Jump to content

இலங்கைத் தீவின் விதி - நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவின் விதி

lanka-from-space-300x242.jpg

 

நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய ‘எதிர்ப்பு வெளி” எனப்படுவதும் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனப்படுவது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தூலமான இருப்பைக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளாத அரசுக்கு எதிரான எல்லா சக்திகளுக்கும் அது ஒரு தூலமான, திட்டவட்டமான முன்னுதாரணமாகக் காணப்பட்டது. ஆனால், அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டபோது, அப்படிப்பட்ட ஓர் இயக்கமே தோற்கடிக்கப்படலாம் எனில் மற்றவை எல்லாம் எம்மாத்திரம் என்றதொரு நிலை தோன்றிவிட்டது.


யுத்தத்தில் வெற்றிபெறுவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட வழிமுறைகள் மூலம் அது தென்னிலங்கையிலுள்ள தீவிரவாத சக்திகளை எல்லாம் மிஞ்சிவிட்டது. இதனால், ஜே.வி.பி. போன்ற தீவிர சக்திகள் அரசாங்கத்தை விட தீவிரம் குறைந்தவையாகிவிட்டன. இதற்கு முன்பிருந்த எந்தவொரு அரசாங்கத்தினாலும் முடியாதிருந்த ஒன்றை இந்த அரசாங்கம் நந்திக் கடலில் சாதித்துக் காட்டியதால் எந்த ஓர் எதிர்க்கட்சியும் அந்த வெற்றிக்கு முன் நின்றுபிடிக்க முடியாது போய்விட்டது. எனவே, எதிர்க்கட்சிகள் யாவும் அரசாங்கத்திற்கு கீழ்ப்பட்டவையாயின. இப்படியாக வெகுஜன அரசியலை முன்னெடுக்கவல்ல மைய நீரோட்டத்திலுள்ள பெரும் கட்சிகளும், இனத் தீவிரவாத சக்திகளும் தலையெடுக்க முடியாத ஓர் அரசியற் சூழலில் மைய நீரோட்டத்திற்கு வெளியே காணப்பட்ட மாற்றுக் குரல்களும் மேலெழ முடியாத படிக்கு ஒரு பெரும் யுத்த வெற்றிவாதம் தென்னிலங்கையை மூழ்கடித்துவிட்டது. இதனால், அரசாங்கத்திற்கு சவாலான எதிர்ப்பு வெளி என்ற ஒன்று அநேகமாக இல்லாதுபோய்விட்டது.


விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரசாங்கம் பெற்றுக்கொடுத்த வெற்றி எனப்படுவது சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்த வரை தாங்கமுடியாத ஒரு வெற்றி. இலங்கை தீவின் நவீன வரலாற்றில் வேறெந்த சிங்களத் தலைவர்களும் பெற்றுக்கொடுத்திராத வெற்றியை இப்போதுள்ள தலைவர்கள் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள். எனவே, இந்த வெற்றி ஒன்றே போதும் அவர்களும், அவர்களுடைய வம்சமும் மேலும் சில சதாப்தங்களுக்கு இச்சிறு தீவை ஆட்சி புரிய முடியும்.


இப்படியொரு வெற்றியைப் பெற்ற அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கு எதிராக எழுக்கூடிய எந்தவொரு எதிர்ப்பும் பொருட்டில்லை. பிரபாகரனையே தோற்கடித்த ஓர் அரசாங்கத்திற்கு எந்தவொரு எதிர்ப்பும் பொருட்டில்லை என்ற ஒரு மனோநிலை கொழும்பில் பலமாக ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய ஒரு மனோநிலைக்கு முன் இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு சவாலாக யாரும் அல்லது எதுவும் நின்றுபிடிக்க முடியாத ஒரு நிலை தோன்றிவிட்டது. என்பதால்தான், அந்த வெற்றியின் பங்காளியான சரத் பொன்சேகாவே கூர் மழுங்கிப்போனார். அவர் மட்டுமல்ல, சக்தி மிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அவுஸ்ரேலியாவிலிருந்து இறக்கப்பட்ட குமார் குணரட்ணத்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை. தொழிற்சங்கப் போராட்டங்கள், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள், பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களும் அவற்றின் இறுதி வெற்றியைப் பெற முடியவில்லை. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தையும் இப்பின்னணியில் வைத்தே விளங்கிக்கொள்ள வேண்டும்.


