Jump to content

மனதைக் கவர்ந்த கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நானும் காற்றில் கத்தி வீசுகிறேன்

நானும் காற்றில் கத்தி வீசுகிறேன்

யாரின் முகமூடி கிழிக்கவோ

திறந்த முகத்தில்

குத்தி கூர்பார்கவோ அல்ல

எமக்கான விளையாட்டு

காற்றில் கத்தி வீசுவது

என் தூரம் அறிந்தே வீசுகிறேன்

எல்லைக்கு உட்பட்டு

மழுங்கிய கத்தி கொண்டே

வீசுகிறேன்

காற்றை கிழிக்கும்

ஓசை எனக்கானது

காற்றின் அறைகூவல் வீசட்டும்

மணலில் கத்தி சொருகி

நிலை கொண்டிருப்பேன்

அது ஓயும்வரை

ஒளி, ஒலி பிழை

இருக்கலாம்

காற்றை கிழிப்பதில்

இருக்கிறது விளையாட்டின்

வெற்றி எனக்கும்

பிரிகையில் காற்றுக்கும்

இதுவரை தோற்றாலும்

இது ஒரு விளையாட்டு

அவ்வளவே!

http://pakkam5.blogspot.com/2006/05/blog-post_30.html

Link to comment
Share on other sites

  • Replies 332
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி

பற்றி எரிகையிலும் பூ பூக்க

உன்னால் மட்டுமே முடியும்!

'மத்தாப்பூ'!

சுற்றி எரிகையிலும்

உள்ளே,

பூகம்பம் வெடிக்கையிலும்

சொர்க்க‌த்தில் இருப்ப‌தாய்

பாசாங்கு பண்ண‌

என்னால் ம‌ட்டுமே முடிகிற‌து!

எள்ளி ந‌கையாடும் எல்லோரையும்

ஏதேதோ க‌தைக்கிறாரென‌

செவிடு பாய்ச்சுவ‌து

எப்ப‌டி அக‌ந்தையாகும்?

புற‌ம் பேசுத‌ல் த‌வ‌றென‌ப்ப‌டாத‌

உல‌க‌த்தில்....

பாச‌முட‌ன் விர‌ல் பிடித்து ந‌ட‌க்க‌

குழ‌ந்தைக‌ளே பிடிக்கிற‌து எனக்கு!

கோரிக்கையோ கட்டளையோ

இல்லாத செல்லச் சிணுங்களில்

சிக்குண்டு சிரிப்பதை

ம‌ன‌ முதிர்ச்சி இல்லையென்ப‌தா?

செய‌ற்கையாய் சிரித்து சிரித்து

க‌ண்ணில் நீர்வர மெய்யாய்

சிரித்த‌து எப்போது?

நினைவேயில்லை!!

வலி நிர‌ப்பி வடித்த

வார்த்தைச் சித்திர‌மெல்லாம்

அரிதாய் வாசிக்க‌க் கிடைக்கையில்

அதே காயாத‌ குருதி வாச‌னை!

கிழிக்க‌ப்ப‌ட்ட‌ இத‌ய‌ம் இன்னும்

தைக்க‌ப்படவேயில்லை!

சுயமெனும் இருள்வெளி தாண்டி

புற‌வெளி உல‌வ‌க் கிடைத்த‌

வாய்ப்புகளெல்லாம் வாகாய்

வ‌ரிசையில் நிற்கின்ற‌ன‌!

விரும்பிய‌ திசை எதுவென

தேர்ந்து செல்லும் ம‌ன‌திட‌மின்றி....

கிழிக்க‌ப்ப‌ட்ட‌ நாட்குறிப்புக‌ளை

க‌ண‌க்கெடுக்கும் ம‌ன‌சாட்சி

ஏனோ,

வாழ‌ப்ப‌டாத எஞ்சிய காலத்தை

வ‌ச‌ப்ப‌டுத்த‌ முய‌ல்வ‌தேயில்லை!

கூர்மங்கிய நாக்குகளினால்

குத்தப்பட்ட சொற் காயங்கள்!

