Jump to content

விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, தனது மகனை.... 22 வயதில், உயர்ந்த நிலைக்கு கொண்டு வர.....
அவர் பாவித்த, பெல்ட் தான் காரணம் என்று.... யாராவது இங்கு எழுதினால்,
நான்... சும்மா, இருக்க மாட்டன். :D

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்தை.. தனயன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். :)

 

ஒரு சந்தேகம்... உங்கள் மகன் பொறியலாளராக படிப்பதாக முன்னர் இங்கு யாழில் சொல்லி இருந்தீர்கள். இப்ப ஏன் வங்கியில் வேலை..???!

 

அவரவர் படித்த துறையில் வேலை செய்வது தான்.. உண்மையில்.. அவர்களுக்குப் பலமும்.. உயர்வும் தரும். அத்தோடு அந்தத் துறைக்கு ஏதேனும்.. விசேடம் நடக்கவும் உதவும். வங்கியில் வேலை செய்தும்.. முன்னுக்கு வரலாம்.. அதற்கு ஏன் பொறியியல் பட்டம்.. அதற்கு.. CIMA அப்படி இப்படி படிப்புகள்.. போதுமே..???! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம்

தன்னுடைய 22 ஆவது வயதிலையே பட்டப்படிப்பை முடித்து பிரான்சின் முன்னணி வங்கி ஒன்றில் வேலைக்கு அமர்ந்திருக்கும்

அவருடைய அன்பு மகன் மேலும் மேலும் முன்னேறி தந்தைக்கும் தாயகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமைதேடித்தர வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை கூறி இந்த யாழ் கள குடும்பத்தின் மூத்த உறவு ஒருவரின் இந்த சந்தோஷமான தருணத்தில் மகனை இந்தளவு தூரத்துக்கு வளர்த்து விட்ட விசு அண்ணாவையும் தந்தையின் ஆசை அறிந்து அதை பூர்த்தி செய்த அவருடைய மகனையும் வாழ்த்தலாம் வாங்க

 

 

நன்றி  சுண்டல்

 

அவன் 03 ஐப்பசி 1991 இல் பிறந்தான்

அதனால் 

18 வயதுக்கு முதலே  (யூன் 2009) யூனிக்கு  தெரிவானான்

20 வயசில் (3 வருடப்படிப்பு) 

எஞ்சினியர் பட்டம் பெற்றான் (யூன் 2012)

22 வயசில் MASTER ll  முடித்துவிட்டான்

 

எங்கும் நின்று  தங்கி

தள்ளாடாது தனது படிப்பை ஒரே பிடியில் முடித்துள்ளான்

இதுவும் ஒரு சாதனை  தான்

 

அத்துடன் நான் ஏழாவது பிள்ளை  எனது குடும்பத்தில்.

எனது

மற்றும் எனது மனைவி  குடும்பத்தின் முதலாவது எஞ்சினியர் என்ற  பெருமையையும் பெறுகின்றான்.

 

நன்றி  தம்பி சுண்டல்

நேரத்துக்கும் அன்புக்கும்

உங்கள் எல்லோரையும்  நான் என் பிள்ளைகள் போலத்தான் பார்த்து

ஊக்கவித்து வருகின்றேன்

வாழ்க  வளமுடன்...

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும். :D 

 

நன்றி  பாட்டி (படத்தை  பார்த்த பின் அவ்வாறு தோன்றாது விட்டாலும்  நீங்கள் என்னைப்பார்க்காதவரை  ... :D )

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்

அது தொடர்ந்து வேண்டும்...

மேலும் பல சாதனைகள படைத்திட விசுக்கு அண்ணனின் அண்ணா மகனுக்கு வாழ்த்துக்கள் 

 

நன்றி  சகோதரி

உங்கள் எல்லோரையும்  நான் என் பிள்ளைகள் போலத்தான் பார்த்து

ஊக்கவித்து வருகின்றேன்

வாழ்க  வளமுடன்

தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச் செயல் மகனின் முன்னேற்றத்திற்கு எமது வாழ்த்துக்கள்

 

நன்றிகள் அக்கா

உங்கள் வாழ்த்துக்கிடைக்க  கொடுத்து  வைத்திருக்கணும்

இவை  என் பிள்ளையைக்காத்து நிற்கும்

 

யாழ் களம் எப்பொழுதும் ஊரார் பிள்ளையை  ஊட்டி  வளர்த்தே வந்திருக்கிறது

அதற்குள்  நானும் இருந்திருக்கின்றேன்

எனவே எனது பிள்ளை  வளரும்

இது தானே  தர்மம்

நன்றியக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும்

 

நன்றி  சகோதரா

உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நேரத்திற்கும்..

 

தமிழருடைய தாகம் நிறைவேறவேண்டுமென்றால்

பொருளாதாரத்திலும்

அறிவாற்றலிலும் நாம் வளரணும்

 

 

வீதிவீதியாக

நின்று கத்திய  எனது குரலுக்கு மதிப்பிருக்கவில்லை

இந்த உலகம் எதற்கு தலை சாய்க்கிறதோ

அந்த  வழிகளை  நாம் தொடணும்

ஒரு தமிழனாக நான் அதைத்தொடுவேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், ஜூனியர் விசு.

 

நன்றி  ஐயா

 

உங்கள் வாழ்த்துக்களை  பெற  தவம் செய்திருக்கணும்

முகம் காணாத உறவுகள் நாம்

எம்மை  இணைத்தது

ரத்த சம்பந்தமான இன உணர்வு மட்டுமே

அதற்குள் நின்று கொண்டு நாம் செய்யும் காரியங்கள் அத்தனையையும்  செய்கின்றோம்

மனப்பூர்வமாக ஒருவரை ஒருவர் அரவணைத்து

பாராட்டி  சீராட்டி வாழ்த்தி

கடினகாலங்களில் ஆறுதல் கூறி என நாம் இங்கு ஆற்றும் பணிகள் 

பெருமையடைய  வைப்பவை.

 

உங்கள் போன்றோர்

எம்முடன் நிற்பது என்பது பெரும் தோள் கிடைத்தது போன்றது எமக்கு....

 

நன்றிஐயா

வாழ்த்துக்கும்  அன்புக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  செல்வன் விசுவுக்கு...! :D

 

மாதா பிதாவை மதித்து வாழ்ந்தால் மென்மேலும் சிறப்புக்கள் கிட்டும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  விசுகு அண்ணாவுக்கும் , மகனுக்கும். தந்தையின் கனவை நனவாக்கிய மகனுக்கு பாராட்டுக்கள். இதற்கு விசுகு அண்ணாவின்  பக்க பலம் நிச்சயம் கை கொடுத்து இருக்கும்.

 

 

நன்றி  நுணா

 

1983 ஆவணியில் உயர்தரப்பரீட்சைக்கு தயாராக  இருந்தேன்

யூலை 24 இல் சிங்களம் உடுத்த உடுப்புடன் அனுப்பி  வைத்தது

கனவு கலைந்து

என்ன  செய்வது என்று தெரியாது தவித்த என்னை

குடும்பநிலை பிரான்சுக்கு தள்ளியது

 

வந்து விழுந்த நான் 

1- தாயையோ

2- குடும்பத்தையோ

3- ஊரையோ

4- தாயகத்தையோ மறக்கவில்லை...

