Jump to content

இனியாவின் தவிப்பு (பாகம் 1 இருந்து 5வரை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவின் தவிப்பு

533_stream.jpg

பாகம் 1

செவ்வானம் சிவந்து! கதிரவன் வரும்போது இவள் .....

யாருக்காக காத்திருந்தாள்?.....அப்படி என்னதான் நோக்கிறாள் ! காலை முதல் மாலை வரை, யார் இந்த பெண் ! இவள்தான் ..... இனியா.

இவள் ஏக்கம் எல்லாம் ஒரே ஒரு ஓசைக்காக அதுதான் தொலைபேசியின் ஓசை ......

அது அவளுக்கு இதயத்தை மெல்ல மெல்ல தட்டி வருடி எழுப்பும் இனிய சுவாசக்காற்று காற்று மட்டும் தானா உலகில் உள்ள அத்தனை வாசமலர்கள் எல்லாவற்றையும் ஒன்றாய் வருடகூட்டினால் எப்படி வாசம் வீசுமோ அவ்வளவு ஒரு புன்சிரிப்பின் உதடுகள் ......

உதடுகள் மட்டும்தானா ! .....? வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் கண்கள் கூட அவள் கண்ணின்மேல் காதல் கொள்ளும் அவளின் அழகு

இவளின் மனதோ சமுத்திரம் போல் பரந்து வழைந்து குனிந்து மாசுபடாமல் கவர்ந்து கொள்ளும் சுவாகம்

இனி .......

இவள் தன் வீட்டில் செல்லப்பிராணி ஜீவ ராசிகளின் மத்தியிலும் இயற்க்கை அன்னையின் கோல மலர்களின் இடையிலும் (மத்தியில்) தன்னை மறந்து இசை என்ற இன்ப வெள்ளத்தில் மிதக்கும் போது

Radio.jpg

கொட் மச்சி FM இல் ......

உன்மார்பில் விழிமூடி தூங்குகின்றேன் தினமும் கனவில்,......

உன் ஆசை முகம் தேடி ஏங்குகின்றேன் விடியும் பொழுதில் .....

என்ற பாடல் ஒலிக்கும் அத்தருணத்தில் ஒரு மணியின் ஓசை கேட்டது

இவள் மனதோ சிறகுகள் இல்லாமலே இருப்பதுபோன்று வேகமாக பறந்து வந்து போணை எடுத்த்தாள் மறுகையோ அவள் தன் கூந்தலை வருடியபடியே ஹலோ ....... ஹலோ ......ஹலோ

3496d1201168323-sony-ericsson-s500i-mobile-phone-456.jpg

என கேட்டபோது எனக்கு வலம்புரி சங்கின் ஓசை போல் மிக அழகிய இயற்க்கை கொண்ட ஓசை உள்ள காற்றின் வடிவில் ஹலோ ..... ஒரு வேத சுவாசம்

இதுதான் என் வாழ்வின் முதல் தூறல் என நினைத்தேன் ஆனால் ஹலோ இனியா என ஒலி வாங்கியது என் காதில்.

அப்போது என் சிநேகிதி அச்சயா என்னடி ..... எப்படி ...என்னால் நம்ப முடியவில்லை சுகமா ? என கேட்டேன்

அதற்க்கு அச்சயா: நம்பித்தான் ஆகவேண்டும்! எனக்கு திருமணம் ஆகிவிட்டது திடீர் திருமணம் என .....

சொறியடி என்னால் வரமுடியவில்லை எனக்கு பார்ப்பதற்கு கூட கொடுத்து வைக்க வில்லை

அச்சயா: பரவாயில்லை எனக்கு இந்த நட்புத்தான் என்வாழ்வில் இளைப்பாறும் ஓர் ஆலைமரம் .....

