Jump to content

வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி


Recommended Posts

 

 

இன்று நான் முகப் புத்தகத்தில் எனது நேரத்தை வழக்கம் போலவே வீணாக்கி கொண்டிருந்த நேரம் ஒரு செய்தி!வானூர்தியில் பறக்கும் வயசுக்கு வந்த பொண்ணு நிகழச்சி என்று என் கண்களில் காட்சிகளுடன் பட்டது. சுவிஸ் நாட்டில் தமிழரின் சாதனையாக இது பதியப்பட்டாலும் இது இங்கு பல வருடங்களாக சுவிசில் நடப்பவை தான். ஆனாலும் இன்று என் நெஞ்சில் இது எதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியது.காரணம் இன்று என் நண்பர்களுடன் ஈழ இந்திய அரசியல் பற்றி அதிகமாக பேசியபடியால்  எம் இனம் பற்றி அதிகம் கவலைப் பட்டபடியால் இந்த செய்தி எனக்கு தப்பாக பட்டிருக்கலாம். அதுதான் உடனே இங்கு அதை பதியலாம் என்று முயற்சி பண்ணினேன் ஆனால் முடியல. இருந்தாலும் வேறு ஒரு நாட்டில் தமிழனின் சாதனையாக் நடந்த அதே சாதனை நல்லவேளையாக youtube  இல் இருந்த படியால் இதை இணைக்கிறேன். தவறென்றால் மன்னிக்கவும் நண்பர்களே  பொதுவாகவே பொண்ணு வயசுக்கு  வரும் பருவ மாற்றத்தை நம்மவர்கள் கொண்ட்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எங்கள் பெண்களை அவமானப் படுத்துவது போல் இருப்பதாக நினைப்பவன் நான் அது என் தனிப்பட்ட கருத்தே. இருந்தாலும் தாயகத்தில் எம்மினம் அல்லல் படும் இவேலையில் இதுகள் தேவையா? ஆமாம் செய்தி நான் போடுறேன் கருத்தை நீங்க சொல்லுங்க யாழ் உறவுகளே 

 

http://www.youtube.com/watch?v=yafpS5DkPSY

 

 

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் தாயகத்தில் எம்மினம் அல்லல் படும் இவேலையில் இதுகள் தேவையா?

 

நடந்து போனார்கள்

மாடடு வண்டிலில் போனார்கள்

காரில் போனார்கள்

இன்று கெலியில் போகின்றார்கள்..........

 

எல்லாம் சேர்ந்தது தான் மக்கள் கூட்டம்.

இதை விமர்சித்து வெறுத்து ஒதுக்குவதைவிட

அவர்களிடம் சென்றும் கறப்பது தான் உண்மையான தாயக  மக்களுக்கு செய்யும்பணியாக இருக்கமுடியும்.............

Link to comment
Share on other sites

நன்றி ஜீவா இதைத் தான் தேடினேன் 

 

Link to comment
Share on other sites

பொதுத்தளங்களில் இவ்வாறு தரவேற்றும்போது வேண்டாத சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது.. சிறுமிகளுக்கும் எண்ணங்கள் பெருத்துவிடுகின்றன.. எனக்குத் தெரிந்து விழாக்கள் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளேயே பிரச்சினைக்குள் சிக்கியுள்ளார்கள்..

ஒருவேளை இதனுள் வேறொரு கைங்கரியமும் இருக்கலாம்.. :rolleyes: இவ்வாறான விழாக்களை நடத்தி பிரபலப்படுத்தி விட்டால் தமிழ் மாப்பிளைமார் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது அல்லவா? பலே ஐடியா.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜீவா இதைத் தான் தேடினேன் 

 

