத்திகதியை குறிக்குமளவுக்கும் சென்றனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/76834/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • 1 month later...

அவர்களைப் பொறுத்தவரைநான் ஈழப்பனைமரத்தின் கீழிருந்து புலிக்கள்ளு குடித்துக்கொண்டிருந்தேன்!அவ்வளவுதான்

எனது மெளனம் கலைகிறது தொடர் சிலகாலம் வெளிவராமல் இருந்தது குறித்துப் பல வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அக்கறையுடன் கேட்டிருந்தார்கள். குருபரன் மீண்டும் மௌனமாகி விட்டாரோ எனப்பலரும் எண்ணத் தலைப்பட்டிருந்தனர். இடையறாத வேலைப்பழுவும் மனிதர்களுக்கே உரிய இடையிட்டு வரும் மனச் சோர்வுகளும் நினைவுகளையும் உணர்வுகளையும் கோர்த்துக் கட்டுரையாக்குவதற்குரிய உழைப்பை செய்ய முடியாமலாக்கி விட்டன. இப்பொழுது சற்று இளைப்பாறிய பின் மீண்டும் கலைகிறது என் மௌனம்.

கடந்த 12 ஆவது தொடரில் ஒரு ஊடகவியலாளனாக ஊடக தர்மங்களைப்பேணுவதிலும் மாற்றுக்கருத்துக்களுக்கு களம் அளிப்பதிலும் கவனமுடனிருந்தேன் என்பதைக் கூறியிருந்தேன். அதே தொடரில் வடமராச்சியில் படையினரால் தீயிடப்பட்ட நலன்புரி முகாம் ஒன்று குறித்தும் அதனைச் செய்தியாக வெளிட்டதனால் நாம் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் குறிப்பிட்டு இருந்தேன். அந்தச்செய்தியிடலைப் பிரதம செய்தி ஆசிரியன் என்ற வகையில் கையாண்ட விதம் குறித்து எமது நிறுவனத்தலைவர் பாராட்டியிருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன். குறித்த எம்மால் வெளியிடப்பட்ட அந்தச் செய்தியின் பிரதியையும் அச்செய்தியினால் பாதுகாப்பு அமைச்சுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது எமது செய்தி சரியானது என்பதை நிரூபிக்கும் விதத்தில் நான் நிர்வாகத்திற்கு கொடுத்த ஆதாரங்களையும் இங்கே தருகிறேன்.

Kudathanai%201.jpg

Kudathanai%202.jpg

இது மட்டுமன்றி எனது தலைமையில் செயற்பட்ட சூரியன் செய்திப் பிரிவு எவ்வாறு ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்தது என்பதற்கு இன்மொரு உதாரணத்தையும் தரமுடியும்.

மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராகக்களமிறங்கிய போது இலங்கையின் அனைத்து முக்கிய ஊடகங்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட றணில் விக்கிரமசிங்கவுக்கே அதிகளவு பிரச்சார ஒலி ஒளிபரப்பு நேரங்களை ஒதுக்கி இருந்தன. ஆனால் எமது ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் அன்றைய காலப் பகுதியில் மெல்லிதான ஐக்கியதேசியக் கட்சிசார்புத்தன்மையைக் கொண்டிருந்த போதும் அதன் சூரியன் எவ் எம் வானொலி ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்க்கட்சி வேட்பாளர் றணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிய அதே அளவு நேரத்தை வழங்கியிருந்தது.

Daily%20mirror.png

குறித்த தேர்தல் முடிந்திருந்த காலத்தில் ஒருநாள் எமது நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் செயலாளர் எனக்கு ஒரு டெய்லி மிரர் பத்திரிகைச் செய்தி ஒன்றை அனுப்பி அதில் குறிப்பு ஒன்றையும் அனுப்பி இருந்தார். அந்த செய்தியை பெற்றவுடன் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி. அந்த செய்தி பவ்ரல் அமைப்பு ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகங்கள் அறிக்கையிட்ட செய்திகள் தொடர்பானதாக இருந்தது. செயலாளர் குறிப்பிட்டது போன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அதன்போது முகாமைத்துவப் பணிப்பாளர் தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறியதாக சொன்னார். அவரைச் சந்தித்த போது அந்தச் செய்தியை வாசித்துக்காட்டி பாராட்டுக்குரிய முறையில் தொழிற்பட்டிருக்கிறீர்கள் எனக் குறிப்பிட்டு என்னை வாழ்த்தினார்.

