Jump to content

அன்னை பூபதியின் 26 வது ஆண்டு நினைவுதினம் இன்று


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

fb0d49ab909c168732a7e273e1911012.jpg

இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக மட்டக்களப்பில் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகத் திருவிளக்கு அன்னை பூபதியின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் உலகெங்கும் அனுஸ்டிக்கப்படுகின்றது.
 
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் அன்னை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்தவர் தான் அன்னம்மா என்கிற அன்னை பூபதி.
 
இவர் இந்திய அமைதிப் படையினர் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரிடுவதைக் கைவிட்டு உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,  தமிழீழ விடுதலை புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். என்கிற இரு கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 19 மார்ச் 1988 இல் ஆரம்பித்தார்.
 
முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார்.
 
பத்துப்பிள்ளைகளுக்கு தாயான இவர் நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
 
இருப்பினும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை இந்த நிலையில் உண்ணாவிரதம் ஆரம்பித்து சரியாக ஒரு மாதத்தின் பின் 19.ஏப்ரல்.1988 அன்று உயிர் நீத்தார். அன்னை பூபதி உயிரிழந்த அந்த நாள் தான் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்று நினைவு கூரப்படுகின்றது.
 
ஒரு சாதாரண தமிழ்க் குடும்பப் பெண்ணாக இருந்த அன்னை பூபதி உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை தாயகத்துக்காக அர்ப்பணித்த பிற்பாடு தான் அதிகளவு தமிழ்ப் பெண்கள் தமிழீழ மண்மீட்புப் போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

 

http://onlineuthayan.com/News_More.php?id=243822891120791012

Link to comment
Share on other sites

தாயை  மறக்காமல்  வருங்கால எம் பிள்ளைகளும் இவர் யார் என்று கேட்கும் போது  எப்போதும் நினைவில் நிற்கும் வகையில்   நோர்வேயில் உள்ள தமிழ்க்கல்விக்கூடங்களுக்கு   அன்னைபூபதி  தமிழ்க்கலைக்கூடம்  என்று பெயர் சூட்டப்பட்டு  ஒவ்வொரு தமிழ்கற்க செல்லும் பிள்ளையும்   தாயின்  பெயரை  உச்சரிக்கும் வண்ணம்  நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

அன்னை பூபதி அவர்களின் உயிர்த்தியாகம் போற்றுதலுக்கு உரியது. போலி காந்திகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்ட இரு நிகழ்வுகளுள் ஒன்று இது. நினைவு அகவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பூபதிக்கு வீர வணக்கங்கள்!

 

ஈழத்தமிழன் இருக்கும் வரை, உங்கள் நினைவும் எங்களுடன் பயணிக்கும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.