ஓரிரு கிழமைக்கு முன்னர் பேஸ்புக்கில் பிரபலமாய் இருந்த வீடியோ இது அன்பு அண்ணா. ஒரு சில இணையத்தளங்களிலும் இதே தலைப்புடன் போட்டிருந்தார்கள். குறித்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேர்த்தவர் என்றும் விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் மக்கள் பணத்தைச் சுருட்டி அதில் தான் இப்படி விழாக் கொண்டாடினவர் என்று தான் பேஸ்புக்கில் பின்னூட்டம் எழுதி இருந்தார்கள், எதற்கும் சுவிஸ் வாழ் உறவுகள் தான் உண்மை நிலையை விளக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரிரு கிழமைக்கு முன்னர் பேஸ்புக்கில் பிரபலமாய் இருந்த வீடியோ இது அன்பு அண்ணா. ஒரு சில இணையத்தளங்களிலும் இதே தலைப்புடன் போட்டிருந்தார்கள். குறித்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி சேர்த்தவர் என்றும் விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் மக்கள் பணத்தைச் சுருட்டி அதில் தான் இப்படி விழாக் கொண்டாடினவர் என்று தான் பேஸ்புக்கில் பின்னூட்டம் எழுதி இருந்தார்கள், எதற்கும் சுவிஸ் வாழ் உறவுகள் தான் உண்மை நிலையை விளக்க வேண்டும்.

 

இது உண்மை போல தான் இருக்குது.யாராவது இப்படி கஸ்டப்பட்டு உழைத்த காசை வீணாய் செலவழிப்பார்களே :unsure:
 
இப்படி ஆட‌ம்பர‌மாக செய்தால் அதை தங்களோடு வைத்துக் கொள்வதற்கு எதற்கு ஊர் முழுக்க பிர‌பல்யப்படுத்தினம்.பெட்டைக்கு நல்லா மேக்கப்மும் போட்டு  நடிகை மாதிரித் தான் போஸ் கொடுக்குது.இப்பவே இப்படியான எண்ணங்களை ஊட்டினால் 16 வயதிற்கு முன்னர் வீட்டை விட்டு ஓட‌த் தான் சொல்லும்
 
பெற்றோர் தங்கட‌ பிள்ளைக்கு ஆசையாய் விழாக்கள் செய்வது அவர‌வர் விருப்பம் ஆனால் இது ரொம்ப ஓவர்.
Link to comment
Share on other sites

பொதுத்தளங்களில் இவ்வாறு தரவேற்றும்போது வேண்டாத சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது.. சிறுமிகளுக்கும் எண்ணங்கள் பெருத்துவிடுகின்றன.. எனக்குத் தெரிந்து விழாக்கள் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளேயே பிரச்சினைக்குள் சிக்கியுள்ளார்கள்..

ஒருவேளை இதனுள் வேறொரு கைங்கரியமும் இருக்கலாம்.. :rolleyes: இவ்வாறான விழாக்களை நடத்தி பிரபலப்படுத்தி விட்டால் தமிழ் மாப்பிளைமார் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது அல்லவா? பலே ஐடியா.. :icon_idea:

 

இதுவென்றால் உண்மைதான். விழக்கொண்டாடுவதும் விடுவதும் அவரவர் விருப்பம் தனிமனித சுதந்திரம். அதில் நாம் தலையிடவேண்டாம். ஆனால் இசை சொன்னதுபோல் இப்படியான செயற்பாடுகளை பிள்ளைகளுக்கு ஊடிவளப்பவர்களால் நல்ல நடத்தை உள்ள பிள்ளைக்ளை உருவாக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். தனிமனித சுதந்திரம் ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் யதார்த்தத்தை பொதுவில் நடப்பதை பேசுவதில் தப்பில்லைதானே. இப்பவே அந்தப்பிள்ளையின் மனத்தில் படிப்பைவிட வேறு நினைவுகளால்தான் உருவாகி இருக்கும். இதுபோலத்தான் உடைவிடயமும். சின்னவயசிலயே பிள்ளைகளுக்கு செக்ஸியாக உடுத்திவிடுபவர்கள் அவர்கள் வளரவளரவும் அதையே பின்பற்றி அவை பல்வேறு தப்பான் எண்ணங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் இட்டு செல்கிரது. உடுப்பு அவர்வர் சுதந்திரம். ஆனால் அதற்காக முன்னால் நடப்பவற்றை பேசக்குடாது என்று இல்லதானே.பொதுவாக நாம் பார்ப்பவர்களில் அநேகமான தப்பு பண்ணும் பெண்கள் அநேகர் இப்படிபட்டவர்கள்தான்.இப்படிப்பட்ட பெண்களில் யார்தான் நல்ல அமைதியான குடும்ப வாழ்வில் இருக்கிறார்கள்? மிகச்சிலரே.

