Jump to content

கோல்கேட் பற்பசையில் புற்றுநோய் காரணியான டிரைக்ளோசன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன்: புற்றுநோய்க்குக் காரணமான முக்கியமான ஒரு வேதிப் பொருளைத்தான் பல லட்சம் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதாவது கோல்கேட் டோட்டல் பற்பசையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று என்று இந்த ஆய்வு கூறுகிறது. பற்களில் ஏற்படும் ஈறு பாதிப்பை ஏற்படுத்தும் நோயைக் குணமாக்க கோல்கேட் பேஸ்ட்டில் டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுவதாக கோல்கேட் நிறுவனம் கூறுகிறது.

புற்று நோய்க் காரணி: ஆனால் இந்த வேதிப் பொருள் புற்று நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. இந்த வேதிப் பொருள் பாதுகாப்பானது, பயன்படுத்தலாம் என்று கடந்த 1997 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பலமான தவறுகள்: ஆனால் இந்த அனுமதிக்குப் பின்னர் சில தவறுகள் நடந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம்: அதாவது கோல்கேட் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து இந்த அனுமதியை உணவு மற்றும் மருந்துக் கழகம் கொடுத்துள்ளது. இதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு வழக்கறிஞர் வெளிக் கொணர்ந்துள்ளார்.

ஆட்சேபனை தெரிவிப்பு: உண்மையில் கோல்கேட் நிறுவனம் கடந்த 1997 இல் இந்த வேதிப் பொருளை பயன்படுத்த அனுமதி கோரியபோது உணவு மற்றும் மருந்துக் கழகத்தில் இடம் பெற்றுள்ள பலரும் இது ஆபத்தானது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால் கோல்கேட் தாக்கல் செய்த ஆய்வறிக்கையிலோ, அதிக அளவில் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தினால்தான் ஆபத்து என்று வாதிடப்பட்டிருக்கிறது.

அபாயகரமான வேதிப்பொருள்: இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்விலுலும் டிரைக்ளோசன் அபயாகரமான ஒரு வேதிப் பொருள், புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வில் தகவல்: பற்களில் பாக்டீரியாக்களால் ஏற்படும் பாதிப்பை தடுத்து நிறுத்தவே டிரைக்ளோசன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய வேதிப் பொருட்களில் ஒன்று என்று 2010 இல் நடந்த ஆய்விலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலட்டுத்தன்மை: மேலும் இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் 2013 இல் நடந்த ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

http://tamil.oneindia.in/

Link to comment
Share on other sites

கனடாவில் எங்கே வேப்பங் குச்சி விற்கின்றார்கள் என்று அறியத் தரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் எங்கே வேப்பங் குச்சி விற்கின்றார்கள் என்று அறியத் தரவும்.

அது மனிதர்களுக்கு பயன் கொடுக்க கூடியது அதை இறக்குமதி செய்து தமிழர்களுக்கு விற்பனை செய்ய முடியாது.
 
இங்கு தேவைக்கு பயன்படாத அம்மி ஆட்டுக்கல் ... இவைகள் வேண்டுமென்றால் எல்லா கடையிலும் கிடைக்கும்.
 
ஊரில் அத்தனை கோப்பைகளுக்கு வசதி இல்லாத காரணத்தால்தான் தாமரை இலை வாழை இலை போட்டு பந்தி வைப்பார்கள்.
இப்போ கோப்பை $5 டொலருக்கு வாங்கலாம்.
$500 செலவழித்து வாழை  இலை கொண்டு வருகிறார்கள். தமிழனின் தலையில் கட்டிவிடலாம் என்ற முழு நம்பிக்கையும் இருக்கிறது. அவர்களை ஈழ தமிழர் ஒருபோதும் ஏமாற்றியதும் கிடையாது இதுபோன்ற விடயங்களில். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் எங்கே வேப்பங் குச்சி விற்கின்றார்கள் என்று அறியத் தரவும்.

