Jump to content

சாமத்திய சடங்கின் அபத்தங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய சடங்கின் அபத்தங்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

இந்த பிள்ளை ஊரில பிறந்து வளர்த்து இருந்தா இப்படி சீனை போட முடியுமா எல்லா சும்மா புகழுக்கு அலையுற ஆக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியச் சடங்குகள், செய்வதற்கு எமது கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான காரணம் இருந்தது!

 

அந்தக்கால கட்டத்தில், பெண்கள் வெளியில் போவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தன! 

 

தனது வீட்டிலும், திருமணத்துக்குத் தயாராக ஒரு பெண் இருக்கிறாள், என்று 'சூசகமாக' ஊருக்கும், உறவுகளுக்கும் தெரியப்படுத்தவே அந்தச் சடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டது!

 

வழக்கம் போலத் தமிழனும், தனது வீக்கத்துக்கு ஏற்றமாதிரி, விழாவையும் வீங்கப்பண்ணி விட்டான்! அது சடங்கின் தவறல்ல.... அதைப் பின்பற்றுபவன் தவறேயாகும்!

 

இந்தப்பெண் தனது அதிமேதாவித்தனம் மூலம், தனது இனத்தையே, முட்டாள் கூட்டமென நிரூபிக்க முனைகிறாள்! (முட்டாள் கூட்டமென்கிறது வேற விசயம்!)

 

அந்த வீடியோவைத் தமிழில் வெளியிட்டிருந்தால், நான் அவரை நிச்சயம் பாராட்டியிருப்பேன்!

 

தனக்கு விருப்பமில்லாவிட்டால், விலகியிருந்திருக்கலாம்!  :o

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டு சினிமாவுடன் வந்த இன்னொரு குப்பை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Spending too much of money for these types of puberty celebrations is utter vaste.  What this girls says is really acceptable.  Better if she would give her comments in Tamil.  Or else, translated Tamil texts could be added.

Link to comment
Share on other sites

இப்பிடி கடுமையா சிந்திச்சு தான் நாடு இல்லாம அகதியாய்  அலைகிறோம்.

 

சாமத்திய வீடு இருக்கட்டு  முதல்  அகதி என்ட பெயரை இல்லாம எடுக்க   இளையோரே யோசியுங்கோ

Link to comment
Share on other sites

இப்பிடி கடுமையா சிந்திச்சு தான் நாடு இல்லாம அகதியாய்  அலைகிறோம்.

 

சாமத்திய வீடு இருக்கட்டு  முதல்  அகதி என்ட பெயரை இல்லாம எடுக்க   இளையோரே யோசியுங்கோ

நேசன்,

 

அகதி என்ற பெயரில் என்ன பிரச்சினை?

ஐயன்ஸ்ரயின் அமரிக்காவுக்கு அகதியாகத்தான் வந்தவர்.

Link to comment
Share on other sites

pulling the money from their ****

 

:lol:  :lol:  :lol:

 

கலாச்சார ரீதியாக நாம் செய்கிறோம். யூதர்களும் செய்கிறார்கள்(ஆண்களுக்கும் சடங்கு செய்கிறார்களாம்). வேறு சடங்குகளை வேற்று இனத்தினர் செய்கிறார்கள். இதில் தவறில்லை. ஆனால் இப்படி கடன் பட்டு ஆடம்பரமாக செய்வதில் உடன்பாடில்லை. தவறும் கூட.
மற்றும் படி சடங்கு செய்யும் சிறுமிகளை பலோத்காரமாக இழுத்துக்கொண்டு வந்து சடங்கு செய்விப்பதாக யாரும் அறியவில்லை. சிறுமி உணராமல் இருக்கிறார் என்பதும் மிக அதிகம் என நினைக்கிறேன். பெற்றோர் கொடுக்கும் உணவும் அதிக சத்துள்ள உணவை கொடுக்கிறார்கள்.அதிக குருதி வெளியேறுவதால் ஊட்டச்சத்து கொடுக்கப்பட வேண்டும். காணொளியில் வருபவருக்கு பிஸ்ஸா(pizza) போதுமெனில்  மற்றவருக்கும் பிஸ்ஸா கொடுக்க வேண்டுமா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியச் சடங்குகள், செய்வதற்கு எமது கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான காரணம் இருந்தது!