 

அன்றிலிருந்து உழைத்தேன்

செய்ய முடிந்த அத்தனை  வேலைகளையும் செய்திருக்கின்றேன்

வந்ததிலிருந்து அதிகமாக 2 வேலைகள் செய்து வந்திருக்கின்றேன்

 

உழைத்ததை

எனது நேரத்தை

இந்த 4 பகுதிக்கும் கொடுத்தேன்

அதற்கான எனது குடும்பம் இன்று உள்ளநிலை

மற்றும் பிரான்சில் எனக்கிருக்கும் மதிப்புக்கள்   சாட்சி

 

 

அதேநேரம் எனக்காக வாழ்ந்ததில்லை

இதுவரை எனக்கென்று நிலையான  சொத்து எதையும் பிரான்சிலோ

உலகின் எந்த மூலையிலோ வாங்கியதில்லை

வீடு உட்பட...

காரணம்

எனக்கென்று ஒரு குறியுண்டு

அது தாயகம் நோக்கி  மட்டுமே இருந்தது

இருக்கிறது

அதை  அடைய நான் சொத்து சேர்ப்பது  இடைஞ்சலாகிவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தேன்.

தேசியத்துக்காக உழைப்பவர்கள் கச்சான் வாங்கி  சாப்பிடுவதே 

வாதத்துக்குரிய  பொருளாவதை  கண்டிருக்கின்றேன்.

 

அந்தவகையில் எனது முதலாவது சொத்து பாசாகி  வெளியில் வந்துள்ளது

இதுவே எனது முதல்ச்சொத்து

இதைக்கூட

2004 இல் அங்கிருந்து நான் அனுமதியுடன் வெளியே  வந்திருக்காது விடில்

செய்து முடித்திருக்கமுடியாது

இது தான் உண்மை.

 

நுணா  என்றவுடன் கொஞ்சம் உரிமையுடன் அதிகமாக எழுதுகின்றேன் என்று நினைக்கின்றேன்

காரணம்

யாழில் இன்னும் எவ்வளவு காலம் இருப்பேன் என்று தெரியவில்லை

இடம் மாறுவதற்கான முயற்சிகளில் உள்ளேன்

எந்த நேரமும் எழுதுவது தடைப்படலாம்

அதனால் விசுகு அண்ணா பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்

அவரது தேசியப்பற்று என்பது அப்பழுக்கற்றது

ஒரு சிலரது  நடவடிக்கைகளை  மட்டும் வைத்துக்கொண்டு

எல்லோரையும் ஒரே கூடைக்குள் போடுவதை அனுமதிக்காதீர்கள்

அதைத்தான் யாழில் நான் தொடர்ந்து காப்பாற்றிவருகின்றேன் ...

 

நன்றி  நுணா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் .ஆரோக்கியமான அடுத்த தலைமுறை ஒன்று உருவாகட்டும் .

 

நன்றியண்ணா

 

ஆரோக்கியம்

பயங்கரவாதம்

வன்முறை

இவை  பற்றி  எந்தவித வரையறைகளும் இவ்வுலகில் இதுவரை இல்லாததே

இன்றைய  எமது நிலைக்கு காரணம்

 

நீங்கள் நாம் மாறணும்  என்ற நிலையிலும்

நான்

நாம் எதற்கு மாறணும்

உலகம் மாறணும் என்றநிலையிலும் உள்ளோம்

காலம் தான் பதில் தரணும்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.....! உங்கள் மகனிடமும் எம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிடுங்கள்.

 

 

நன்றி  சகோதரி

 

நிச்சயம் தெரிவிப்பேன்

கனடா  வந்தால்

உங்கள் எல்லோரையும் அவன்  சந்திப்பான்..

விசுகருக்கும் அவர் மகனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

 

நன்றியண்ணா

 

உங்கள் வாழ்த்துக்கிடைக்க  கொடுத்து வைத்திருக்கணும்

 

உடம்பைக்கவனியுங்கள் அண்ணா

எங்கள் சொத்தண்ணா  நீங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையை... பெற்று, வளர்த்து, கல்வி கற்பித்து, நல்ல மனிதனாக உருவாக்க பெற்றோர் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்.

அவர்களின் கனவை, நனவாக்கிய.... ஜூனியர் விசுகுக்கு பாராட்டுக்கள். :)

 

 

நன்றி  சிறி

 

அவன் பிறப்பாலேயே  ஒரு நல்ல பிள்ளை....

இதுவரை

எனக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டான்

உண்மையில் இவ்வாறு பிள்ளைகள் அமைவது   தெய்வ  வரம்

அதை நான் பெற்றிருக்கின்றேன் என்று தான் சொல்வேன்

இதுவரை கடின  காலப்பகுதிகளைத்தாண்டியாயிற்று 

இனி 

கொஞ்சம் அவிட்டு விடலாம் :icon_idea:

மேலும் பல சாதனைகள படைத்திட விசுகு மகனுக்கு வாழ்த்துக்கள் 

 

நன்றி  தம்பி  கறுப்பி

நேரத்துக்கும்  வாழ்த்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவின் மகனுக்கும் பெற்றோர்க்கும் எமது வாழ்த்துகள்!

 

 

நன்றி  தம்பி  மகம்

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள் சேவை  யாழுக்கு பெரும் பணி  செய்கிறது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணாவுக்கும், அவரது இளவலுக்கும்.. :D

 

நன்றி  தம்பி

இளவலை

எனது இளவலிடம் (உங்களிடம் :icon_idea: ) ஒருக்கா அனுப்பி  எடுக்கணும்

பார்க்கலாம்

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

வாழ்க  வளமுடன்

 

வாழ்த்துக்கள் !
சுவர் இருந்தால்தானாம் சித்திரம் வரையலாம். சுவர்களை நல்ல அத்திவாரம் போட்டு கட்டவேண்டும்.

 

 

நன்றி  தம்பி

 

அத்திவாரம் என்று நான் நினைப்பவை

அடைந்தவை

 

நான் இறந்தால் 3 கொடிகள் என்மீது விழும் என்று  என் மக்களுக்கு நான் சொல்வதுண்டு

ஒன்று எனது குடும்பக்கொடி

இரண்டு ஊர்க்கொடி

மூன்று தாயகக்கொடி

(நாலாவதாக பிரெஞ்சுக்கொடியும் விழும். ஆனால்  நேரம் தான் இல்லை)

இது தான் எனது அத்திவாரம்

அந்த வழியில் நிச்சயம் என் பிள்ளைகள்

அததிவாரத்தைக்காப்பாற்றும்

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

வாழ்க  வளமுடன்

வாழ்த்துக்களும்  பாராட்டுக்களும்

 

 

நன்றி  சகோதரா

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

வாழ்த்துகள்!!