உயிர் நீங்கலாக

மற்றதை மாய்த்தும்

அவர் மனம் நோகுமென

பதிலடி தராத பரிதாப தருணங்கள்

இந்த அறிவிலி வாழ்க்கையில்

அனேகம் நிகழ்வதால்

இப்பெயர் பெற்றேன்

காரணம் அறிக‌!

http://kayalsm.blogspot.com/2010/01/blog-post_19.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தானின் தாசியன்

- பொன்.வாசுதேவன்

ஆம்

இன்றைக்கு எப்படியாவது

கடவுளைக் கொன்றுவிட

திட்டமிட்டிருக்கிறேன்

இனியும் பொறுமையில்லை

முழுமையாக உதிர்ந்து விட்டன

சகிப்புத்தன்மையின் செதில்கள்

வந்துவிட்டார் கடவுள்

எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது

பின்புறமிருந்து முகத்தில்

துணியைப் போர்த்தி

வசமான பிடியுடன் இறுக்குகிறேன்

திமிறிக் களைத்து தோற்று

உடல் தளர்ந்து பிரிகிறது

கடவுளின் உயிர்

குரூரத் திருப்தியோடு கோரப்பற்களில்

வழியும் இரத்தத்தை சுவைத்தபடி

தொலைவில் வந்து பார்க்கிறேன்

தகன மேடையில் யாரோ

கிடத்திக் கொண்டிருக்கிறார்கள்

எனது உடலை.

http://www.aganazhigai.com/2010/04/blog-post_20.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஆனால் புரியும் படி எழுதினால் நல்லது நானும் புரிந்து கொள்ள,,,,,,,,,,,,,,

வீதியில் நடக்கும்போது வசீகரமான பெண்கள் போனால் தலை தன்பாட்டுக்குத் திரும்பிப் பார்க்கும். திரும்பிப் பார்க்க வைப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அதுபோலத்தான் கவிதையும் முதல் நொடியில் பிடித்துவிடவேண்டும்!

Link to comment
Share on other sites

பெண்

ladiesdress.jpg

நான் அணிகிறேன்

இரு உள்ளாடைகளும்...

இரு மேலாடைகளும்...

எதிர் வரும் ஆணின்

காமம் மறைக்க!

டவுசர்

கால் மறைக்க

ஆண்களுக்கு.....

கால்வாசி மறைக்க

பெண்களுக்கு .....

pantsw.jpg

கேவலம்

ஓட்டுப்போட துணியில்லாமல்

வறுமையில் வாழ்வது கேவலமல்ல...

ஒட்டுத் துணியோடு

வசதியாய் வாழ்வதே கேவலம் ...

அம்மண சிலைகள்

statuew.jpg

அம்மணமாய் இருப்பதோ நாங்கள்

அவமானப்பட்டுக்

கொள்வதோ நீங்கள் - எங்கள்

இச்சைகள் இறந்துவிட்டன - ஆனால்

இம்சைகள் மட்டும் மீண்டும் மீண்டும்

ரசனைகளின் பேரில் உங்கள் கைகளால்.....

http://thisaikaati.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்

நான் அணிகிறேன்

இரு உள்ளாடைகளும்...

இரு மேலாடைகளும்...

எதிர் வரும் ஆணின்

காமம் மறைக்க!

பெண் பிடித்திருக்கு :D

Link to comment
Share on other sites

  • 1 month later...

தமிழ் மறந்து...!

தங்கக் குடுவையில் அமுதம் தந்தால்

“ச்சீ” என முகம் சுளிக்கிறார்!

தகரக் குடுவையில் இனிப்பான விடயமென்றால்

முகம் மலர்ந்து சுவைக்கிறார்!

தமிழமுதம் கசக்கிறதாம்- அந்த

ஆங்கில விசம் இனிக்கிறதாம்!

நாகரீக மோகத்திலே சவ்வாது

சாக்கடை பேதமறியா அலறுகிறார்!

தாரக மந்திரமாம் தமிழைப் பொல்லார்

தட்டி தலைக்குனிவு செய்கின்றார்!

அடுக்குமோ இவ்வநியாயம் - இதுபோல்

நடக்குமோ எந்நாட்டிலும்!

புத்தி மங்கிய புது நாகரீகப் புத்திசாலிகள்

புவிமீது பேரன்புத் தமிழ் மறந்தார்!

தாரத்தின் சொற்கேட்டு தாயை நிந்திக்கும்

தற்குறி புருசறன்றோ இவர்கள்!

பேரம்பேசி விற்றாயோ தமிழ் பண்பாட்டை

பாரமெனத் தூக்கி எறிந்தாயோ!

ஜென்மம் முக்திபெற தமிழனாய்ப் பிறந்தாய்

தமிழ் மறந்து நடமாடும் கூடானாய்!