அவர் என்னைப்பாராட்டுவதற்கு காரணமான செய்தியில் தேர்தல் காலங்களில் பவ்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்றின் படிக்கு நடந்து முடிந்திருந்த ஜனாதிபதி தேர்தலில் எமது சூரியன் எவ் எம் வானொலியைத் தவிர ஏனைய அனைத்து ஆங்கில சிங்கள இலத்திரணியல் ஊடகங்களும் றணில் விக்கிரம சிங்கவுக்கே பிரச்சாரத்திற்கு அதிகளவு நேரத்தை வழங்கியிருந்தமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதே ராஜபக்ஸ அரசின் சகோதரரின் வழிகாட்டலில் இயங்கிய புலனாய்வுப் பிரிவினர் தான் என்னைக் கடத்தி கொலை செய்ய முயன்றனர்.

Daily%20mirror1.jpg

ஊடக தர்மம் பற்றிய நுண்ணுணர்வை நாங்கள் (அனேகமான பத்திரிகையாளர்கள்) கொண்டிருக்கிற போதும் ஆட்சியாளர்கள் சனநாயகம் பற்றிய குறைந்தபட்ச உணர்வு கூட இல்லாமல், ஊடகவியலாளர்கள் தங்களுக்கு தாரை தம்பட்டம் அடிக்க வில்லை என்றால் அல்லது ஊடகவியலாளர்கள் மக்கள் நலன்கருதி தங்களை விமர்சித்தார்கள் என்றால் அவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க அல்லது கடத்திகொலை செய்ய நினைக்கிறார்கள்.

எமது சூரியன் செய்திப் பிரிவுபற்றியும் எமது அன்றைய நிலைப்பாடு குறித்தும் நான் இங்கே ஏன் அழுத்திக் கூறினேன் என்றால் நான் கடத்தப்பட்ட போது அரசாங்க தரப்பில் இருந்த பலரும் குறிப்பாக அரசாங்கத்தை அன்று ஆதரித்துக்கொண்டிருந்த தமிழ்த் தரப்புகள் பலவும் எமது வானொலியையும் என்னையும் புலிகளிற்கு சார்பானவர்களாகச் சித்தரித்து அதனால் தான் நான் கடத்தப்பட்டேன் என நிறுவ முற்பட்டிருந்தனர். இந்த நிறுவலைச் செய்யக்கூடிய சில தோற்றப்பாடுகளும் அக்காலத்தில் இருந்தனவென்பதைப் பிற்பாடு நான் உணர்ந்து கொண்டேன்.

அத்தோற்றப்பாடுகளை பற்றியும் இங்கு பார்த்து விடுவோம்.

அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான அனைத்துச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் செய்தி சேகரிப்பாளராக நான் சென்று வந்தேன் என்பதை இத்தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன் . சமாதான காலப் பகுதியில் வன்னியில் இடம்பெற்ற பல ஊடகவியலாளர்கள் சந்திப்பிற்கும் நான் சென்று வந்திருக்கிறேன். அப்போது புலிகளின் உயர் மட்ட தலைவர்களுக்கும் எனக்கும் இடையில் ஊடகவியலாளர் என்ற வகையில் நல்ல உறவு இருந்திருக்கிறது.

புலிகளின் புலனாய்வு மட்டத்தில் இருந்த சில முக்கியஸ்த்தர்களில் தொடங்கி அரசியல் மட்டத்தில் இருந்த பலர் வரையும் வன்னிக்கு சென்ற பல சந்தர்ப்பங்களில் என்னுடன் வந்து உரையாடி இருக்கிறார்கள். அவ்வாறான உரையாடல்களின் போது அவர்களின் நோக்கம் என்னவாக இருந்த போதும் ஊடகவியலாளன் என்ற எல்லையைத் தாண்டி அல்லது ஊடக செயற்பாடுகளுக்கு அப்பால் எனது செயற்பாடுகள் அமைய மாட்டாது என்பதனை அவர்களுக்கு முற்று முழுதாகத் தெளிவுபடுத்தி இருந்தேன்.