 

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவ்தும் அன்னை வளர்ப்பினிலே.

 

Link to comment
Share on other sites

பெண் வயசுக்கு வந்ததை ஊரறிய விழா எடுத்து எல்லாருக்கும் அறிவிப்பதற்காக கொண்டாடுவதே கேடு கெட்ட ஒரு பழக்கம். அதிலும் அபரிதமான ஆடம்பரம் என்பது அருவருப்பான ஒன்று.

 

ஒருவரால் யுரியுப் ஒன்றில் ஒரு காணொலி பகிரப்பட்டால், அதன் மீதான public opinio இனை தவிர்க்க முடியாது. தமக்கான private video என்றால் அதனை தமக்குள்ளாகவே பகிர்ந்து இருக்க வேண்டும். அல்லது, தம் கைகளை மீறி இன்னொருவருக்குச் சென்று அவரால் வெளியுலகுக்கு பகிரப்பட்டு இருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இதனை இவர்கள் செய்கின்றமாதிரி இல்லை.

 

இந்த குடும்பத்தினர் தம் விலாசத்தினைக் காட்ட மகளது வயசுக்கு வந்த விடயத்தினை விளம்பரப் பொருளாக பயன்படுத்துகின்றனர். மிகக் கேவலமான சிந்தனை இது.

 

இந்த பெண் பிள்ளைக்காக மனம் வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கவே இந்த விடையம் பற்றி எழுத நினைத்து விட்டு பின் எதற்கு வேண்டாத வேலை என்று விட்டு திரிந்தேன்..இந்த மாத நடுப்பகுதியில் பெரியபிள்ளையாகி விழா எடுத்த ஒரு விழாவுக்கு போய் இருந்தேன்.பெரிய பிள்ளையாகிய பிள்ளையின் தந்தையின் குடும்ப உறவுகளோடும்,தாயின் உறவுகளோடும் வீண் ஆடம்பரங்களின்றித் தான் நடந்தேறியது. ஒரு விடையம் மட்டும் எனக்கு அறவே பிடிக்கவில்லை..அது தான் இந்த வானுர்தி விழையாட்டு..ஒரு திருமணமான ஜோடிகளை காட்சிப்படுத்திக் காட்டி இருந்தால் அது உண்மையாக பார்பவர்களுக்கு புரிதல் கூடுதலாக இருக்கும்...

 

ஆனால் பெரியபிள்ளையாகி இருக்கும் ஒரு தனித்த சிறுமிக்கு இப்படியான காட்சிப்படுத்தல்கள் தேவை இல்லை என்றோ நினைக்கத் தோன்றுகிறது.வளரும் பிள்ளைகள் சிறுவயதிலயே தவறான பாதைக்கு இட்டு செல்வது இவ்வாறான ஆடம்பரங்களும் தான்..இவள்  ஒரு இடமும் வர மாட்டாள் வந்துட்டு நொட்டை கண்டு பிடிக்கிறதும்,பேசுறதும் தான் வேலை என்று சொல்வார்கள் என்ற காரணத்தினாலயே போற இடங்களில் நடக்கும் கூத்துக்களை பார்த்தும்,பார்க்காதது போல் வர வேண்டிய நிலை.
 