 

 

நன்றி  ஐயா

 

எமது சொத்து ஒன்று  நீங்கள்

உடம்பைக்கவனியுங்கள்......

 

வாழ்த்துக்கள் விசுகு.!

உங்கள் மகனிடமும் எம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவிடுங்கள்.

 

 

நன்றி  சகோதரா

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகருக்கும், மகனுக்கும் நல் வாழ்த்துக்கள்!

 

நல்லதொரு குடும்பம், ஒரு பல்கலைக்கழகம்!

 

நன்றி  அண்ணா

 

உங்களது வாழ்த்து

எனக்கு இரட்டிப்பு மகிழ்வு தரக்கூடியது

நல்லதொரு குடும்பம், ஒரு பல்கலைக்கழகம்!

நிச்சயமாக

முன்னோர் செய்த புண்ணியங்கள்

கிராஞ்சியம்பதி கந்தன் கருணை

வாழ்த்துக்கள்  விசுகு அண்ணாவுக்கும் , மகனுக்கும். தந்தையின் கனவை நனவாக்கிய மகனுக்கு பாராட்டுக்கள். இதற்கு விசுகு அண்ணாவின்  பக்க பலம் நிச்சயம் கை கொடுத்து இருக்கும்.

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள் சேவை  தாயகத்துக்கு பெரும் பணி  செய்கிறது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்

வாழ்த்துக்கள் அண்ணா மகனுக்கு

 

நன்றி  சுமே

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள்   முயற்சிகளுக்கு  வெற்றி  கிடைக்கட்டும்

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்

ஜூனியர் விசுகருக்கு வாழ்த்துக்கள்

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

வாழ்க  வளமுடன்

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும்

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள் சேவை  யாழுக்கு பெரும் பணி  செய்கிறது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்

மேலும் பல சாதனைகள படைத்திட விசுகு மகனுக்கு வாழ்த்துக்கள்

 

நன்றி  தம்பி  உடையார்

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

அடிக்கடி காணக்கிடைக்குதில்லை?

வாழ்க  வளமுடன்

விசுகு, தனது மகனை.... 22 வயதில், உயர்ந்த நிலைக்கு கொண்டு வர.....

அவர் பாவித்த, பெல்ட் தான் காரணம் என்று.... யாராவது இங்கு எழுதினால்,

நான்... சும்மா, இருக்க மாட்டன். :D

 

 

அண்மையில்

ஒரு பிள்ளை  குழப்படி செய்தபோது

அந்தப்பிள்ளையை  எனது அப்பாவிடம் சில  நாட்கள் விட்டு எடுக்கவேண்டும் என அவன் சொன்னான்

அதன்படி

பெல்ட்டினால்

தான் ஒழுங்காக வளர்க்கப்பட்டிருப்பதாக அவன் உணர்ந்துள்ளான்

எனவே அதுவும் ஒரு காரணம்

கண்டிப்புடனான வளர்ப்பு என்பது ஒரு தகப்பனின் கடமை.

எனது வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள்மகனுக்கும் உரித்தாகட்டும்.

 

 

நன்றி  சகோதரா

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள் மீது எனக்கு தனிப்பட  ஒரு பிரியம் உண்டு

அது எதனால் எனத்தெரியவில்லை

ஆனால் நீங்கள் புதியவர் அல்ல என்று மட்டும் எனது மனம் சொல்கிறது

அதற்காக நீங்கள் முகம் காட்டவேண்டாம்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.....! உங்கள் மகனிடமும் எம் பாராட்டுக்களை தெரிவித்துவிடுங்கள்

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

உங்கள் சேவை  யாழுக்கு பெரும் பணி  செய்கிறது

தொடருங்கள்

வாழ்க  வளமுடன்

வாழ்த்துக்கள் விசுகு

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

தொழில் எப்படி போகிறது

வருகின்ற  மாதக்கடைசியில் ஒரு கிழமை அங்கு நிற்பேன்

முடிந்தால் சந்திக்கலாம் (மகனுடன்)

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்தை.. தனயன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். :)

 

ஒரு சந்தேகம்... உங்கள் மகன் பொறியலாளராக படிப்பதாக முன்னர் இங்கு யாழில் சொல்லி இருந்தீர்கள். இப்ப ஏன் வங்கியில் வேலை..???!

 

அவரவர் படித்த துறையில் வேலை செய்வது தான்.. உண்மையில்.. அவர்களுக்குப் பலமும்.. உயர்வும் தரும். அத்தோடு அந்தத் துறைக்கு ஏதேனும்.. விசேடம் நடக்கவும் உதவும். வங்கியில் வேலை செய்தும்.. முன்னுக்கு வரலாம்.. அதற்கு ஏன் பொறியியல் பட்டம்.. அதற்கு.. CIMA அப்படி இப்படி படிப்புகள்.. போதுமே..???! :rolleyes:

 

 

அவன் பொறியியலாளர் தான்

வங்கியில் பொறியியலாளர்

(தற்பொழுது பொருளாதாரச்சிக்கலுக்குப்பின் கணக்காளர்களைக்குறைத்து பொறியியலாளர்களையே அதிகம் வங்கிகள் பயன்படுத்துகின்றன. இங்குள்ள வங்கியில் (Société Générale)  மட்டும் 12 தமிழ் பொறியியலாளர்கள் வேலை செய்வதாக ஒரு தகவலை முன்னர் ஒரு இடத்தில் நான் எழுதியதாக ஞாபகம்)

 

அவனது படிப்பு

Diplôme de Licence sciences et technologies (2012)

Majeure Architecte des Systèmes d’Informations (2014)

 

இது படிப்பின் கடைசி  வருடம் என்பதால் 6 மாதம் பரீட்சார்த்துக்காகவே வங்கிக்குள் போனான்

அவர்கள் 4 பதவிகளை  அவனுக்கு பரிந்துரைத்து

ஏதாவது ஒன்றை  நீயே தெரிவு  செய்யலாம் என சொல்ல

அவன் ஒரு 50 வயசுள்ள

வேலை

வங்கி

அரசியல்

விளையாட்டு என நல்ல அனுபவம் உள்ள  ஒருவரின் கீழ்  வேலை செய்யலாம் என்று என்னிடம் கேட்டான்

உன்  விருப்பம் என நானும் தலையாட்ட அதையே  தெரிவு செய்தான்.

 

நன்றி  தம்பி  

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

 

வாழ்க  வளமுடன்

Link to comment
Share on other sites

விசுகு, உங்கள் மகனுக்கு என் இனிய வாழ்த்துக்கள். மேலும் மேலும் உயரம் எட்டி சிகரம் தொடட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகனுக்கு வாழ்த்துக்கள் ஐயா, 

 
நீங்கள் பட்ட கஷ்டங்களை பிள்ளைகள் அனுபவிக்ககூடாது என அவர்களுக்காக பல விடயயங்களை தியாகம் செய்துள்ளீர்கள். உங்களுக்கும் பாராட்டுக்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயாவின் மகனுக்கு மென்மேலும் உயரங்களை விரைவாகத் தொட வாழ்த்துக்கள்.