(அவள் பேச்சில் ஒரு சலனம் உள்ளதை நான் உணர்ந்தேன்)

ஏய் ... அச்சயா உலகத்தில உள்ள அத்தனை ஜீவராசிகளுக்கும் ஒரு அன்பு காட்ட உறவு இருக்கும் அது அம்மா அப்பாவாகவும் இருக்கும் அல்லது உடன்பிறப்பாகவோ அன்றி சிநேகிதராகவோ ... அன்றி இதுவும் இல்லையென்றால் இயற்கையின் மடியில் இருந்து சுமைகளை சொல்லி சுகம் காணலாம் டோன் வெறி

இனியாவின் தாயார் : இனியா !.....இனியா !!

இதோ வரம்மா ....

தொடரும் ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கம் வாசிக்க கவர்ச்சியாக வாசகனை கவரும்போல் உள்ளது..உங்களது படைப்பா தமிழரசு..?அப்படியென்றால் பாராட்டுக்கள்.. யாழில் கதை எழுதுபவர்கள் காதல்க் கதைகளைத் தொடுவது குறைவு..நானும்தான்..ரமணிச்சந்திரன் வகைக் கதைகளை நினைவுபடுத்துகின்றன இந்தக் கதையின் தொடக்கம்..நல்லாயிருக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கம் வாசிக்க கவர்ச்சியாக வாசகனை கவரும்போல் உள்ளது..உங்களது படைப்பா தமிழரசு..?அப்படியென்றால் பாராட்டுக்கள்.. யாழில் கதை எழுதுபவர்கள் காதல்க் கதைகளைத் தொடுவது குறைவு..நானும்தான்..ரமணிச்சந்திரன் வகைக் கதைகளை நினைவுபடுத்துகின்றன இந்தக் கதையின் தொடக்கம்..நல்லாயிருக்கு....

நன்றி சுபேஸ்,

இது எனது கன்னி படைப்புத்தான், இதன் தொடர்ச்சி வெகு விரைவில் .......

இந்த கதையை தொடர்வதக்கு உங்களின் பேராதரவு வேண்டும் தருவீர்கள் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P1010014.JPG

பாகம் 2

இனியா ..... இனியா

யாரம்மா .... போனில் ?

அது அச்சயா ....

அச்சயாவா ! நல்லா இருக்கின்றாளா ?

ஓம்... அம்மா அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது...

யார் மாப்பிளை ?

அதை நான் கேட்க்கவில்லை, ஆனால் .... வெளிநாட்டில் இருந்து வந்தவரத்தான் திருமணம் செய்திருக்கின்றாள்.....

அது சரி ... நேற்று உனக்கு ஒரு பொடியனின் போட்டோ காட்டினேன் பிடித்திருக்கோ ?

(இனியா வெட்கத்துடன் சிரிக்கிறாள் )

ஹி ..... ஹி அம்மா புடித்திருக்கு ஆனால் ....

என்ன பிள்ள .... அனா ... ஆவன்னா எண்டு உனக்கு வயதோ 26 , எல்லா பிள்ளைகளையும் கரை சேர்த்தாச்சு நீ தான் எனது கடைக்குட்டி என்ன .... செல்லம் சொல்லான ......

அம்மா முதலில் நீங்களும் அப்பாவும் சந்தோஷமாக இருக்கவேணும் இதுவே எனது முதல் ஆசை.

ஏன் .... ராசாத்தி இப்படி சொல்லுகிறாய் ... எதுக்கு ,

இல்லை அம்மா, அப்பா ஒரு ஹாட் பேசன் நீங்களோ டைபர்றிக் பேசன் என் சகோதரங்கள் எல்லாம் வெளிநாட்டில் இப்போது நானும் திருமணம் முடித்து போனால் உங்களை யார் கவனிப்பார்கள் !?

(அந்த நேரத்தில் இனியாவின் அப்பா)

பிள்ளா நீங்கள் கோவிலுக்கு போகவில்லையா ? அப்பா .... என் தெய்வங்களே நீங்கள் இருவரும்தான், (என்ன்று கூறிக்கொண்டு இருக்கையில் )

தாயார்: இப்ப இப்படித்தான் சொல்லுவீர்கள் பிறகு கணவரே கண்கண்ட தெய்வம் என, புகளுவீர்கள் .

