Jump to content

யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் மரணம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை யாழ்ஆயர் இல்லம் மறுத்துள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் மரணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களை யாழ்.ஆயர் இல்லம் மறுதலித்துள்ளது. யாழ்.ஆயர் சார்பில் குருமுதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாhர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மதகுருமார் மீது சுமத்தப்பட்;ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்காது விசாரணைகளிற்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில்

'யாழ் பேராலயத்தில் நவம்பர் 2013 – பெப்ரவரி 2014 காலப் பகுதியில் மறையாசிரியராகக் கடமையாற்றிக் கடந்த 14-04-2014 அன்று மரணமடைந்த செல்வி ஜெறோமி கொன்சலிற்றா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மேலும், குறிப்பிட்ட மரணம் தொடர்பாக பேராலய உதவிப் பங்குத் தந்தையர்கள் இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவ் விசாரணைக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

மேற்படி உதவிப் பங்குத் தந்தையர்களின் தவறான செயற்பாடுகளாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேற்படி பெண்ணின் மரணத்துக்கு முன்னான காலப் பகுதியிலோ அல்லது பின்னான காலப் பகுதியிலோ, பெற்றோராலோ அல்லது வேறு எந்தத் தரப்பாலோ, பேராலயப் பங்குத் தந்தையிடமோ அல்லது ஆயர் இல்லத்திலோ எந்தவித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

நாம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாகக் குறிப்பிட்ட பெண் எவ்வித வெளித் தொடர்புகளுமன்ற நிலையில் வீட்டிற்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந் நிலையில் மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைத் தன்மை பாரதூரத்தன்மை என்பவற்றை நாம் ஆய்ந்தறிவதற்கு உதவியாக தொடர்பானவர்கள் உரிய முறையில் எம்மோடு தொடர்பு கொண்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தவறுகள் மறைக்கப்படக்கூடாது என்பதே எமதும் நிலைப்பாடாகும். எனினும் ஊடகங்களில் வெளிவரும் அனைத்துச் செய்திகளும் முற்றிலும் உணமையானவை என்று ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. மிகைப்படுத்தலும் வௌ;வேறு தரப்புக்கள் தமக்குச் சார்பாக விடயங்களை திரிபுபடுத்தலும் இன்றைய சூழலின் யதார்த்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந் நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளால் குழப்பமடையாது விடயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து உண்மையை அறிய முயலவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பான செய்திகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய அனைத்து கிறிஸ்தவ மற்றும் பிற மத சகோதரர்களுக்கும் எமது மனவருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து குருக்களும் திருச்சபையும் கிறிஸ்தவ நன்நெறிவழி நின்று எமது பணியை முன்னெடுப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறோம் என்றுள்ளது.

  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105752/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மத குருமார்கள் பிழை செய்தது தெரிந்தும் இங்கே கொஞ்சப் பேர் வாயை மூடிக் கொண்டு இருக்கினம்.இதையே எங்கட குருக்கள் செய்தாலோ அல்லது நித்தியானாந்தாவுடன் பெண்கள் விரும்பிப் போனாலோ குய்யோ,மொய்யோ என்று கத்துவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மத குருமார்கள் பிழை செய்தது தெரிந்தும் இங்கே கொஞ்சப் பேர் வாயை மூடிக் கொண்டு இருக்கினம்.இதையே எங்கட குருக்கள் செய்தாலோ அல்லது நித்தியானாந்தாவுடன் பெண்கள் விரும்பிப் போனாலோ குய்யோ,மொய்யோ என்று கத்துவினம்

 

அவையின்ரை நொள்ளு கொள்ளுகளுக்கு பஞ்சமில்லையடியப்பா.. :D
 
பேரை மாத்தி நொள்ளுவிடுவினமாம் அதுதான் கடைசியிலை ஆனந்தா எண்டு முடியும்...அதையேன் பேசுவான் அதுக்கேற்ற சினிமாப்பாட்டுக்கூட போட்டு அசத்துவினமாமெல்லே.. :lol:
Link to comment
Share on other sites

கிறிஸ்தவ மத குருமார்கள் பிழை செய்தது தெரிந்தும் இங்கே கொஞ்சப் பேர் வாயை மூடிக் கொண்டு இருக்கினம்.இதையே எங்கட குருக்கள் செய்தாலோ அல்லது நித்தியானாந்தாவுடன் பெண்கள் விரும்பிப் போனாலோ குய்யோ,மொய்யோ என்று கத்துவினம்