 

 

 

Link to comment
Share on other sites

 பிள்ளைகள் இப்போது 10வயதிற்குள்ளே பருவ வயதை அடைகின்றனர். இந்தப்பிள்ளைகள் மனசால் பெற்றோரின் இத்தகைய எடுப்பு விழாக்களின் தாக்கங்களை விளங்கிக் கொள்வதில்லை. சிறியவர்கள் ஆனால் இந்த விழாவை எமது கலாசார விழுமிய அடையாளமாகவே பெரும்பாலும் பெண்பிள்ளைகள் மனதில்  விதைத்துள்ளது நமது தமிழ் காலசார காப்பாளர்களின் பணியும் இதுவாகவே இருக்கிறது.

கடந்தவருடம் ஒரு பூப்புனித விழா டென்மார்க்கில் நடைபெற்றிருந்தது: அந்த நபர் இங்கு இயங்கிய புனர்வாழ்வுக்கழகத்தின் முக்கிய புள்ளி. பிள்ளையின் பூப்புனித விழாவை முகப்புத்தக நண்பர்களுக்கு நேரடியஞ்சல் செய்திருந்தார்கள். அவர் தனது பிள்ளைக்கு விரும்பி விழாவெடுத்திருந்தார் அது அவரது சுதந்திரம். ஆனால் இதனை சிலர் முகப்புத்தகத்திலும் மேலே ஜீவா குறித்தது போல விமர்சித்திருந்தார்கள்.

பெற்றோரே இவ்விடயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். தனது மகளின் அந்தரங்கத்தை வெளியில் விழாவெடுத்து கொண்டாடி ஒரு காலத்தில் பிள்ளையின் மனசை இவர்களே திசைமாற்ற வழிவகுக்கிறார்கள்.

இவ்விடயத்தில் உறவினர்களுடன் கூட முரண்பட்டுள்ளேன். ஆனால் இந்த விழாவிற்கு உறவினர் அழைத்தால் போக வேண்டிய கட்டாயம். போகாது விட்டால் முறிக்கப்படும் உறவுகளையும் தேவையற்ற விமர்சனங்களையும் தவிர்க் சபையோடு சபையாக போயிருந்து மரக்கிற சோற்றையும் சாப்பிட்டு பல மணித்தியாலங்களையும் செலவிட வேண்டியிருக்கிறது.

புலம்பெயர்ந்ததில் 3பூப்புனித விழாவிற்கு சென்றிருக்கிறேன். 4வதாகவும் ஒன்று அடுத்தமாதம் போக வேண்டியுள்ளது. உறவை முறிக்க முடியாமல் கலந்து கொள்ள வேண்டியுள்ளது.கள உறவுகளே உங்களிலும் சிலரை இந்த விழாவில் நான் தரிசிக்கக்கூடும்.

எங்கு போனாலும் எப்ப மகளுக்கு கொண்டாட்டம் என்று கேட்பார்கள். இதெல்லாம் மொக்குத்தனமான செயற்பாடு என கருத்துச் சொல்லி கடந்தமாதமும் 2கணவர் வழி சொந்தங்களில் காட்டத்துக்கு ஆளாகியுள்ளேன். ஊரே ஏற்றுக் கொண்டு கலக்கிற இவ்விழாவை முழுமையாக புறக்கணிக்க முடியாது போனாலும் வீட்டில் எனது மகளுக்கு இவ்விழாவெடுக்கவுமில்லை. பிள்ளையே இப்போது விழாவெடுக்காதமை பற்றி கதைத்தால் அவளே அவர்களுக்கு பதில் சொல்லிவிடுகிறாள்.
 

பிள்ளைக்கு முதல் வெளியாகிய குருதிபடிந்த உள்ளாடையைக்கூட காப்பாற்றுகிறார்கள் இப்போது சிலர். அதுவும் ஞாபகச்சின்னமாம்.