நெடுக்ஸின் கேள்வி சிறு ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. மருத்துவத்துறையை அல்லது சட்டத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் அத்துறையிலேயே தொடர்ந்து வேலை செய்து இளைப்பாறுவர். எனினும் பொறியியல் துறை என்பது அடிப்படையில் கணிதவியலாகவே இருக்கும் என்பதால் எந்தத்துறையிலும் இலகுவாக நுழைந்து வேலை செய்யக்கூடியதாக இருக்கும். விசுகு ஐயாவின் மகன் பொறியியலையும் அதன் பின்னர் information system இல் master உம் செய்துள்ளார். High frequency trading மூலம் அதிக பணத்தை உழைப்பதற்கும், risk modelling, investment modelling போன்றவைக்கும் கணிதமும், கணணி அறிவும் தேவையான பொறியியலாளர்களே வங்கிகளுக்குத் தேவை. இத்தகைய வேலைகளுக்கு CIMA சரிவராது.

பெயர்போன பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள் பலர் பொறியியல் துறைக்குள் நுழையாது நேரடியாகவே investment banking, consultancies என்று போய் இன்று president, vice president என்று இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயாவின் மகனுக்கு மென்மேலும் உயரங்களை விரைவாகத் தொட வாழ்த்துக்கள்.

நெடுக்ஸின் கேள்வி சிறு ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. மருத்துவத்துறையை அல்லது சட்டத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் அத்துறையிலேயே தொடர்ந்து வேலை செய்து இளைப்பாறுவர். எனினும் பொறியியல் துறை என்பது அடிப்படையில் கணிதவியலாகவே இருக்கும் என்பதால் எந்தத்துறையிலும் இலகுவாக நுழைந்து வேலை செய்யக்கூடியதாக இருக்கும். விசுகு ஐயாவின் மகன் பொறியியலையும் அதன் பின்னர் information system இல் master உம் செய்துள்ளார். High frequency trading மூலம் அதிக பணத்தை உழைப்பதற்கும், risk modelling, investment modelling போன்றவைக்கும் கணிதமும், கணணி அறிவும் தேவையான பொறியியலாளர்களே வங்கிகளுக்குத் தேவை. இத்தகைய வேலைகளுக்கு CIMA சரிவராது.

பெயர்போன பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள் பலர் பொறியியல் துறைக்குள் நுழையாது நேரடியாகவே investment banking, consultancies என்று போய் இன்று president, vice president என்று இருக்கின்றார்கள்.

 

பல முன்னணி முகாமைத்துவ மேதைகள்.. பொறியிலாளர்கள் என்பதையும்.. பெரிய வணிக.. முகாமைத்துவ தத்துவங்களை வகுத்தவர்கள் என்பதையும்.. முகாமைத்துவம் கற்றவன் என்ற வகையில் தெரியும். குறிப்பாக.. போட்டர் (Michael Porter) போன்றவர்கள். இன்று IT மற்றும் வியாபார முகாமைத்துவம் என்பது எல்லா நிறுவனங்களிலும் எல்லாத் துறைகளுக்கும் அவசியம் என்றாகிவிட்டது. மருத்துவத்துறை சார்ந்த கல்விகளில் கூட.. இப்போது..IT மற்றும் முகாமைத்துவக் கல்விகள் புகுத்தப்பட்டு வருகின்றன.

 

விசுகு அண்ணாவைப் பொறித்த வரை.. மகன் பொறியியலில் சிறந்து விளங்கனும் என்று ஆசைப்பட்ட ஒருவர். மற்றும் அவர் மகனின் பொறியல் படிப்புத் துறை பற்றி இப்போது தான் அறிந்து கொள்ள முடிகிறது.

 

எங்களுக்குத் தெரிய சிலர் பொறியியல் படித்துவிட்டு.. வங்கியில்.. காசாளராக கூட வேலை செய்கிறார்கள். வங்கிகளின் பெயர்.. செல்வாக்குக்காக.. அப்படி இணைந்து கொள்கிறார்கள். சம்பளம்.. வெகு கம்மி. அப்படி ஒரு நிலையோ என்று தான்.. சந்தேகத்தை வெளிப்படுத்தி இருந்தோம். அதற்கு அவர் நல்ல விளக்கம் அளித்திருக்கிறார் தானே கிருபண்ணா. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும் என்பது திருவள்ளுவரின் கூற்றுகளில் ஒன்றாகும். அத்தகைய செல்வத்தை தன்மகன் பெறுவதற்கு உதவிய விசு அவர்களுக்கும் அவர் குடும்பத்துக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்!!
 
"அவன் பிறப்பாலேயே  ஒரு நல்ல பிள்ளை....
இதுவரை
எனக்கு பிடிக்காத எதையும் செய்யமாட்டான்
உண்மையில் இவ்வாறு பிள்ளைகள் அமைவது   தெய்வ  வரம்
அதை நான் பெற்றிருக்கின்றேன் என்று தான் சொல்வேன்
 
உழைத்ததை
எனது நேரத்தை
இந்த 4 பகுதிக்கும் கொடுத்தேன்
 
எனக்காக வாழ்ந்ததில்லை
இதுவரை எனக்கென்று நிலையான  சொத்து எதையும் பிரான்சிலோ
உலகின் எந்த மூலையிலோ வாங்கியதில்லை
வீடு உட்பட...
காரணம்
எனக்கென்று ஒரு குறியுண்டு
அது தாயகம் நோக்கி  மட்டுமே இருந்தது
இருக்கிறது
அதை  அடைய நான் சொத்து சேர்ப்பது  இடைஞ்சலாகிவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தேன்.
தேசியத்துக்காக உழைப்பவர்கள் கச்சான் வாங்கி  சாப்பிடுவதே 
வாதத்துக்குரிய  பொருளாவதை  கண்டிருக்கின்றேன்."
 
மேற்சொல்லப்பட்டுள்ள ஊட்டங்களைப் பின்பற்றும் மனிதர்களில் மனிதத்தைக் காணலாம். விசு அவர்களில் மனிதத்தைக் காண்கிறேன்.
 
Link to comment
Share on other sites

விசுகு அண்ணாவுக்கும் அவர் மகனுக்கும் வாழ்த்துக்கள்...!!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் பல .....

 

 

Link to comment
Share on other sites

விசுகு ஐயாவின் மகனுக்கு மென்மேலும் உயரங்களை விரைவாகத் தொட வாழ்த்துக்கள்.

நெடுக்ஸின் கேள்வி சிறு ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. மருத்துவத்துறையை அல்லது சட்டத்துறையைத் தேர்ந்தெடுப்பவர் அத்துறையிலேயே தொடர்ந்து வேலை செய்து இளைப்பாறுவர். எனினும் பொறியியல் துறை என்பது அடிப்படையில் கணிதவியலாகவே இருக்கும் என்பதால் எந்தத்துறையிலும் இலகுவாக நுழைந்து வேலை செய்யக்கூடியதாக இருக்கும். விசுகு ஐயாவின் மகன் பொறியியலையும் அதன் பின்னர் information system இல் master உம் செய்துள்ளார். High frequency trading மூலம் அதிக பணத்தை உழைப்பதற்கும், risk modelling, investment modelling போன்றவைக்கும் கணிதமும், கணணி அறிவும் தேவையான பொறியியலாளர்களே வங்கிகளுக்குத் தேவை. இத்தகைய வேலைகளுக்கு CIMA சரிவராது.

