Jump to content

தீபம் தொலைக்காட்சியில் புறக்கணி சிறிலங்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சியில் நடந்த அந்த உரையாடலில் சிறீலங்கா சிங்கள அரசு ஆதரவுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக லண்டனில் வசிக்கும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்.. குறிப்பிடும் கருத்து.. சிறீலங்கா பொருட்களை சேவைகளை விளையாட்டை புறக்கணிப்பதால் சிறீலங்காவிற்கு எதுவும் பாதிப்பில்லை. சிறீலங்காவிற்கு இந்திய சீன சந்தைகள் திறந்து கிடக்கின்றனவாம்..??!

இந்திய சீன சந்தைகள் சிறீலங்காவிற்கு திறந்திருப்பதாகத் தெரியவில்லை. சிறீலங்காவின் இந்தியாவுக்கான ஏற்றுமதியை விட சீனாவுக்கான ஏற்றுமதியை விட இறக்குமதியே அதிகம். இதனை கருத்தில் கொண்டு தான் சிறீலங்காவிற்கு இந்திய.. சீன உல்லாசப் பயணங்களை ஊக்குவிக்க.. விசா தளர்வுகளை இந்த அரசுகள் மேற்கொண்டு சிறீலங்காவுடனான இருதரப்பு வர்த்தகச் சமநிலையை நோக்கி கொண்டு வர முயன்றனர். முயல்கின்றனர்.

உண்மை அப்படி இருக்க.. வரலாறு முழுவதும் பொய் பேசிக் கொண்டிருக்கும் இந்த சிறீலங்கா சிங்கள பேரினவாத ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கும்பல்கள்... ஜனநாயகம் என்ற போர்வையில் பொய்களை மக்கள் மத்தியில் விதைக்க தீபம் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்வது வருத்தமளிக்கிறது.

சிறீலங்கா பொருட்களை சேவைகளை விளையாட்டை புறக்கணிப்பதால் உள்ள நன்மைகள்..

1. சிறீலங்காவின் ஏற்றுமதி வருமானத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருக்கும். அந்நியச் செலவாணி வீழ்ச்சி இருக்கும்.

2. சிறீலங்காவின் உற்பத்தி வீழ்ச்சி தொழில் இழப்பு அதிகரிக்கும். இது உள்நாட்டில் சிங்கள அரசுக்கு நெருக்கடிகளை கொண்டு வரும்.

3. சிறீலங்காவின் வருமான வீழ்ச்சி இராணுவச் செலவீனங்களை கட்டுப்படுத்தி இராணுவ ஆக்கிரமிப்பில் ஆட்குறைப்பு போன்ற பல மாற்று நடவடிக்கைகளை எடுக்க அது தூண்டும்.

4. உலக அரங்கில் தமிழ் மக்கள் சிங்கள அரசின் பொருட்களை எதிர்க்கிறார்கள் சிங்கள அரசின் ஆட்சியை விரும்பவில்லை என்பதை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டும்.

5. சிறீலங்கா எயார் லைன்ஸ்மற்றும் சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் போவதை புறக்கணிப்பதன் மூலம் உல்லாசப் பயணத்துறையை நம்பி வாழும் சிறீலங்காவை நோக்கி இதர மக்களையும் அதைச் செய்யத் தூண்டி.. அதன் உல்லாசப் பயணத்துறையில் வீழ்ச்சியை உண்டு பண்ணலாம்.

6. உலக அரங்கில் சிறீலங்கா அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் திட்டமிட்ட நீண்ட கால நோக்கிலான ஒரு நடவடிக்கையை எடுக்கும் பலத்தை தேவையைக் கொண்டிருப்பதை உலகம் உணரச் செய்யும். அது எமது போராட்ட இலட்சியத்திற்கு அரசியல் உரிமைக் கோரலுக்கு உறுதி அளிக்கும்.

7. சிறீலங்கா மீதான தமிழர்களின் நீடித்த பொருண்மிய தடை என்பது சிங்கள அரசு தமிழர்கள் மீது 1986 இல் இருந்து அமுல் படுத்தி வந்த பல்வேறு பொருண்மியத் தடைகளூடு அது தமிழர்களை அடிமைப்படுத்த உதவியது போன்று எமக்கும் உதவி சிறீலங்காவை அதன் பொருளாதாரத்தை சிறிதளவேனும் சேதப்படுத்தவும் அதன் வழி எமது பிரச்சனைகளை சிங்கள சமூகம் செவி சாய்க்கவும் செய்யும். இன்றேல் சிங்களம் எமது அடிப்படை பிரச்சனைகளையே மறந்து சிங்கள பெளத்த பேரின வெறியில் திழைத்து வாழும்.

இந்த புறக்கணிப்பால் எழக் கூடிய தீமைகள் என்று பார்த்தால்..

