Jump to content

பிரேசிலின் ஜனாதிபதி வேட்பாளர் விமான விபத்தில் மரணம் - 3 நாள் தேசிய துக்க தினம் பிரகடனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிரேசிலின் ஜனாதிபதி வேட்பாளர் எடுவார்டோ கம்பொஸ் (49 வயது) விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
d626df.jpg
கம்பொஸை ஏற்றிச்சென்ற விமானம் சாயோ போலோ மாநிலத்தில் துறைமுக நகரான சந்தோஸிலுள்ள குடியிருப்பு பிரதேசத்தில் சீரற்ற காலநிலை காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த ஏனைய 4 பயணிகளும் இரு விமானிகளும் இறந்துள்ளனர்.
 
எடுவார்டோவின் மரணத்தையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக 3 நாள் தேசிய துக்க தினத்தை அந்நாட்டு ஜனாதிபதி டில்மா ருஸெப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
 
அத்துடன் ஜனாதிபதி தனது பிரசார நடவடிக்கைகளையும் இரத்து செய்துள்ளார்.
இன்று நாம் மாபெரும் பிரேசில் அரசியல் தலைவரை இழந்து விட்டோம் எனவும் அவரது மறைவால் பிரேசில் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை வார்த்தைகளால் விபரிக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.