Jump to content

ஊனத்தின் வலி....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊனத்தின் வலியறியா மானிடா
ஓரே ஒரு பொழுது உன்
காலையோ கையையோ
கட்டிப் போட்டு கிடந்து
பார் .
ஊனத்தின் வலியறிவாய்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊனத்தின் வலியறியா மானிடா

ஓரே ஒரு பொழுது உன்

காலையோ கையையோ

கட்டிப் போட்டு கிடந்து

பார் .

ஊனத்தின் லலியறிலாய்....

 

உங்கள் தலைப்பில் த் என்ற எழுத்து  ஒன்று காணாமல் போய் விட்டது யாயினி

 

கூல் கூல்     இப்ப நீங்க எப்படி யிருக்கிறீங்கள் ஒன்றும் அப்சற் இல்லை தானே :)

ஊனம் என்பது ஒருவர் இறந்த பின்பு அந்த உடலில் இருந்து வழிவதுதான் ஊனம் ஆகும்

அதை  இறந்த உடல் அறியாது  என்பது எனது கருத்து

 

எழுத்து பிழை இல்லாமல் எழுத பழகி கருத்தாட பழகிகொள்ளுங்கள் :)

 

எங்கேயோ கேட்ட ஞாபகம்  வருதா யாயினி :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டச்சு செய்யும் எழுத்தில் தவறு நிகழலாம்
யாயினியின் எழுதி உள்ள கருப் பொருள் நிதர்சனமானது.
தொடர்ந்தும் எழுதுங்கள் யாயினி...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்த முனிவருக்கும் சசியண்ணாவுக்கும் நன்றிகள்....தட்டச்சு செய்யும் போது ஏற்பட்ட பிழை தான்..தவறு தான்..இனி வரும் காலத்தில் கவனத்தில் கொள்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊனத்தின் வலியறியா மானிடா

ஓரே ஒரு பொழுது உன்

காலையோ கையையோ

கட்டிப் போட்டு கிடந்து

பார் .

ஊனத்தின் வலியறிவாய்....

 

எந்த  ஒரு வலியையும்

எம்மைத்தவிர வேறொருவர் உணரமுடியாது

 

எந்த ஒரு எமது  வேலையையும் எம்மைப்போல்

இன்னொருவர் செய்யமாட்டார்..

 

காரணம்

அவரவருக்கென்று வாழ்க்கையுள்ளது

அவரவருக்கென்று பாதையுள்ளது

அதன் அளவும்

கொள்ளளவும் குறுகியவை

அதற்குள் தான் ஒவ்வொருவரும் சுழலமுடியும்

 

இன்னொன்றை  கூட்டுவதற்கு

நாம்  மற்றதொன்றை துறந்தாகணும்..

 

இது வாழ்க்கை

அரசியல்

ஏன் எமது  போராட்டம்  எல்லாவற்றிற்கும் சரிவரும்

எல்லாத்தமிழரும் ஒத்துழைத்திருந்தால்

தலைவரால் ரொம்ப இலகுவாக போராட்டத்தை வென்றிருக்கமுடியும்

ஆனால் நடந்ததா?

 

 

ஏன்

இன்று எல்லா புலம் பெயர் மக்களும்  கைகோர்த்தால்

தாயக  மக்களின் வறுமையை  இல்லாதொழிக்கமுடியும்

முடிந்ததா??

 

போன கிழமையும்

எனது மக்களுடன்  இது பற்றி  பேசிக்கொண்டிருந்தேன்...

ஏதோ ஒரு நிலையில்

உங்களது ஒரு விரலை வெட்டிவிட்டு வாழ்ந்து பாருங்கள்

அதன் அருமை புரியும் என்றேன்...

 

இருக்கும்வரை

அதனருமை  யாருக்கு தெரிகிறது

இல்லாதவனை புரிந்து கொள்ள......?????????

 

ஏதோ  எழுதணும்  போல தோன்றிச்சு..