புலிகளின் குரல் முக்கியஸ்த்தர்களாக இருந்த தவபாலன், யவான் என்ற தமிழன்பன் ஆகியோர் ஊடகத்தில் வெளிவரும் செய்திகள் குறித்து என்னுடன் பலமுறை பேசியிருக்கிறார்கள். புலிகளின் மாவட்ட தளபதிகளாக இருந்தவர்களுடனும் அரசியற் பொறுப்பாளர்களாக இருந்தவர்களுடனும் பலமுறை நாளாந்தச் செய்திகள் தொடர்பாகவும் விசேட செவ்விகள் பெறுவது தொடர்பாகவும் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறேன். சமாதான காலத்தில் வன்னிக்கு செல்லும் சந்தர்ப்பங்களில்அப்போதைய ஊடகத் தொடர்பாளராக இருந்த தயா மாஸ்ரருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன்.

ஒரு தடவை முக்கிய ஊடகச் சந்திப்பிற்கு சென்ற போது அடுத்த நாளும் முக்கிய சந்திப்பு ஒன்று இருந்ததனால் கிளிநொச்சியில் தங்க வேண்டி ஏற்பட்டது. புலிகளின் ஊடகத்தொடர்பு மையமாக இருந்த மிகப்பெரிய அலுவலக அறை ஒன்றில் ஒருசில ஊடகவியலாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைத் தயாமாஸ்ரர் செய்திருந்தார்.

குளிரூட்டப்பட்ட அந்த அறைக்கதவைத் தட்டிக் காலையில் எங்களை எழுப்பிய போராளி ஒருவர் மிகவும் மரியாதையாக சேர் எனக் கூப்பிட்டுத் தேனீர் தந்தார். அந்தத் தேனீரைக் குடித்து விட்டு தயா மாஸ்ரரிடம் கூறினேன்: மாஸ்ரர் சற்று பின்னோக்கி 1986ஆம் ஆண்டின் பிற்பகுதியை நினைத்துப்பார்க்கிறேன். அப்பொழுது புலிப் போராளிகளால் கைது செய்யப்பட்டு அவர்களின் ஒரு முகாம் ஒன்றில் நான் சிறை வைக்கப்பட்டிருந்தேன். கைகள் பின்னாற் கட்டப்பட்டு உள்ளாடை மட்டும் அணிய அனுமதிக்கப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்பொழுது “டேய் நாங்கள் வாறம் கதவுக்கு கிட்ட நிற்காதே!”எனக் கூறி கதைவைத் திறந்து ஒரு றப்பர் குவளையில் தேனீரை வைத்து “குடியடா தேனீரை” எனச் சொன்னது நினைவுக்கு வருகிறது எனக் கூறினேன். வழமை போலவே தனக்குரிய ஒரு சிரிப்புடன் “காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது குருபரன்” எனத் தயாமாஸ்ர்ர் சொன்னது ஞாபகம் வருகிறது.

உண்மைதான் காலம் ஒரே மாதிரிச் செல்லவில்லை.

சமாதான காலத்தில் தெற்கைச் சேர்ந்த பல ஊடகங்கள் வடக்கு கிழக்கிற்கு தமது சேவையை விஸ்தரிக்க முயற்சி செய்தன. சூரியனும் அதனை விஸ்தரிக்க முயன்றது. அப்போது வடக்கிற்கு சூரியனின் சேவையை விஸ்தரிக்க விரும்பினால் ஒரு தொகைப் பணத்தை தமக்கு செலுத்த வேண்டும் எனப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே இந்தக் கட்டுப்பாட்டை ஏற்றுச் சில நிறுவனங்கள் புலிகளுக்கு வரியை செலுத்தி இருந்தன.

இந்த நிலையில் எமது நிறுவனத்தின் நிர்வாகத்தினர் இதுபற்றி என்னுடன் உரையாடி மற்றைய நிறுவனங்களைப் போலல்லாமல் நாம் தமிழ்ப்பிரிவிற்கு அனைத்து சுதந்திரங்களையும் தந்திருக்கிறோம். இதனால் பல சிக்கல்களையும் எதிர்கொள்கிறோம். இவ்வாறு இருக்கையில் எமக்கு வரிவிதிப்பது என்றால் வடக்கிற்கு எமது சேவையை விஸ்தரிக்க நாம் விரும்பவில்லை எனத் தெரிவித்து விட்டார்கள்.