 

அந்தக்கால கட்டத்தில், பெண்கள் வெளியில் போவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தன! 

 

தனது வீட்டிலும், திருமணத்துக்குத் தயாராக ஒரு பெண் இருக்கிறாள், என்று 'சூசகமாக' ஊருக்கும், உறவுகளுக்கும் தெரியப்படுத்தவே அந்தச் சடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டது!

 

வழக்கம் போலத் தமிழனும், தனது வீக்கத்துக்கு ஏற்றமாதிரி, விழாவையும் வீங்கப்பண்ணி விட்டான்! அது சடங்கின் தவறல்ல.... அதைப் பின்பற்றுபவன் தவறேயாகும்!

 

இந்தப்பெண் தனது அதிமேதாவித்தனம் மூலம், தனது இனத்தையே, முட்டாள் கூட்டமென நிரூபிக்க முனைகிறாள்! (முட்டாள் கூட்டமென்கிறது வேற விசயம்!)

 

அந்த வீடியோவைத் தமிழில் வெளியிட்டிருந்தால், நான் அவரை நிச்சயம் பாராட்டியிருப்பேன்!

 

தனக்கு விருப்பமில்லாவிட்டால், விலகியிருந்திருக்கலாம்!  :o

 

புங்கையூரானின்... கருத்து,

ஒரு பக்குவப் பட்ட தமிழனின் கருத்து. :)  :rolleyes:  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓமோம் எங்களுக்கும் எல்லாம் தெரியும்.....முதல்லை நடக்கவேண்டிய அலுவலை  பார்...போ....தமிழன் கெட்ட கேட்டுக்கு இவ இங்கிலிசிலை விளக்கம் குடுக்க வந்திட்டாவு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவவுக்கு மட்டும் செய்யாமல் இருந்தவையாமோ?  இவவும் செய்து போட்டுத்தான் இப்ப வந்து புலம்புறா.  முதல்ல எங்கட கலாச்சாரத்தையும் மற்றவையின்ர கலாச்சாரத்தையும் நல்லாத் தெரிஞ்சு போட்டு வந்த கதைக்கட்டும்.  இப்பிடியான அரைகுறையளாலைதான் நாங்கள் அடையாளம் இல்லாமல் நிற்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய சடங்கின் அபத்தங்கள்.

 

 

இவா தன்னை மாதிரி ஆக்களோட பேசுறா. தானும் சாமத்திய வீடு செய்யல்ல என்று தான் சொல்லுறா.

 

உண்மை தான்.. சாமத்தியவீடு செய்யேக்க.. பெட்டையள என்னெண்டு வாழ்த்திறது. "ஹாவ் எ கப்பி பீரியட்" என்றா..??! அப்படி வாழ்த்திற நமக்கே வெட்கமா இருக்குது. அவ்வளவைக்கு எவ்வளவு அவமானமா இருக்கும். இதனை பெற்றோர் புரிஞ்சு கொள்ளனும்.

மேலும்.. இந்த ஓசி விளம்பரத்தால.. காவாலிப் பையங்களின் லிஸ்டில்.. இந்தப் பொண்ணுங்க சேர்க்கப்படுறாங்க. அதனால பெற்றோருக்குப் பிரச்சனை இல்ல.. அதுங்களட்ட (பெட்டையளட்ட).. போன் நம்பர்.. பேஸ்புக் ஐடி.. இன்ஸ்ராகிராம் ஐடி.. ஸ்கைப்  ஐடி.. வாட்ஸ் அப் ஐடி.. பிபிஎம் ஐடி.. கேட்டு வாற தொந்தரவுகளை யாராம் சாமாளிக்கிறது.