அம்மா .... (ஆசையோடு தாயின் தோழை இறுக்க அணைத்து முத்தமிட்டாள் கன்னத்தில்)

ஆ .... அப்பா நீங்கள் முன்பு எழுதியதுபோல் இப்போதும் கதை, கவிதைகள் எழுதலாம்தானே ? உங்களுக்கும் பொழுது போக்காக இருக்கும்

தந்தை : அம்மாச்சி யாரம்மா என் கதையை ரசிப்பது ?

அப்பா நாங்கள் ரசிப்பதில்லையா ?

தந்தை : (தந்தையார் சிரிப்புடன் ) ஹி ... ஹி நீ இன்னும் சின்ன பிள்ளையாகவே இருக்கின்றாயாட...

ஏன் அப்பா .....?

இல்லையடா செல்லம் .... அப்பா கடந்த முப்பது வருடமாக இதையெல்லாம் நானே எழுதி நானே ரசித்தேன், உன் அம்மாவுக்கோ ரசிப்பதற்கு நேரம் இல்லை அவளுக்கு வீட்டு வேலையை பார்க்கவே நேரம் சரியாகி விடும் அப்படியிருந்தும் பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களை பல மேடை ஏற்றி எனக்கு மக்கள் மத்தியில் பெரும் புகழும் செல்வாக்கையும் தேடித்தந்தன இருந்தாலும் மேலும் என்னால் தொடர ..... (என்றவாறே சிந்திக்கின்றார் )

கவலைப்படாதேங்கோ அப்பா, நீங்கள் உங்களின் பெற்றோரை சிறு வயசில் இழந்ததினால் உங்கள் உறவு காரர் யாரும் உங்களை கை கொடுத்து முன்னிறுத்த வில்லை அப்படி அவர்கள் செய்திருந்தால் இன்றைக்கு ஒரு இன்னும் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளனாக திகழ்ந்து இருப்பீர்கள்

தாயார் : இனியா நாங்கள் ஒரு தடவை அச்சயா வீட்டுக்கு போவோமா .....?

அம்மா நாளைக்கே போகலாம். (என்று சொன்ன பொது )

work.6480711.1.flat,550x550,075,f.my-two-baby-dogs.jpg

தொலைபேசியின் சினுக்கள் போல் அவளின் நாய்க்குட்டிகளான ஜிம்மியும் சிங்காவும் வெளிவாசலில் சத்தமிட்டது .......

தொடரரும் ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து பேச்சு வழக்கில் "இனியா " தொடர்ந்து ..........வரவேண்டும். உங்கள்முயற்சிக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து பேச்சு வழக்கில் "இனியா " தொடர்ந்து ..........வரவேண்டும். உங்கள்முயற்சிக்கு பாராட்டுக்கள்

நிலாமதி நன்றி,

உங்களைப்போன்றோரின் பாராட்டுகளும் உச்சாக படுத்தலுமே என்னை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்குவிக்கும்.

தொடருங்கோ

புத்தன் நன்றி,

தொடர்ந்து வாசித்து கருத்தெளுதுங்கள்.

Link to comment
Share on other sites

நல்ல ஆரம்பம் தமிழரசு. தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம் தமிழரசு. தொடருங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்.

நன்றி ஈஸ்,

நான் தொடர்ந்து எழுதுவதற்கு உங்களின் ஆதரவு வேண்டும்.

Link to comment
Share on other sites

இனியாவின் தவிப்பு

533_stream.jpg

கதை ஓப்பினிங் நல்லாயிருக்கே தொடருங்கள்.

Link to comment
Share on other sites

உங்களிடம் இவ்வளவு திறமையா தமிழ் அரசு ??? விடாது தொடருங்கள் . அப்போது தான் சரளமான எழுத்து நடை வரும் :) :) :) ( பாகம் இரண்டு ) 1 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை ஓப்பினிங் நல்லாயிருக்கே தொடருங்கள்.

நன்றி சாத்திரி,

நீங்கள் பெரிய எழுத்தாளர் உங்களவுக்கு என்னால் எழுத முடியாது ஆனால் முயற்சிக்கின்றேன்.

