Jump to content

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது குறித்து


Recommended Posts

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி),

ஹெச்.ராஜா (பாஜக), கோபண்ணா (காங்.),

விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற விவாதத்தின் முழு காணொளி:

Link to comment
Share on other sites

அப்சல் குரு பாராளுமன்றத்தினை தாக்கியவர்களுக்கு வாகன உதவி செய்து கொடுத்தாராம்...


போபால் விசவாயு தாக்குதலை செய்தவனை விமானத்தில் ஏற்றி காப்பாற்றிய ராஜீவ் காந்தியை தூக்கில் போட்டுவிட்டு வந்து பேசவேண்டும் நீதியை, பயங்கரவாதத்தை...

 

காங்கிரஸ்காரனை பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வரவேண்டியது, “செருப்பு இனி மேல் நமக்கு காலில் அணிவதற்கு மட்டுமல்ல.. ”

 

- நன்றி முகநூல்

Link to comment
Share on other sites

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!
 
அப்சல் குரு தூக்கிலிடப் பட்டிருக்கிறார்.


காங்கிரஸ், பி.ஜெ.பி இரண்டு கட்சிகளுக்கும்; பெயர்களும் தலைவர்களும்தான் வேறு, வேறு. எஜமான் ஒருவர்தான்.
 

காங்கிரசின் இந்த நடவடிக்கை, இந்து மனநிலையின் வெளிபாடு மட்டுமல்ல; அதுதான் அமெரிக்க விசுவாசமும் கூட. இது காங்கிரசின் விஸ்வரூபம்.


கமலின் அமெரிக்க பாசமும், இஸ்லாமியர் மீதான வெறுப்பும் கலந்த, விஸ்வரூபம் போன்றவைகளுக்கு ‘கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் ‘அறிவாளிகளே’ ஆதரவு தெரிவித்தால், இஸ்லாமிய நாடுகளின் மனித உரிமை மீறல்களை, மதத் தீவிரவாதத்தை கமல்ஹாசனுக்கு ஆதரவாக மடை மாற்றினால்,
 

அப்சல் குருவை தூக்கில் போடாமல்..?
 

அமெரிக்க கம்பெனியான ‘யூனியன் கார்பைடு’ மூலம், விஷவாயு கசிவால் போபாலில் 15, ஆயிரம் ஏழை இந்தியர்களை கொன்று விட்டு, அமெரிக்காவில் பதுங்கி இருக்கும் ஆண்டர்சனையா தூக்கில் போட முடியும்?
 

விஸ்வரூபத்தை ஆதரித்த அதே ஆட்கள் அப்சல் குரு தூக்கையும் ஆதரிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் அதே அமெரிக்க, இந்து நியாயங்கள் குவிந்து கிடக்கின்றன.
 

அவர்களிடம் நாம் என்ன கேட்க முடியும்?
 

சவுதி அரேபியாவின் கொடூரமான தண்டனைக்கு பலியான அப்பாவி இலங்கை பெண்ணின் வீடியோவை பார்த்து கை நடுங்க;  ‘விஸ்வரூப எதிர்ப்பு இந்திய முஸ்லிம்களுக்கு’ அறிவுரை சொன்ன இந்து அறிவாளிகள், அப்சல்குருவின் மரண தண்டனை வீடியோவை பார்த்தால் அதேப்போல் கை நடுங்க கருத்துச் சொல்வார்களா?

 

காட்சியாக பார்க்கும்போது எந்த மரணமும் கொடூரம்தான்.
 

கொடூரம் என்பது தலையை தனியாக வெட்டுவது மட்டுமல்ல; கயிறால் கழுத்தை இறுக்கி கொல்வதும்தான்.
 

சவுதிஅரேபிய அரசின் மனிதாபிமானமற்ற அந்தக் கொலைக்கும், ‘ஜனநாயக’ நாடான இந்திய அரசின் இந்தக் கொலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
 

அவரவர்களின் மத, வர்க்க அரசியல் கண்ணோட்டத்தைத் தவிர.