அந்தந்த வட்டத்தில நின்று பார்த்தால் தான் சில விடயங்கள் புரியும். பெரிசுங்க.. பெட்டையளுக்கு சாமத்திய வீடு செய்யுறதில தான் கலாசாரம் பண்பாடு காக்கப் போகினமாம். ஆனால் அவைட பொண்டில் மாருக்கு.. சுடிதார் தான் போட்டு அழகு பார்க்கினம். முதலில அதுக்கு முடிவு கட்டுங்க அங்கிள் களா.!!  :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியம் என்பது ஒரு சடங்கு.

 

இதைவிடுத்து கணாததை கண்ட சனமெல்லாம் எது என்னத்துக்கு எண்டு தெரியாமல் , தலைகால் தெரியாமல் செய்ய வெளிக்கிட்டால் அதுக்கு தமிழனும் அவன் கலாச்சாரமும் பொறுப்பில்லை.......

ஒருத்தன் கெலியிலை இருந்து ரோசாப்பூ தூவ மற்றவன் தடியிலை கமரா கட்டி படமெடுக்க......இதை வைச்சு ஒட்டுமொத்த இனத்தையும் கணக்கு பண்ணுவதும் ஒரு முட்டாள்த்தனம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா தன்னை மாதிரி ஆக்களோட பேசுறா. தானும் சாமத்திய வீடு செய்யல்ல என்று தான் சொல்லுறா.

 

உண்மை தான்.. சாமத்தியவீடு செய்யேக்க.. பெட்டையள என்னெண்டு வாழ்த்திறது. "ஹாவ் எ கப்பி பீரியட்" என்றா..??! அப்படி வாழ்த்திற நமக்கே வெட்கமா இருக்குது. அவ்வளவைக்கு எவ்வளவு அவமானமா இருக்கும். இதனை பெற்றோர் புரிஞ்சு கொள்ளனும்.

மேலும்.. இந்த ஓசி விளம்பரத்தால.. காவாலிப் பையங்களின் லிஸ்டில்.. இந்தப் பொண்ணுங்க சேர்க்கப்படுறாங்க. அதனால பெற்றோருக்குப் பிரச்சனை இல்ல.. அதுங்களட்ட (பெட்டையளட்ட).. போன் நம்பர்.. பேஸ்புக் ஐடி.. இன்ஸ்ராகிராம் ஐடி.. ஸ்கைப்  ஐடி.. வாட்ஸ் அப் ஐடி.. பிபிஎம் ஐடி.. கேட்டு வாற தொந்தரவுகளை யாராம் சாமாளிக்கிறது.

அந்தந்த வட்டத்தில நின்று பார்த்தால் தான் சில விடயங்கள் புரியும். பெரிசுங்க.. பெட்டையளுக்கு சாமத்திய வீடு செய்யுறதில தான் கலாசாரம் பண்பாடு காக்கப் போகினமாம். ஆனால் அவைட பொண்டில் மாருக்கு.. சுடிதார் தான் போட்டு அழகு பார்க்கினம். முதலில அதுக்கு முடிவு கட்டுங்க அங்கிள் களா.!!  :D:icon_idea:

நெடுக்கர், இது கொஞ்சம் ஓவர் போல உங்களுக்குத் தெரியவில்லையா?

 

தமிழ் சமுதாயத்தில் ஒரு பெண்ணின் இடம் மிகவும் முக்கியமானது! தமிழ் சமுதாயத்தில் மட்டுமல்ல, எல்லா சமுதாயங்களிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறன! பெண்ணென்பவள் ஒரு வருங்காலத் தலைமுறையின் 'உருவாக்கத்தில்' முக்கிய பங்களிக்கப் போகின்றவள்!

 

ஆண்களின் பங்கு இப்படியான கொண்டாட்டங்களில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது!

 

இப்படியான விழாக்களுக்கு, உங்களை ஆரத்தி எடுக்க அழைக்கவும் மாட்டார்கள்! பொதுவாக, நெருங்கிய உறவினர்களும், அயலவர்களும் மட்டுமே இதில் பங்கெடுப்பார்கள்!

