Jump to content

இன்டர்போல் மூலம் 96 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! – 40 பேர் புலிச் சந்தேக நபர்களாம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இன்டர்போல் மூலம் 96 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை! – 40 பேர் புலிச் சந்தேக நபர்களாம். 
[Friday, 2014-04-18 10:03:55]
ajith-180414-150.jpg
புலி சந்தேகநபர்கள் உட்பட பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 96 பேருக்கு எதிராக இன்டர்போலினூடாக சிவப்பு எச்சரிகை அறிவிப்பு (Red Notice) விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். புலி சந்தேகநபர்கள் 40 பேரும், கொலை, போதைப்பொருள் கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு தேடப்பட்டுவரும் 56 பேரும் இந்த அபாய அறிவிப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
  
புலி உறுப்பினர்களான விநாயகம், நெடியவன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெளிநாடு களில் வாழும் இலங்கையர்களுக்கு எதிராகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 
இவர்களை இன்டர்போலின் உதவியுடன் வெளிநாடு களிலிருந்து கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையுடன் இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட நாடுகளில் அவர்கள் இருந்தால் கைதிகளைப் பரிமாற்றும் திட்டத்தின் கீழ் அவர்களை இலங்கைக்கு அழைத்துவரப்படுவர். அதேநேரம், 2012ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 6 பேர் தமிழ்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கைக்குக் கொண்டு வருவது தொடர்பில் இராஜதந்திர ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இதேவேளை, பயங்கரவாதத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 44 பேர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர். கடந்த மார்ச் 5ஆம் திகதி பளை பிரதேசத்தில் பயங்கரவாதத்தை மீண்டும் ஊக்குவிக்கும் வகையிலான வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்ட முயற்சித்த இருவர் பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
 
இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணைகளில் எல்.ரி.ரி.ஈயின் உள்நாட்டுத் தலைவர்கள் என சந்தேகிக்கப்படும் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரைக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட தேடுதல்களின் போது 67 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 23 பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டதுடன் 44 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 37 ஆண்களும், 7 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
 
கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரை தேடி நடத்தப்பட்ட தேடுதல்களின் போது மோட்டார்கள், துப்பாக்கி ரவைகள் மற்றும் கண்ணிவெடி கண்டறியும் கருவிகள் 3 உட்பட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்ணிவெடி அகற்றும் அமைப்பொன்றிலிருந்து காணாமல்போன 5 கண்ணிவெடி கண்டறியும் கருவிகளில் 3 கருவிகள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன.பயங்கரவாத செயற்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்கும் நோக்கில் இவர்கள் செயற்பட்டார்கள் என்பது தெளிவாகப் புலனாகியுள்ளது. வடக்கிலுள்ள 99 வீதமானவர்கள் மீண்டுமொரு பயங்கரவாத சூழ்நிலை ஏற்படுவதை விரும்பவில்லை .
 
அதேநேரம், கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக கெப்பிட்டிகொல்லாவ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சுட்டுக்கொல்ல ப்பட்டவர்களின் சடலங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுதொடர்பில் மேலதிக சாட்சிகளை வழங்க விரும்புபவர்கள் கெப்பிட்டிகொல்லாவ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சாட்சியங்களை வழங்க முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.
 
பயங்கரவாதம் மீண்டும் புத்துயிர் பெறாமல் தடுப்பதற்கான பொறுப்பு பொலிஸாருக்கும், பாதுகாப்புத் துறைக்கும் இருப்பதால் அதற்கு அமைய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.http://seithy.com/breifNews.php?newsID=107748&category=TamilNews&language=tamil
Link to comment
Share on other sites

சும்மா அவிக்கிறார்.

சிறி லங்கா சில்லறைகள் ஹொலிவூட் ரேஞ்சிற்கு படம் காட்டுகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.