 

எங்கையாயலும் சாம்த்திய பட்ட பெண் பிள்ளைகளின் வீட்டுக்கு போனால் இலை போக குச்சி மிஞ்சும்.விசாரிச்சு பார்க்கவும். :rolleyes::lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரக்கரியாலையும்.உமிச்சாம்பலாலையும் பல்லு தீட்டின சனத்தை நக்கலடிச்சவனுக்கு நல்ல பரிசு. :icon_idea:

Link to comment
Share on other sites

கோபால் பல் பொடியில் இருக்கும் பிங்க் கலர் எப்படி செய்யப்படுவது? யாருக்காவது தெரியுமா? தகவல் அறிய தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் எங்கே வேப்பங் குச்சி விற்கின்றார்கள் என்று அறியத் தரவும்.

 

 

அண்மையில்  எமது ஊரில் ஏதாவது தொழில் வசதிகளை  ஏற்படுத்திக்கொடுக்கணும் என்று  சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன்

 

அப்பொழுது ஒருவர்  சொன்னது இது

உங்களது ஊரில் மிகவும் வழமாக ஆழமாக  வளரக்கூடியது வேம்பு

அதன் பலன்கள் எண்ணிலடங்கா

வேப்பெண்ணை

வேப்பமிலை

வேம்பு குடிநீர்

வேம்பு தடி

வேம்பு......???

அந்தவகையில் இவற்றை  செய்வதனூடாக

தொழிலும் வருமானமும் மருத்துவத்துக்கும்  உதவுவதோடு

எமது மக்களின் மட்டுமல்லாது

உலக ரீதியாக மக்களின் நலத்துக்கும் உதவமுடியும்

அத்துடன் எமது மருத்துவத்தை  அழியாது பாதுக்காக்கவும் முடியும் என்றார்.

அப்படியொரு நோக்கம் உள்ளது

பார்க்கலாம் 

Link to comment
Share on other sites

நான் கோல்கேட் பற்பசை பாவிப்பதில்லை சிக்னல் அல்லது Oral B தான் பாவிக்கிறனான்  :D

Link to comment
Share on other sites

தேனீக்களை கொல்லும் நச்சு திரவங்களை தடை செய்வதை எதிர்க்கும் தலையிடி மருந்து பேயர் நிறுவனம். இரு வருடங்களுக்கு முன்பு வரை பேயர் கோழி தீனிக்குள் கோழியை கொழுக்க வைக்க ஆர்சனிக் நஞ்சை கலந்தது.

இரசாயன புண்ணாக்கை திண்டே தீருவோம் என்று அடம்பிடிக்கும் மந்தைகளுக்கு கான்சர் பரிசு காவல் இருக்கிறது.

Amid mounting public concern over the link between pesticides and the decline of insect pollinators, the industry group that represents the makers of the chemicals says restricting use of the crop protection would “handcuff” farmers in their battle against insects.

The Ontario government’s proposal to end the blanket use of a class of pesticide known as neonicotinoid by requiring growers to seek a licence to apply it would create two tiers of farmers, and hamper one of the province’s key economic sectors, said Pierre Petelle of industry group CropLife Canada, which represents Bayer AG, Syngenta AG and other makers of pesticides.

http://m.theglobeandmail.com/report-on-business/the-battle-over-pesticides/article19909522/?service=mobile

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சேபனை தெரிவிப்பு: உண்மையில் கோல்கேட் நிறுவனம் கடந்த 1997 இல் இந்த வேதிப் பொருளை பயன்படுத்த அனுமதி கோரியபோது உணவு மற்றும் மருந்துக் கழகத்தில் இடம் பெற்றுள்ள பலரும் இது ஆபத்தானது என்று ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால் கோல்கேட் தாக்கல் செய்த ஆய்வறிக்கையிலோ, அதிக அளவில் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தினால்தான் ஆபத்து என்று வாதிடப்பட்டிருக்கிறது.

அபாயகரமான வேதிப்பொருள்: இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்விலுலும் டிரைக்ளோசன் அபயாகரமான ஒரு வேதிப் பொருள், புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தெரிந்தே தான் தவறு 1997ல் இருந்து. :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.