 

சிங்களவன்.. 'எயா தான் லொக்கு லமயாக்கு' என்று ஒரு படமே எடுத்திருக்கிறான்! ஓஹோ என்று தான் ஓடியது!

 

அதைப்பற்றி, இந்தப்பெண் வாய் திறந்து ஒரு வீடியோ பதிவு போட முடியுமா?

 

அல்லது முஸ்லிம்கள் செய்கின்ற சுண்ணத்துச் சடங்கு பற்றி வாய் திறக்கத் தான் முடியுமா?

 

வட இந்தியா முழுக்கத் தானே செய்கிறார்கள்? அவர்களது 'வளைகாப்பு' நிகழ்ச்சியைப் பற்றி, இந்தப் பெண்ணால் வாய் திறந்து ஒரு வார்த்தை ஒரு விமரிசனம் தான் வைக்க முடியுமா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய வீடு என்பது முழுக்க முழுக்க அந்தப் பெண் முடிவு செய்ய வேண்டிய விடயம். அதில் பெற்றோரோ யாருமோ மூக்கை நுழைப்பது அவளின் தனிமனித சுதந்திரத்தை கையில் எடுக்கும் செயல். அதுல தான் எங்கட கலை கலாசாரம்.. பண்பாடு இருக்குது என்பது பச்சைப் பொய். வெறும் சுத்துமாத்து.

 

மேலும்.. இந்தியா.. சிறீலங்கா போன்ற நாடுகளில் வெறும் வார்த்தை அளவில் தான் மக்களின் உரிமைகள் உள்ளன. அங்கு பெண்கள் என்ன.. மனிதர்கள் சுதந்திரமாக வாழவும் முடியாது கருத்துச் சொல்லவும் முடியாது. அவற்றை எல்லாம் எடுகோளில் காட்டக் கூடாது.

 

அதேவேளை மேற்குலகில் 7 வயதுக்கு மேலே பிள்ளைகளை பெற்றோர் தங்கள் அறையில் கூட படுக்க வைக்கக் கூடாது. அவர்களின் தனி உரிமைக்கு  முக்கியம் அளிக்கச் சொல்லுகிறார்கள். ஆனால்.. நம்மவர்கள் இன்னும் அந்த நடைமுறைகளுக்கு வரவில்லை. வெறுமனவே கலாசாரம்.. பண்பாடு... அடக்குமுறைக்கூடாக கொண்டு செல்லப்பட முடியாது.

 

மேற்கு நாடுகளில்.. பிள்ளைகள் ஆண்டு 5 அல்லது 6 இலேயே.. கல்வி மூலம் பீரியட் என்றால் என்ன என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்குரிய சுகாதார நடவடிக்கைகள் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆக.. சாமத்திய வீடு என்பது இங்கு அவசியமற்ற ஒன்று. அதற்குள் இன்னும் கலாசாரம் பண்பாட்டை செருகி வைத்திருப்பது ஆரோக்கியமான விடயமும் அல்ல.

 

பிள்ளைகள் சிந்திக்க தொடங்குகின்ற போது.. இப்படியான காணொளிகள் பெருகும். அதுவே கருத்துக்களாக மிஞ்சும். அவர்களின் தலைமுறையில்.. சாமத்திய வீடு ஒழியும். நாம் யதார்த்தத்தை உள்வாங்காது வரட்டுத்தனமாக கலாசாரத்தை செருகிக் கொண்டிருப்பின் அது காணாமல் போவதை தடுக்க முடியாது. இதில் நுட்பமான மாற்றங்களும்.. மன ஓட்டங்களைப் புரிந்து கொண்ட மாற்றங்களும் வந்தால் அன்றி... எமது கலாசாரம்.. இன்னும் இரண்டு தலைமுறைகளோடு மேற்கு நாட்டில் அல்லாடும்.. என்பது உறுதி.