குற்றம் சாட்டப்பட்டிருக்கு அக்காச்சி .கொஞ்சம் பொறுங்க.......உண்மை தெரியட்டும் நாம் வாய் திறக்கிறோம்.............எதோ நேர நிண்டு பார்த்ததுபோல துள்றீங்க. :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மத குருமார்கள் பிழை செய்தது தெரிந்தும் இங்கே கொஞ்சப் பேர் வாயை மூடிக் கொண்டு இருக்கினம்.இதையே எங்கட குருக்கள் செய்தாலோ அல்லது நித்தியானாந்தாவுடன் பெண்கள் விரும்பிப் போனாலோ குய்யோ,மொய்யோ என்று கத்துவினம்

அப்ப உங்கட சாமியலிட்ட பெண்கள் விரும்பிப்போனா ஓகே ,இந்த கருத்துக்கு மூண்டு லைக்கு வேற ..கோயிலில் மணி ஆட்டுபவரை விட இவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.
Link to comment
Share on other sites

இறந்தவரின் தாயை பார்க்க மிக பாவமாக  இருக்கு .ஒரு தாய் இப்படிப்பட்ட நிலையில் பொய் சொல்லமாட்டார் .

 

காமத்திற்கும் கயவர்களுக்கும் மதம் ஏது ?

 

எல்லா மதத்திலும் இப்படி பட்ட கயவர்கள்  இருக்கின்றார்கள் .நாத்திகரிலும் கயவர்கள் இருக்கின்றார்கள் .

 

இப்படியான விடயங்களில் தேவைக்கு வசதியாக யாரும் எங்கட மதம் திறம் என்று நியாயபடுதுவதில் அர்த்தம் எதுவுமில்லை .

 

ஒரு முஸ்லிம் அல்லது பௌத்தன் இதை செய்திருந்தால் இன்னமும் களை கட்டியிருக்கும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள்ளேயே உண்மை கண்டறியப்படும்வரை மௌனமாக இருப்பதே மேலானது

Link to comment
Share on other sites

வீடியோவில் இந்த தாயின் வாக்குமூலம் உண்மையாயின் அந்த இரு பாதிரிகளும் உயிரோடு  இருக்க  தகுதியில்லாதவர்கள் .......அவர்கள்  அழியணும் ........நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்கட சாமியலிட்ட பெண்கள் விரும்பிப்போனா ஓகே ,இந்த கருத்துக்கு மூண்டு லைக்கு வேற ..கோயிலில் மணி ஆட்டுபவரை விட இவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.

ஓ கோயிலில் மணி ஆட்டுபவர்களை விட எந்த விதத்தில் இவர்கள் மேலானவர்கள்?...காவியுடை உடுத்திய பாதிரிமார் சேர்ச்சுக்கு போகும் இளம் பெண்களிடம் தங்களை காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவது ,பலவந்தப்படுத்துவது,பெண்களை மிரட்டுவது இது எல்லாம் உங்களை பொறுத்த வரை ஒரு சிம்பிள் மேட்டர் இல்லையா?....இதை விட சிறுவர் துஸ்பிரயோகம்,பாலியல் துஸ்பிரயோகம் எல்லாம் ஊரில் கிரிஸ்தவ மிசனரியில் நடக்குது தெரியாதா?...நான் படிச்சது கொன்வென்டியில் சிஸ்டர்களும்,பாதர்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என ஹொஸ்டலில் இருப்பவர்கள் சொல்ல கதை,கதையாய் கேள்விப்பட்டு உள்ளேன்.[எல்லோரும் இல்லை.உண்மையான ஆன்மீக பற்றோடு சேவையாற்ற வந்தோரும் உள்ளனர்.].... ஊரில ஜயமார் இப்படி பெண்களை நிர்ப்பந்ததித்ததை கேள்விப்பட்டு உள்ளீர்களா?...கோயிலில் மணி அடிக்கிறவர்கள் என்டால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு? கொஞ்சம்,கொஞ்சமாய் உங்களது உண்மையான முகம் வெளியே வருகுது.

அந்த பாதிரிமார் குற்றம் செய்தவர்கள் என்று ஊரே அல்லோகப்படுது.நேரே இருந்து பார்த்த மாதிரி அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று சொல்ல இரு காரணங்கள் தான் இருக்க வேண்டும்.1) மதத்தை விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீர்கள்.2) குற்றம் செய்த பாதிரிமார் உங்கட ஊர்க்க்காராகவோ அல்லது சொந்தக்காராக இருக்க வேண்டும்.நல்ல எஜமான விசுவாசம்.இப்படித் தான் இருக்க வேண்டும்.உண்மை வெளி வரட்டும் பார்ப்போம் என்று இருக்கிறீர்கள்.எந்த காலத்தில் இவர்கள் உண்மையை ஒத்த்க் கொண்டார்கள் இனி மேல் ஒத்துக் கொள்வதற்கு?

