Jump to content

கிளாஸ்கோ பயணத்தைக் கைவிட்டார் ஜனாதிபதி மஹிந்த!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளாஸ்கோ பயணத்தைக் கைவிட்டார் ஜனாதிபதி மஹிந்த! 

[Tuesday 2014-07-22 20:00]
Mahinda-Rajapaksa-200.jpg

கிளாஸ்கோவில் நாளை ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க மாட்டார் என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் விஜயத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், அவர், கிளாஸ்கோ சென்றால் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படக் கூடுமெனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி கிளாஸ்கோ விஜயத்தை ரத்து செய்யவில்லை என மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

  

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தவிசாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டிலும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதியினால் ஆற்றப்படவிருந்த விசேட விரிவுரை எதிர்ப்பு காரணமாக இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=113593&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பயம் இருக்கணும்.
ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு போறதெண்டால்.... நாலு தரம் யோசிக்கணும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அந்தப் பயம் இருக்கட்டும், 
ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செல்கிற எண்ணம் கனவில் கூடவரக்கூடாது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அந்தப் பயம் இருக்கட்டும், 
ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செல்கிற எண்ணம் கனவில் கூடவரக்கூடாது. 

 

 

Mahinda-Rajapaksa-200.jpg

 

அந்தாளுக்கு... அந்த எண்ணம், ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அனுபவத்துக்குப் பிறகு கனவிலும் வாறதில்லை.

அந்தாளை... சுத்தியிருக்கிறவங்க்கள் தான், சும்மா....  உசுப்பேத்தி  விடுறாங்கள். :D

Link to comment
Share on other sites

அந்தப் பயம் இருக்கட்டும்,

ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு செல்கிற எண்ணம் கனவில் கூடவரக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mahinda-Rajapaksa-200.jpg

 

அந்தாளுக்கு... அந்த எண்ணம், ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அனுபவத்துக்குப் பிறகு கனவிலும் வாறதில்லை.

அந்தாளை... சுத்தியிருக்கிறவங்க்கள் தான், சும்மா....  உசுப்பேத்தி  விடுறாங்கள். :D

நியு ஜெர்ஸ்சிக்கு போனாலும் போவார் அங்கைஒருதர் இலங்கையர் ஒன்றுகூடல் என்று ஒரு கூத்தடித்து மனுசிக்கு கன்னத்திலை மஹிந்தரின் பொட்டும் வைத்து மற்றவைக்கும் அந்தபொட்டுக்களைவைத்து சிங்களவனுடன் கொண்டாட்டம் னடத்தி சில எலும்பு சூப்பும் தமிழரையும் இணைத்து படம் காட்டுறார்...அடுத்த நிகழ்வில் இன்னும் நல்லா செய்வினமம் ..அப்ப மஹிந்த அடுத்த சமருக்கு தம்மி வீட்டிலைதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியு ஜெர்ஸ்சிக்கு போனாலும் போவார் அங்கைஒருதர் இலங்கையர் ஒன்றுகூடல் என்று ஒரு கூத்தடித்து மனுசிக்கு கன்னத்திலை மஹிந்தரின் பொட்டும் வைத்து மற்றவைக்கும் அந்தபொட்டுக்களைவைத்து சிங்களவனுடன் கொண்டாட்டம் னடத்தி சில எலும்பு சூப்பும் தமிழரையும் இணைத்து படம் காட்டுறார்...அடுத்த நிகழ்வில் இன்னும் நல்லா செய்வினமம் ..அப்ப மஹிந்த அடுத்த சமருக்கு தம்மி வீட்டிலைதான்...

 

அடுத்த  Summerக்கு , மகிந்தர் நியு ஜெர்ஸ்சிக்கு வந்தால்....

அவருக்கு நல்ல பாடப் கற்பிக்க..... நுணாவிலான், மருதங்கேணி, ஈழப்பிரியன், ஜஸ்டின் ஆகியோர் உசாராக இருப்பார்கள் என்று நம்புகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கிளாஸ்கோ பயணத்தைக் கைவிட்டார் ஜனாதிபதி மஹிந்த!

 

எங்கு வந்தாலும் ஓட ஓட விரட்ட வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேதனைக்கு மருந்து தந்த தமிழ் சிறீக்கு நன்றிகள் பல... நியு ஜெர்சி காரருடைய படம் காட்டலையும் அவருடைய எழுத்து நடையயும் அவர் யார் என்பதை சிறு பிள்ளைகூடவிளங்கும்...பொது எதிரி யாரென்பதை தெரிந்தும்...பொட்டுவைத்து குடைபிடிப்போரை இனம் காணவேண்டும்...இவர்களால் பாதிக்கப்பட்ட எம்மினத்திற்குகிடைக்கும்  சிறிய  வாய்ப்பைகூட தட்டிப் பறிக்க அனுமதிக்கக் கூடாது..