 

இன்றைய புலம்பெயர் தலைமுறையின் எண்ண ஓட்டங்களை சரிவர உள்வாங்காது விட்டால் அவர்கள் உங்களை விட்டு தூர விலகிப் போகும் நிலை அதிக ஏற்படும். அது இப்போதுள்ளதை விட மோசமான விளைவுகளை கொண்டு வரலாம். அல்லது கலாசாரம்.. பண்பாடு பற்றி பேசவே முடியாத நிலையை தோற்றுவிக்கலாம். :):icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விழாக்கள் எடுப்பதும்,விடுவதும் ஒவ்வொருத்தரினதும் மனதை பொறுத்தது.

சில இடங்களில் பிள்ளைகளுக்கு அது,அதுக்கு உரிய வயது வர முன்னமே, எப்போ என்று  ஒவ்வொரு வைத்தியராக கொண்டு திரிகிற அம்மாக்களும் இந்த நாடுகளில் இருக்கவே செய்கிறார்கள்...இது கொஞ்சம் ஓவர் என்றும் சொல்லலாம்..பட் ஏதாச்சும் சொல்லப் போனால் இவாக்கு என்ன என்று கேக்கிற மக்கள் மத்தியில் வாழ்கிற படியால் எழுதிட்டு நடையைக் கட்ட வேண்டியது தான்..

மற்றும் சில பிள்ளைகள் வேறு இடங்களில் கோலாகலமான விழாவாக நடப்பதை பார்த்துட்டு இதை விட பெரிதாக தான் தனக்கு  செய்ய வேண்டும் என்று கேட்டு நிக்கிற பிள்ளைகளும் இருக்கவே செய்கிறார்கள்..அப்பா பேசுவார் என்றால் அவர் கிடந்தார் என்று சும்மா இருக்கிற பிள்ளைகளுக்கு ஆசைகளை ஊட்டி வளர்க்கிற அம்மாக்களும் தான் இதற்கு காரணம்...

எதற்கும் பெண் பிள்ளைகளோடு இருக்கிற தந்தைமார் பாடு தான் கஸ்ரம்..அந்தப் பிள்ளைகளின் உணர்வுகளுக்கும்  சிறிதளவாவது மதிப்பளிக்கனும்.

அக்காவுக்கு  எல்லாம் செய்யிறார்கள் தங்கைக்கு செய்யிறார்கள்..  ஆனால் தனக்கு ஒன்றும் செய்யிறார்கள் இல்லையே  என்று இரண்டாவதாக பிறந்த பெண் பிள்ளை வேதனைப்படக் கூடாது...இப்படியான சம்பவங்களும் நடக்கிறது..

Link to comment
Share on other sites

சாமத்திய வீடு என்பது முழுக்க முழுக்க அந்தப் பெண் முடிவு செய்ய வேண்டிய விடயம். அதில் பெற்றோரோ யாருமோ மூக்கை நுழைப்பது அவளின் தனிமனித சுதந்திரத்தை கையில் எடுக்கும் செயல். அதுல தான் எங்கட கலை கலாசாரம்.. பண்பாடு இருக்குது என்பது பச்சைப் பொய். வெறும் சுத்துமாத்து.

 

மேலும்.. இந்தியா.. சிறீலங்கா போன்ற நாடுகளில் வெறும் வார்த்தை அளவில் தான் மக்களின் உரிமைகள் உள்ளன. அங்கு பெண்கள் என்ன.. மனிதர்கள் சுதந்திரமாக வாழவும் முடியாது கருத்துச் சொல்லவும் முடியாது. அவற்றை எல்லாம் எடுகோளில் காட்டக் கூடாது.

 

அதேவேளை மேற்குலகில் 7 வயதுக்கு மேலே பிள்ளைகளை பெற்றோர் தங்கள் அறையில் கூட படுக்க வைக்கக் கூடாது. அவர்களின் தனி உரிமைக்கு  முக்கியம் அளிக்கச் சொல்லுகிறார்கள். ஆனால்.. நம்மவர்கள் இன்னும் அந்த நடைமுறைகளுக்கு வரவில்லை. வெறுமனவே கலாசாரம்.. பண்பாடு... அடக்குமுறைக்கூடாக கொண்டு செல்லப்பட முடியாது.

