Jump to content

பழைய இடத்தில் கிளிநொச்சிப் பேரூந்து நிலையத்தை அமைப்பதே பொருத்தமானது!


Recommended Posts

 

Kili%20Bus1_CI.jpg

 

கிளிநொச்சி போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரம். பல்வேறு சவால்களைத் தாண்டி இப்போது வளர்ச்சி பெற்றுவருகிறது. கிளிநொச்சி நகரத்தில் பேரூந்து நிலையம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலமையே தொடர்கிறது. பொருத்தமான இடமின்மையாலும் போதிய இடமின்மையாலும் ஒரு பேரூந்து நிலையம் இல்லை என்பதுவே கிளிநொச்சியின் பெரும் பிரச்சினையாக உள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் உள்ள வீதியின் அருகான பகுதியே தற்போது பேரூந்துநிலையம் இயங்குகிறது. வீதியின் இரண்டு மருங்கிலுமே தனியார் பேரூந்துகள் தரித்து நிற்கின்றன. குறிப்பாக மழை காலங்களில் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்கின்றனர். நிழற்கூடாரங்கள் எதுவுமற்ற அந்த வீதியில் மரங்களின் கீழாக நின்று மழையில் நனைந்தவாறே பேரூந்தில் ஏறுகின்றனர்.

தற்போதுள்ள பேரூந்து நிலையத்தில் மலசலகூடம் இன்றி பெண்களும் குழந்தைகளும் பெரும் அல்லல்படுகின்றனர். வட பிராந்திய போக்குவரத்து சபைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பழைய பேரூந்துகள் தரித்து நிற்கின்றனவே தவிர அங்கு மக்கள் தரித்திருக்க இடம் இல்லை. இளைப்பாறவோ, மலசல தேவைகளை நிவர்த்தி செய்யவோ இடமில்லாமல் மக்கள் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

கிளிநொச்சியிலிருந்து முழங்காவில், பூநகரி, உருத்திரபுரம், வட்டக்கச்சி போன்ற கிளிநொச்சியின் தூர இடங்களுக்கான அரிதான பேரூந்துகளில் பயணிப்பவர்கள் மாத்திரமின்றி கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி என நீண்ட தூரங்களுக்குச் செல்பவர்களும் இந்த நிலையத்திற்கு வருகின்றனர். பேரூந்து நிலையம் ஒன்று இல்லாமையினால் ஏ-9 வீதி ஓரமாகவே பயணிகள் நிற்கின்றனர்.

மீள்குடியேற்றம் தொடங்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இன்னமும் பேரூந்துநிலையம் ஒன்றை நிரந்ரதரமாக அமைக்க முடியாத நிலமையே காணப்படுகிறது. கிளிநொச்சி நகரத்தில் தொடரும் பேரூந்து நிலையப் பிரச்சினைக்கு முடிவாக கிளிநொச்சியைச் சேர்ந்த கல்விமான்கள், முன்னாள் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஒரு யோசiயை முன் வைக்கின்றனர்.

விரைவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு செல்லவுள்ளது. அரச அதிபர் அலுவலகம் அங்கு சென்றவுடன் தற்போது கிளிநொச்சி பிரதேச சபை அலுவலகம் இயங்கும் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து பிரதேச சபை அலுவலகத்தை பழைய அரச அதிபர் இல்லத்திற்கு மாற்றிவிட்டு பிரதேச சபை அலுவலகம் இயங்கிய பழைய பேரூந்து நிலையத்திற்கே மீண்டும் பேரூந்து நிலையத்தை கொண்டு செல்லுவதே பல்வேறு வகையிலும் பொருத்தமாகவும் சிறப்பாகவும் அமையுமென கருதுகின்றனர்.

கிளிநொச்சியின் பழைய பேரூந்து நிலையமே கிளிநொச்சி நகர அமைப்புக்கு உரியாகவும் பொருத்தமாகவும் காணப்படுகிறது. அத்துடன் அதற்கு அருகில் புகையிரத நிலையம் அரச அதிபர் அலுவலகம், சர்வதேச விளையாட்டு அரங்கு, பிரதேச சபை, பிரதேச செயலாளர் அலுவலகம், நூலகம், பொலிஸ்நிலையம் என்று அனைத்து முக்கிய அலுவலங்களும் அமைந்தள்ளன. இதுவே பேரூந்து நிலையத்தை அமைக்கப் உகந்த இடம் என்று பலரும் கருதுகின்றனர். 

கிளிநொச்சிக்கு வரும் அல்லது கிளிநொச்சியிலிருந்து செல்லும் எந்தவொரு பேரூந்தும் பொதுச்சந்தையை கடந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் செல்லுகின்றது. கிளிநொச்சியின் அனைத்து அலுவலகங்களும் ஏ-9 பாதையை மையப்படுத்தியே உள்ளது. தற்போது சந்தையை மையப்படுத்தியே பொதுச்சந்தையின் முன்பாக பேரூந்துகள் தரிக்கின்றன. பழைய பேரூந்து நிலையத்தில் பேரூந்து நிலையம் செயற்பட்டால் அங்கு வரும் பேரூந்துகளும் அங்கிருந்து புறப்படும் பேரூந்துகளும் கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பொது வைத்தியசாலையைக் கடந்தே செல்லும்.

வளர்ச்சி பெற்றுவரும் கிளிநொச்சி நகரத்தில் பொருத்தமான வகையில் பேரூந்து நிலையத்தை அமைப்பது இன்னும் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கு இன்னமும் உறுதுணையாய் அமையும் என்று புத்திசீவிகள் கருதுகின்றனர். எதிர்காலத்தின் வடக்கு மாகாணத்தின் சிறந்த நகரமாக கிளிநொச்சி வளர்ச்சி பெறும் எனக் கருதப்படுகிறது. அந்நிலையில் பழைய பேரூந்து நிலைய இடத்திலேயே மீண்டும் பேரூந்து நிலையத்தைக் கொண்டு செல்வதும் அந்த வளர்ச்சிக்கு உதவும் என்றும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்விமான்கள் கூறுகின்றனர்.

தற்போது பொதுநூலகம் இயங்கிவரும் இடமானது போதிய இடமற்றதாக காணப்படுகிறது. நகரத்தை அண்டிய இடத்தில் பொதுநூலகம் இயங்கினால் அது மாவட்டத்தின் பலதரப்பட்ட வாகசப் பயனாளர்களுக்கும் உகந்ததாக அமையும். அத்துடன் அங்குள்ள கட்டிட வசதிகளின் மூலம் பல்வேறு அரங்குகளை நிறுவி கலைச்செயற்பாடுகளைளயும் முனனெடுக்க முடியும். அதற்கான போதுமான வசதி தற்போதைய அரச அதிபர் அலுவலகத்தில் காணப்படுகிறது.

எதிர்வரும் 22ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழ கூட்டம் நடைபெற இருக்கின்றது. அனைத்துத் தரப்பினரும் அரசியல், கட்சி பேதமின்றி இந்த வியடத்தை ஒரு தீர்மானமாகக் கொண்டு வந்து கிளிநொச்சி நகரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் கிளிநொச்சி மாவட்ட கல்விமான்கள், அரச உயர் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105839/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.