உங்களிடம் இவ்வளவு திறமையா தமிழ் அரசு ??? விடாது தொடருங்கள் . அப்போது தான் சரளமான எழுத்து நடை வரும் :) :) :) ( பாகம் இரண்டு ) 1 .

நன்றி கோமகன்,

உங்களவுக்கு திறமை என்னிடம் இல்லை இது எனது முதலாவது கதை இதற்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே தொடரை தொடர்வதா ? இல்லை இடையில் விடுவதா ?? முடிவுக்கு வர முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

casa-de-mita-front-gate.jpg

பாகம் : 3

அம்மா ..... அம்மா , இங்கே ஓடிவாங்கோ .....யார் வந்திருக்கினம் என்று பாருங்கோ.....

தாயார் : என்ரபிள்ளை தினா இன்செருங்கோ பிள்ளை தினகரன் வந்திருக்கின்றான் என்ற பிள்ளை இளைச்சுபோட்டான் என்னய்யா திடீரென்று..... எங்கே என் மருமகள் பிள்ளைகள் ?

தினா : அம்மா நான் பிசினஸ் விசயமாக வந்தேன் அப்படியே உங்கள் எல்லோரையும் பார்க்க வேனும்போல் இருந்தது ...... (என்று சொன்னவாறே தந்தையின் கன்னங்களை மெதுவாக தடவி கண்களில் நீர் கசிய தந்தை தாய் இருவருக்கும் தெரியாமல் மெதுவாக கடைக்கண்களை துடிக்கின்றான்)

அண்ணா மிக நீண்டகாலத்துக்கு பிறகு நாங்கள் ஒன்றாக சாப்பிடப்போகின்றோம் என்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது !

005%20Rice%20and%20Curry.jpg

தினா : தங்கச்சி வாழ்க்கையில் சந்தோஷமானதும் அற்புதமானதுமாதுமான வாழ்க்கை அம்மா அப்பா சகோதரமென ஒன்றாய் சாப்பிட்டு கலகலப்பாக வாழும் வாழ்க்கையும் இதில் இருக்கும் சந்தோஷமும் வேறு எதிலும் கிடையாது .....

இப்ப உங்களுக்கு தெரியாது காலங்கள் செல்லச்செல்ல தெரியவரும் ........

இதற்க்கு காரணம் எங்கள் அம்மா அப்பாதான் ....

அண்ணா நீங்கள் வெளிநாடு போயிருந்தும் இந்த மண்வாசனையை மறக்கவில்லை .....

தினா : (கிண்டலாக) நாம் அரச பரம்பரை அல்லவா ...

அண்ணா ......(காதுகளை கெட்டியாக பிடித்து உலுப்பியவாறு)

அன்பினிலே அன்பினிலெ ஆலயம் கண்டெனே

அன்னங்களின் கைகளிலே ஜீவனும் நாந்தானே

பாசத்திலே வாசம் தரும் பூவனம் நீதானே

நெசத்திலே ராகம் தரும் வீனயும் நீதானே......

எனப்பாடி மகிழ்ந்து (துள்ளிக்குதித்தனர்)

தினா : இனியா,..... அம்மா அப்பாவை திடீர்ரென காணோம் ....

(ரகசியமாக ) அண்ணா இங்கே வாங்கோ என்ன இருவரும் மிகவும் சலிப்பாக கதைக்கினம் அப்படி என்னதான் ......?!

தாயார் : இன்செருங்கோ பிள்ளை இன்னும் கொஞ்ச நாள் கூட லீவில வந்திருந்தால் நல்லாயிருக்கும் .....

தந்தை : அவனுக்கு என்ன பிரச்னையோ! எல்லாப்பிள்ளைகளையும் வெளிநாடு அனுப்பி போட்டு நாங்கள் அனாதைகள் போல்தான் இருக்கவேணும் என்றவாறே ..

இசையால் இணைந்தோம் இதயம் கலந்தோம் ......

ஈர் உயிர் ஒன்றென்று நாமிருந்தோம் ......