பெயர்போன பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள் பலர் பொறியியல் துறைக்குள் நுழையாது நேரடியாகவே investment banking, consultancies என்று போய் இன்று president, vice president என்று இருக்கின்றார்கள்.

 

எனது அனுபவமும் அதுவே .....பொறியியல் படிப்பது பல துறைகளில் உட்புக இலகுவாக இருக்கும் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் இன்னும் முன்னேறி வெற்றி நடைபோட வாழ்த்துகின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது தேசத்தின் ஆன்மாவில் மாவீரர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு. -தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்- தமிழர்களிற்கும் தமிழ் மாணவர்களிற்கும் எதிரான சிங்களத்தின் அடக்குமுறை வடிவங்கள் எப்போதும் மிகக் கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. அதனால் தான்; பாடசாலை மாணவப்பருவத்திலேயே சிங்களத்தின் அடக்குமுறைகளிற்கெதிரான கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் சிங்களத்திற்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாணவப்பருவத்திலேயே சிங்களத்திற்கெதிராக பொங்கியெழுந்த தன்மானத்தமிழன் லெப்.பரமதேவா வீரச்சாவடைந்து 25 ஆண்டுகள் கழிந்து விட்டன.முன்னர் கோட்டமுனை மகாவித்தியாலயம் எனவும் தற்போது மட்டு இந்துக்கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற பாடசாலையிலேயே பரமதேவா கல்வி கற்றுக்கொண்டிருந்தார். 1975ம் ஆண்டு வைகாசி மாதம் 22 ம் திகதி சிறிலங்கா குடியரசு தினத்தை பகிஸ்கரித்து மாணவர்களை அணிதிரட்டி போராடியதற்காக சிங்கள அரசாலும் அந்நாளில் சிங்களத்தின் அடிவருடியாக செயற்பட்ட இராஜன் செல்வநாயகம் போன்றவர்களின் முயற்சியாலும் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பரமதேவா பின்னர் வடக்கு கிழக்கெங்கும் பரமதேவாவின் இடைநிறுத்தத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மாணவர் எழுச்சிப் போராட்டத்தினைத் தொடர்ந்து மீண்டும் பாடசாலையில் இணைக்கப்பட்டார். இயல்பாகவே திறமையான மாணவனான பரமதேவா தனது கல்வி தனது எதிர்காலம் என்று மட்டும் சிந்தித்து இருந்தால் ஒரு வைத்தியராகவோ பொறியியலாளராகவோ போயிருப்பார். அந்த சிறுவயதிலேயே தமிழர்களை தமிழை நேசித்தமையால் கல்வி கற்கின்ற காலத்திலேயே பல இன்னல்களை அடையவேண்டி ஏற்பட்டது. மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான பல அகிம்சைப் போராட்டங்களைத் தமிழர்கள் பலர் முன்னெடுத்தனர். இவ் அகிம்சைப்போராட்டங்கள் எவ்வித பயனையும் தராதென உணர்ந்த பரமதேவாவும் அவரைப்போல தீவிர எண்ணங்கொண்ட தமிழ் உணர்வான இளைஞர்களும் சிங்களத்திற்கெதிராக தம்மாலான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். இதனால் 1977ம் ஆண்டிலிருந்தே பரமதேவா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டி இருந்தது. அக்கால கட்டத்திலே தமிழர் தாயகப்பகுதியெங்கும் சிங்களத்திற்கெதிரான எதிர்ப்பு பல வழிகளிலும் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது. மட்டக்களப்பில் சிங்களத்திற்கெதிரான நடவடிக்கைகளிற்கு தேவையான பணத்தைப் பெறுவதற்காக 1978ல் செங்கலடி மக்கள் வங்கிப்பணத்தைப் பிறித்தெடுப்பதில் ஈடுபட்ட பரமதேவா அச்சம்பவத்தில் பொலிசாருடன் ஏற்பட்ட மோதலில் கையில் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார். காலங்காலமாகவே தமிழர்க்கு எதிராக செயற்படும் சிங்களத்தின் நீதித்துறை தமிழினத்தின் விடுதலையை நேசித்த குற்றத்திற்காக 1981ல் பரமதேவாவிற்கு 8 வருட கடுங்காவல்த் தண்டணையை வழங்கியது. எதுவித பதற்றமோ குழப்பமோ இல்லாது புன்னகை சிந்திய முகத்துடன் இத்தண்டணையை ஏற்ற பரமதேவா தாய் மண்ணிற்கான போராட்டத்தில் நீண்டகால சிறைவாசத்தை அனுபவித்தார். போஹம்பர, வெலிக்கடை, நியூமகசீன், மகர ஆகிய சிறைகளில் எல்லாம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவா 1983 யூலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள அரச காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டார். மட்டக்களப்பு சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறையை உடைத்துக்கொண்டு தப்பி ஓடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக மட்டக்களப்பை சேர்ந்தவராகப் பரமதேவா இருந்ததனால் அவரிடமே அதிக உதவிகளை எல்லோரும் எதிர்பார்த்தனர். 1983 புரட்டாதி 22ம் திகதி பரமதேவாவின் பெரும் பங்களிப்புடன் மட்டு சிறையை உடைத்து தமிழ்க்கைதிகள் தப்பி ஓடினர். தனது தண்டனைக்காலம் முடிவடைய குறுகிய காலமே இருந்த போதும் அனைத்துத்தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதற்காக சிறையுடைப்பில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்தி தானும் தப்பிப்போனார் பரமதேவா. சிறையிலிருந்து மீண்ட பரமதேவா தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் மீதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தின் மீதும் அந்த ஆயுத போராட்டத்தின் மூலமே தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறமுடியும் என்று மிகத்திடமாக நம்பியதால் தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று ஒரு விடுதலைப்போராளியாக தனது வாழ்வைத் தமிழ் மண்ணில் தொடங்கினார். இந்தியாவிலே முதலாவது அணியில் பயிற்சியை முடித்த பரமதேவா ஒரு கொரில்லா வீரனாகத் தமிழீழம் திரும்பினார். தாயகம் திரும்பிய