அதாவது, பிரதம நீதியரசர், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பாலும் இலகுவாக அசைக்க முடியாத அளவிற்கு அரசாங்கம் சக்தி மிக்கதாக காணப்படுகின்றது.
இத்தகைய ஓர் விளக்கத்தின் அடிப்படையில் கூறின், இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களில் உள்நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கங்களில் ஒன்றாக இப்போதுள்ள அரசாங்கத்தைக் கூற முடியும். இந்த அரசாங்கத்தை நாடாளுமன்றத்திற்குள்ளும் தோற்கடிப்பது கடினம், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் தோற்கடிக்கப்படுவது கடினம்.


தமிழர்கள் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டத்திற்கும் மேல் செல்ல முடியாதிருப்பதும் இதனால்தான். தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி ஒரு கட்டத்திற்கும் மேல் போராட முடியாமல் இருப்பதும் இதனால்தான்.


விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாக்கியம் ஒன்று உண்டு. ‘எந்தப் பெரிய பலத்திற்குள்ளும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும்” என்று. நாலாம் கட்ட ஈழப்போரின்போது புலிகளுக்கு இது பொருந்தியது. நந்திக் கடலில் பெற்ற வெற்றிக்குப் பின் இப்பொழுது அரசாங்கத்திற்கும் இது பொருந்துகிறது. இந்த அரசாங்கம் உள்நாட்டில் சக்தி மிக்கதாகக் காணப்படுகின்றது. ஆனால், சர்வதேச அளவில் பலவீனமானதாகக் காணப்படுகின்றது. எனினும், பிராந்திய அளவில் அது இடைநிலைப் பலத்தோடு காணப்படுகின்றது. அதாவது, உள்நாட்டளவிற்குப் பலமாகவும் இல்லை, சர்வதேச அளவிற்குப் பலவீனமாகவும் இல்லை.


பிராந்தியப் பலம்தான் இந்த அரசாங்கத்தின் மெய்யான பலம். அல்லது இதனுடைய பலத்தின் உயிர் நிலை அது எனலாம். பிராந்தியத்தில் தனக்குள்ள கவர்ச்சியான பேரம் பேசும் சக்தியை வைத்து இருபெரும் பிராந்திய பேரரசுகளுக்கிடையில் கயிற்றில் நடக்கும் அரசாங்கம் இது. ஒருபுறம் சீனாவின் உலகளாவிய எழுச்சியை ரசித்து, ஆதரிக்கும் இந்த அரசாங்கம் இன்னொருபுறம் இந்தியாவிற்கு நெருக்கமானது போலக் காணப்படுகின்றது. இந்தியாவுடன் அது கொண்டிருக்கும் உறவு எனப்படுவது ஒருவித நிர்ப்பந்த உறவு. அதவாது பிராந்தியத்தில் மிக அருகில் இருக்கும் ஒரு பேரரசு என்பதாலும், தமிழர்களை இலகுவாகக் கையாளக்கூடிய வாய்ப்புக்களை அதிகம் பெற்றிருக்கும் ஒரு; அயல்நாடு என்பதாலும் இந்தியாவுடன் அனுசரித்துப் போகவேண்டியிருக்கின்றது. ஆனால், இதயம் சீனாவிடம்தான் இருக்கிறது. இது இந்தியாவிற்கும் தெரியும்.