1. உள்ளூரில் தமிழர் தாயகத்தில் இருந்து வரும் மூலப் பொருட்கள் சார்ந்த உற்பத்திகள் ஏற்றுமதியாவது தடைப்படலாம். இதனால் தமிழர்களின் பொருளாதாரம் பாதிப்படலாம். ஆனால் இன்று தமிழ் மக்களின் மூலப் பொருட்களை உற்பத்திகளை கொள்ளை விலையில் தமிழ் துரோகக் கும்பல்களைச் சேர்ந்த வர்த்தகர்களும்.. சிறீலங்கா இராணுவத்தினரும்.. அரசாங்க மற்றும் எதிர்கட்சி ஆதரவு வர்த்தகர்களும் கொள்வனவு செய்து அவர்களே அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்று பெரும் இலாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய வருமானம் கிடைப்பதில்லை. அவர்கள் எப்போதும் போல உள்ளூர் விலைக்கே உற்பத்திகளை விற்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

நிலைமை இப்படி இருக்க.. தீபம் இரண்டு துரோகிகளை கூப்பிட்டு வைத்து தமிழீழத்தை விட்டெறி.. புலிகளின் மிச்ச சொச்ச எச்சங்களை தூக்கி எறி என்று தமிழ் மக்களின் 67 ஆண்டு கால அரசியல் கோரிக்கையை ஏளனப்படுத்தும் மிக மோசமான செயலை செய்ய அனுமதிக்கின்றனர். சிங்களப் பேரினவாதிகளைப் போல இவர்கள் பேச தமிழ் மக்களின் விளம்பரத்தில் தமிழ் மக்களின் சந்தாவில் காலம் கழிக்கும்.. தீபம் செயற்படுவது வருத்தமளிக்கிறது. இதையிட்டு தீபம் சிந்திக்க வேண்டும்.

உருப்படியான பொருளியல் அரசியல் வல்லுனர்களை கூட்டி வந்து ஒரு ஆய்வரங்கத்தை நடத்தினால் அது செயற்திட்டங்களை கூர்மைப்படுத்த உதவும். மாறாக உருப்படாத தேசம்.. கீசம்.. போன்ற குப்பைகளில் காலம் கடத்தும் இழி பிறப்புக்களை கருத்துச் சொல்ல அழைப்பது ஏன். சிறீலங்கா அரசின் புலம்பெயர் மக்கள் மீதான பிரச்சார ரீதியான இன அடக்குமுறை கருத்துக்களை இங்கும் பரப்பவா..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ராஜபக்ச சொல்வது போல் இருக்குது.. புலம்பெயர்ந்த தமிழர்களை சமாளிப்பதுவே எனக்கு சவால் என்று. ஆனால் இன்னும் சில காலத்தில் அந்தச் சவாலையும் இல்லாமல் செய்யிற அளவிற்கு உங்கள் போன்றோரின் ஊடக ஆதிக்கம் இருக்கிறது. இது தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும்.. அரசியல் விடிவுக்கும்.. அடிமை வாழ்வு விலகலுக்கும் ஆபத்தானது.

arjun, on 23 April 2011 - 06:24 AM, said:

இனியும் வேசங்கள் வேண்டாம்.களைத்துவிட்டுவாருங்கள் ஒன்றாக வேலை செய்யலாம்.

திருநீறு பூசிய பல பூசாரிகள் யாழில் உள்ளார்கள் அவர்கள் ஒருகாலமும் வரப்போவதுமில்லை எமக்கு தேவையுமில்லை.கிணற்று தவளைகளாக அவர்கள் இருப்பததே நல்லது.

எதை நோக்கி ஒன்றாக வேலை செய்யலாம்..

1. தமிழீழம் சாத்தியமற்றது.. சிங்கள அரசோடு உறவைப் பலப்படுத்தி உரிமை வெல்வது என்ற இராமநாதன் காலச் செயற்பாட்டை செய்யவா..??!

2. புலிகளின் கொள்கைகள்.. அதன் எச்சங்களை தூக்கி போட்டுவிட்டு.. ஓடி வாருங்கோ.. சிறீலங்கா ஒரு சிங்கள பெளத்த தேசம்.. என்று கோத்தா வடிச்சு தாற கொள்கையின் படி செயற்படுவோம் என்றா..??!

3. புலம்பெயர் தேசங்களில் சிங்கள சிறீலங்காவுக்கு எதிரான செயற்பாடுகளால் எள்ளளவும் பயனில்லை.. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு.. புலிகளுக்கு என்று திரட்டிய நிதியோடு ஓடி வாருங்கோ.. சரணடைந்த போராளிகளை.. சிறைகளுக்குள்ளேயே வைத்து வாழ்வளிக்கவா..??!

4. சிங்களவன் உலகம் எல்லாம் கடன் வாங்கி குண்டு போட்டவன்.. அவனுக்கு கடன் சுமை அதிகம்.. வாருங்கோ.. உடைஞ்சதுகளை கட்டி வைச்சு சிங்களவர்களை அயலில் குடி வைச்சு.. இன ஐக்கியம் காட்டுவோம்.. நிலம்.. உரிமை.. இனம். இதெல்லாம் எமக்கு சாப்பாடா போடப் போகுது.. என்று சொல்ல ஒன்றா சேர்ந்து வேலை செய்யவா அலைக்கிறீர்கள்...??!

