Jump to content

சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட சிறிலங்காவின் அதிபர் ராஜபக்ச!


Recommended Posts

mahinda_budda_gaya_002.jpg

சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணம் அவருக்கு பெருத்த அவமானத்தையும் சங்கடத்தையுமே அவருக்கு உருவாக்கியுள்ளது.

 

 

பீகார் மாநிலத்திலுள்ள புத்தகாயாவுக்குச் செல்வதாக மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட இந்தியப் பயணம் உண்மையிலேயே ஆன்மீக நோக்கங்களை மட்டும் கொண்டதல்ல. அதற்கும் மேலாக, அது மிகவும் முக்கியமான அரசியல் இலக்கோடு மேற்கொள்ளப்பட்டது.

ஆன்மீகப் பயணம் என்ற பெயரில், இந்திய ஆட்சியாளர்களிடம் உள்ள உறவை மேம்படுத்தி, எதிர்வரும் ஜெனிவா ஐ.நா. அமர்வில் தனக்கு எதிராக உருவாக்கக்கூடிய அழுத்தங்களுக்கு எதிராக இந்திய ஆதரவைக் கோருவதுதான் அவரது முதன்மைத் திட்டமாக இருந்தது.

 

1600 இந்துக் கோவில்களை அழித்த ராஜபக்ச பக்தி மேலீட்டால் திருப்பதிக்கு விஜயம் செய்தார் என்று நம்ப முடியாது. இந்திய ஆட்சியின் பங்காளர்களது மாநிலங்களுக்குச் செல்வதன் மூலம் ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய உறவின் மூலமாகத் தனது தொடர் இருப்புக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வதே அவரது எண்ணமாக இருந்தது.

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு இன்னமும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அவர் மேற்கொண்ட ஆன்மீக நாடகப் பயணம் கிட்டத்தட்ட அவருக்கே வினையாகவே முடிந்துள்ளது.

 

மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும், மக்களும் சிங்களக் கொடிகளையும், மகிந்தவின் கொடும்பாவியையும் கொழுத்தியுள்ளார்கள்.

ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திற்கு வெளியே, டெல்லியிலும், பீகாரிலும், திருப்பதியிலும்கூட போராட்டங்களும் கைதுகளும் இடம்பெற்றுள்ளன.

 

ஆக மொத்தத்தில், தமிழக எல்லைக்குள் மட்டுப்பட்டிருந்த தன்மீதான கண்டன எதிர்ப்பு வாதத்தை அவரது இந்தப் பயணம் தமிழகத்திற்கு வெளியேயும் கொண்டு சென்றுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநில தொலைக்காட்சிகளிலும் இது குறித்த விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

 

இறுதி யுத்தத்தின் பின்னர், ஏற்கனவே இரண்டு தடவைகள் இந்தியப் பயணத்தை மேற்கொண்ட சிங்கள அதிபர் ராஜபக்சவுக்கு அப்போது இந்த அளவு எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பவில்லை.

இந்தத் தடவை ராஜபக்சவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் பொங்கி எழுந்ததற்கு என்ன காரணம் என்பதைச் சற்று ஆராய்வோம்.

 

ஈழத் தமிழர்கள்மீது கொடூரமான இன அழிப்புப் போரை நிகழ்த்திய சிங்கள ஆட்சியாளர்களுக்கு இணையாக, அந்தப் போருக்கான முழு அனுசரணையையும், ஆதரவையும் இந்திய ஆட்சியாளர்கள் வழங்கியிருந்தார்கள் என்ற கோபமும், 35 கடல் மைல் தொலைவில் தங்களது உறவுகள் கொடூரமாக அழிக்கப்பட்ட போது, தம்மால் எதையுமே செய்ய முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும் எப்போதும் தமிழக மக்களிடம் உள்ளது.

 

அதன் வெளிப்பாடு இப்போது இன்னும் பலமாக வெடித்துக் கிளம்பியதற்கு, இந்திய மத்திய ஆட்சியாளர்கள்மீது தற்போது தமிழக மக்கள் பெருமளவில் நம்பிக்கை இழந்துவிட்டதே காரணமாக அமைந்தது.

 

இந்தியாவால் கொண்டு வரப்பட்ட 13-வது அரசியல் திருத்தச் சட்டத்தின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு இந்தியா ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்ற தமிழகத் தமிழர்களது நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

கடந்த பெப்ரவரி 04-ம் திகதி சிங்கள அதிபர் ராஜபக்ச சிறிலங்காவின் சுதந்திர தின உரையில், தமிழர்களுக்குத் தனியான எந்த அரசியல் அதிகாரமும் வழங்கப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

 

இந்த நிலையில், மகிந்தவின் இந்திய வருகைக்குப் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலமாகத் தமிழக மக்கள் இந்திய மத்திய ஆட்சிக்கும் ஒரு கடுமையான செய்தியைச் சொல்லியுள்ளார்கள்.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள இலங்கை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும்.

 

ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இதுவரை நீதியாக நடந்து கொள்ளாத இந்திய அரசு, இனியும் அப்படி நடக்குமானால் தமிழகம் அதனை வேடிக்கை பார்க்காது என்பதையே தமிழக மக்களும், அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தின் மூலம் இந்திய ஆட்சியாளாகளுக்கு விடுத்துள்ள செய்தியாகும்.

இது, ஜெனிவா மாநாட்டில் இலங்கை சார்பான எந்த முடிவுகளையும் எடுக்க முடியாத தர்மசங்கட நிலையை இந்தியாவுக்கு உருவாக்கியுள்ளது.

 

இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட தறித்து வீழ்த்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. காங்கிரஸ் கூட்டாளிக் கட்சியான தி.மு.க. ஆட்சி இழந்ததற்கும் இறுதி யுத்த காலத்தில் கருணாநிதி நடந்துகொண்ட விதமே முக்கிய காரணமாக அமைந்தது.

அடுத்த வருடத்தில் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் ஈழப் பிரச்சினையே முக்கிய வாதப் பொருளாக இருக்கப் போகின்றது.

 

இதனாலேயே கலைஞர் கருணாநிதி, தன்னால் முடிச்சுக்கட்டிப் பரணில் போடப்பட்டிருந்த ‘டெசோ’ வைத் தூசு தட்டி எடுத்து, புதிய நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார்.

கொடூரமான யுத்தம் நிகழ்ந்த காலத்தில், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமாக எதையுமே செய்யாமல், ஈழத் தமிழர்களது அழிவுக்கு ஒரு வகையில் காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இப்போது கறுப்புச் சட்டைப் போராட்டம் நடாத்துவதற்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலே காரணம் என்ற தமிழுணர்வாளர்களின் குற்றச்சாட்டிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை.

 

ஆக மொத்தத்தில், தனது பாரியாரும், 70 பரிவாரங்களும் புடைசூழ மகிந்த மேற்கொண்ட இந்தியப் பயணம் சொந்தக் காசில் தனக்கே சூனியம் வைத்தது போலாகியுள்ளது.

தமிழகத்தின் எழுச்சி தற்போது புலம்பெயர் நாடுகளிலும் பற்றிப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

இதனால், இந்தத் தடவை ஜெனிவா முன்றலில் நடைபெறவுள்ள போராட்டம் மிக உச்சமாக இருக்கப் போகின்றது.

அது சிங்கள தேசத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கப் போகின்றது.

 

 

- இசைப்பிரியா

 

http://www.eelamview.com/2013/02/10/mahinda-india-visit-2/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.