இதையும்விட பிள்ளை 9வயதையடைந்தால் சாறி வாங்கி வைத்துக் கொள்கிற நிலமையும் வருகிறது. எப்ப பிள்ளைக்கு பிறப்புறுப்பிலிருந்து குருதி வெளியேறும் சாறியுடுத்து ஐயரைக்கூப்பிட்டு துடக்கு கழிக்க வேணுமாம். அதற்கு உடனடியாக சாறி வேண்ட முடியாது போகுமென்பதனால் சாறியை வாங்கி வைத்துக் கொண்டு தினமும் பிள்ளை கழற்றிப்போட்டுவிட்டுப் போகிற உள்ளாடையை பரிசோதனை செய்கிற அம்மாக்களும் இப்ப கனக்க இருக்கினம்.

 

இந்த விழாவில் மாற்றத்தை கொண்டு வந்து பிள்ளைகளுக்கான எதிர்காலத்தை சமூகத்துடனான வாழ்வை கல்வியை ஊட்டுவதே சரியான வழியென்பதனை ஒவ்வொரு பிள்ளையும் உணரக்கூடிய நிலமைக்கு மாற்ற ஒவ்வொரு பெற்றோரும் சுற்றமுமே தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

 

 

Link to comment
Share on other sites

இந்த மாதிரி விழாக்களை நடத்துவதில் முன்னுக்கு நிற்பது தாய்க்குலங்கள்தான்.. :rolleyes: அதுவும் சாமத்தியப்பட்டவுடன் நடத்தாமல் ஓரிரு வருடங்கள் தள்ளி நடத்த ஊக்கம் கொடுக்கிறார்கள்.. காரணம் தெரிந்ததுதான்.. :blink:

 

தாய்க்குலங்கள் ஓகே சொன்னவுடன் தந்தைக்குலங்கள் ஹெலிக்கு ஏற்பாடு செய்கினம்.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஒரு பெண்பிள்ளையின் வாழ்வென்பது எப்படியமைய  வேண்டுமென்பதற்கான இன்னொரு சாட்சியாக இன்னொரு பெண்பிள்ளையின் அந்தரங்க மாதவிடாயை எப்படியெல்லாம் செய்கிறார்கள்  என்பதனை இந்த வீடியோவில் பாருங்கோ.

 

Link to comment
Share on other sites

இடம் கனடாபோல் இருக்கு.. :unsure:  கனடாவில் இருந்து ஊருக்குப் போறது கனநேரம் எடுக்கும்தானே.. :D அதுக்குத்தான் மாடு, கோழியை எல்லாம் கனடாவுக்கு கூட்டி வந்திட்டோம்.. :icon_idea:



அது சரி.. பெயர் றெபெக்கா என்று இருக்கு.. கிறித்துவர்களும் இதை செய்வார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 மேலே ஜீவா குறித்தது போல விமர்சித்திருந்தார்கள்.

 

ஐயோ அக்காச்சி .. இது நான் விமர்சிக்கவில்லை முகப்புத்தகத்தில் சிலரால் எழுதப்பட்டது. அவற்றை நீங்கள் கூடப் பார்த்திருக்கலாம் இல்லை என்றால் இணைப்பைத் தருகிறேன் பாருங்கள் அக்கா. மற்றும் படிக்கு வேலியிலை போற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்குள்ளை விட நான் தயாரில்லை அக்கா. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

ஐயோ அக்காச்சி .. இது நான் விமர்சிக்கவில்லை முகப்புத்தகத்தில் சிலரால் எழுதப்பட்டது. அவற்றை நீங்கள் கூடப் பார்த்திருக்கலாம் இல்லை என்றால் இணைப்பைத் தருகிறேன் பாருங்கள் அக்கா. மற்றும் படிக்கு வேலியிலை போற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்குள்ளை விட நான் தயாரில்லை அக்கா. :rolleyes::lol:

 