இந்த நிலையில் இந்த விடயத்தை நான் கையாள்வதாக எனது நிறுவனத்துக்குத் தெரிவித்து உடன் தயா மாஸ்ரருடன் பேசினேன். அவர் அப்போதைய அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடன் பேசி முடிவு சொல்வதாக தெரிவித்தார். எனினும் பல நீண்ட விவாதங்களின் பின் குறிப்பிட்ட தொகை செலுத்தாமல் வடக்கிற்கு சேவையை விஸ்த்தரிக்க முடியாது என கூறுகிறார்கள் என தயா மாஸ்ரர் தொலைபேசியில் சொன்னார்.

இந்த விடயம் அரசியல் துறைக்கு அப்பாற்பட்டது என்பதனை மாஸ்ரரின் கதையில் உணர்ந்து கொண்ட நான் வன்னி சென்ற போது என்னுடன் உரையாடிய புலனாய்வுத் துறை முக்கியஸ்த்தர் ஒருவருடன் சூரியன் சேவையை வடக்குக்கு விஸ்தரிப்பது பற்றி உரையாடினேன். சூரியன் எஃப் எம்மின் முழுச் செயற்பாடுகளையும் விபரித்து வடக்கிற்கான சேவை விஸ்த்தரிப்பிற்கு நீங்கள் பணம் கேட்டால் அது எமது தமிழ்ப் பிரிவின் செயற்பாட்டிற்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதனைத் தெளிவு படுத்தியிருந்தேன். இதுபற்றி உரிய இடத்தில் பேசி முடிவைச் சொல்வதாக கூறிய அவர் அன்று மாலையே கிளிநொச்சிக்கு வாருங்கள் வரிவிலக்குக் கடிதத்தை பெற்றுச் செல்லலாம் எனக் கூறினார். எமது நிறுவனம் தனியான வாகனம் ஒன்றை ஒழுங்கு செய்து கடிதத்தை பெற்றுக் கொள்வதற்கு என்னைக் கிளிநொச்சிக்கு அனுப்பியது. நான் புறப்பட்டு கொழும்பை தாண்டிப் புத்தளத்தினூடாகச் சென்று கொண்டிருந்த போது தயா மாஸ்ரரிடம் இருந்து அழைப்பு வந்தது. நாம் கடிதத்தை தொலைநகலில் அனுப்பி விட்டோம். மூலப்பிரதியை வேண்டுமானால் கையில் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார்.

இங்கே இன்னும் ஒரு விடயத்தை சொல்லி ஆக வேண்டும். எந்த ஒரு நிறுவன அல்லது ஸ்தாபன அமைப்புகளுக்குள்ளும் அதன் அலகுகளுக்குள் இருக்கக்கூடிய போட்டிகள் குத்து வெட்டுக்கள் போலவே புலிகள் அமைப்பிற்குள்ளும் புலனாய்வுப் பிரிவு அரசியல் பிரிவு நிதிப்பிரிவு போன்ற பிரிவுகளிடையே போட்டியும் முரண்பாடுகளும் வலுவான நிலையில் இருந்தன. அதனை இந்தக் கடிதம் வாங்கும் விடயத்தில் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

விடவும் தராக்கி என்கிற அமரர் சிவராம் அவர்களுடன் எனக்கு இருந்த தொடர்பும் அவர்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதனை அவர்களது விசாரனைகளில் புரிந்து கொண்டேன். இலங்கை அரசாங்கத்தையும் அவர்களின் படைகளையும் புலனாய்வுப் பிரிவினரையும் பொறுத்த வரையில் தராக்கி என்ற சிவராம் புலிகளுடன் மிக நெருங்கிச் செயற்பட்டவர் அவர்களின் அதி முக்கிய செயற்பாட்டாளர். சிவராம் ஆசிரியராக இருந்த தமிழ் நெற் சர்வதேச மட்டத்தில் அவர்களுக்கு பலத்த தலையிடியை கொடுத்த ஊடகம். அதுவும் புலிகளின் நேரடியான கட்டுப்பாட்டிலேயே இயங்கியது என்ற மிக உறுதியான நம்பிக்கைகளை கொண்டவர்களாக இருந்தமையினை அவர்களின் உரையாடல்கள் மூலம் என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