நித்தியானாந்தா எந்தப் பெண்ணையும் பலவந்தப்படுத்தவில்லை.அவர் செய்த ஒரே பிழை புனிதமான காவியுடுப்பை போட்டுக் கொண்டு பெண்களோடு படுத்தது தான்.அவர் செய்தது கேடு கெட்ட செயல் தான்.இந்த பாதிரிமாரோடு ஒப்பிடுகையில் அவர் செய்தது பரவாயில்லை என்பது தான் என் க்ருத்து.

ஜயர் செய்தாலும் சரி,துறவி செய்தாலும் சரி,பாதிரி செய்தாலும் சரி பிழை என்டால் பிழை தான்.உங்கள மாதிரி குருக்க்ள் செய்தால் பிழை.பாதிரி செய்தால் சரி என்கிற மாதிரி நான் கருத்து வைக்கிறதில்லை.அந்தத் தாயின் கண்ணீரைப் பார்த்தும் எதுவும் நடக்காதா மாதிரி உண்மை வரட்டும் பார்ப்போம் என்று சொல்ல உங்கள மாதிரி கல்நெஞ்சக்காரால் தான் முடியும்[உண்மை வராது எனத் தெரியும்.]இதே உங்கட குடும்பத்து ஆட்களுக்கு நடந்திருந்தால் இப்படி வந்து உங்களால் எழுத முடியுமா என்ன?

Link to comment
Share on other sites

அப்ப உங்கட சாமியலிட்ட பெண்கள் விரும்பிப்போனா ஓகே ,இந்த கருத்துக்கு மூண்டு லைக்கு வேற ..கோயிலில் மணி ஆட்டுபவரை விட இவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்.

 

இங்கு யார் மேலானவர்கர் என்பதல்ல விடயம். ஒரு பிழை நடந்தும் மூடி மறைக்கப்படுகிறது.

 

எங்களுக்குள்ளேயே உண்மை கண்டறியப்படும்வரை மௌனமாக இருப்பதே மேலானது

 

இதை மற்ற சமயங்களின் விடயத்திலும் கடைபிடித்தால் நல்லது.

Link to comment
Share on other sites

மிக ஆர்சரியமாக இருக்கிறது. யாழ்பாண தமிழர்கள் எந்த விசயத்தையும் இன மத கண்ணால் தான் பார்ப்பார்களா. எந்த அநியாயத்தையும் இந்து தமிழர்கள் செய்தால் மற்றவர்கள் செய்யவில்லையா என்று நியாயப்படுத்துவர்கள். வேறு யாரும் தவறு செய்தால் அது இனத்தின் அல்லது மதத்தின் தவறு என்று ஒப்பாரி வைப்பார்கள். ***

Link to comment
Share on other sites

மிக ஆர்சரியமாக இருக்கிறது. யாழ்பாண தமிழர்கள் எந்த விசயத்தையும் இன மத கண்ணால் தான் பார்ப்பார்களா. எந்த அநியாயத்தையும் இந்து தமிழர்கள் செய்தால் மற்றவர்கள் செய்யவில்லையா என்று நியாயப்படுத்துவர்கள். வேறு யாரும் தவறு செய்தால் அது இனத்தின் அல்லது மதத்தின் தவறு என்று ஒப்பாரி வைப்பார்கள். ***

மதவாதம் விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதே சமமான காலப்பகுதியில் பிரதேச வாதத்தையும் விதைக்க முயற்சிக்கும் உங்கள் முயற்சி . :icon_mrgreen: ..........ஆகா அற்புதம் ............. :D  :D

Link to comment
Share on other sites

பாதிரியார், துறவிகள், உலமாக்கள் எல்லோரும் மனிதர்கள்தான். இவர்களில் மனத்தை அடக்கத் தெரிந்தவர்களை நல்லவர்கள். அத்தகைய மனத்தை அடக்க மத போதனைகள் பயன்படலாம். ஆனால் மத போதனைகள் இல்லாமலும் நேர்மையாக வாழமுடியும். ஆகையால் மதம் அத்தியாவசியமான ஒன்றல்ல.. :rolleyes:

அப்படிப்பட்ட மதத்தின் பெயரால் முரண்படுவது தவறு.. :D

Link to comment
Share on other sites

 

ஒரு முஸ்லிம் அல்லது பௌத்தன் இதை செய்திருந்தால் இன்னமும் களை கட்டியிருக்கும் .

