Jump to content

தழிழரசுக் கட்சிக் கிளைகளை அமைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்தவே: சம்பந்தன்


Gari

Recommended Posts

 
ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2013 00:57    0 COMMENTS
sambandan_60(10).jpg-சி.குருநாதன்

தழிழரசுக் கட்சிக் கிளைகளை அமைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி கிளைகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை நேற்று சனிக்கிழமை காலை சம்பந்தனின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நியமித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழரசுக் கட்சிக் கிளைகள் நிறுவப்படுவது கூட்டமைப்பைப் பலப்படுத்தவேயாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும்வேளை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துகொள்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாகும். நாம் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே இருக்கின்றோம். தமிழரசுக் கட்சியின் கிளைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு செயலாக எவரும் கருதிவிடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் கைவிடமாட்டோம். சாதகமான அரசியல் சூழ்நிலை உருவாகும் தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

தமிழ் கூட்டமைப்பை சிதைக்க சகுனியாகிறார் சங்கரி- இரா.துரைரத்தினம்

Published on January 27, 2013-7:29 am   ·   

anandasangary.jpgமகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த பெரும்பான்மை மக்கள் வழங்கிய வாக்கின் மூலம் கிடைத்ததல்ல, ஏனைய கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்தி பணம் கொடுத்து வாங்கி பெற்றுக்கொண்ட பெரும்பான்மை தான் என்பது பலருக்கும் தெரிந்த விடயம் தான்.

மகிந்த ராசபக்ச தலைமையிலான ஆளும் கட்சி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்த பலரை வாங்கிக்கொண்டது மட்டுமன்றி அக்கட்சியை மிக மோசமாக பலவீனப்படுத்தி இருக்கிறது. பலவீனமான எதிர்க்கட்சி தலைவராக இன்று ரணில் விக்கிரமசிங்க உள்ளார்.

ஜே.வி.பியை ஒன்றல்ல மூன்றாக உடைத்து பலவீனப்படுத்தி சிலரை தன் பக்கம் மகிந்த அரசு இழுத்துக்கொண்டது.

அரசாங்கத்துடன் இணையாவிட்டால் தன்னுடைய உறுப்பினர்களை இழக்க வேண்டிய ஆபத்து வந்து விடும் என்ற நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டார். அரசுடன் இணையாமல் இருந்திருந்தால் சில வேளை ஹக்கீம் மட்டும் மிஞ்சியிருப்பார், ஏனையவர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பார்கள்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மட்டுமே முழுமையாக உடைக்க முடியாமல் மகிந்தவும் அவரது சகோதரர்களான பஷில், கோத்தா போன்றோர் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவான அரைசிங்களவரான பியசேனாவை விலைக்கு வாக்கிய மகிந்த அரசால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைக்கவோ அல்லது அக்கட்சியிலிருந்த உறுப்பினர்களை விலைக்கு வாங்கவோ முடியாமல் போயிருந்தது.

கடந்த கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை 6 கோடி தருகிறோம், எங்கள் பக்கம் வாருங்கள் என மகிந்த தரப்பு வலைவீசிய போதிலும் அது முடியாமல் போய்விட்டது.  ஆனால் இப்போது சிங்கள பேரினவாதம் புதிய உத்தியை கையாள தொடங்கியிருக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற காலத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது பற்றி அக்கறை படாது மகிந்த அரசுக்காக உலகம் எல்லாம் சென்று பிரசாரம் செய்து வந்த ஆனந்தசங்கரி போன்றவர்கள் ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைக்க சதி நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருக்கிறது.

யார் இந்த ஆனந்தசங்கரி என்பது எல்லோருக்கும் தெரியும். 1977ஆம் ஆண்டு தமிழ் இனத்தின் ஒற்றுமையின் சின்னமாக உதயமானதுதான் தமிழர் விடுதலைக் கூட்டணி. 1980களின் பின்னர் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகி ஆளுக்கொரு இயக்கம் தொடங்கியதும் அதன் பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தந்தின் பின்னர் இந்திய அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த ஆயுதக்குழுக்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, ஆகியன அரசியல் கட்சிகளாக தம்மை பதவி செய்து கொண்டதும் அனைவரும் அறிந்த விடயம்.

இந்திய இராணுவம் செய்த படுகொலைகளின் பங்காளிகளாக இந்த இயக்கங்கள் இருந்ததும் மக்கள் இன்னும் மறக்காத மறுக்க முடியாத சம்பவங்கள், எனினும் காலத்தின் தேவை கருதி 2000ஆம் ஆண்டுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் கொங்கிரஷ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகியவற்றை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதிலும் தங்கள் தங்கள் கட்சிகளின் தனித்துவத்துடன் செயல்படலாம் என அக்காலத்தில் இணைக்கம் காணப்பட்டது. எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணி இக்கட்சிகளுக்கு தலைமை தாங்கியது. ஏனெனில் இந்த நான்கு கட்சிகளில் அந்நேரத்தில் மக்களால் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சியாகவும் அது இருந்தது.