இந்த எண்ணப்பாடு புலிகளுடன் என்னை தொடர்புபடுத்த காரணமாக இருந்திருக்கலாம். ஊடகவியலாளன் என்ற வகையில் சிவராம் அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டு செய்திகள் தொடர்பாக உரையாடிச் சில விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வார். சிவராம் தமிழ்நெற் ஆசிரியர் என்பதும் சிவராமுடன் எனக்கு உறவு இருந்தது என்பதும் எமது நிறுவனத்தில் கடமையாற்றிய சிங்களமொழி ஊடகவியலாளர்கள் பலருக்கும் தெரிந்தே இருந்தது.

ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் எமது ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு எதிராக அமைச்சர்கள் மங்களசமரவீர மற்றும் லக்ஸ்மன் கதிர்காமர் ஆகியோர் கொடுத்த நெருக்குதல்கள் குறித்த செய்திகள் தமிழ் நெற்றில் வெளியாகியும் இருந்தன. அந்த செய்திகள் பலவற்றை என்னிடமே சிவராம் உறுதிப்படுத்திக் கொண்டார். இவையெல்லாவற்றையும் கணக்கிட்ட என்னுடன் பணியாற்றிய சிங்களமொழி ஊடகவியலாளர்கள் சிலருக்கு தமிழ் நெற்றை கொழும்பில் இருந்து நானே இயக்குவதாகக் கடுமையான சந்தேகம் எழுந்திருந்தது. அவர்களது சந்தேகத்திற்கு வலுப்படுத்தக்கூடிய இன்னுமொரு சம்பவமும் நடந்தது.

3 ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக நான் நோர்வே சென்ற போது 18 வருடங்களின் பின் மீண்டும் சந்தித்த எனது பாடசாலை கால நண்பனும் இற்றை வரையும் என் உற்ற நண்பனாக விளங்குகின்றவருமான சுரேஸ் எனக்கு ஒஸ்லோவில் வைத்து மிகத் தரமான மடிக்கண்ணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.

என் போன்ற ஊடகவியலாளர்கள் விலை கொடுத்து வாங்க முடியாத கண்ணி ஒன்றை நான் என் அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது சிங்களமொழி ஊடகவியலாளர்கள் பலருக்கு அது புலிகளால் வழங்கப்பட்டது போன்றே தோன்றியது. ஒருவருக்கும் தெரியாமல் மடிக்கணணியூடாக நான் தமிழ் நெற்றுக்கு செய்தி அனுப்புகிறேன் என்றே அவர்கள் எண்ணத் தலைப்பட்டனர். என்னை எனது வாகனத்தில் இருந்து இழுத்து வெளியில் எடுத்த போது கையில் பிஸ்ரலுடன் நின்ற புலனாய்வுப் பிரிவின் அதிகாரி வாகனத்துள் இருக்கும் இவரது லப்டொப்பை எடு என மற்றவருக்கு கூற அதனை அவர்கள் தேடிய போதும் அன்று அதனை நான் கொண்டு வரவில்லை. எனது தேவைக்காக நான் வைத்திருந்த லப்டொப் எந்தளவுக்கு பலனாய்வுப் பிரிவினரை குழப்பியது என்பதனை அந்த அதிகாலைப் பொழுதில் என் வாகனத்தில் அதனை தேடியதன் மூலம் புரிந்து கொண்டேன்.

ஆனால் சிவராமுடனும் அவரின் பின்னால் நண்பர் ஒருவர் மூலமாக தமிழ் நெற் ஜெயாவுடனும் எனக்கிருந்த ஒரு ஊடகவியலாளனுக்குரிய தொடர்பைத் தவிர தமிழ் நெற்றை நோக்கிச் செல்லவேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.