பரமதேவா ஒட்டிசுட்டான் பொலிஸ்நிலையம் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல், கொக்கிளாயில் இராணுவத்தின் மீதான கொரில்லா தாக்குதல் போன்றவற்றில் முன்னின்று பணியாற்றினார். இதைத்தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு தாக்குதல்ப்பிரிவு தளபதியாக மட்டக்களப்பு சென்ற பரமதேவா விசேட சிங்கள பொலிஸ் கொமோண்டோக்களைக் கொண்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம் மீதான தாக்குதலிற்கு தலைமை தாங்கி உறுதியுடன் முன்னணியில் நின்று போரிட்டு அக்களத்திலேயே அவ்வீரன் வீரச்சாவை அணைத்துக்கொள்கிறார். அவருடன் சேர்ந்து இத்தாக்குதலில் முன்னின்று போராடிய மகிழடித்தீவைச் சேர்ந்த ரவி எனப்படும் தம்பிப்பிள்ளை வாமதேவன் என்ற இளம் கொரில்லா போராளியும் வீரச்சாவடைந்தார். 1983 புரட்டாதி 23ல் தாம் கற்பனையில் மேற்கொண்ட சிறை உடைப்பிற்காக சிலர் அதன் ஓராண்டு நிகழ்வுகளை ஆரவாரப்படுத்திக் கொண்டாடிக் கொண்டிருக்கையில் சிறையுடைப்பில் பெரும் பங்காற்றிய பரமதேவா ஒரே வருடத்திற்குள் தன்னை ஒரு முழுமையான போராளியாக மாற்றி தாய் மண்ணிற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்கிறார். ஒரு மனிதன் பிறந்து சாதாரணமாக வாழ்ந்து இறந்து போகின்றான் அவனின் வாழ்வு அத்துடன் முடிவடைகிறது. ஆனால் ஒரு மனிதன் போராளியாக வாழ்ந்து இறந்து போனால் அவர்கள் என்றுமே வாழ்ந்து கொண்டிருப்பார்கள், யாராவது அந்த போராளிகளைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் என்று பரமதேவா கூறுவாராம். மனிதவாழ்வு பற்றிய புரிதல் பரமதேவாவிற்கு எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதுபற்றி இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். பொலிஸ் நிலையத் தாக்குதலில் பொலிசாரின் குண்டுபட்டு காயப்பட்ட பரமதேவாவைத் தூக்குவதற்காக சென்ற போராளியிடம் எனது அம்மாவிடம் சொல்லுங்கள் உங்கள் மகன் பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது வீரச்சாவடைந்து விட்டார் என்று சொல்லி இருந்தாராம். இறக்கும் தறுவாயிலும் அந்த வீரனுக்கு இருந்த உறுதியும் வீரமும் எப்போதும் மெய் சிலிர்க்க வைக்கும். சிங்களத்தின் தமிழர்கள் மீதான அடக்கு முறையும் இன சுத்திகரிப்பும் கிழக்கில் தமிழ்மக்களை எப்போதும் மிக மோசமாக பாதித்தே வந்துள்ளது. குறிப்பாக மட்டு அம்பாறை மாவட்டத்தில் சிங்களத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடூர வன்தாக்குதல்கள் அம்மக்களிற்கு சுதந்திரத்தின் பெறுமதியையும் விடுதலையின் மீதான வேட்கையையும் எப்போதும் உணர்த்தியே வந்துள்ளது. அதுவே பல உன்னதமான விடுதலைப்போராளிகளை தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மட்டு மண் வழங்கக் காரணமாக இருந்துள்ளது. 1984 புரட்டாதி 22ம் திகதி மட்டு மண்ணின் முதல் விதையாக மண்ணில் விழுந்த பரமதேவாவின் விடுதலைக்கனவை சுமந்தபடி விடுதலை போராட்டம் இன்று மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. மட்டு மக்களால் வளர்க்கப்பட்ட விடுதலைப்பயிரில் சில விசச்செடிகளும் மறைந்து வளர்ந்து இன்று தமது விசக்குணத்தை மக்களிற்கு காட்டுகின்றது. மட்டுமண்ணின் பல்லாயிரம் போராளிகளின் தியாகத்தாலும் குருதியாலும் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட தமிழரின் உரிமைப்போர் பணத்திற்கு விலைபோன கயவர்களால் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டு மக்கள் சொல்லெர்னாத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மக்களின் துன்பங்கள் நீங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழீழமே தமிழர்க்கான தீர்வு என்பதை அனைத்துலகமே ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் மிக விரைவில் வரும்.   காட்டிக்கொடுக்கும் கயவர்களை அழித்து எதிரிப்படைகளை ஓடவிரட்டி எமது மாவீரர்களின் கனவை நிறைவேற்ற தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் தலைமையை ஏற்று இன்னும் ஆயிரம் ஆயிரம் பரமதேவாக்கள் மட்டக்களப்பில் உருவாகுவார்கள்.
    • கப்டன் தாரகன் தாரகையாய் ஒளிர்கிறான்....!   கப்டன் தாரகன் வீரனாய் :- 03.04.1974 வித்தாய் :- 01.02.2000  சொந்த இடம் - முள்ளியவளை.   வன்னியின் வளங்களையெல்லாம் தன்னகத்தேயும் கொண்டமைந்ததே முள்ளிவளைக் கிராமம். அடங்காப்பற்றின் வீரமும் வரலாறும் முள்ளியவளை நிலமெங்கும் பரவியிருப்பதை வன்னியர்களின் வரலாறு சொல்கிறது.   வீரமிகு வரலாற்றையும் வீரத்தையும் கொண்ட முள்ளியவளைக் கிராமம் தமிழீழ மீட்பிற்காக தனத புதல்வர்களையும் புதல்விகளையும் ஈந்த பெருமைக்குரிய கிராமங்களில் ஒன்றாகும்.   03.04.1974 தம்பு தம்பதிகளின் பிள்ளையாகப் பிறந்தான் பார்த்தீபன். அக்கா , அண்ணா , தங்கையின் அன்பிற்கு அவன் ஆதாரம். சிறுவயதுக்கேயுரிய இயல்புகள் அவனையும் ஆட்கொண்டிருந்தது.    வயல்களும் வரப்புகளும் இயற்கையின் பசுமையை ஏந்தி வைத்திருக்கும் முல்லைமண்ணின் ரம்மியங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த பார்த்தீபனின் மழலைக்காலம் மகிழ்ச்சியானது.   யுத்தத்தின் சத்தங்கள் முல்லைமண்ணையும் அள்ளிக் கொண்டிருந்த காலங்களில் வெடியோசைகளும் உயிரிழப்புகளும் பார்த்தீபனின் நெஞ்சிலும் நெருப்பை விதைத்த நாட்களவை.   முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியின் மாணவனாக கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தான் பார்த்தீபன். க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்தை தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்து உயர்தரம் பரீட்சையை எழுதிவிட்டு பெறுபேறு வரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனின் வாழ்வை மாற்றியது ஈழவிடுதலைப் போராட்டம்.   1994ம் ஆண்டு வீட்டைவிட்டுக் காணாமற்போனான் பார்த்தீபன். அமைதியும் இனிமையும் நிறைந்த வீட்டையும் சுற்றத்தையும் நண்பர்களையும் பிரிந்து காடுகள் நோக்கிப் போயிருந்தான். ஆம் அவன் விடுதலைப்புலியாக மாறினான்.   மணலாற்றில் 24வது பயிற்சி முகாமில் ஆரம்பப்பயிற்சியைத் தொடங்கிய பார்த்தீபன் தாரகன் எனப்பெயர் சூட்டப்பட்டு பயிற்சியில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சி முடிந்த போது இம்ரான் பாண்டியன் படையணிக்கு தளபதி சொர்ணம் அவர்களால் தெரிவு செய்யப்பட்டான்.   தலைவரின் வெளிப்பாதுகாப்புப் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் தாரகனும் தெரிவு செய்யப்பட்டு வெளிப்பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டான். தனக்கு வழங்கப்பட்ட பணிகளில் என்றுமே நேர்மையும் நிதானமும் கூடிய கவனத்தையுடைய போராளி. ஒரு காரியத்தை எடுத்தால் அதை முடிக்கும் வரை ஓய்வு உறக்கம் பசி களைப்பு எதையும் பார்க்காமல் ஓயாது இயங்கி காரியம் முடித்த பின்னரேயே ஓயும் களப்பணியாளன்.   1996இல் விசேட இராணுவப்பயிற்சிக்குச் சென்று திறமையோடு விசேட பயிற்சியை முடித்துத் திரும்பிய தாரகன் கப்டன் கௌதமன் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியராக நியமனம் பெற்று புதிய போராளிகளை வளர்த்தெடுப்பதில் கவனமாகினான்.   களமாடச் செல்லும் கனவோடு காத்திருந்த தாரகனுக்கு முதல் கள அனுபவம் 09.01.1997 ஆனையிறவு ஊடறுப்புச்சமரில் தான் ஆரம்பமாகியது.   1996 நடுப்பகுதியில் முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட போது இலங்கையரச படைகளுக்கு பெருத்த இழப்பையும் கொடுத்ததோடு இலங்கை இராணுவத்தின் உளவுரணும் புலிகளால் சிதைக்கப்பட்டிருந்த காலமது.   முல்லைத்தீவை இழந்த படையினர் சத்ஜெய 1 எனும் பெயரில் பரந்தனையும் , சத்ஜெய 2,3 நடவடிக்கையை மேற்கொண்டு கிளிநொச்சியையும் கைப்பற்றியிருந்தனர்.   எனினும் புலிகள் ஓய்ந்து விடாமல் தொடர்ந்த அடுத்த நடவடிக்கைக்குத் தயாராகினர். வன்னிக்கு அச்சுறுத்தலாக அமைந்த ஆனையிறவுப் படைத்தளமும் சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி வெற்றியும் அரசபடைகளுக்கு வெற்றிகளாக அமைந்தது.   ஓயாத அலைகள் ஒன்று தொடக்கம் தொடர் சமர்களில் புலிகளின் அணிகள் சண்டையிட்டுக் கொணண்டிருந்த சம நேரத்தில் அடுத்ததொரு ஊடறுப்புச் சமருக்கான ஏற்பாடுகள் , பயிற்சிகளிலும் போராளிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.   ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையும் சிறீலங்காப்படைகளின் ஆதிக்கம் நிலையாகியிருந்த சமயம் அது. கிளிநொச்சி முகாம் மீது எவ்வித தாக்குதலையும் நிகழ்த்தாமல் பரந்தன் , ஆனையிறவு ஊடறுப்பினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தயாராகிக் கொண்டிருந்தனர். இத்தாக்குதல் வெற்றி பெறுகிற போது கிளிநொச்சித் தளம் தனிமைப்படுத்தப்பட்டு இலகுவாக கிளிநொச்சியை மீட்கலாம் என்பது முடிவாகியது.   ஆனையிறவு பரந்தன் பகுதிகளை ஊடறுத்துச் செல்ல 1996வருட இறுதிப்பகுதியின் காலநிலை இடமளிக்காமல் போனது. நீரேரிகளையும் சதுப்பு நிலங்களையும் தாண்டிச் செல்ல வேண்டிய இப்பகுதிகளின் நீரின் மட்டம் அதிகரித்திருந்ததோடு சமருக்கான அகபுற காரணிகளும் தடையாகியது. இதனால் அணிகள் நகர முடியாது போனது. கிளிநொச்சி வெற்றியோடு படைகள் சற்று அதிக எதிர்பார்ப்பைக் கொண்டு அடுத்த நகர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.   ஆனையிறவு பிரதான மையத்தைத் தகர்த்துக் கைப்பற்றுவதோடு பரந்தன் சந்தி உள்ளடங்கலாக பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் உட்பட படையினர் வசமிருந்த படைத்தளத்தையும் கைப்பற்றி கிளிநொச்சிக்கான தொடர்பை துண்டிக்கும் திட்டத்தில் அணிகளை தயார் செய்தார்கள். தாக்குதல் வெற்றியளிக்காது விட்டால் தாக்குதலை நிறுத்திக் கொள்வதெனவும் திட்டமிடப்பட்டது.   எதிரியா புலிகளா என்ற சவாலில் புலிகள் குறித்தபடி தாக்குதலிற்கு அணிகளை நகர்த்தி 09.01.1997 அன்று பரந்தன் ,ஆனையிறவு ஊடறுப்புச் சமருக்குத் தயாராகினார்.   08.01.1997 அன்று இருள் கவ்விய பொழுதில் நீரேரிகள் , சதுப்புகள் , வெட்டைகள் தாண்டி நீண்டதூரம் நகர்ந்து அணிகள் நிலைகளைச் சென்றடைந்து தயாராகியது. ஆனையிறவு மையத்தினுள் நுளைந்து ஆட்லறிகளை அழிக்கும் நடவடிக்கைக்குத் தயாராகி திட்டமிட்டபடி 09ம் திகதி தாக்குதல் ஆரம்பித்தது.   எதிரியின் முன்னேற்றத்துக்கு அவகாசம் கொடுக்காமல் விரைவான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர். சாள்ஸ் அன்ரனி படையணி ஆட்லறித்தளத்தினுள் புகுந்து ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றியதோடு ஒன்பது ஆட்லறிகளையும் கைப்பற்றியது. எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளாலேயே எதிரி மீது தாக்குதல் நிகழ்த்தினர் போராளிகள்.   இதர பகுதிகளில் திட்டமிடப்பட்டது போல தாக்குதல் வெற்றியைத் தராது போனது. பரந்தன் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டது போல அமையவில்லை. கைப்பற்றிய ஆட்லறித்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதானால் பரந்தன் படைத்தளம் போராளிகளிடம் விழ வேண்டும். ஆனால் நிலமை எதிரிக்கே சாதகமாகியது.   