செல்வமோ சுரேஷோ இதை இப்போது மறுத்தாலும் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியிலோ, ரெலோவிலோ தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் உண்மையாக இருந்தது.

ஆனால் ஆனந்தசங்கரி செய்த துரோகத்தனத்தால் 2004ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் நேசித்த தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அதன் சின்னமான உதயசூரியனையும் மக்கள் நிராகரித்து தங்களின் பழைய கட்சியான தமிழரசுக்கட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவானது.

2003ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆனந்தசங்கரி தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சிங்கள பேரினவாத அரசான சந்திரிக்கா அரசின் கைபொம்மையாக மாறிய போது தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டது.

சந்திரிக்கா அரசின் பலம் ஆனந்தசங்கரிக்கு இருந்ததால் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற தமிழ் மக்களின் கட்சியை தனது சொந்த சொத்தாக மாற்றிக்கொண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்த சம்பந்தன், யோசப் பரராசசிங்கம், மாவை சேனாதிராசா, ரவிராஜ் உட்பட வடக்கு கிழக்கில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வெளியேறிய நிலையில் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியை தன் சொந்த சொத்தாக்கி கொண்டார். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல சந்திரிக்கா அரசின் ஆதரவு இருந்த காரணத்தால் நீதிமன்றமும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரிக்கே உரித்தானது என தீர்ப்பு வழங்கியது.

தமிழ் மக்களின் பலமான கட்சி ஒன்றை உடைக்க வேண்டும் என்பதில் அப்போது இருந்த சந்திரிக்கா அரசும் கங்கணம் கட்டி செயற்பட்டது. அதற்கு வாய்ப்பாக ஆனந்தசங்கரி நடந்து கொண்டார். இதன் மூலம் ஆனந்தசங்கரி தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்தார். அதற்கு ஆனந்தசங்கரிக்கு அடுத்து வந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் தகுந்த அடியை கொடுத்தனர். அதன் பின்னர் யாழ். மாநகரசபையில் அவர் பெற்ற வாக்குகளை பார்த்தால் அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய செல்வாக்கு இருந்தது என்பதை நான் சொல்லாமலே புரியும்.

சிறிலங்கா பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழர் விடுதலைக் கூட்டணியை தன் வீட்டு சொத்தாக்கி ஆனந்தசங்கரி கொண்டு சென்ற நிலையில் காலத்தின் தேவைக்கமைய தமிழ் கட்சிகளுக்கு தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு தமிழரசுக்கட்சிக்கு ஏற்பட்டது.

இன்று இருக்கும் தமிழ் கட்சிகளில் தமிழரசுக்கட்சியே பலம்பொருந்தியது என்பது மட்டுமல்ல அக்கட்சி சின்னத்தை மட்டுமே தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளனர் என்பதும் யார் என்ன சொன்னாலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அழைக்கப்பட்டாலும் உத்தியோகபூர்வமாக தேர்தலில் போட்டியிட்டு வடக்கு கிழக்கில் அதிக ஆசனங்களை பெற்றது தமிழரசுக்கட்சி தான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் அதன் அடிநாதன் தமிழரசுக்கட்சி தான்.

தமிழரசுக்கட்சியை பலப்படுத்துவதன் மூலமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலப்படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதன் அத்திவாரமே தமிழரசுக்கட்சிதான்,

அண்மையில் ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதியப்படாமையால் தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டியிட வேண்டி ஏற்பட்டதாகவும், தமிழரசுக்கட்சிக்கு தனித்துவம் இருக்கவில்லை என்றும் கூறியிருந்தார். உண்மை அதுவல்ல, சந்திரிக்கா தலைமையிலான சிங்கள பேரினவாதிகளின் சொல்லை கேட்டுக்கொண்டு 2004ஆம் ஆண்டில் இடறிக்கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை தன் கையில் எடுத்து சென்றதால் தான் தமிழரசுக்கட்சி 2004ல் மீண்டும் தலையெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

தமிழரசுக்கட்சி என்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி, ஏனைய கட்சிகளுக்கு அந்த அங்கீகாரம் கிடையவே கிடையாது. சிங்கள பேரினவாதிகளின் கைப்பொம்மையான ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியை தன் கையில் எடுத்து சென்றதால் அதன் பின்னர் வந்த அத்தனை தேர்தல்களிலும் தமிழ் மக்கள் படுதோல்வியடைய செய்திருந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதி கிடையாது. ஏனெனில் அதன் கடந்த கால கசப்பான வரலாறாகும். இந்திய இராணுவ காலத்தில் நடந்த படுகொலைகள் பலவற்றிற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்திற்கு பங்குண்டு. அதனை இப்போது கிளறி நாம் யாரின் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை.

அதேபோன்று ரெலோவுக்கும் கடந்த கால கசப்பான சம்பவங்களுடன் தொடர்பு உண்டு. அதை மக்கள் இன்னமும் மறக்கவில்லை.