ஐயோ தம்பி நீங்கள் பகிர்ந்த கருத்து போல இருந்தென்றதை குறித்தேன். அது உங்கள் கருத்தில்லை. நான் சொன்ன கடந்தவருட நேரடி பூப்புனிதவிழா காட்சியின் கீழ் நீங்கள் மேற்கோள் காட்டியது போல எழுதப்பட்டிருந்ததென்று சொல்லு வந்தேன். கோதாரி கருத்து மயக்கத்தை தந்துவிட்டது மன்னித்துவிடு ராசா. :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் உலங்குவானூர்தியில்.. சிறிய ரக விமானத்தில்..  ஊரைச் சுற்றுவது ஒன்றும் புதினம் அல்ல. முன்னம் ஊரிலும் பலாலியில் இருந்து இப்படியான சேவைகள் இடம்பெற்றதாக தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 

இந்தப் பொண்ணுங்களுக்கு அந்த வாய்ப்பு இப்படி ஒரு கேளிக்கை வேடிக்கை விநோதக் களியாட்டம் மூலமாவது கிடைச்சுதே என்று சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான். இது நாளை அவர்களை ஒரு விமானியாக அல்லது விமானப் பணிப்பெண்ணாக வரத் தூண்டக் கூடும்.. என்று சொல்லிச் சென்று விட வேண்டியது தான்.

 

நாங்கள் கத்தி சனம் திருந்தப் போறதே இல்லை. இந்தச் சாமத்தியச் சடங்கு பற்றி நான் அறிய 2002 இல் இருந்து யாழில் எத்தனையோ கருத்தாடல்கள்.. பல மணி நேரங்கள்... பல மனித வலுக்களைச் செலவழித்து செய்யப்பட்டும்.. ஆன பயன்??!. அது இப்ப வீட்டில இருந்து கோலுக்கு வந்து.. ஆகாயத்திற்குப் போயிட்டுது..! நாளை விண்ணுக்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

போற போக்கில முதலிரவை பறக்கும் விமானத்தில் வைத்தாலும் வைப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

போற போக்கில முதலிரவை பறக்கும் விமானத்தில் வைத்தாலும் வைப்பார்கள்.

அதையும்தாண்டி அதை காசுகொடுத்து கமராமான் வைத்து வீடியோ எடுத்து எடிற்பண்ணி நல்ல பாட்டுக்கள் போட்டு அல்பம் செய்து நெட்டில் விட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில முதலிரவை பறக்கும் விமானத்தில் வைத்தாலும் வைப்பார்கள்.

 

"அற்பனுக்கு பவிசு வந்தால்.. அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்" என்று எம் முன்னோர்கள் எம்மவர்களின் இன்றைய இந்தக் கோலத்தை அழகுற அன்றே இனங்கண்டு சொல்லி விட்டுத்தான் சென்றுள்ளனர்..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த வானூர்தி விடயங்களை ஒரு பக்கமாக வைத்து விட்டு, இந்த விழா குறித்து நான் அவதானித்த ஒரு விடயம் பகிர விரும்புகின்றேன்.
 
இந்த விழாக்களை நக்கல் அடித்து, இதுகள் எல்லாம் எண்ட பிள்ளைக்கு செய்ய மாட்டேன் என்று சொன்ன அப்பாகளை, ஒன்று அல்ல பல பேரை பார்த்து இருகின்றேன்.
 

பின்னர் தமது பிள்ளைகளுக்கு விழா எடுத்த அவர்களுடன் பேசிய போது, அவர்களது மனதினை மாற்றிய ஒரே விடயம், அவர்களுக்கு சொல்லப் பட்ட நியாயம்.

 
இந்த ஒரு நிகழ்வு தான், தாய், தகப்பன் முழு உரிமையுடன், முடிவு எடுத்து செய்யக் கூடியது. ஏனெனில் எதிர்காலத்தில், மேற்குலகில் வாழும் ஒரு பிள்ளையின் எதிர்கால வாழ்வு கலியாணமோ, சேர்ந்து வாழ்வதோ, ஓரின வாழ்வோ ஆல்லது தனிமையானதோ என எதிர்வு கூற முடியாதது.
 
