Jump to content

யாழ்ப்பாணத்தில் நடக்கவிருந்த கூட்டமைப்பின் கூட்டுக் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு! – கிழக்கில் இருந்து கிளம்பிய எதிர்ப்பின் எதிரொலி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
யாழ்ப்பாணத்தில் நடக்கவிருந்த கூட்டமைப்பின் கூட்டுக் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு! – கிழக்கில் இருந்து கிளம்பிய எதிர்ப்பின் எதிரொலி. 
[Friday, 2014-04-18 08:46:25]
tna-180414-150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டுக் கூட்டம் ஒன்றை நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் நேற்றிரவு கடைசி நேரத்தில் அதனை ஒத்தி வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இனி, அந்தக் கூட்டத்தை எப்போது, எங்கு நடத்துவது என்பது குறித்து பெரும்பாலும் இன்று அல்லது அடுத்து வரும் நாட்களில் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இனிப் பெரும்பாலும் அந்தக் கூட்டம் திருகோணமலையிலேயே நடக்கும் எனச் சில வட்டாரங்கள் தெரிவித்தன.

  

திடீரென இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எடுத்த முடிவு உள்வீட்டில் பல சார்ச்சைகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியமையை அடுத்தே இந்தக் கூட்டத்தை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிய வந்தது. முதலில் இந்தக் கூட்டத்தை எதிர்வரும் சனியன்று யாழ்ப்பாணத்தில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டதும் கிழக்கு மாகாண கூட்டமைப்பு வட்டாரங்களில் அந்த முடிவு பலத்த அதிருப்தியை உருவாக்கியது எனத் தெரிய வந்தது. ஏற்கனவே யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இத்தகைய கூட்டுக் கூட்டம் இரண்டு தடவைகள் நடத்தப்பட்டன. இனி, அந்தத் தொடரில் அடுத்த கூட்டத்தை திருகோணமலையில் அல்லது அம்பாறையில் கூட்டுவது என அப்போது தீர்மானிக்கப்பட்டிருந்ததாம்.

ஆனால், அந்தத் தீர்மானத்துக்கு மாறாக, திடீரென மீண்டும் யாழ்ப்பாணத்திலேயே அத்தகைய கூட்டத்தைக் கூட்டும் முடிவு தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையால் எடுக்கப்பட்டிருக்கின்றது என்று கிழக்கு உறுப்பினர்கள் பொருமியிருக்கின்றனர். ஏற்கனவே, கிழக்கு மாகாணத்தவர்கள் ஈழத் தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகளில் புறமொதுக்கப்படுகின்றனர் என்றும், அதற்கு கிழக்கு மாகாணத்தின் கூட்டமைப்புப் பிரமுகர்கள் துணை போகின்றனர் என்றும் அமைச்சர் முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) போன்றோர் கிழக்கில் பெரிய அளவில் பிரசாரம் செய்து வருகின்றனர். போதாக்குறைக்கு ஜெனீவா ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸில் அமர்வு தொடர்பான பிரசார நடவடிக்கைகளுக்காக அங்கு சென்ற கூட்டமைப்புக் குழுவிலும், அண்மையில் தென்னாபிரிக்கா சென்ற கூட்டமைப்புக் குழுவிலும் கிழக்குக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்ற குறை அந்தப் பிரதிநிதிகள் மத்தியில் அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்தது.

அதேசமயம், கிழக்குப் பிரதிநிதிகள் ஏற்கனவே சனியன்று கிழக்கில் தத்தமது பிரதேசங்களில் பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்து அவற்றில் பங்குபற்றவும் இசைவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திடீரென - முன்னறிவித்தல் - ஏதுமின்றி - அடுத்த இரண்டு நாள்களில் யாழ்ப்பாணத்தில் கூட்டம் என்ற அறிவிப்பால் கிழக்கு உறுப்பினர்கள் குழம்பிப் போயினர் என்று கூறப்படுகின்றது. அதேவேளை கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைவர்களும் இந்த எம்.பிக்கள் - மாகாணசபை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம் அவசரமாகக் கூட்டப்படுவது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர் என தெரிய வருகிறது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் தெரிவையும் வேட்பாளர் தெரிவையும் அதையொட்டிய ஏனைய விடயங்களையும் கையாள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வசிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை கூட்டமைப்பு உருவாக்கியிருந்தது. கூட்டமைப்பின் விடயங்களை அந்த உயர்மட்டக் குழுவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் முன்னெடுப்பது எனவும் அப்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கூட்டம் கடந்த ஒன்பது மாதங்களாகக் கூட்டப்படவேயில்லை. ஏனைய கட்சிகளின் கருத்துக்கள் உள்வாங்கப்படாமல், அக்கட்சிகளின் கலந்தாலோசனையின்றியே ஒரு தலைப்பட்சமாக சிலர் மட்டுமே அரசியல் விடயங்களைத் தீர்மானித்து விவகாரங்களைக் கையாளுகின்றனர் என மற்றைய கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.

'ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டுங்கள் என்று கேட்டால், தலையாட்டிவிட்டு, அது குறித்து நடவடிக்கை எடுக்காமல் எம்.பிக்கள் - மாகாண சபை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தை அவசர அவசரமாகக் கூட்டுகின்றார்கள. அதைக் கூட்ட வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. அதற்கு முதல் ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டுங்கள். மற்றைய கட்சிகளின் நிலைப்பாடுகளையும் உள்வாங்குங்கள். எங்களுடனும் கலந்தாலோசனை செய்யுங்கள். முடிவெடுக்க முன்னர் எங்கள் பக்கக் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்து விவாதியுங்கள்!' - என்றெல்லாம் கேட்டுப் பார்த்துவிட்டோம். எதுவும் நடப்பதாகத் தெரிவில்லை. எனவே இந்தக் கூட்டுக் கூட்டத்துக்கு முன்னால் ஒருங்கிணைப்புக் கூட்டத்தைக் கூட்டினால் மட்டுமே கூட்டுக் கூட்டத்திற்கு வருவோம் என்ற சாரப்பட எமது நிலைப்பாட்டை தீர்மானம் எடுப்போருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம் என்று அங்கத்துவக் கட்சி ஒன்றின் தலைவர் தெரிவித்தார்.

இத்தகைய சர்ச்சைகளின் பின்னணியிலேயே மேற்படி கூட்டுக் கூட்டத்தை இந்த சனிக்கிழமை நடத்தாமல் ஒத்திவைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டம் இனிப் பெரும்பாலும் மே தினத்துக்கு முன்னர் திருகோணமலையில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

http://seithy.com/breifNews.php?newsID=107737&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.