நன்றி விஷ்ணுதாசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஆனால் புரியும் படி எழுதினால் நல்லது நானும் புரிந்து கொள்ள,,,,,,,,,,,,,,

அதுதான் கவிதை.

Link to comment
Share on other sites

நல்ல கவிதை ஆனால் புரியும் படி எழுதினால் நல்லது நானும் புரிந்து கொள்ள,,,,,,,,,,,,,,

கிகிகீ..உண்ணாண உதைத்தான் நானும் கேக்க்குறன்..எட்டித்தொடுற மூக்கை ஏனப்பா சுத்தித்தொடுறியள்..?பாரதியின் கவிதைகளைப்பாருங்கள் எவ்வளவு அழகாக எழிமையாக இருக்கும் அதனால்தான் அவன் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பிடித்தான்..வைரமுத்துவின் கவிதைகளைப் பாருங்கள் அப்படி ஒரு அழகும் தமிழ் சுவையும் இருக்கும்..அதனால்தான் அவன் அனைவராலும் விரும்பப்படும் கவிஞ்ஞன்.. இது ஏ.ர் இன் பாடல்களுக்கும் இழையராஜாவின் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசம்போலத்தான்..முன்னையது வந்த புதிசில் ரசிக்கப்படும் பின்னர் மறைந்து போய்விடும்..பின்னையது வாழ்ந்து கொண்டே இருக்கும்...

Edited by நெருப்பு நீலமேகம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் குழந்தை

சாத்தான்களும் பிடாரிகளும்

சகஜமாய் புழங்கும் கானகத்தில்

குழந்தையொன்று மந்திரகவசத்தோடும்

உருவேற்றப்பட்ட தாயத்துக்களோடும்

களமிறக்கப்பட்டது கடவுளின் பெயரால்...

ஆபத்துக்களில் மனந்தளராவண்ணம்

அசரீரிகளின் வழி நம்பிக்கைச்சுடர்

எப்போதும் இறக்கைகள் முளைத்த

தேவதைகள் குறித்தே ஓதப்பட்டிருந்தன

சாத்தான்களின் பாசறையை

கடவுளின் அரண்மனையாய்

மாற்றுவதாய் ஏற்பாடு!

ஈட்டிகள் துளைக்கையிலும்

மரண அவஸ்தை உச்சத்திலும்

உதவி வேண்டி குழந்தையின் கதறல்

விண்ணைப் பிளந்தும்

தேவதைகள் வரவேயில்லை!

பார்த்தது குழந்தை!

இவ்விடம் வாழ இன்னது ஏற்பு

பகுத்தறிந்து பாந்தமாய் உறவாடியது

இப்போது கடவுளை வரவேற்க

குழந்தை தயார்

ஒரு காட்டேரியின் மடியில்

குருதியை சுவைத்தபடி!

http://kayalsm.blogspot.com/2010/06/blog-post_24.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தனிமை

ந.மயூரரூபன்

முறைக்கிறதா என்னைப் பார்த்து

சிரிக்கிறதா என்னைப்பார்த்து

ஒன்றுமே புரியவில்லை

அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும்

பிடிபடவில்லை ஒன்றுமே.

நான் பார்க்கும் எல்லாமே

விரோதமாய்ப் பார்க்கின்றன

என்னை மட்டுமே.

என் கண்ணில் எப்போதும்

ஒட்டியிருப்பது பயந்தானோ?

பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ?

என்னுள் துடிப்பு ஏறிக்

குலைகிறது தாறுமாறாய்.

என்னுயிரைக் கொய்துவிடும்

கனவுகள் நெருக்குகின்றன.

கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும்

அருட்டிப்பார்க்கிறது என்னை.

ஊசியாய்த் துளைக்கும் பார்வையும்

உடல் வறட்டக் கத்தும் சத்தமும்

மூச்சழிக்க வைக்கும் என்னை.

கொப்பில் குதிக்கும் தாட்டானும்

தேடித் திரிவது என்னைத்தான்.

ஊத்தை இளிப்புடன்

ஊடுருவிப் பார்க்குமது என்னை.

பார்வைகளிலெல்லாம்

உயிர் கொழுவித் தவிக்கும்.

நான் போகுமிடமெல்லாம்

நாயாய்த் தேடிப் பயந் தழைக்க வருமெல்லாம்.

என்னைவிட எல்லோரும் நண்பர்களே.

காகமும் தாட்டானும் கூடத்தான்.

