Jump to content

நிதி இல்லாமல் தத்தளிக்கும் சிந்து சமவெளி ஆய்வு


Recommended Posts

Tamil_News_large_1026394.jpg
 
கடந்த,1920முதல் இன்று வரை, வரலாற்று ஆய்வாளர்களுக்கு சவாலாக இருப்பது சிந்து சமவெளி நாகரிகம் வேர்கொண்ட, ஹரப்பா, மொகஞ்சதாரோ தான். ஐராவதம் மகாதேவனின் ஆராய்ச்சியை தொடர்ந்து, சிந்து சமவெளி குறித்து, சென்னை, ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன, இயக்குனர், ஜி.சுந்தர் மற்றும், ஆய்வாளர் ச.சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
 
அவர்களிடம் பேசியதில் இருந்து...
 
* ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பற்றி?
 
ஜி.சுந்தர்: சென்னையில், 1994ல் துவக்கப்பட்டது, ரோஜா முத்தையா நூலகம். அதில், 2007ல் துவக்கப்பட்டதுதான், ரோஜா முத்தையா சிந்துவெளி பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்தின் முதல் மதிப்புறு ஆலோசகராக, ஐராவதம் மகாதேவன் இருந்தார். அவரை தொடர்ந்து, தற்போது பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., மதிப்புறு ஆலோசகராக உள்ளார். நிறுவனத்தின், முழுநேர ஆய்வாளராக, ச.சுப்பிரமணியன் இருக்கிறார். நான், நூலக இயக்குனராக இருக்கிறேன்.
 
* சிந்துசமவெளி ஆராய்ச்சிகளின் தற்போதைய நிலை?
 
ஜி.சுந்தர்: சிந்துசமவெளியின் பெரும்பகுதி, பாகிஸ்தானில் இருக்கிறது. இந்தியாவில், இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளுக்காக, நாம் பெருமைகொள்ள முடியாது. காரணம், 1977க்குப் பின், பெரிய அளவில் ஆய்வுகள் நடக்கவில்லை. நடந்த ஆய்வு முடிவுகளும் தொகுக்கப்படவில்லை. அதனால், சிந்துசமவெளியை பற்றி திட்டவட்டமான கருத்துக்களைக் கூற முடியவில்லை. அரியானாவில் ராக்கிகடி, பர்மானா ஆகிய இடங்களிலும், குஜராத்தின் லோத்தல், தோலாவிரா உள்ளிட்ட இடங்களிலும், மகாராஷ்டிராவின் தைமதாபாத்திலும் மட்டுமே, சிந்து சமவெளி குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், அந்த நாகரிகம், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்டது என்பதும், முந்தைய திராவிடர்களுக்கு நெருங்கியதாகவும் உள்ளது என்ற கருதுகோள்கள் உள்ளன. சிந்துசமவெளி மக்கள், சமஸ்கிருதம், திராவிட மொழி, முண்டா ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பேசி இருக்கலாம் என்னும் கருதுகோள்களும் உள்ளன. கி.மு.1300க்குப் பிறகு வந்த சமஸ்கிருதத்திற்கு, ஆரம்பகாலத்தில் குறியீடுகளோ, வரிவடிவமோ இல்லை என்பதால், ஆரியர்களுக்கும் சிந்துசமவெளிக்கும் தொடர்பில்லை என்றும் கூறப்படுகிறது. ஆரியர்களின் வருகைக்குப் பின் சிந்துசமவெளி மக்களின் பண்பாட்டில், ஆரிய கலப்பு ஏற்பட்டிருக்கலாம் எனும் கருத்துகளும் உள்ளன.
 
* திராவிட-சிந்துசமவெளி நாகரிகங்களுக்கு இடையே நெருக்கம் உள்ளதா ?
 
ச.சுப்பிரமணியன்: சிந்துசமவெளி பொருட்களில், மொழிக்கான கூறுகள் ஏதும் இல்லை. ஆனால், குறியீடுகள் உள்ளன.மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன்கண்டியூரில் கிடைத்த கற்கோடரியில், சிந்துசமவெளி குறியீடுகளுக்கு நிகரான குறியீடுகள், சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. கோவைக்கு அருகில் உள்ள சூலூரில் கிடைத்த மண்பாண்டத்திலும், திண்டிவனத்திற்கு அருகில் உள்ள சானூரில் கிடைத்த மண்பாண்டத்திலும் சிந்துசமவெளிக்கு நிகரான குறியீடுகள் கிடைத்து உள்ளன. அதை போன்ற பொருட்கள், இந்தியாவில் வேறெங்கும் கிடைக்கவில்லை என்பதாலும், அந்த பொருட்களின் காலம் சிந்துசமவெளி காலத்திற்கு பிற்பட்ட காலம் என்பதாலும் சிந்துசமவெளி மக்கள் திராவிடர்களாக இருக்கலாம் என்ற கருதுகோள் வலுத்துள்ளது. மேலும், அசோகர் காலத்துக்கு முன் இந்தியாவில் பிராமி எழுத்துக்கள் இல்லை என்பதாலும், இந்த குறியீடுகள் தமிழ் பிராமி எழுத்துக்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கலாம் எனும் கருத்துக்களும் உள்ளன. அதேபோல், தொல்காப்பியம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் வரும் காட்சிகளும், நகர அமைப்புகளும் சிந்துசமவெளி நாகரிகத்தினை நினைவுபடுத்துவதாக உள்ளன. தற்போதைய தமிழக ஊர்ப்பெயர்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் ஊர்ப்பெயர்களை ஒத்திருப்பதால், சிந்துசமவெளிக்கும் திராவிடர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கலாம் எனும் கோணத்தில் ஆராய்ச்சிகளும், முடிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
* சிந்துசமவெளி பற்றி, தமிழ் நூல்கள் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?
 
ஜி.சுந்தர்: நிதிநிலைதான் முதல் காரணம். ஆங்கில சொல்லாடல்களுக்கு நிகரான தமிழ் கலைச் சொற்களை, அரசு உருவாக்கி, தொல்லியல் துறைக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். தமிழில் எழுதுவதற்கு, ஊக்குவிக்க வேண்டும். மேலும், அவ்வப்போது நடக்கும் ஆய்வு முடிவுகளை உடனுக்குடன், மாணவர்களும், உலகத்தாரும் அறிந்துகொள்ளும் வகையில், கணினிமயமாக்கி இணையப் பக்கங்களில் இணைக்க வேண்டும். தமிழகத்திலேயே, 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கான இடங்களை, தேர்வு செய்ய தொல்லியல் ஆய்வுக் குழுவில் (ஏ.எஸ்.ஐ) போதிய ஆட்களும், நிதியும் இல்லை. அதனால், பாரம்பரிய சொத்துகள் உள்ள பல இடங்கள், நகரமயமாக்கல், ரியல் எஸ்டேட் போன்றவைகளால் சூறையாடப்பட்டு வருகின்றன. மேலும், தொல்லியல் துறையில் உள்ளவர்கள் மட்டுமே, இந்த ஆய்வுகளை செய்ய வேண்டும் என்பதை விடுத்து, வரலாற்றிலும், தொல்பொருள் பற்றிய ஆர்வம் உள்ளவர்களையும் பயிற்றுவித்து, ஊக்குவிக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் நிதியுதவியும் செய்ய முன்வர வேண்டும். 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.