அது உண்மையும் கூட தானே!
 
தாயகத்தில், முன்னர் அச்சு தொழிலில் இருப்போர், ஒரு வியாபார தந்திரம் செய்வார்கள். ஒரு துண்டு பிரசுரம் அடித்தி விநயோகிப்பர். ஒரு தெய்வ சம்பவம் குறித்து விபரிக்கும் அந்த பிரசுரத்தினை, பிரதி அடித்து விநியோகித்தால், இன்ன பலன் கிடைக்கும், இல்லாவிடில்.... என் பயமுறுத்தலும் இருக்கும். கீழே அந்த அச்சகத்தின் தொடர்பு விபரம் இருக்கும்.
 
இந்த தாய் தந்தையரின் முழு உரிமை கதை இந்த விளம்பர உத்தியினை, இந்த விழாவிற்கு, பல சேவைகளை வழங்கி பணம் பார்க்கும் வியாபாரிகள் உபயோகிக்கின்றரோ என் தோன்றுகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவும் ஒரு கலாச்சாரம் என்று வர அதிக நாள் எடுக்காது. ஏன்னெனில் யுத்தத்தால் பாதிக்க பட்ட பெண்களை கூட, ஒதுக்கி வைப்பதுப்பதுதான் கலாச்சாசரம் என்று "நியூ யோர்க்" இருந்து சொல்லுகிற தமிழர் காவலர்கள் உள்ள இடத்தில் இந்தகைய "இறுகிய/கட்டுக்கோப்பு" மிக்க புராதன பண்பாடுகள் வளரத்தான் செய்யும். 

Link to comment
Share on other sites

இந் நிகழ்வு அக் குடும்பத்தின் தனிப்பட்டவிடயம். அதில் இனம் கலாச்சாரம் என்பதினூடாக தலையிட முடியாது. பல இனக் குழுமங்களில் இருந்து பொறுக்கப்பட்ட கலாச்சாரமே கலாச்சாரம் என்ற போர்வையில் பேசப்படுகின்றது. இரவல் கலாச்சாரம். அதற்கும் எந்த வரைமுறையும் கிடையாது. யாரும் ஒருத்தன் வித்தியாசமாகப் பண்ணிவிட்டால் உடனே புலிக்காசில் பண்ணிவிடடான் என்பது பொது வழக்கு. அதனால் அது செல்லாது. அந்தக்காலத்தில் பல்லாக்கு இருந்தது அதில் பவனிபோனார்கள் இந்தக்காலத்தில் உலங்கு வானூர்தி இருக்கின்றது அதில் போகின்றார்கள். அவர்கள் உழைப்பு அவர்கள் காசு அவர்கள் சந்தோசம் அவர்கள் திருப்தி. இதில் கருத்துக்கூற நாம் யார்? பரணி பாடிய தேசீயவாதிகள் இப்போது புறணிபாடும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அதை விடுத்து அவர்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  இது முந்தியே கன இடங்களிலை குசுகுசுத்த விசயம்.... காணானதை கண்ட சனம் செய்யுது.....இதுக்குப்போய் பெரியவசனம் எல்லாம் போட்டு கதைக்கக்கூடாது. பாரம்பரியம் தெரிஞ்சவன்....பகுத்தறிவு தெரிஞ்சவன்...பள்ளிக்கூடம் போய் நாலெழுத்து படிச்சவன் ஒருகாலமும் இந்த வேலை செய்யமாட்டான்.....

 

Link to comment
Share on other sites

கலை அம்சத்துடன் பார்க்கலாம். வேறு, சரி, பிழை, தேவை, தேவையில்லை பார்ப்பதாயின்.. இதுபோல் பல்லாயிரம் விடயங்கள் உள்ளன. நாங்கள் இணையத்தளத்தில் எழுதுவனவற்றையும் இவ்வாறே வேறோர் ஊடகப்பரப்பில் விமர்சித்து திட்டி தீர்க்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.