 

ஒரு இந்து அல்லது கிறிஸ்தவ தமிழன் முஸ்லிம் பெண்ணையோ பெளத்த பெண்ணையோ இவ்வாறு செய்திருந்தாலும் இதைவிட இன்னமும் அதிகமாகவே  களை கட்டியிருக்கும். இன மத பேதங்களால் பாதிக்கபட்டிருக்கும் ஒரு நாட்டில் இது இயல்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மத குருமார்கள் பிழை செய்தது தெரிந்தும் இங்கே கொஞ்சப் பேர் வாயை மூடிக் கொண்டு இருக்கினம்.இதையே எங்கட குருக்கள் செய்தாலோ அல்லது நித்தியானாந்தாவுடன் பெண்கள் விரும்பிப் போனாலோ குய்யோ,மொய்யோ என்று கத்துவினம்

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138814

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதவாதம் விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதே சமமான காலப்பகுதியில் பிரதேச வாதத்தையும் விதைக்க முயற்சிக்கும் உங்கள் முயற்சி . :icon_mrgreen: ..........ஆகா அற்புதம் ............. :D  :D

நீங்கள் மற்ற மதத்தவரை தாக்கி எழுதும் போது அதில் மதவாதம் இல்லை.நாங்கள் பேசாமல் சிரிச்சிட்டு இருந்திடனும்.ஏனென்டால் நாங்கள் இளிச்சவாயர்கள் இல்லையா?.... ஆனால் உங்கட மதத்தில் நடந்ததை கேட்டால் அது மதவாதத்தை விதைக்கிறோம் இல்லையா தமிழ்சூரியன்?...இனி மேல் மற்ற மதத்தினரை பார்த்து கேள்வி கேட்கும் போதோ அல்லது சேர்ந்து நக்கலடிக்கும் போதோ இதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.

Link to comment
Share on other sites

நீங்கள் மற்ற மதத்தவரை தாக்கி எழுதும் போது அதில் மதவாதம் இல்லை.நாங்கள் பேசாமல் சிரிச்சிட்டு இருந்திடனும்.ஏனென்டால் நாங்கள் இளிச்சவாயர்கள் இல்லையா?.... ஆனால் உங்கட மதத்தில் நடந்ததை கேட்டால் அது மதவாதத்தை விதைக்கிறோம் இல்லையா தமிழ்சூரியன்?...இனி மேல் மற்ற மதத்தினரை பார்த்து கேள்வி கேட்கும் போதோ அல்லது சேர்ந்து நக்கலடிக்கும் போதோ இதை ஞாபகத்தில் வைத்திருங்கள்.

உங்களுக்கு என்ன பிரச்சனை .எப்போதாவது எந்த மதத்தைப்பற்றி நான் விமர்சித்ததை கவனித்தீர்களா ........அவ்வளவு பண்பற்றவன் இல்லை அக்கோய் நான் :lol:  ..........எந்த  மதத்தை பற்றியும் கீழ்த்தரமாய் பேசுபவன் இல்லை .அது எனக்கு தேவையும் இல்லை .ஆனால் நான் பின்பற்றும் மதத்தை பற்றி [ பின் பற்றுபவர்களை   பற்றி அல்ல ]  கீழ்த்தரமாய் யாராவது பேசினால் நானும் கீழ்த்தரமாய் தான் அவர்களை பேசவேண்டி இருக்கும் .அவர்கள் மதத்தை அல்ல ................
 
மதவாதம் என்னும் சொல்லை நான் பயன்படுத்தியது ஏனென்றால் ........
யாழ் ஆயர் தாமஸ் சவுந்தர நாயகம் அண்மையில் எம் நீதிக்காக உண்மைக்காக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் ..............அவரை ஒதுக்க வேண்டும் என்றால் மதத்தை கையில் எடுத்து செயல்பட வேண்டிய நிலையில் அரசு உள்ளது .....நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்திலேயே ..............ஆனால் பாதிரிமார் தவறு செய்யாதவர்கள் என்று நான் எப்போதும் கூறமாட்டேன் .உங்களை விட எனக்குத்தான் அதிகம் அவர்களை தெரியும் .......ஆனால் உண்மையான ,நேர்மையான பாதிரிமார் உள்ளார்கள் அவர்கள் இந்த விடயத்தில் பாதிக்கப்படக்கூடாது ...நன்றி வணக்கம் 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.