Link to comment
Share on other sites

அவரை வரவேற்க இங்கு தடல்புடலாக வேலை நந்து வரும் நிலையில் மகிந்தவின் முடிவு ஏமாற்றம் தருகிறது.

 

https://www.youtube.com/watch?v=mCQDySTqIuU

 

இப்படி வரமாட்டன் எண்டு ஸ்கொட்லான்ட் போற சனங்களை நிப்பாட்டி போட்டு, 
நாங்க ஆயத்தம் இல்லாத நேரத்தில வந்திறங்கினால்? 
Link to comment
Share on other sites

ஆஹா.... எந்தளவு பெரிய்ய்ய வெற்றியைப் பெற்று விட்டோம். தமிழீழ போராட்டத்தில் இது ஒரு மைல் கல்.

 

மஹிந்தவை கிளாஸ்கோவிற்கு வரவிடாமல் செய்தததால் இனி தாயகத்தில் பொது மக்களின் நிலங்களை அபகரித்து இராணுவ முகாம் ஆக்குவதை  ஆமி அப்படியே நிறுத்தி விடப் போகின்றார்கள். துப்பாக்கி முனையில் நிகழும் பாலியல் வல்லுறவுகள் இனி நடக்கப் போவதில்லை. இனி பிரித்தானியா வரவிடமாட்டார்கள் என்பதால் மகிந்த பயந்து போய் வடக்கு கிழக்கு இணைப்பையும் நடத்தப் போவதாக கதை அடிபடுகின்றது. தினம் தினம் தம் உறவுகளை இழந்து கண்ணீரும் துயருமாக வீதிகளில் அலையும் காணாமல் போனவர்களின் உறவுகளிற்கு இனி போராட வேண்டிய தேவையை மகிந்த கொடுக்கமாட்டார் என்றும் காணாமல் போனவர்களை விடுவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியே விசேட விமானத்தில் போய் ஐ.நா மன்றத்தின் முற்றத்தில் மகிந்த போர்க் கைதிகளை ஒப்படைக்கப் போவதாகவும் சொல்கின்றனர்.

 

இனி என்ன, எல்லாம் சுபமாகப் போகின்றது. வெற்றி எமக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ மறப்போம் மன்னிப்போம் என்று சொல்கிறீர்களா நிழலி.நாங்கள் எதிர்ப்பைக்காட்டாமல் விட்டால் நீங்கள் சொன்னதை எல்லாம் மகிந்த நிறைவேற்றுவாரா??????எல்லாம் நல்லபடியாக நடக்குமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமர்(summer)) ஆட்களை மாத்திப்போட்டுதுபோலை...

Link to comment
Share on other sites

சொந்த நிலத்தில் இருந்து தமிழர்களை துரத்தி புலம்பெயர வைத்து விட்டு மகிந்தர் வர புலத்தில் உள்ளவர்கள் அனுமதிப்பினமோ ?

நிச்சயமாக இல்லை கொலைகாரனை ஓட ஓட துரத்த வேண்டும் 

Link to comment
Share on other sites

நா ங்க   இங் கயல்  லாம் நல்ல நல்ல வேலை   செயுறது.   இது புலம் பெர்ந்து வாலும் தமிலருக்கு புரியல...
மதிந்தா

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி,
இதனூடாக அவருக்கு ஒரு முக்கிய செய்தி ஒன்று சொல்லப் பட்டுள்ளது தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை வழங்காமல் போர் குற்றங்களுக்கு பொறுப்பு கூறாமல் இவரால் இனிவரும் காலங்களில் புலம்பெயர் தேசங்களுக்கு வருவது சாத்தியப்படாது என்பதினை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது 

நா ங்க   இங் கயல்  லாம் நல்ல நல்ல வேலை   செயுறது.   இது புலம் பெர்ந்து வாலும் தமிலருக்கு புரியல...
மதிந்தா

தமிழருக்கு புரியாதது இருக்கட்டும் நீங்கள் சொல்லவாற விடயத்தை தெளிவாக சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நா ங்க   இங் கயல்  லாம் நல்ல நல்ல வேலை   செயுறது.   இது புலம் பெர்ந்து வாலும் தமிலருக்கு புரியல...

மதிந்தா

பாவம் இப்பதான் அரிவரிக்கு போற செக் கிடைத்ததுபோல விட்டிடுங்க பிழைச்சுப் போகட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் தான் குற்றவாளி அல்ல ,தமிழருக்கு தீர்வை கொடுப்பதில் பின்னிற்க்கவில்லை எனும் கருத்துக்கள் மகிந்த வந்தால் அடிபட்டு போயிருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.