Jump to content

காரணம் என்ன?


  

11 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

http://www.yarl.com/...ndpost&p=716742 ( புதிய ஆண்டும் யாழும் )

பலர் பலவிதமாக வாக்குறுதி/promise வழங்கினார்கள். 2012ம் வருடத்தின் இரண்டாம் மாதம் நிறைவடையப் போகின்றது. லிங்கில் குறிப்பிட்ட இந்த பகுதியில் பேசப்படும் விடயங்கள் வெற்றி பெறாமைக்கான காரணங்கள் எவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

இதுவரை ஒரு விளம்பரத்தைதானும் காணவில்லை. குறிப்பாக யாழ் இணையம் வர்த்தக ரீதியாக முன்னேற்றம் பெறுவதற்கு எவ்விதமான முயற்சிகளை நீங்கள் எடுத்தீர்கள் என்றும் அல்லது எடுக்கவில்லையாயின் அதற்கான காரணங்கள் பற்றியும் உங்கள் பக்க பகுதியை விபரியுங்கள்.

ஒரு வியாபார நிறுவனம் எனும் வகையில் இங்கு நாம் விளம்பரம் செய்யும் போது எமது வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக அமையும் என நினைப்பதால் இது பற்றி அறிய விரும்புகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் தனது போதிய தகவல் வழங்கமால்,

ஆண்டுக்கு ஒரு அறிக்கை விட்டு, பஞ்சத்தனம் கொட்டுவதால்... ஒரு பிரயோசனமும் கிடைக்காது.

அறிக்கைக்குப் பின், அதிரடி நடவடிக்கையே.. தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் தனது போதிய தகவல் வழங்கமால்,

ஆண்டுக்கு ஒரு அறிக்கை விட்டு, பஞ்சத்தனம் கொட்டுவதால்... ஒரு பிரயோசனமும் கிடைக்காது.

அறிக்கைக்குப் பின், அதிரடி நடவடிக்கையே.. தேவை.

அப்படி போடுங்கோ அரிவாளை...சந்தா விபரங்களை அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் நிர்வாகம்....

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரும் தங்களின் திறமை வசதிக்கேற்ப பங்களிப்புச் செய்யலாம். வியாபாரத் தொடர்புகள் உள்ளவர்கள் விளம்பரங்கள் எடுத்துத் தர உதவிகள் செய்யலாம். கணணி அறிவுள்ளவர்கள் தொழிநுட்ப உதவிகள் வழங்கலாம்.

முன்பு கூறியதைப் போல சந்தாதாரர் ஆக விரும்புவர்களுக்கு 'pay pal' வசதி செய்து தரப்பட வேண்டும்.

எனக்கு முன்பு நன்றாகத் தெரிந்த இந்திய நண்பர் சிறிது சிறிதாக உருவாக்கிய தளம் இது. இன்று பெரிய வியாபார நிறுவனமாக உள்ளார்கள்.

http://www.redhotcurry.com/

Link to comment
Share on other sites

யாழுக்கு வருவதே பொழுது போக்கத்தான். இஞ்சையும் வேலை செய்ய சொன்னால் எப்படி? ஏதாவது உருப்படியாக இங்கு நடந்ததா?

Link to comment
Share on other sites

எனக்கு முன்பு நன்றாகத் தெரிந்த இந்திய நண்பர் சிறிது சிறிதாக உருவாக்கிய தளம் இது. இன்று பெரிய வியாபார நிறுவனமாக உள்ளார்கள். http://www.redhotcurry.com/

s.gif

நீங்கள் மேலே சொன்ன தளம் 404,230ம் இடத்தை பெற்று பெரிய ஒன்லைன் வியாபார நிறுவனமாக காணப்படும்போது அதேசமயம் யாழ் இணையம் தற்போது 88,399ம் இடத்தில் விளங்கி ஒரு சிறிய அளவிலாவது வர்த்தக ரீதியாக வளர்ச்சியை பெறவிலை என்றால் அதற்கான காரணங்கள் ஆக ஒன்று இரண்டாக இருக்க முடியாது.

yarl.com

s.gif

Link to comment
Share on other sites

யாழுக்கு வருவதே பொழுது போக்கத்தான். இஞ்சையும் வேலை செய்ய சொன்னால் எப்படி? ஏதாவது உருப்படியாக இங்கு நடந்ததா?