எதிரியும் புலிகளிடம் ஆட்லறித்தளத்தையோ பரந்தன் தளத்தையோ விடுவதில்லையென்ற முடிவில் சகல வளங்களையும் பயன்படுத்தி எதிர்த் தாக்குதலில் மூர்க்கமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதேபோல விடிவதற்கிடையில் வெற்றியை அடைய வேண்டுமென்ற வேகத்தோடு புலிகளும் சமரிட்டுக் கொண்டிருந்தனர்.   விடிந்தால் எதிரிக்கு ஆதரவாக விமானப்படை வந்துவிடும். அப்போது மிகவும் அச்சுறுத்தலாகவும் இடைஞ்சலாகவும் இருந்தது MI-24  உலங்குவானூர்தியின் தாக்குதல் ஆகும். அதேநேரம் வெட்டை வெளிகளில் சமரிடும் புலிகளின் அணிகளை MI-24 உலங்குவானூர்த்தியின் தாக்குதல் முன்னேற்றத்தை தடுத்துவிடும். அத்தோடு ஆட்லறிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் புலிகளின் அணிகள் கடும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். ஆகவே பரந்தனை வென்றால் மட்டுமே அடுத்த வெற்றியென்பது நிச்சயமாகியது.   புலிகளின் வரலாற்று வெற்றிகளைத் தந்த சமர்களில் பெரும்பாலும் ஒரு வழி சாதகமாகாது போனால் மாற்று வழியின் மூலம் வெல்லும் வழிகளைத் தயாராகக் கொண்டிருப்பர். இம்முறை ஓரிரவிலேயே வெற்றியை பெற்றால் மட்டுமே இழப்புகளையும் தவிர்க்கிற நேரம் எதிரியைத் தோற்கடிக்கவும் முடியும் என்பது முடிவானது.   பரந்தன் முகாம் மீதான தாக்குதல் எதிர்பார்த்தபடி வெல்ல முடியாது என்பது உறுதியானது. இனி இறுதி முடிவு கைப்பற்றிய ஆட்லறிகளை அழித்துவிட்டு அணிகள் பத்திரமாக பின்வாங்குவதே முடிவானது. தாக்குதல் தளபதிகளின் கட்டளைப்படி ஆட்லறிகளும் பெரும் ஆயுதக் களஞ்சியமும் அழிக்கப்பட்டு அணிகள் பின்வாங்கியது.   எதிரிக்கு பெரும் இழப்பையும் கொடுத்து எதிரியின் உளவுரணைத் தகர்த்த அச்சமரில் தான் தாரகனும் தனது முதல் கள அனுபவத்தைப் பெற்று சிறந்த சண்டைக்காரன் என்பதனையும் அடையாளப்படுத்தினான்.   வித்தியானந்தா கல்லூரியின் ஒருகாலத்தின் சிறந்த விளையாட்டு வீரனான விளங்கியவன் தாரகன். கப்டன் கௌதமன் (ஊரான்) உதைபந்தாட்ட அணியில் சிறந்த விரனாக மிளிர்ந்தது மட்டுமன்றி பத்திரிகைகளில் வரும் கணிதப் போட்டிகளில் கூட தனது கணிதத்திறமையை வெளிப்படுத்திய வீரன். சண்டையனுபவத்தைத் தொடர்ந்து கப்டன் கௌதமன் (ஊரான்) பயிற்சி பயிற்சிப்பாசறை ஒன்று முதல் மூன்று வரையான பாசறையின் பயிற்சியாசிரியனாகி சண்டைக்கள வீரர்களை வளர்த்தனுப்பினான்.   பின்னர் வெளிப்பாதுகாப்பணியின் பாதுகாப்பு பணியில் தனது பணிகளைத் தொடர்ந்த போது ஓயாத அலைகள் 3 நடவடிக்கை ஆரம்பமாகியது. சண்டைக்களங்களில் சாதிக்க வேண்டும். இழந்து போன மண்ணை மீட்க வேண்டுமென்ற கனவோடு தானாகவே சண்டைக்குப் போக விரும்பி ஓயாத அலைகள் மூன்றில் இம்ராம் பாண்டியன் படையணியின் தாக்குதல் அணியோடு சென்றான்.   தனங்கிழப்பில் நிலையமைத்திருந்த அணியில் தாரகனும் ஒருவனாகினான். 01.02.2000அன்று அதிகாலை 4.30மணி. எதிரி இவர்களது பகுதியை உடைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். போராளிகளின் பகுதியைக் கைப்பற்றிவிடும் மூர்க்கத்தில் எதிரி தனது தாக்குதலை மேற்கொண்டிருந்தான்.   எதிரியின் மூர்க்கத்தை எதிர்கொண்டு போராளிகள் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். தாரகன் சண்டையில் எதிரியை எதிர்த்து வீரத்துடனும் ஓர்மத்துடனும் சமரிட்டுக் கொண்டிருந்தான்.   ஒருகட்டத்தில் பதுங்குகுளியை விட்டு வெளியில் நின்று எதிரியுடன் நேரடிச்சமரில் ஈடுபட்டான். தொடைப்பகுதியில் காயமுற்ற போதும் தனது காயத்திற்கான மருத்துவத்தை பெறாமல் பீல்ட் கொம்பிறேசரைக் கட்டிவிட்டு தொடர்ந்து எதிரியுடன் மோதிக்கொண்டிருந்தான்.   எதிரியின் எறிகணைகள் எங்கும் வெடித்துக் கொண்டிருந்தது. அந்த எறிகணைகள் தாரகனின் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. அங்கே தான் தாரகன் தலையில் காயமடைந்தான். ஏற்கனவே காயமடைந்த தொடைப்பகுதியால் அதிக குருதி இழக்கப்பட்டிருந்தான். அடுத்த காயத்தை தலையில் ஏற்றுக் கொண்டவன் தனது இறுதிக் கணத்தை அடைந்து கொண்டிருந்தான்.   தனங்கிழப்பு மண்ணில் கப்டன் தாரகன் தனது கடைசிக்கனவை விதைத்து விட்டு வீரச்சாவடைந்தான். தனது இறுதிக்கணத்தில் கூட எவ்வித சலனத்துக்கோ இடறலுக்கோ உட்படாமல் இறுதி வரையும் வீரத்தோடு போராடினான். மரணத்தின் கடைசி நொடியிலும் என்றும் போல புன்னகை நிறைந்த அவன் முகத்தில் எந்தச் சோர்வுமின்றி வீழ்ந்தான் வித்தாக....!   தாரகன் ஒளிரும் நட்சத்திரப் பொட்டுகளில் மின்னும் தாரகையாக தமிழீழக்கனவில் தனது வரலாற்றுத் தடங்களையும் பதித்துக் கொண்டு அமைதியாய் உறங்கினான்.   தாரகன் படித்த வித்தியானந்தா கல்லூரியும் அவனை நேசித்த அவனது ஊரும் மாணவர்களும் அவன் தோழோடு தோழ் நின்று களமாடிய தோழர்கள் அனைவரின் மனங்களும் துயரத்தில் தோய்ந்தது. அவன் நேசித்த அவனது பிறந்த ஊரான முள்ளியவளை மண்ணில் உறங்கிய மாவீரர்களோடு அவனும் முள்ளியவளை துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டான் மாவீரனாக....! எல்லோர் மனங்களிலும் நிறைந்து போனான் கப்டன் தாரகனாக...!   நினைவுப்பகிர்வு :- - சாந்தி நேசக்கரம் - 01.02.2014 Email :- rameshsanthi@gmail.com     https://mullaimann.blogspot.com/2014/02/blog-post.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.