இவை யாவற்றிற்கும் மேலாகத் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை, அரசாங்கப் படையினரின் மனித உரிமை மீறல்களை, அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுகின்ற ஊடகங்களை, புலி முத்திரை குத்துவதன் மூலம் இலகுவாக தென்பகுதி மக்களிடமிருந்து அன்னியப்படுத்தும் பலமான பாரம்பரியம் அன்று இலங்கையில் வேருன்றி இருந்ததையும் இங்கு நினைவு கூர வேண்டும்.

நான் மேற்சொன்ன காரணங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைய போர் தொடங்கும் போது கொல்லப்பட்ட வேண்டிய அல்லது இல்லாமல் செய்யப்பட வேண்டியோர் பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றுவிட்டது. அவர்களைப் பொறுத்த வரை நான் ஈழப் பனைமரத்தின் கீழிருந்து புலிக்கள்ளுக் குடித்துக் கொண்டிருந்தேன்! அவ்வளவுதான்!!!

அதனால் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி அதிகாலை கல்கிசையில் இருந்த எனது வீட்டு ஒழுங்கையில் நான் அலுவலகம் செல்வதற்காக வாகனத்தில் புறப்பட்டு ஒழுங்கை முகப்பைச் சென்றடைந்த போது துப்பாக்கி முனையில் எனது வாகனம் வழி மறிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு வாகனத்தில் இருந்து இழுத்துக் கீழிறக்கப்பட்டு என் நெற்றியில் கைத்துப்பாக்கி வைக்கப்பட்டு மிரட்டப்பட்டு அவர்களது வாகனத்தில் தூக்கி ஏற்றப்பட்டேன்.

ஏற்றப்பட்டுச் சில நிமிடங்களுக்குள் என் மேலுடுப்பு கழட்டப்பட்டு கண்கள் கட்டப்பட்டு பின் கைகள் கட்டப்பட்டு வானின் தரையில் தலை வெளித்தெரியாது மடக்கி வைக்கப்பட்டேன்.

கிட்டத்தட்ட 1 மணிநேரமாக வாகனம் மேடு பள்ளங்கள் எனத்தாண்டி

ஓடிச் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தினுள் இருந்த தமிழ்ச் சகோதரர்கள் அவ்வப்போது அடிபோட்டு கழுத்தை அழுத்தி நெஞ்சை அழுத்தி கடைந்தெடுத்து வருத்தியதோடு கையில் அணிந்திருந்த 3 மோதிரங்களையும் உருவிக்கொண்டனர். அவற்றை உருவி எடுத்ததை முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த தமது எஜமானர்களுக்கு சொல்லக் கூடாது என்றும் சொன்னால் அடித்தே கொல்லுவோம்என்றும் கூறினார்கள்.

நானும் அன்பே சிவம் கமலகாசன் போல் “பிழைத்துப்போங்கள்” என விட்டுவிட்டேன்( வேறு வழி உயிரா மோதிரமா?)

போகிற வழியில் இரண்டு இடங்களில் என்னைக் கடத்திச் செல்ல உதவிக்கு அழைத்து வரப்பட்ட தமிழ்ச் சகோதரர்கள் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இறக்கி விடப்பட்ட இடங்கள் துணை ஆயுதக் குழுக்களிற்கான முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த இடங்கள் என நினைக்கிறேன். இவர்கள் இலங்கைப் புலனாய்வாளர்களின் பிரதான முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. அவை அமைந்திருக்கும் இடங்கள் துணை ராணுவக்குழுக்களுக்கு காட்டப்படுவதும் இல்லை. இறுதியில் காலை 5:30 அல்லது 5:45 மணியிருக்கும் என நினைக்கிறேன். மிகவும் அமைதியான ஒரு பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டு வாகனத்தை விட்டு இறக்கப்பட்ட நான் ஒரு வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டேன். கொலைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்ட என்னை வரவேற்று வாசலில் நின்ற அதிகாரி தலையில் டமார் என்றொரு குத்து விட்டார் சிறிது நேரம் எடுத்தது என்னை சுதாகரித்து கொள்வதற்கு.

பின்னர் என்ன நடந்தது ? 14 ஆவது தொடரில்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/79564/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் பக்கப் பாட்டு பாடின படியால் தான் குருபரன் இன்டைக்கு உயிரோட இருக்கிறார் போல :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.