உருப்படியாக ஏதாவது நடக்காமல் எப்படி இந்த நிலைக்கு வர முடியும்?

s.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா ஒரு குழுவைப் பரிந்துரை

செய்திருந்தார். அவர்கள் ஏதாவது செயற்திட்டங்களை

உருவாக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் :)

Link to comment
Share on other sites

எல்லோரும் நல்லவிடயம் என்று வரவேற்றுவிட்டு தமது வேலைகளைப் பார்க்கப் போய்விட்டார்கள் (நானும்தான்).

பூனைக்கு மணிகட்ட ஒரு எலிகளும் தயாராக இல்லைப் போலுள்ளதே! :(

கிருபன் இங்கு பதிவிட்டுவிட்டு காணாமல் போய்விட்டோம் உண்மைதான். யாழ்க்களத்தை முன்னேற்றுவதற்கு எல்லோரும் பேச்சுப்பல்லக்குத்தான் போல் உள்ளது. எவ்வகை உதவிகளைச் செய்வது என்பதை எம்மால் தீர்மானிக்க முடியவில்லை. கருத்துக்கணிப்பை நடாத்தி உருப்படியாக எதனையும் செய்ய முடியாது என்பதை நிர்வாகம் தெளிவாக உணர்ந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நிர்வாகத்தினர் நகர முடியும்.

எவ்வகையான உதவிகளைச் செய்யவேண்டும் என்று மோகனின் எதிர்பார்ப்பு இருக்கிறது என்று புரியவில்லை. உதவி செய்யும் விருப்பு இருந்தாலும் வழிகளைச் சொன்னால்தான் அவ்வகையில் அவற்றை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

யாழ் இணையம் தனது போதிய தகவல் வழங்கமால்,

ஆண்டுக்கு ஒரு அறிக்கை விட்டு, பஞ்சத்தனம் கொட்டுவதால்... ஒரு பிரயோசனமும் கிடைக்காது.

அறிக்கைக்குப் பின், அதிரடி நடவடிக்கையே.. தேவை.

அப்படி போடுங்கோ அரிவாளை...சந்தா விபரங்களை அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் நிர்வாகம்....

நீங்கள் நிர்வாகத்தை தொடர்ச்சியாக உற்சாகப்படுத்துவதன் மூலம் அதை செய்ய அவர்களிற்கு ஆர்வம் ஏற்படலாம். மிக வேகமாக தற்போது இந்த இணையம் (92,045ம் இடம்) தரநிலையில் பின் தள்ளப்படுவது இணைய உலகில் போட்டி எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை காட்டுகின்றது. Front page ஓரளவாயினும் திருத்தம் செய்யப்பட்டால் நல்லது என்று தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாவை பற்றி எங்களுக்கு நல்லா தெரியும் , ஒன்ர சொல்லுவார் ஆனால் அதை செய்ய மாட்டார்.............

யாழுக்கு பிறக்கு வந்த அவியிர மீனை துடிக்கிது என்று சொல்லுற லங்காசிறி தமிழ் வின் இணையதளம் இப்படி இருக்கேக்க எங்கட யாழ் இப்படி இருக்கிறதை நினைக்க மன கஸ்ரமாய் இருக்கு........... :(

Link to comment
Share on other sites

லங்காசிறி, தமிழ் வின் இணைய தளங்கள் வியாபார ரீதியாக சிறந்து உள்ளார்கள் என்றே தெரிகின்றது.

http://www.lankasrihelp.com/index.php?page=home

http://www.lankasrihelp.com/index.php?page=notice

அவர்களின் முயற்சி, உழைப்பு அங்கே தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம்.

Vision: சமூக அரசியல் தளத்தில் மக்களின் கருத்தை மக்களைக் கொண்டே தெரிய வைத்து இயக்கப்படுகின்றன வியாபார இலாப நோக்கற்ற பொழுதுபோக்கு இணையத்தளம்.

Mission: சமூக அரசியல் அறிவியல் விழிப்புணர்வுள்ள ஆக்கங்களை உள்வாங்குவதனூடும்.. மக்களிடையே சகஜமான கலந்துரையாடலுக்கு (கருத்துக்கள அடிப்படை இணையத்தளம்) இடமளிப்பதனூடும் சமூகத்தில் அவர்களினதும் கருத்துக்களை கொண்டு செல்லுதல்.