என இந்தவரிகளை (கிண்டலாக ) உச்சரித்தார்,

தினா : ம் ... ஆகா .... ஓகோ ...செம பாசமில்லையா, இனியா ...கண்ணு படப்போகுது

செம காமடி என்ன ஒரு கெமிஸ்ரி சூப்பர் .....

இனியாவின் தொலைபேசியில் ஒலிக்கிறது ( சொட்ட சொட்ட நனைய வைத்தாய்

சொல்லாமல் கொதிக்க வைத்தாய்..

எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்..

கிட்ட தட்ட கரைய வைத்தாய்..)

தொடரும் .......

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு... தொடருங்கள்.:)

பாசங்களின் இனிமையான தவிப்பினை உணர்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையும் போல..........இடையிடயே பாடல்வரி ....நன்றாக் போகிறது தொடருங்கள்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு... தொடருங்கள். :)

பாசங்களின் இனிமையான தவிப்பினை உணர்கின்றேன்.

நன்றி கவிதை,

உங்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு தொடர்கின்றேன் .

இசையும் கதையும் போல..........இடையிடயே பாடல்வரி ....நன்றாக் போகிறது தொடருங்கள்..............

உங்களின் கருத்துக்களுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mango%20Tree.jpg

பாகம் 4

ஹலோ ... மாமா நான் புகழ் கதைக்கின்றேன் எப்படி இருக்கின்றீர்கள் ?

தந்தை : யார் புகழோ கதைக்கிறது ...

புகழ் : ஓம் மாமா, சுகமாக இருக்கிறியளோ ?

தந்தை : ஓம் ...ஓம் கொஞ்சம் இருங்கோ மாமி பக்கத்தில் இருக்கின்றாள் கொடுக்கின்றேன் .....

தாயார் : புகழ் சுகமாக இருக்கின்றீர்களா ?

புகழ் : ஓம் மாமி நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் ?

தாயார் : ... ம் ... சுகம்தான்

புகழ் : (நிறைந்த எதிர்பார்ப்பு கனவுகளுடன் ........’’விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழைக் காலம்

என் வாழ்வில் வருமா’’ என எண்ணங்களில் வரிகள் ஓடிக்கொண்டிருந்தது )

இனியா எங்கே .... எப்படி இருக்கின்றா ?

தாயார் : ஏன் நீங்கள் போட்டோ பார்க்கவில்லையோ ?

புகழ் : பார்த்தேன் , இனியாவுடன் ஒருதடவை கதைக்கலாமோ ....!?

தாயார் : இல்லைத்தம்பி முறைப்படி எல்லா சம்பிரதாயங்களையும் செய்தபின் கதைக்கலாம்தானே, ......

புகழ் : (நல்ல சென்டிமென்ட் மாமி ம் ....... நடக்கட்டும் நடக்கட்டும் என ..... மனதுக்குள் ... புழுங்குகின்றார் )

சரி ...மாமி திரும்ப போண்எடுக்கிறான் .

அம்மா இன்றைக்கு பின்னேரம் அண்ணா வெளிக்கிடுகிறார்

தாயார் : நீ .. என்ன சொல்ல போகிறாய் என்று எனக்கு தெரியும் உனது தவிப்பும் எனக்கு விளங்கும்,

அப்படியொன்றும் இல்லை , அண்ணாவுடம் நிறைய மாற்றங்கள் தெரிகின்றது .....!

தாயார் : அதுவும் எனக்கு தெரிகிறது, ம் .... கடவுளே என்பிள்ளை சுகமாகச்சென்று மருமகள் பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருக்கோணும்

தினா : அம்மா .... அம்மா, நான் உங்களின் மடியில் சிறிது நேரம் தூங்கலாமோ ? எனக்கு தூங்க வேணும் போல இருக்குது (அவ்வாறே இருந்தபடி.....

