Jump to content

'இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்கள்!'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், இந்தியர்களின் தற்கொலைக்கு 11 முக்கிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,35, 585 பேரும், 2012ல் 1,35.445 பேரும், 2013 ல் 1,34, 799 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ( National Crime Records Bureau), வரதட்சணை, வறுமை, கடன் போன்றவை தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ள போதிலும், மன அழுத்தம் மற்றும் விரக்தி போன்றவற்றினால் தற்கொலை செய்துகொள்வோரது எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

நோய்

தீராத நோய் காரணமாக 2011 ல் 26,570 பேரும், 2012 ல் 25, 116 பேரும், 2013 ல் 26, 426 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


வரதட்சணை

வரதட்சணை பிரச்னை காரணமாக  2011 ல் 3,239 பேரும், 2012 ல் 1,935 பேரும், 2013 ல் 2, 267 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


போதை மருந்து

போதை மருந்து உட்கொண்ட பழக்கம் உடையவர்களில் 2011 ல் 3,658 பேரும், 2012 ல் 4, 008 பேரும், 2013 ல் 4,591 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


தேர்வில் தோல்வி

தேர்வில் தோல்வியடைந்ததன் காரணமாக 2011 ல் 2,381 பேரும், 2012 ல்2, 246 பேரும், 2013 ல் 2, 471 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


குடும்ப பிரச்னை

குடும்ப பிரச்னை காரணமாக 2011 ல் 32, 909 பேரும், 2012 ல் 30, 792 பேரும், 2013 ல் 32, 325 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


காதல் பிரச்னை

காதல் பிரச்னை காரணமாக 2011 ல் 4, 586 பேரும், 2012 ல் 3, 849 பேரும், 2013 ல் 4,495 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


வறுமை

வறுமை காரணமாக 2011 ல் 2, 282 பேரும், 2012 ல் 2, 291 பேரும், 2013 ல் 1, 866 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


வேலை இல்லா பிரச்னை

வேலை இல்லா பிரச்னை காரணமாக 2011 ல் 2, 333 பேரும், 2012 ல் 1,731 பேரும், 2013 ல் 2, 090 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


நெருங்கிய உறவினர்களின் மரணம்

நெருங்கிய உறவினர்களின் மரணத்தால் மனமுடைந்து 2011 ல் 896 பேரும், 2012 ல் 819 பேரும், 2013 ல் 996 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


சமூக மதிப்பு குறைந்ததால்

சமூகத்தில் மதிப்பு குறைந்ததன் காரணமாக 2011 ல் 1, 160 பேரும், 2012 ல் 981 பேரும், 2013 ல்1, 466 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.


கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி

கடன் மற்றும் பொருளாதார நிலையில் திடீர் வீழ்ச்சி காரணமாக 2011 ல் 2, 983 பேரும், 2012 ல் 2, 357 பேரும், 2013 ல்2,678 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

http://news.vikatan.com/article.php?module=news&aid=31255
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.