SWOT analysis

பலம்: அங்கத்தவர்கள் எண்ணிக்கை,பார்வையிடும் எண்ணிக்கை, பதிவுகளின் எண்ணிக்கை.. பன்முகத்தன்மை, நம்பகத்தன்மை, விதிமுறைகள் அவற்றின் அமுலாக்கம், ஒப்பீட்டளவில் இலகுவான அங்கத்துவப் பதிவு மற்றும் அதன் வயது.

பொதுவாக விரைந்து தரவிறங்கக் கூடிய பக்கங்களும்.. கணணிக் கிருமி தாக்கம் குறைந்த அல்லது இல்லாத இணையம் என்ற நம்பிக்கையைக் பல காலமாக தக்க வைத்திருப்பது.

பலவீனம்: முகப்பு, பக்க வடிவமைப்பு, கருத்துக்கள செய்திகள் தவிர வேறு ஆக்கங்களின் கிரமமான வரவு இன்மை,கருத்துக்கள செய்திகளும் ஆக்கங்களும் கவர்ச்சிகரமான வகையில் dynamic page view வடிவில் முகப்பில் காண்பிக்கப்படாமை. ஒரே கும்பலாக செய்திகள் வந்து குவிந்து கிடக்கின்றமை.

உறுப்பினர்களின் சமூக வலைச் செய்திகளை முகப்பில் காண்பிக்காமை.. விளம்பர பகுதி இன்மை..அங்கத்தவர்களின் துடிப்புக் குறைந்து செல்கின்றனமை. புதிய அங்கத்தவர்களின் பதிவு தொடர்ந்து இருப்பினும்.. செயற்பாடுகள் வெகு குறைவாக உள்ளமை. கருத்துக்களின் பன்முகத் தன்மை குறைகின்றமை. நவீன கையடக்க தகவல்தொடர்பூடகங்கள் மூலம் செய்திகளை தகவல்களை இணைக்கக் கூடிய வசதிகள் குறைவாக உள்ளமை.

தமிழில் எழுத பல உறுப்பினர்களுக்கு சரியாக அறிய முடியாமல் இருத்தல். பிறமொழி கலந்துரையாடல் பகுதி சுருங்கி இருத்தல். தங்கிலிஸ் பகுதி இன்மை.

சில பகுதிகள் அறவே இல்லாமை. உதாரணம்: கல்வி சார்ந்த விடயங்களுக்கு பகுதியே இல்லை..!

வாய்ப்பு: உறுப்பினர்களின் உதவி பெறப்பட்டு பக்கத்தை நவீனத்துவம் கொண்டு மெருகூட்டல், புதிய திட்டங்களை வியாபார நோக்கில் செயற்படுத்த முனைதல், முழு நேர இணையக் கண்காணிப்பு அல்லது மெருகூட்டல் நிபுணத்துவ குழுவை தன்னார்வ அடிப்படையில் அல்லது கூலி அடிப்படையில் அமைக்கவும் அதனை மோகன் அண்ணா நேரம் கிடைக்கும் போது கண்காணிக்கவும் செய்தல். விளம்பரங்களுக்கு உள்ள வாய்ப்பை பயன்படுத்தல். பக்கங்கள் பலதரப்பட்ட வாசகர்களையும் கவரும் வகையில் அமைந்திருந்தல். யாழ் சார்ந்து வருடாந்த சமூக.. சமய.. நூல் வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவி அதனை மக்கள் மத்தியில் இன்னும் இன்னும் அறிமுகம் செய்தல். யாழை தன்னார்வ அடிப்படையில் விளம்பரப்படுத்த உறுப்பினர்களை ஊக்குவித்தல்.. குறிப்பாக யாழில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு பிரபல்யம் அடைந்தோர்.. தங்கள் நூல் வெளியீடுகளைச் செய்யும் போது.. யாழுக்கான விளம்பரத்தை தன்னார்வ அடிப்படையில் இலவசமாக பதிவு செய்து கொடுத்தல். நன்றிக்கடன் காண்பிப்பது.