அடிக்கடி செத்துப்போகும் உணர்வுகளுடன்

நான் மட்டும் தனியே

http://www.vaarppu.com/view/2371/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்தனையும் அருமையான கவிதைகள்.

(நிறைய வார்த்தைகள் சுட்டு போட்டன் :rolleyes: )

நன்றி கிருபன் அண்ணா இணைப்புக்கு. :)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

“புரிஞ்சுக்கோ”

நீயில்லாக் கட்டிடத்தின் முன் குந்தியிருக்கின்றேன்.

வீடு மாறி விட்டாயாம்,

உறுதிப்படுத்த,

உன் தொலைபேசி இலக்கம் கூட என்னிடமில்லை.

இருந்தும் என்ன?

மேப்பிள் இலைகள் நிறம்மாறிவிட்டன.

உன் பல்கனிப் புறாக்குஞ்சுகளும்

செட்டை முளைத்துப் பறந்துபோயிருக்கலாம்.

தேயிலை முடிந்துது வாங்கி நிரப்பிக்கொள்.

நானிட்ட மருந்தில் கரப்பான் பூச்சிகள் அழிந்தனவா?

நம் நினைவுகளைத் தாங்கி

உன்னோடலைந்த வீதிகளில் தனியாய் அலைகின்றேன்.

உன்னோடிருந்த வீட்டின் முன்னால்

நீ விட்டுச் சென்ற சுவாசத்தின் ஒரு துளி தேடி

குந்தியிருக்கின்றேன்.

யார் கண்டது?

எனை இழுத்துவந்த ஏதோ ஒன்று

உனையும் ஒருநாள் இங்கே இழுத்துவரலாம்.

“புரிஞ்சுக்கோ” என கண்கலங்க

என் கண்பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றாய்.

பின்நவீனத்துவம்,

பிரேம்-ரமேஷ்,

சிக்மென் பிரைட்,

நீட்ஷே

புரிந்துகொண்ட என்னால்

உன் “புரிஞ்சுக்கோ”வை புரிந்து கொள்ள முடியவில்லை.

பனிப்போர்வைக்குள்

உன் “புரிஞ்சுக்கோ”வைப் புரியாமலேயே

நான் விறைத்திருக்க

நீ கடந்து போகலாம்

அது நானென்று புரிஞ்சுக்காமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமை

ந.மயூரரூபன்

முறைக்கிறதா என்னைப் பார்த்து

சிரிக்கிறதா என்னைப்பார்த்து

ஒன்றுமே புரியவில்லை

அதன் மாறுமுகத்தைத் துழாவிப் பார்த்தும்

பிடிபடவில்லை ஒன்றுமே.

நான் பார்க்கும் எல்லாமே

விரோதமாய்ப் பார்க்கின்றன

என்னை மட்டுமே.

என் கண்ணில் எப்போதும்

ஒட்டியிருப்பது பயந்தானோ?

பார்ப்பது எல்லாமே பயங்கரந்தானோ?

என்னுள் துடிப்பு ஏறிக்

குலைகிறது தாறுமாறாய்.

என்னுயிரைக் கொய்துவிடும்

கனவுகள் நெருக்குகின்றன.

கறுப்பாய்க் குந்தியருக்கும் அண்டங்காகமும்

அருட்டிப்பார்க்கிறது என்னை.

ஊசியாய்த் துளைக்கும் பார்வையும்

உடல் வறட்டக் கத்தும் சத்தமும்

மூச்சழிக்க வைக்கும் என்னை.

கொப்பில் குதிக்கும் தாட்டானும்

தேடித் திரிவது என்னைத்தான்.

ஊத்தை இளிப்புடன்

ஊடுருவிப் பார்க்குமது என்னை.

பார்வைகளிலெல்லாம்

உயிர் கொழுவித் தவிக்கும்.

நான் போகுமிடமெல்லாம்

நாயாய்த் தேடிப் பயந் தழைக்க வருமெல்லாம்.

என்னைவிட எல்லோரும் நண்பர்களே.

காகமும் தாட்டானும் கூடத்தான்.

அடிக்கடி செத்துப்போகும் உணர்வுகளுடன்

நான் மட்டும் தனியே

http://www.vaarppu.com/view/2371/

கிருபன் இணைப்பிற்கு நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதைகள்! இணைப்புக்கு நன்றி கிருபன் & நுணா! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றுப்புள்ளியும் முதற்புள்ளியாக வாழ்க்கை!!