வாழ்க  வளமுடன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி விசுகு அண்ணா.... :)நான் அவ்வளவாக ஒன்றும் எழுதுவதில்லை....சில நேரங்களில் என்னையும் மீறி எழுத வேண்டி வந்து விடுகிறது...  தாங்கள் விரும்பிய ஒன்றை அடைந்து விட்டால்,இல்லை அதனை பெற்றே ஆக வேண்டும் என்ற ஆவேசத்தில் மற்றவர்களை  தாக்க எந்தவகை ஆயுதத்தையும் தூக்குவார்கள் இல்லயா......... :(  அதனால் ஏற்பட்ட மன பாதிப்பினால் இதை கிறுக்க வேண்டி வந்தது.. :)

Link to comment
Share on other sites

ஊனம்....என்பது ஒரு குறைபாடே இல்லை. அது ஒரு எண்ணப்பாடு மட்டும்தான். பறக்க ஆசையுள்ள மனிதனிற்கு "சிறகுகள் இல்லையே" என்ற எண்ணமே ஊனம் ஆகிறது. ஊனம் என்பது எம் மனதிலும் அதன் எண்ணத்திலுந்தான் உள்ளது.

ஆனாலும்... தங்களின் வரிகளிலுள்ள வலிகளையும் புரிந்துகொள்ள முடிகிறது சகோதரி!

 

"தன்னம்பிக்கை" என்ற ஒன்றுமட்டுமே 'ஊனம்' என்ற ஒன்றை இல்லாமற் செய்யும் வலிமைமிக்கது. :)

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊனம் என்பது நிஐமாக ஊனமுற்றவர்களில் இல்லை, அது மற்றவரிகளில் அடிமனதில் ஆழமாக ஊறியுள்ளது. அவர்கள் முன்னேற வெளிகிட்டாலும் எமது சமுதாயம் மட்டம்தட்டியே அமர்த்திவிடும். தொடருங்கள் யாயினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊனம் என்பது நிஐமாக ஊனமுற்றவர்களில் இல்லை, அது மற்றவரிகளில் அடிமனதில் ஆழமாக ஊறியுள்ளது. அவர்கள் முன்னேற வெளிகிட்டாலும் எமது சமுதாயம் மட்டம்தட்டியே அமர்த்திவிடும். தொடருங்கள் யாயினி

 

சொல்ல வேண்டியதை சுருக்கமாக நீங்களே சொல்லிட்டீங்கள் உடையார் அண்ணா...மிக்க நன்றி...எல்லாருக்கும் எல்லார் வலிகளும் தெரியாது,புரியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் வலிகளின்
பெறுமதி அறிவேன்

கண்ணே!
சிறகெனச் சொல்லி
சிலுவை தந்து
சுமக்கச் சொல்வர்!
முத்துநகை சிதறிவிழ
முள்முடி சூடி
அழகு பார்ப்பர்!
கருணையுடன்

கைகளில் ஆணிகள்

கடாவிக் களிப்புறுவர்!
எட்டி நின்று
எட்டி தந்து
குடிக்கச் சொல்வர்!
ஏனெனில்
கடவுளின் மகள் நீ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் வலிகளின்

பெறுமதி அறிவேன்

கண்ணே!

சிறகெனச் சொல்லி

சிலுவை தந்து

சுமக்கச் சொல்வர்!

முத்துநகை சிதறிவிழ

முள்முடி சூடி

அழகு பார்ப்பர்!

கருணையுடன்

கைகளில் ஆணிகள்

கடாவிக் களிப்புறுவர்!

எட்டி நின்று

எட்டி தந்து

குடிக்கச் சொல்வர்!

ஏனெனில்

கடவுளின் மகள் நீ!

 

உங்கள் புரிதலுக்கும் கவி வரிகளுக்கும் மிக்க நன்றி வாலி..

 

ஊனத்தின் வலி....

             வலிக்கிறது

 

 

மனிதர்களை மனிதர்களாக நினைப்பவர்களுக்கு மட்டுமே எதன் வலியையும் தங்கள் வலிகளாக உணர்ந்து கொள்ள முடியும்..வேறை என்ன கறுப்பியண்ணா..உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வரிகளானாலும் நன்றாக யோசிக்க வைக்கும் வரிகள்.
ஊனம் என்பது ஊக்கம் இல்லாதவனுக்கே. அங்கம் இழந்தவர்கள் தான்

அதிக ஓர்மத்துடன் வாழ்வை வெல்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் மற்றும் ஈசன் உங்கள் இருவருக்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

ஊனத்தின் வலியறியா மானிடா

ஓரே ஒரு பொழுது உன்

காலையோ கையையோ

கட்டிப் போட்டு கிடந்து

பார் .

ஊனத்தின் வலியறிவாய்....

 

சிந்திக்க தோணவில்லை ...

