Jump to content

சிறிலங்கா அரசினது இனரீதியிலான புறக்கணிப்புக் கொள்கைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு: - பிரதமர் வி.உருத்திரகுமாரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசினது இனரீதியிலான புறக்கணிப்புக் கொள்கைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு: - பிரதமர் வி.உருத்திரகுமாரன் 

[saturday, 2014-04-05 11:33:11]
Ruththirakumar-150seithy.jpg

இனரீதியாக மக்களை புறக்கணிக்கும் சிறிலங்கா அரசினது கொள்கையினையும், எதார்த்த அதிகாரத்தையும் சிறிலங்கா அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலானது எடுத்துக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் 15 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை தடைசெய்திருப்பதாகவும், இதனோடு சம்பந்தப்பட்ட 462 பேர்களுக்கு சிறிலங்காவுக்குள் உள்நுழைய தடைவிதிப்பதாகவும் பட்டியல் ஒன்றினை, சிறிலங்கா அரசாங்கம் தனது வர்த்தகமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக வெளியிட்டிருந்தது.

  

இதேவேளை சிறிலங்காவுக்கு பதிலடியாக இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பில் ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள், இராணுவ தளதிகள் ஆகியோரது பெயர்ப்பட்டியலை விரைவில் வெளியிட இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கை குறித்து பிபிசி தமிழழோசைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னர் இலங்கை அடைந்துள்ள கலக்கத்தினையும் தான் காட்டுகின்றது.

எமது செயற்பாடுகளை இன்னமும் தீவிரமாக செயற்பட ஊக்குவிக்கின்றது. சிறிலங்கா அரசாங்கம் எமது விடுதலைக் கனலை முள்வேலி போட்டு ஒருபோதும் தடுத்து விட முடியாது.

என்னுடைய பெயர் இடம்பெறாதிருந்தால் நான் அதைப்பற்றி யோசித்திருக்க வேண்டும். இடம்பெற்றபடியினால் அதனைக் கருத்தில் எடுக்கவில்லை. இந்த பட்டியலில் தடைசெய்யப்பட்டள்ள அமைப்புகளும் மற்றும் பட்டியலில் பெயர் இடப்பட்டுள்ளவர்களும் தமிழீழம் தொடர்பான எங்களுடைய வேலைத்திட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுக்க ஒரு உந்துசக்தியாக இப்பட்டியல் அமைகின்றது.

அத்துடன் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும், தாயகத் தமிழர்களுக்கும் இடையில் ஒரு விரிசலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தாயகமக்களின் மனங்களிலும் புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் நெஞ்சங்களிலும் விடுதலைக் கனல் எரிந்து கொண்டிருக்கின்றன. எனவே தாயக மக்களுடன் நாங்கள் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் கூட கொள்கை ஒரே நிலையிலிருப்பதால் இலங்கை அரசு எத்தனை முள்வேலிகளை போட்டாலும் அந்த விடுதலைக் கனலை மக்களின் மனங்களிலிருந்து நீக்கிவிட முடியாது என்பதை தெட்டத்தெளிவாக தெரிவிக்கின்றேன்.

அதேவேளை புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது மக்களின் பெயர்கள் பட்டியலிட்டுள்ள போதும் அவர்கள் தாயகமான இலங்கைக்கு செல்கையில் அவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமிடத்து அவர்கள் புலம்பெயர்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் என்ற வகையில் அந்தந்த நாட்டு அரசாங்கம் அவர்களை பாதுகாக்கும் என்பதையும் கூறுகின்றேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவில் தமிழர்களது இனநெருக்கடி விவகாரத்தினை மதச்சிறுபான்மையினருக்கு இடையிலான விவகாரமாகவும், ஒட்டுமொத்த சிறிங்காவின் மனித உரிiமீறல்களாகவும், அனைத்துலகம் சமகாலத்தில் வியாக்கியானம் செய்து வரும் நிலையில், தமிழர்கள் என்ற இனத்தின் அடிப்படையிலேயே அத்தனை மீறல்களும் தமிழர்களுக்கு எதிராக இலங்கைத்தீவில் நடந்தேறுகின்றன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டுவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

http://seithy.com/breifNews.php?newsID=106962&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.