1989ஆம் ஆண்டு இந்திய இராணுவ காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய இராணுவம் சென்ற பின்னர் அக்கட்சிகளால் ஏன் வெற்றி பெறமுடியாமல் போனது என்பதையும் உதயசூரியன் மற்றும் வீட்டு சின்னங்களில் தேர்தலில் போட்டியிட்ட பின்னரே மக்கள் பிரதிநிதிகளாக வர முடிந்தது என்பதையும் மறக்க கூடாது.

எனவே தமிழரசுக்கட்சியை உடைக்க நினைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் செயலாகும்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என கூறுவதற்கு அல்லது ரெலோவை பலப்படுத்த வேண்டும் என கூறுவதற்கு அல்லது கட்சி மகாநாடுகளை நடத்தி உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இக்கட்சிகளுக்கு எவ்வளவு ஜனநாயக உரிமை இருக்கிறதோ அதே உரிமை தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்களுக்கும் அக்கட்சியை பலப்படுத்த வேண்டும் என கூறுவதற்கு இருக்கிறது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அல்லது ஆனந்தசங்கரிக்கு தமது கட்சியை பலப்படுத்த வேண்டும் என எண்ணுவதை விட பல மடங்கு உரிமை தமிழரசுக்கட்சிக்கு இருக்கிறது. ஏனெனில் தமிழரசுக்கட்சி தான் தமிழ் மக்களின் பெரும்பான்மை பலம் பெற்ற கட்சி ஆதரவு பெற்ற கட்சி, அது மட்டும் தான் இரத்த கறைபடியாத கட்சி,

தமிழர் விடுதலைக் கூட்டணி இரத்தகறைபடியாத கட்சி என ஒரு காலத்தில் நல்ல பெயர் இருந்தது. ஆனால் அக்கட்சியை ஆனந்தசங்கரி தன் வீட்டு சொத்தாக்கி சந்திரிக்காவின் காலடிக்கு கொண்டு சென்றதால் சிங்கள பேரினவாத அரசின் இரத்த கறைகள் ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி மீதும் படிந்து விட்டது. அதனால் தமிழ் மக்கள் அக்கட்சியை இப்போது நிராகரித்து விட்டார்கள்.

இரத்த கறைபடியாத கட்சி என வடக்கு கிழக்கை தளமாக கொண்ட இரு கட்சிகள் உள்ளன. ஒன்று தமிழரசுக்கட்சி மற்றது தமிழ் கொங்கிரஷ், தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றதால் தமிழ் கொங்கிரஷ் கட்சியையும் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள்.

தமிழரசுக்கட்சி மீது ஆனந்தசங்கரியும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இப்போது போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

தமிழரசுக்கட்சி மீது ஆனந்தசங்கரியும் அந்த வன்னி எம்பியும் சேற்றை அள்ளி வீச நினைக்கலாம். அந்த சேறு அனைத்தும் அவர்கள் மீது தான் வந்து விழும் என எண்ணாது செயற்படுகின்றனர்.

தமிழரசுக்கட்சி தலைமையிலிருந்து பிரிந்து சென்ற தமிழ் கொங்கிரஷ் கஜேந்திரகுமாரை தூக்கி எறிந்த தமிழ் மக்களுக்கு ஆனந்தசங்கரியும் முந்திரிக்கொட்டை போல அறிக்கை விட்டிருக்கும் அந்த வன்னி எம்பியும் வெறும் தூசு என்பதை புரிந்து கொண்டால் சரி.

( இக்கட்டுரை 27.01.2013 இன்று சுடர்ஒளி பத்திரிகையில் வெளியான கட்டுரையாகும்)

http://www.thinakkathir.com/

Link to comment
Share on other sites

கதிர்காமரும், சந்திரிக்காவும் அமெரிக்க லொபி கம்பனிகளை விலைக்கு வாங்கி அமெரிக்காவின் கொள்கைகளை வகுப்பாளர்களை கைக்குள் போட்ட பின்னரும் லன்ஸ்டெட் புலிகளை வெளியே எடுக்க தனது தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டார். கொடன் வைஸ் ஐ.நாவின் கையில் பட்ட அதே பாட்டை லண்ஸ்டெட் அமெரிக்காவிடமிருந்து பெற்றர். லண்ஸ்ரெட் இன்னமும் அரசியல் கூட்டங்களில் தோற்றுவதால், அவரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் தமிழர், அவர் தமிழர் மீது காட்டிய அக்கறைக்கு அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

 

அரசாங்கத்தின் பலமான பணம் விசுக்கலால் அமெரிக்க லொபி கம்பனிகளை வாங்க முடிந்ததால் இதில் சம்பந்தரும் லன்ஸ்ரெட்டும் சந்திரிக்காவுக்கும், கதிர்காமருக்கும் முன்னால்  கவலைக்கிடமான தோல்வியை சந்தித்தார்கள். நேரம் வந்த போது கதிர்காமர் அரசின் கையில் தான் செய்ததின் பலனை அனுபவித்தார். சந்திரிக்க இன்னமும் பத்தினி வேசம் போட்டு வெற்றிகரமான அரசியல் இலங்கைக்கு வெளியில் செய்கிறா. :(

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.