 

மேற்கு நாடுகளில்.. பிள்ளைகள் ஆண்டு 5 அல்லது 6 இலேயே.. கல்வி மூலம் பீரியட் என்றால் என்ன என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்குரிய சுகாதார நடவடிக்கைகள் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆக.. சாமத்திய வீடு என்பது இங்கு அவசியமற்ற ஒன்று. அதற்குள் இன்னும் கலாசாரம் பண்பாட்டை செருகி வைத்திருப்பது ஆரோக்கியமான விடயமும் அல்ல.

 

பிள்ளைகள் சிந்திக்க தொடங்குகின்ற போது.. இப்படியான காணொளிகள் பெருகும். அதுவே கருத்துக்களாக மிஞ்சும். அவர்களின் தலைமுறையில்.. சாமத்திய வீடு ஒழியும். நாம் யதார்த்தத்தை உள்வாங்காது வரட்டுத்தனமாக கலாசாரத்தை செருகிக் கொண்டிருப்பின் அது காணாமல் போவதை தடுக்க முடியாது. இதில் நுட்பமான மாற்றங்களும்.. மன ஓட்டங்களைப் புரிந்து கொண்ட மாற்றங்களும் வந்தால் அன்றி... எமது கலாசாரம்.. இன்னும் இரண்டு தலைமுறைகளோடு மேற்கு நாட்டில் அல்லாடும்.. என்பது உறுதி.

 

இன்றைய புலம்பெயர் தலைமுறையின் எண்ண ஓட்டங்களை சரிவர உள்வாங்காது விட்டால் அவர்கள் உங்களை விட்டு தூர விலகிப் போகும் நிலை அதிக ஏற்படும். அது இப்போதுள்ளதை விட மோசமான விளைவுகளை கொண்டு வரலாம். அல்லது கலாசாரம்.. பண்பாடு பற்றி பேசவே முடியாத நிலையை தோற்றுவிக்கலாம். :):icon_idea:

 

அருமை நெடுக்ஸ்.... 100 பச்சைப்புள்ளிகள்..

Link to comment
Share on other sites

நானும் இந்த விடயத்தில் நூறு வீதம் நெடுக்கரின் கட்சிதான் .

 

இந்த பிள்ளை ஊரிலை இருந்தா இப்படி பேசுமா ? என்று கேட்கினம் .

 

இது என்ன கேள்வி .முன்னேற விடமாட்டார்கள் போலிருக்கு .

 

யாழில் பலர் இப்பவும் வடலிக்க தான் போகினம் போல . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

காணொலியைப் பார்க்கவில்லை.
 
சாமத்தியச் சடங்கு பெண்ணின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு. அது ஒரு சீராட்டப்படும் ஞாபகமாக இருப்பது அவர் அவர் சூழ்நிலையப் பொறுத்தது.
 
சகோதரியின் சாமத்திய சடங்கிற்கு உறவினர்களை ஒவ்வொருவராக வீட்டிற்குச் சென்று அழைத்தது, அவர்கள் ஒன்று கூடலில் சடங்கு செய்தது எல்லாம் இனிமையான ஞாபகங்கள்.
 
நாங்கள் தனித்தவர்கள் அல்ல, ஒரு சமூகத்தவர்கள் என்பதை சடங்குகள் மூலம் கொண்டாடுகின்றோம். பெண்ணும் தனக்கு நகை அணிவித்தவர்கள், தலை முழுக நீராட்டியவர்கள், சீலை தந்தவர்கள் என்று தன் சுற்றத்தை நினைத்து சந்தோசப்பட்டு மனப் பலமும் அடைகின்றாள்.
 
உண்மையில் இவை வேண்டாம் என்பவர்கள் சந்தோசமும் சுற்றமும் வேண்டாம் என்பவர்களே. பரிதாபம்!!  
 
 
http://www.youtube.com/watch?v=3lIQAwqov8E
Link to comment
Share on other sites

 

 
உண்மையில் இவை வேண்டாம் என்பவர்கள் சந்தோசமும் சுற்றமும் வேண்டாம் என்பவர்களே. பரிதாபம்!!  
 