சவால்: விளம்பர இணையத்தளங்களின் பெருக்கம், போட்டி அதிகரித்துள்ளமை. இணையத்தள மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பம் விரைந்து மாறிச் செல்கின்றமை. இணையத்தளங்கள் மீதான விதி மற்றும் சட்ட அமுலாக்கங்களும் மாற்றங்களும் மேலும் அதிகரித்துச் செல்லும் இணையத் தாக்குதல் (ஹாக்கிங்) வாய்ப்பு.

scenario analysis and strategic report :

1. யாழ் தொடர்ந்து அங்கத்தவர்களின் செயற்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இன்றைய செயற்பாட்டு நிலை சரியான வகையில் வழிகாட்டப்பட்டு சரியான திசை நோக்கி ஊக்கம் பெறாவிடில்.. அதன் சந்தை நிலை மந்தமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

2. இன்றைய நிலை தொடர்ந்தால் பார்வைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி தென்படும்.

3. தொடர்ந்து இலாபம் சம்பாதிப்பதில் அக்கறை செய்யவில்லையேல்.. அதன் மெருகூட்டல் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

4. யாழினை கண்காணிக்க நிர்வகிக்க கிரமமாக ஒரு நிபுணத்துவ உதவி பெறப்படவில்லையேல் யாழ் தொழில்நுட்ப ரீதியாக போட்டியை சமாளிக்கச் சிரமப்படும் நிலை தொடரும்.

5. ஆக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் வகைகளுக்கு ஏற்ப அவை வாசகர்களின் பார்வைக்கு இலகுவாக சென்றடையும் வகையில் முகப்பில் தோற்றமளிக்கச் செய்யப்படின்.. வாசகர்களின் கருத்தை கவனத்தை ஈர்ப்பது அதிகரிக்கும். கருத்துக்களத்தை விட முகப்பில் தகுந்த மாற்றங்கள் அடிக்கடி.. நிகழ்த்தப்பட்டாக வேண்டும். இன்றேல் வாசகர்களின் தாவல் அதிகரிக்கும்.

6. மக்களின் அரசியல் சமூக எண்ணோட்டங்கள் அறிந்து செய்திகளுக்கும் ஆக்கங்களுக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியம். அநேகம் மக்கள் வெறுக்கக் கூடிய ஆக்கங்களும் சர்ச்சைகளும் தொடரும் நிலை காணப்பட்டால்.. பார்வைகளில் தொடர் வீழ்ச்சி ஏற்படும்.

7. புதிய இணையத்தளங்களின் வரவுகள்.. விளம்பர இணையத்தளங்களின் உக்திகள் கண்காணிக்கப்பட்டு... அதற்கேற்ப யாழும் தன்னை மெருகூட்டிக் கொள்ள வேண்டும்.

8. விளம்பரங்கள் தனித்துவமான இலக்கோடு அமைவது அவசியம். மரண அறிவித்தலுக்கு ஒரு சிலர் அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்றால் யாழ்.. உல்லாசப் பயணம்.. கல்வி.. பிறந்த நாள்.. பட்டமளிப்பு.. கலை நிகழ்வுகள்.. விளையாட்டு நிகழ்வுகள்.. நூல் வெளியீடுகள்.. நகை மற்றும் உடை வர்த்தகம்.. சர்வதேச இணைய வர்த்தகம் என்று சமூகத்தின் இதர மற்றும் மக்களால் கெளரவம் என்று கருதப்படும் விடயங்கள் சார்ந்த விளம்பரங்களை வரவேற்று உள்வாங்கிக் கொள்வதோடு விளம்பர தாரர்கள் பயனடைவதை உறுதி செய்து கொள்ளின் யாழ் மெருகேற வாய்ப்பு அதிகம் உள்ளது.

9. அங்கத்தவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் கருத்துக்கள செயற்பாடுகள் அவசியம். உ+ம்: போக்குவரத்து போன்ற விளம்பரதாரர்கள் கருத்துக்கக்கள உறுப்பினர்களாகி.. உறுப்பினர் மட்டத்தில் தங்களின் நோக்குகளைக் கொண்டு செல்ல.. அவர்களை ஊக்குவிக்கவும் உற்சாகவும் படுத்தும் தன்மை. இது வெறும் பனர்களை ஒட்டும் விளம்பரதாரர்தளினதை விட மாறுபட்டது. யாழ் போன்ற கருத்துக்கள அடிப்படை இணையத்தளங்களுக்கு போக்குவரத்துப் போன்ற விளம்பர தாரர்களின் வரவு முக்கியம்.