'காலையில் தினமும் கண்

விழித்தால் நான் கைதொழும்

தேவதை அம்மா அன்பென்றாலே

அம்மா என் தாய்போல்

ஆகிடுமா குழு: அம்மா….. இமை

போல் இரவும் பகலும் எனை

காத்த அன்னையே உனது அன்பு

பார்த்த பின்பு அதைவிட

வானம் பூமி யாவும் சிறியது')

எனக்கு மன கஸ்ரம் வரும்போதெல்லாம் உங்களிடம் கதைக்க வேண்டும் போல் தோறும், அப்படியிருந்தும் சில தடவை வாய் விட்டு தனிமையில் கதைத்திருக்கின்றேன்.

அது ஏன் அம்மா ....?

தாயார் : என்ரயப்பு தினா .... ஏன் இப்படி ? .....

தினா : ( தாயாரின் கைகளை புடித்தபடி) இந்தக்கைதானே எங்களை கஸ்ரப்பட்டு வளர்த்தது எள்ளு பா இடித்து சாப்பாடு செய்து இதுமாட்டுமோ என்னும் எவ்வளவோ சொல்லலாம், ....

ஏன் ... அப்பா மட்டும் சும்மா இருந்தாரா ...? எங்களை வளர்ப்பதற்கு கடையில் பட்ட கஸ்ரம் எவ்வளவோ சொல்லிக்கொண்டிருக்கலாம் என்னதான் இருந்தாலும் உங்களுக்கு ‘நிகர்’ யாரும் இல்லை.

அண்ணா வான் வந்துவிட்டது ...

தினா : சரி நான் வெளிகிடப்போகின்றேன் ....

தாயார் : சரி ஐயா பார்த்து போட்டுவாங்கோ....

தந்தை : பிள்ளை தினகரன் (ஏக்கத்துடன் கூப்பிடுகிறார்)

தினா : அ .... அப்பா ....சொல்லுங்கோ...

தந்தை : அப்பு .. நான் ஒன்று கேட்பேன் பெசமாட்டியோ ஐயா ...

தினா : என்ன அப்பா ஏன் தயக்கம் (என கேட்டவாறே அப்பாவின் தோள்களை அணைத்தவாறு ) சொல்லுங்கோ ....

ஒரு வேளை ..... எனக்கு ..ஏதாவது நடந்தால் வருவியோ அப்பு ,....

தினா : (கண்களின் நீர் கசிய தேகம் குலுங்க அப்பாவுக்கு பக்கத்தில் நின்ற அம்மாவின் கையை பிடித்தவாறே தன்னை கட்டுப்படுத்த முடியாமல் விம்மி .... விம்மி அழுகிறான் )

தாயார் : வெளிக்கிடும் போது அழக்கூடாது , இனியா ... தண்ணீர் கொண்டுவாம்மா,

(தண்ணீரை எடுத்து கொண்டுவந்து அண்ணனிடம் கொடுக்கிறார் )

தாயார் : குடியப்பு .... சரி கவலைப்படாதே போயிட்டுவாப்பு,

தினா : சரி அப்பா .....அம்மா... தங்கச்சி போட்டு வருகிறேன் (என்று சொன்னவாறே கையை அசைத்து வானை நோக்கி செல்கிறார் ).

1291017676_142373257_4-TOYOTA-HIACE-GRANDIA-Vehicles-1291017676.jpg

தொடரும் ........

Link to comment
Share on other sites

நான் ஒரு பாதையென்றால் , நீங்கள் வேறு ஒரு பாதை நன்றாக உள்ளது . தொடர்ந்து எழுதுங்கள் . அப்பொழுது தான் சரளமான எழுத்து நடைவரும் . வாழ்த்துக்கள் தமிழரசு :):):) 2 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு குளிர்ச்சியாய் வாயூறும் மாங்காய் .......

கண் கலங்கும் .....தாய் தந்தைப்பாசம்....அழகான நினவு மீட்டல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு பாதையென்றால் , நீங்கள் வேறு ஒரு பாதை நன்றாக உள்ளது . தொடர்ந்து எழுதுங்கள் . அப்பொழுது தான் சரளமான எழுத்து நடைவரும் . வாழ்த்துக்கள் தமிழரசு :):):) 2 .

தொடர்ந்தும் நான் கதை எழுத ........ ஊக்கம் அளிக்கும் உங்களுக்கு நன்றிகள்.