5. போராட்டம் கீராட்டம் எதுவுமே எமக்கு ஆகாது. 85% சிங்கள மக்கள் வாழும் சிறீலங்காவில் அவர்களின் உழைப்பில் வாழும் நாம் அவர்களின் அடிமைகள்.. அவர்களிடமே சாப்பாடும் வாங்கி மருந்தும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு அவர்களுக்கு எதிராக போராடியவர்களே புலிகள்... அந்தத் துரோகம் எனியும் வேண்டாம்.. வாருங்கோ எல்லோரும் ஒரே அடியா ராஜபக்சவின் காலில் விழ ஒன்றாக முயற்சி செய்வோம்.. அப்படிச் செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலமே நடந்திருக்காது என்று சொல்லவா கூட்டாக வேலை செய்ய அழைக்கிறீர்கள்.

6. எங்கள் தளபதி தானைத் தலைவர்கள்.. டக்கிளசு.. சித்தார்த்தன்.. ஆனந்த சங்கரி .. வரதராஜப் பெருமாள் போன்றவர்களோடு கூட்டுச் சேர்ந்து கூட்டாக அரசியல் வியாபாரமும் கடத்தல் வியாபாரமும்.. கூலி வியாபாரமும் செய்வோம் ஓடிவாருங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்றா..??!

7. தேர்தலுக்கு தேர்தல் சிங்களக் கட்சிகளுக்கு சுவரொட்டி ஒட்டி கு*டி கழுவி விட்டு.. ஆனந்த அரசியல் செய்வோம்.. ஓடிவாருங்கோ இணைந்து வேலை செய்வோம் என்றா அழைப்பு விடுகிறீர்கள்..??!

எதை எங்க எப்படி இணைந்து வேலை செய்து சாதிக்கப் போறீர்கள்.. அதை எழுதித் தொலையுங்கோப்பா. சும்மா.. ஊடகங்களிலும் யாழிலும் உங்களுக்கு கதிரை போட்டு தருகினம்.. நீங்களும் வந்து அது சாத்தியமில்லை.. புலி என்ற சொல்லே எமக்கு ஒவ்வாமை.. ஜனநாயகம் செத்துப் போச்சு.. நாங்கள் உயிர் கொடுக்கிறம் என்று அளக்கிறீங்க.

நீங்க ஒருத்தரும்.. தமிழ் மக்கள் கேட்டு ஆயுதம் தூக்கல்ல. அதேபோல உங்களை... தமிழ் மக்கள் ஜனநாயகத்தை வேண்டி தா.. புலியை எதிர் என்று கேட்டுக் கொண்டிருக்கேல்ல. தமிழ் மக்களைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் அவர்களின் சொந்தப் பிள்ளைகள். அவர்களையும் அவர்களின் கொள்கைகளையும் தூங்கி எறியச் சொல்ல எந்த எச்சிலிலை எலும்பு பொறுக்கி நாய்க்கும் உரிமை கிடையாது. இதைச் சொல்ல நமக்கு ஜனநாயக உரிமை இருக்குது.

விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை.. தமிழீழம் என்பதை தமிழ் மக்கள் 1977 இல் அங்கீகரித்துவிட்டனர். அதை இல்லை என்று சொல்லவும் சாத்தியம் இல்லை என்று சொல்லவும்.. எலும்பு பொறுக்கி நாய்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மக்கள் வாக்களிப்பு மூலம் தீர்மானித்ததை நிராகரிக்க எந்த சன நாய் அகம் பேசும் நாய்க்கும் உரிமை கிடையாது. நாய்கள் பொறுக்கித் தின்பதை பற்றி பேசலாம்.. குரைக்கலாம்.. எஜமான விசுவாசத்தை சிங்களம் மீது காட்டலாம். அதேபோல்.. வெறி பிடித்த நாய்களை.. கட்டாக்காலி நாய்களை.. கட்டுக்கடங்காத நாய்களை பிடிச்சு சுடலாம்.. கூண்டோடு பிடிச்சு.. கைலாயமும் அனுப்பலாம்..! அங்கு நாய் உரிமைகளை யாரும் மதிப்பதில்லை. ஆனால் பட்டி போட்ட நாய்க்கு மட்டும் ஜனநாயக உரிமை..! போங்கையா நீங்களும் உங்கட சன நாய் அகமும்.

Link to comment
Share on other sites

... முதலில் ... தம்மை நடுநிலையான ஊடகம், நடுநிலையாக செயற்படுகிறோம் ... ஏன்???? .... கொழும்பில் இருந்து செயற்பட (அங்கு சில வர்த்தக முதலீடுகள் இவர்களுக்கு உள்ளதாகவும் கூறுகிறார்கள்) ... என்று எம்மை ஏமாற்றும் இந்த ஊடகத்தை நாம் புறக்கணிக்க வேண்டும்!!! ... எங்களை(புலம்பெயர் மக்களை) ஏமாற்ற இடையிடையே இப்படி சில கலந்துரையாடல்கள் .... மற்றும்படி முன்னால் ஆறுசனலான் நடாத்தும் டானுக்கு நிகரானதுதான் இந்த தீபம்!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.