 
 

 

 

சுற்றமும் சந்தோசமும் தேவை என்பதைக் காட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. எத்தனையோ ஒன்றுகூடுவதற்கான வசதிகளும் உள்ளன. "என் பெண் பிள்ளை பிள்ளைப் பெற தயாராவிட்டாள்  வாங்கோ வந்து பாருங்கோ" என்று ஊர் முழுக்க பெண்ணை கேவலப்படுத்தி விளம்பரப்படுத்தித் தான் இவற்றை நிரூபிக்கத் தேவையில்லை.

 

இஸ்லாம் நாடுகளில் முன்னர் ஒரு வழக்கம் இருந்தது. தம் பெண் பிள்ளைகள் பருவம் எய்தி விட்டால் வீட்டின் முன் சிறு கொடியை கட்டி விட்டு இவ் வீட்டில் மணமுடிக்கும் வயதுடைய பெண் இருக்கின்றாள் என்று ஏனையவர்களுக்கு உணர்த்துவதற்கு. இன்று சவூதியின் பின் தங்கிய பகுதிகளிலும் சில அடிப்படைவாத இஸ்லாமிய பகுதிகளிலும் தான் இப் பழக்கம் மிச்சம் இருக்கின்றது. ஆனால் எம் மத்தியில்...............?

இது தொடர்பாக என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. மருத்துவ ரீதியிலான காரணங்களால் மாதவிடாய் வரவே வராத பெண்கள் உள்ளனர். இவர்களை பருவம் எய்திய பெண்கள் என்று அழைக்க முடியாதா? இவர்களுக்கு பெண்ணுக்குரிய வாழ்க்கையே இல்லாமல் போய்விடுமா?

Link to comment
Share on other sites

பெண் பிள்ளைகளை பெறாதவர்களுக்கு சுற்றமும் சந்தோசமும் இல்லையோ ?

எழுத முதல் கொஞ்சம் யோசியுங்கள் .

Link to comment
Share on other sites

கிராமங்களில் 'பக்குவப்பட்டிட்டா' என்பார்கள். அதற்கு சடங்கு செய்தார்கள்.

 

இப்ப கொண்டாட்டங்களிலும் பக்குவம் இல்லை.. அதைப்பற்றி கூறுபவர்களிடமும் பக்குவம் இல்லை.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை நெடுக்ஸ்.... 100 பச்சைப்புள்ளிகள்..

 

கலியாணம் கட்டிக்கொண்டு வாழுறதையே கேவலமாய் நினைக்கிற நெடுக்கருக்கு நூறில்லை ஆயிரம் பச்சை குடுக்கலாம்... :lol:  :D

Link to comment
Share on other sites

இவா தன்னை மாதிரி ஆக்களோட பேசுறா. தானும் சாமத்திய வீடு செய்யல்ல என்று தான் சொல்லுறா.

 

உண்மை தான்.. சாமத்தியவீடு செய்யேக்க.. பெட்டையள என்னெண்டு வாழ்த்திறது. "ஹாவ் எ கப்பி பீரியட்" என்றா..??! அப்படி வாழ்த்திற நமக்கே வெட்கமா இருக்குது. அவ்வளவைக்கு எவ்வளவு அவமானமா இருக்கும். இதனை பெற்றோர் புரிஞ்சு கொள்ளனும்.

 

இதேபோல பிறந்த நாள் வாழ்த்தை.. உங்க கொச்சை எண்ணத்தில் "கவட்டுக்கால வந்த நாள் வாழ்த்து?' என்றும் கூறினா அவமானமாகத்தான் இருக்கும். ஆகவே மானமும் அவமானமும் ஒருவனின் அணுகுமுறையைப் பொறுத்தது...

 

இங்கே விழாவின் தலைப்பு பீரியட்டை கூறவரவில்லை... அவர் (வாழ்க்கைக்கு தேவையான) சாமர்த்தியம் அடைந்ததையே சுட்டிக் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.