வித்யாசாகர்

போராட்டத்தின் -

ஒவ்வொரு கிளையாய்

தாவிச் சென்றதில்

உச்சியிலும் மத்தியிலும் நிற்கிறோமேயன்றி

கிளைகள் தீர்ந்தப் பாடில்லை

ஒரு நாளைக் கடப்பதே

போரில் வெல்லும் பொழுதுகளாய் இருக்க

வருடங்களை -

சிரிக்க மறுத்து

சகித்துக் கொண்டே - கடக்கிறோம்

எதிரே வருபவர்களை யெல்லாம்

தனக்கானவர்களாக எண்ணியும்,

கிடைப்பதிலெல்லாம் மனம் லயித்தும் -

நிரந்தர ஆசையில் உயிர்விட்டே

மடிகிறதிந்த மனித இனம் அதில்

நானும் மாறுபட்டவனாக இல்லை

அப்பட்டமாய் -

எதுவுமே எனக்கில்லையென்று புரிந்துப் போனாலும்

வாழ்வதற்கான உயிர்காற்று -

தொண்டையை அடைத்துக் கொள்ள,

ஏதோ ஒன்று இருப்பதான தோற்றத்தில்,

ஆசையில் -

நம்பிக்கையில் -

நாளேடுகளின் தாள்களென கிழிபட்டேப் போகிறோம்

இதில், பெரிதாக சாதித்ததெல்லாம்

எந்த நிலையிலும் -

யார் இறப்பிலும் -

உண்டு.. உறங்கி.. சுயநலம் பூண்டதும்,

எதற்கோ ஏங்கி, பயந்து, அபகரித்துக் கொண்டதும்போல்

சில உண்டு, என்றாலும் -

மனதிற்குள் நான் தோற்றவனாகவேத் தெரிய

மீண்டும் ஒரு புள்ளியாக -

நின்றோ; தொடர்ந்தோக் கொள்கிறது வாழ்க்கை!!!

http://www.vaarppu.com/view/2385/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

புத்தரின் படுகொலை

நேற்று என் கனவில்

புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர் அவரைக் கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே

அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்

அமைச்சர்கள் வந்தனர்.

'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை

பின் ஏன் கொன்றீர்?'

என்று சினந்தனர்.

'இல்லை ஐயா,

தவறுகள் எதுவும் நிகழவே இல்லை

இவரைச் சுடாமல்

ஓர் ஈயினைக் கூடச்

சுடமுடியாது போயிற்று எம்மால்

ஆகையினால்......

என்றனர் அவர்கள்.

'சரி சரி

உடனே மறையுங்கள் பிணத்தை'

என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.

சிவில் உடையாளர்

பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.

தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்

புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்

*சிகாலோவாத சூத்திரத்தினைக்

கொழுத்தி எரித்தனர்.

புத்தரின் சடலம் அஸ்தியானது

*தம்ம பதமும்தான் சாம்பரானது.

-கவிஞர் எம்.ஏ.நுஃமான்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே' எனது டீஷர்ட்டில்

சின்னப்பயல்

chepoem.jpg

வாய்க்காலில் கட்டுக்கடங்காத

பிணங்கள்,

அலையடிக்கும் அலைக்கற்றையின்

எண்ண முடியாத கணக்குகள்,

அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென

அடித்துப்புரண்டுகொண்டிருக்கும்

கொரில்லாக்கள்,

காட்டிக்கொடுப்பதையே

தொழிலாகக்கொண்டு

சமாதானப்போர்வைக்குள்

தன்னை முடக்கிக்கொண்ட

முன்னாள் போராளிகள்,

டிஜிட்டல் பேனரில்

சிரிக்கும் எந்திரன்,

என

எல்லாவற்றையும்

பார்த்துக்கொண்டு

சும்மா தான் இருந்தார்

மோட்டர் சைக்கிளில்

பயணித்தவாறே.

சே'

எனது டீஷர்ட்டில்

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4122

  • Like 4
Link to comment
Share on other sites

  • 1 month later...

சிதறிய

எம் மக்களை

இணைப்பதற்காக

சிதறுகிறேன்

நான்

வலிகளேயின்றி!!!

மழையில்

நனைந்தால்

ஆகாதென்று

முந்தானை

குடைப்பிடிக்கிறாள் அம்மா

ம‌க‌ளின்

கல்லறைக்கு!!!