கண்ணுக்கு குளிர்ச்சியாய் வாயூறும் மாங்காய் .......

கண் கலங்கும் .....தாய் தந்தைப்பாசம்....அழகான நினவு மீட்டல்

தொடர்ந்தும் நான் கதை எழுத ...... ஊக்கம் அளிக்கும் உங்களுக்கு நன்றிகள்

இது முற்று முழுதான சமூகக்கதை இதில் நான் பாசத்துக்கு முன்னுரிமை கொடுக்க இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MG_4248-1-595x396.jpg

பாகம் 5

சிலமாதங்களின் பின் இனியாவிற்க்கும் புகழுக்கும் பெரியவர்களினால் நிச்சயம் செய்யப்படுகின்றது, ஊர் சுற்றம் சூழ கலகப்பாக முடிந்ததின் பின் உறவுகள் எல்லோரும் தங்களின் வீடு திரும்பினர் அச்சயா மட்டும் இருக்கின்றாள்,

அச்சயாவும் இனியாவும் கிணத்தடியில் இருந்தவாறே மனதுவிட்டு பேச தொடங்கினர் அருகில் இவளுக்கு பிடித்த ஜீவன் களனா லவ் பேட்ஸ் நாய்க்குட்டி புறாக்கள் கோழிகள் இவையெல்லாம் இவளின் கதையை நோக்கி செவி சாய்த்தவாறே தங்களுக்குள் பேசி சிரிக்கின்றன ....

மாசிமாத லேசான பனித் தூறல்களோ இவள் வீட்டு பூந்தோட்டத்தில் உள்ள பூக்களின் முத்தமிட்டு கதை பேசி பூத்து குலுங்கி சிரிக்கின்றன ........

4949417141_97d4cec5ec.jpg

அச்சயா அன்றைக்கு நீங்கள் என்னுடன் பேசும்போது ஏன் ஒருமாதிரி பேசினாய் உனது திருமணத்தில் ஏதாவது குழப்பமா? உனது கணவர் எப்படி ? பிடித்திருக்கா ?

அச்சயா : நீ கேட்பதற்கு பதில் என்னால் சொல்ல முடியும் சற்று சங்கடமாக இருக்கு இருந்தாலும் எனது உயிர் தோழிக்கு சொல்லாமல் விடுவேனா ? ..... எனது கணவர் மிகவும் நல்லவர் இருந்தாலும் அவருக்கு உறவுகள் மீது அளவுகடந்த பாசம் அது தப்பில்லை பாசம் என்ற போர்வையில் ஏமாளியாக இருக்கின்றார்.

அப்படி என்ன நடந்தது (கேட்டவாறே அவள் அருகில் செல்கின்றாள்)

அச்சயா : ஏன் இனியா என்னை உனக்கு நல்லா தெரியும் நான் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை எனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இல்லை ... இருந்தும் திருமணமான பின்பு மாமி வீட்டுக்கு சென்ற அங்கு தங்கியபோது இரவு எனது கணவர் தனது நபர்களை சந்திப்பதற்காக வெளியில் சென்றிருந்தார் அவ்வேளையில் இரவு போசத்தின் பின் எல்லோரும் உறங்குவதற்காக படுக்கை அறைகளுக்கு சென்றனர் அதில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது ...... (அழுகையுடன் ) ஹோல்லுக்குள் தனிமையில் இருந்தேன், அப்போது எனது கணவர் வந்தார் அவரால் எதுவும் பேசமுடியவில்லை என்னை ஒரே ஒருவார்த்தை மட்டும் கேட்டார் .

அச்சயா முதலில் மன்னித்துகொள்ளு ..... எனக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது என்னை நீங்கள் நம்புகின்றீர்களா ? என்று கேட்டார் ......

அதற்க்கு நான் சொன்னேன் என்னைப்பொறுத்தவரையில் இதுதான் வாழ்க்கை அல்ல நான் உங்களை நம்புகின்றேன் என கூறினேன் இதுமட்டுமல்ல என்னும் எவ்வளவோ சொல்லலாம் .....