ஊனம் இல்லாமலே

பிச்சை எடுப்பவர்களுக்கும்,

மற்றவரை பார்த்து

பரிகாசம் பேசுவோர்க்கும்

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

கொலை செய்து வாழ்பவர்களுக்கும்

கொள்ளை அடித்து வாழ்பவர்களுக்கும்

கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும்

மதவெறிகொண்ட மதவாதிகளுக்கும்

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

பல ஆயிரம் தலைமுறைகளாக

அரும்பாடுபட்டு உருவாக்கித்தந்த

பண்பாட்டையும், கலாசாரத்தையும்

நாகரீகம் என்ற மோகத்தால்

ஒரே ஒரு நுற்றாண்டில்

மின்னலைவிட வேகமாக அழித்துவிட்டோமே

நமக்கெல்லாம் தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

பேரும், புகழும் கிடைக்குமென்றால்

எதை வேண்டுமானாலும்

விட்டுக்கொடுக்கிறார்கள்,

பணம் கிடைக்குமென்றால்

அந்த பேரையும், புகழையும்

விட்டுக்கொடுக்கும் மனிதர்களுக்கு

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.-பிறகு

எப்படி உருப்படும் இந்த உலகம்!

Link to comment
Share on other sites

வெளிநாட்டவர்கள் இப்படியானோரை ஒதுக்கி விடுவதில்லை. சக மனிதர்கள் போலே நடத்துவார்கள்.

எம் சமூகத்தை பொறுத்தவரை ஒரு சிறு பகுதி மக்களை தவிர ஏனைய மக்கள் மேலே உடையார் அண்ணா கூறியது போல் புறக்கணிப்பதும் மட்டம் தட்டுவதும் என உள்ளார்கள். அதற்கெல்லாம் சோர்ந்து போகாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் போராட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

எமக்கு ஏதும் துன்பம் வந்தால் முள்ளிவாய்க்காலில் அகப்பட்ட மக்களை நினைக்கும்படியும் அவர்களுடன் ஒப்பிடுகையில் எமக்கு ஏற்படும் துன்பங்கள் எல்லாம் துன்பங்கள் அல்ல என தோன்றும் எனவும் யாழ் இணையத்தில் ஒரு அண்ணா அடிக்கடி கூறுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க தோணவில்லை ...

ஊனம் இல்லாமலே

பிச்சை எடுப்பவர்களுக்கும்,

மற்றவரை பார்த்து

பரிகாசம் பேசுவோர்க்கும்

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

கொலை செய்து வாழ்பவர்களுக்கும்

கொள்ளை அடித்து வாழ்பவர்களுக்கும்

கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும்

மதவெறிகொண்ட மதவாதிகளுக்கும்

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

பல ஆயிரம் தலைமுறைகளாக

அரும்பாடுபட்டு உருவாக்கித்தந்த

பண்பாட்டையும், கலாசாரத்தையும்

நாகரீகம் என்ற மோகத்தால்

ஒரே ஒரு நுற்றாண்டில்

மின்னலைவிட வேகமாக அழித்துவிட்டோமே

நமக்கெல்லாம் தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.

பேரும், புகழும் கிடைக்குமென்றால்

எதை வேண்டுமானாலும்

விட்டுக்கொடுக்கிறார்கள்,

பணம் கிடைக்குமென்றால்

அந்த பேரையும், புகழையும்

விட்டுக்கொடுக்கும் மனிதர்களுக்கு

தோன்றவில்லை

என்ன இந்த வாழ்க்கை என்று.-பிறகு

எப்படி உருப்படும் இந்த உலகம்!

 

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாறன்..

Link to comment
Share on other sites

ஆதங்க கவி அக்கா எல்லோரும் எதோ ஒரு விதத்தில் ஊனமா தான் இருக்கிறர்கள் தன்னம்பிக்கை தளராமல் இருந்தால் போதும் . :(

Link to comment
Share on other sites

படித்ததில் பிடித்த கவிதை............

 

5.jpg

 

 

ஊனம் இவரை பார்த்து
ஊமையாய் போனது!
கால்கள் இல்லையென்றாலும்,
இருக் கைகள், கைக் கொடுக்கவே
தன்னம்பிக்கை தலையாட்டுகிறது!

இவரோடு வாழவேண்டும்
இருக்கும் வரை இருக்க வேண்டும்
என்று நம்பிக்கை அடம்பிடிக்கிறது!

கண்ணீரோடும் , வாழ்க்கையோடும்,
இவர் போட்ட எதிர் நிச்சல் கண்டு,
ஊனம் ஓடி ஒழிய
குறித்த நாட்கள் கூட
கூனி குறுகிப்போனது!

 

      -x-x-x-x-x-

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.