எது மனிதாபிமானம்?
 

அதுவும் இவைகளின் அடிப்படையிலேயே பரிசிலிக்கப்படுகிறது.
 

மரணத்திற்கு கண்ணீரா? கை தட்டலா? அதையும் அவரவர்களின் அரசியலே முடிவு செய்கிறது.

 

http://mathimaran.wordpress.com/2013/02/09/614/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தூக்கு தண்டனை!

ஒரு கொலைக்கு

மறு கொலை

இது பழிவாங்கல் தான்!

கேட்கவேண்டிய உதடுகள்

தூங்குகிறது

தட்டிக் கேட்க வேண்டிய

வார்த்தைகள் தடுமாறுகிறது!

துடிதுடிக்க வேண்டிய இதயம்

இறுகுகிறது!

என்னடா தேசமிது!

உண்மை

குற்றவாளிகளை மறைத்து

அப்பாவிகளுக்கு

தூக்கு தண்டனை

போபாலில் விஷவாயு கசிந்து

5 லட்சம் மக்கள் பலி

ஈழத்தில் நம் தொப்புல் கொடி உறவுகள்

3 லட்சம் பேர் உயிரோடு

சுட்டு,

மிரட்டி,

கொளுத்தி,

எரித்து,

அடித்து,

உதைத்து,

வன்கொடுமைக்கு உட்படுத்தி

படுகொலை

இக்கொலைக்குற்றவாளிகளுக்கு

சிவப்பு கம்பள வரவேற்பு

இராணுவ பாதுகாப்பு

சிறப்பு மரியாதை

என்னடா தேசமிது!

டீ போட்டு கொடுத்தவனுக்கும்,

பேட்டரி வாங்கிக் கொடுத்தவனுக்கும்

வாகன உதவி செய்தவனுக்கும்

தூக்கு என்றால்

ஈழத்தில்,

காஷ்மீரில்,

பீகாரில்,

ஒடிஷாவில்,

சத்தீஸ்கரில்,

ஆந்திராவில்,

மியான்மரில்,

ஆப்கானிஸ்தானில்,

பாகிஸ்தானில்

இன்னும் பல இடங்களில்

அப்பாவி மக்களை கொன்ற

மக்கள் விரோத

அரசுகளுக்கு

என்ன தண்டனை?

சிந்தியுங்கள்!!!!!!

 
ஆதாரம்- முகநூலில் 'சரவணன்'
Link to comment
Share on other sites

இவருக்கு ஆதராவாக நான் ஏற்க்கனவே கூரி இருந்தேன், குற்றம் நிறுபிக்கப்பட்டதால் இவறின் தூக்கு தண்டனையை ஆதறிக்கிறேன். நன்றி

Link to comment
Share on other sites

வளர்ந்த சமூகங்களிலும் தூக்குத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நீதி என்ன என்பதைத்தான் பார்க்க வேண்டும்.

 

ஒருவரைக் கொல்லுமாறு ஆளை அனுப்பினான் இன்னொருவன். கொலை நடந்தது. கொலையாளியும் பிடிபட்டான். இப்போது யாருக்குத் தூக்கு வழங்க வேண்டும்? எய்தவனுக்கா, கொன்றவனுக்கா அல்லது இருவருக்குமா?

 

இங்கேதான் இந்திய நீதி அடிக்கடி தவறுகிறது.

 

மரணதண்டனையை கொலையாளிக்கு மட்டுமே அதிகபட்சமாக வழங்கமுடியும். எய்தவன் வேறாக இருந்தாலும், கொல்பவனுக்கென்று சுய சிந்தனை இருந்திருக்கும். ஆகவே அவன் அவ்வாறு கொலை செய்திருக்க வேண்டியதில்லை.

 

எய்தவனுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை மட்டுமே வழங்க முடியும், நீதி வழுவாமல் இருக்கும் ஒரு நாட்டில்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.