( ஈழத்தமிழரின் வலிகளை சும‌ந்து வெளிவந்திருக்கும் தை கவிதையிதழில் இக்கவிதைகள் இடம்பெற்றுள்ளது!!! )

பதித்தவர் : எழில்பாரதி

நன்றி : தை கவிதை இதழ் - 2009

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிதறிய

எம் மக்களை

இணைப்பதற்காக

சிதறுகிறேன்

நான்

வலிகளேயின்றி!!!

நல்ல கவிதை நுணா! இணைப்புக்கு நன்றிகள்!

மகிந்த இப்படிப் பாடலாம்!

சேரும் தமிழ் உறவுகளைப்

பிரிப்பதற்காகச்

சிதறுகிறேன்

சில்லறைகளை

நான்,

பொறுக்குகின்றார்கள்,

வெட்கமேயின்றி!!!

Edited by Punkayooran
Link to comment
Share on other sites

எடுப்பார் கைப்பிள்ளை

66.gif

அடங்கி நடக்க அம்மா சொன்னார்

பின்னொருநாள் மனைவி சொன்னால் நான் தொடை நடுங்கி என்று

விரும்பாத ஒன்றை விரும்பி படிக்க அப்பா சொன்னார்

பின்னொருநாள் கனவில் வந்த என் பழைய கனவுகள் கை கொட்டி சிரித்தது

காதல் வந்த வேளையில் கவிதை எழுது என்றது இளவட்ட கூட்டம்

கவிதை கற்ற வேளையில் காதல் கிளி கழுதை மேல் ஏற்றப்பட்டது

கம்பியூட்டர் படி என்றான் நண்பன்

காலர் வைக்காத சட்டை பேசன் என்றாள் தோழி

காபி குடித்தால் சுகர் என்றார் டாக்டர்

கடன் வாங்கி வீடு கட்டென்றாள் மனைவி

வாழும் போதெல்லாம் என் வாழ்கையை சமுதாயம் வாழ்ந்தது

நன்றி பரம்பொருளே - சாவை மட்டும்" நான் " சாக கொடுத்தாய்

66.gif

  • Like 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மீன்குஞ்சுகள்

துவாரகன்

--------------------

கண்ணாடித் தொட்டியில் இருந்த

மீன்குஞ்சுகள்

ஒருநாள் துள்ளி விழுந்தன

மாடுகள் தின்னும்

வைக்கோல் கற்றைக்குள்

ஒளிந்து விளையாடின

வேப்பங் குச்சிகளைப்

பொறுக்கியெடுத்து

கரும்பெனச் சப்பித் துப்பின

வயலில் சூடடித்து நீக்கிய

‘பதர்’ எல்லாம்

பாற்கஞ்சிக்கென

தலையிற் சுமந்து

நிலத்தில் நீந்தி வந்தன

வீதியிற் போனவர்க்கு

கொல்லைப்புறச் சாமானெல்லாம்

விற்றுப் பிழைத்தன

திருவிழா மேடையில் ஏறி

ஆழ்கடல் பற்றியும்

அதன் அற்புதங்கள் பற்றியும்

நட்சத்திரமீன்களின் அழகு பற்றியும்

அளந்து கொட்டின

இப்படித்தான்

வைக்கோலைச் சப்பித் தின்னும்

மனிதமாடுகள்போல் கதையடிக்கின்றன

தொட்டியில் இருந்து துள்ளிவிழுந்த

மீன்குஞ்சுகள்.

http://www.vaarppu.com/view/2447/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி தவறு

கயல்விழி சண்முகம்

சரியெனப்பட்டது

சத்தமாய் சரிதானென்றேன்

தவறெனப் புரிந்தது

தயக்கமின்றி தவறெனச் சொன்னேன்!

ஒத்திசைக்க உற்றவர்கள்

உடனிருந்தார்கள்!

அவர்தம்

கூட்டணி மாறியது

சரியென்றதை தவறெனவும்

தவறென்றதை சரியெனவும்

இம்சிக்கிறார்கள்

பிறழாத நாக்கு வேறு

பொய் நவில மறுக்கிறது

இப்போதும்

முன்னிருந்த நிலைதான்

இடறாத கொள்கையோடும்

பிறழாத நாக்கினோடும்

தன்னந்தனி மரமாய் நான்!

வந்தமரக்கூடும்

என் கிளையிலும்

சில பறவைகள்!

http://kayalsm.blogspot.com/2011/05/blog-post_23.html

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.