சரி...... எனது கவலையை விடு ...... உனக்கு நாளை பிறந்தநாள் ஞாபகம் இருக்கிறதோ ? நாளைக்கு என்ன ஸ்பெசல் ?

வழமையானதுதான் என்ன ... இந்த முறை ஒருவர் புதிதாக இணைந்துள்ளார் அவர் யார் என்று தெரியும்தானே ....

அச்சயா : ம் .... ஓகே .... நாளை பார்ப்போம் என்னதான் ஸ்பெசல் என்று ....சொல்லும் போதே ....

(இனியா வெட்கத்துடன் ) வா அச்சயா ரேடியோ கேட்போம் .......

(ரேடியோவில்)

மல்லிகையே மல்லிகையே

மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு

தாமரையே தாமரையே

காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு

உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா

மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா

அவன் முகவரி சொல்லடி .....

kuruvi_05022009_2.jpg

தொடரும் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள் :D

Link to comment
Share on other sites

மாமா, மாமி , மச்சிமாரைப் பத்தியும் கொஞ்சம் எழுதுங்கோவன்.

கதை இனிமையாக இருக்கு. இனி வருவது என்ன என்ற தவிப்பில் நான் மச்சான்.

எழுதுடா மச்சி உண்மையில நல்லா இருக்கு.

குடும்பத்திலயும் இனத்திலயும் பாசம் குறைஞ்சதாலதான் இப்ப நாம சிரிக்கிறதுக்கும் யொசிக்கவேண்டி இருக்குது.

பாசத்தை உணர்த்துர மாதிரி இன்னும் நல்லா எழுதுடா மச்சி.

டா பொட்டுக் கூப்பிட்டதுக்கு தப்பா நினைச்சுக் கொள்ளாதையுங்கோ மச்சி. அதுவும் ஒரு பாசத்திலதான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு

தாய் தந்தை அண்ணன் தம்பி அக்கா தங்கை

பாசங்கள் மிகவும் ஆழமானவை.

அதையே தொட்டு எழுவதால் உங்களின் படைப்பிற்கு

இன்னும் நிறைய வரவேற்புக் கிடைக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆர்வத்துக்கு என் பாராட்டுக்கள் :D

நன்றி நிலாமதி,

தொடர்ந்து கருத்துக்கள் எழுதுங்கள் .....

மாமா, மாமி , மச்சிமாரைப் பத்தியும் கொஞ்சம் எழுதுங்கோவன்.

கதை இனிமையாக இருக்கு. இனி வருவது என்ன என்ற தவிப்பில் நான் மச்சான்.

எழுதுடா மச்சி உண்மையில நல்லா இருக்கு.

குடும்பத்திலயும் இனத்திலயும் பாசம் குறைஞ்சதாலதான் இப்ப நாம சிரிக்கிறதுக்கும் யொசிக்கவேண்டி இருக்குது.

பாசத்தை உணர்த்துர மாதிரி இன்னும் நல்லா எழுதுடா மச்சி.

டா பொட்டுக் கூப்பிட்டதுக்கு தப்பா நினைச்சுக் கொள்ளாதையுங்கோ மச்சி. அதுவும் ஒரு பாசத்திலதான். :)

நன்றி மச்சான்,

உங்களின் எரிபாப்பு நிச்சயம் நிறைவேறும் மச்சான் மச்சாள் மாமி மாமா என்று எல்லோரும் வருவார்கள் கதை பற்றி விமர்சனம் எழுதுங்கள் மச்சான்.

தமிழரசு

தாய் தந்தை அண்ணன் தம்பி அக்கா தங்கை

பாசங்கள் மிகவும் ஆழமானவை.

அதையே தொட்டு எழுவதால் உங்களின் படைப்பிற்கு

இன்னும் நிறைய வரவேற்புக் கிடைக்கும்.

தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி வாத்தியார்,

உங்களைப்போன்றோரின் கருத்துக்கள் எனக்கு உற்சாக பானம் அது என்னும் கதையை மெருகேற்றும் என்றால் அது மிகையாகாது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.