10. யாழ் சர்ச்சை.. குழப்பங்களுக்கு ஆளானாலும்.. அங்கத்தவர்களின் பார்வையாளர்களின் இருப்பை.. தொடர் வரவை அதிகரிக்கும் தன்மையை நிலையை கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். அங்கத்தவர்கள் ஆக்கங்களை எழுதப் பின்நிற்கும் காரணங்களை கண்டறிவதோடு.. அவற்றிற்கு பரிகாரம் தேட வேண்டும். கருத்தெழுத.. ஆக்கங்களைப் படைக்க பயப்படுபவர்களுக்கு.. அதற்கேற்ப தகவல் காப்பு விதிமுறைகள் பலமாக உள்ளன என்பதையும் வாசகர்கள்.. உறுப்பினர்கள் கருத்தெழுத ஆக்கங்களைப் படைக்க பயம் தேவை இல்லை என்பதையும் இனங்காட்ட வேண்டும்.

11. யாழின் vision இல் இலாபம் நோக்கற்ற என்ற நிலை எனியும் தேவையா என்பதையும் அதன் சொந்தக்காரர் விரைந்து தீர்மானிக்க வேண்டும்.

12. நவீன தகவல்தொழில்நுட்பச் சவால்களையும் அதற்கேற்ப மக்களின் தேவைகள் மாறுபட்டுச் செல்வதையும் கருத்தில் எடுத்து யாழ் தன்னை அதற்கு ஏற்ப மக்களிடம் கொண்டு செல்ல முனைய வேண்டும். குறிப்பாக முகப்பில் கருத்துக்களத்தில் வெளியாகும் தரமான.. ஆக்கங்கள்.. மற்றும் கால நேர அடிப்படையில் பொழுதுபோக்கிற்கு ஏற்ப காணொளிகள்.. முந்தோன்றச் செய்யப்படுதல்.

13. அங்கத்தவர்களின் சமூக வலை இணையங்களில் வெளியாகும் யாழில் அல்லாத செய்திகளும் ஆக்கங்களும் முகப்பில் மற்றும் களத்தில் தென்பட சரியான வகையில் வகை செய்தல்.

14. தமிழில் எழுத பல உறுப்பினர்களுக்கு சரியாக அறிய முடியாமல் இருத்தல். பிறமொழி கலந்துரையாடல் பகுதி சுருங்கி இருத்தல். மேலும் தமிழ் ஒலிவடிவ ஆக்கங்களுக்கு தனிப்பகுதி இன்மை. தங்கிலிஸ் பகுதி இன்மை. இவை தமிழ் அறிந்த ஆனால் தமிழில் எழுத வராத.. தமிழை வாசிக்க முடியாத தமிழ் சந்ததிக்கு இங்கு இடமின்றிய நிலை இன்றும் தொடர்கிறது. ஒலி வடிவ ஆக்கங்கள் உ+ம்: தமிழ் மற்றும் பிற மொழி காணொளிகளுக்கு சரியான பகுதிகள் அமைக்கப்பட்டு அவை முகப்பில் dynamic முறையில் தோன்ற வகை செய்யப்படுதல் அவசியம்.

நன்றி.

(இப்படி அறிக்கையை தயாரிக்க.. ஆகும் செலவு ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு என்றால் (கொஞ்சம் அதன் உள்ளக தரவுகளையும் வெளியக தரவுகளையும் ஆராய்ந்து உருப்படியாகச் செய்தால்) சில நூறு பவுண்கள் ஆகும்.) யாழிற்கு இலவசம். :):icon_idea:

Link to comment
Share on other sites

தங்கள் ஆய்வு சிறப்பாக உள்ளது. பொறுப்பில் உள்ளவர்கள் ஆலோசனைகளை உள்வாங்கி தொழிற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். நிர்வாக கருமங்களில் உள்ள தேக்கத்தை நீக்குவதற்கு அவர்கள் முதலில் முன்வர வேண்டும். இழுத்து அடிக்காமல் சுறுசுறுப்பான காரியங்களை சிந்தித்து செய்யகூடிய தங்களை போன்றவர்களுடன் நிர்வாகத்தினர் வேலை சுமையை பகிர்ந்து கொள்ளலாமே? நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.