இந்தப் பிராந்தியத்தில் இலங்கை அரசாங்கம் தனக்குள்ள வரையறைகளை உதாசினம் செய்துவிட்டு சீனாவை நோக்கி முழு அளவிற்கு சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் புதுடில்லி கொழும்பை நோக்கி நெருக்கி நெருங்கி வருகின்றது. அதற்காக தமிழர்களைப் புறக்கணிக்கவும் தயாராகக் காணப்படுகின்றது. இப்பிராந்தியத்தின் வரலாற்றிலேயே இந்தியாவின் தெற்கு மூலையில் சீனர்கள் இத்துணை செறிவாகப் பிரசன்னமாகியிருப்பது இது தான் முதற்தடைவ.


இந்தியாவும், அமெரிக்காவும் இதனை கவலை கலந்த எச்சரிக்கையோடு கவனித்து வருகின்றன. சீனாவோடு மட்டும் கொழும்பு தேன்நிலவைக் கொண்டிருந்தால் அதைப் பகை நிலையில் வைத்துக் கையாள முடியும். இந்தியாவோடும் கொழும்பு தேன்நிலவை வைத்திருக்கின்றது. எனவே, நிலமைகளை பகைமை எல்லைக்குள் தள்ளாமல் அதாவது, கொழும்பை முறிக்காமல் வளைத்தொடுக்க முடியுமா என்று இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சிக்கின்றன. ஒரே நேரத்தில் இரு பெரும் பகைச் சக்திகளை தன்னை நோக்கி ஈர்த்து வைத்திருக்கக்கூடிய அளவிற்கு தனது பேரம் பேசும் சக்தியின் கவர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்திருப்பதில் இந்த அரசாங்கம் இன்று வரையிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு சுழித்தோடியிருக்கிறது.
இந்தியாவை தன்னை நோக்கி ஈர்த்து வைத்திருப்பதில் தான் இந்த அரசாங்கத்தின் வெற்றிகளில் அநேகமானவை தளமிடப்பட்டிருக்கின்றன. நந்திக் கடல் வெற்றிகளில் தொடங்கி இந்த அரசாங்கம் பெற்றுவரும் எல்லா வெற்றிகளும் அது இந்தியாவை தன்னை நோக்கி ஈர்த்துவைத்திருப்பதால் பெறப்பட்டவைதான். மேற்கு நாடுகளின் மத்தியில் ஒப்பிட்டளவில் பலவீனமானதாகக் காணப்பட்டபோதிலும் இந்தியாவிற்கு நெருக்கமானதாகக் காணப்படுவதால்தான் எல்லா எதிர்ப்பையும் சமாளிக்க முடிகின்றது. ஏனெனில் இந்தப் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான அமெரிக்கா வீயூகத்தின் முற்தடுப்பாக (டீரககநச) இந்தியாவே காணப்படுகின்றது. எனவே, இந்தியாவிற்கு கதவுகளைத்திறந்து விடுவதன் மூலம் இலங்கை அரசாங்கமானது மேற்கு நாடுகளின் எதிர்ப்பை குறிப்பிடத்தக்க அளவிற்குத் தணிக்க முடிகின்றது.
ஆக மொத்தம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் தனது பேரம் பேசும் சக்தியின் கவர்ச்சியை தக்கவைத்திருப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் சக்தி மிக்கதாக எழுச்சிபெற்றுவிட்டது. இருபெரும் பிராந்திய இழுவிசைகளுக்கு இடையில் சுழித்தோடும் இந்த அபாயகரமான விளையாட்டில் சறுக்கும்போதுதான் இந்த அரசாங்கம் பலவீனப்படும். இலங்கைத்தீவில் இப்போது நிலவும் அரசியல் போக்கிலும் மாற்றங்கள் ஏற்படும்.


அதாவது பிராந்திய இழுவிசைகளுக்கு இடையிலான வலுச்சமநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் மட்டுமே இலங்கைத் தீவின் உள்நாட்டு அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்த முடியும். இதை இன்னும் நுணுக்கமாக விளங்கிக்கொள்வதானால், நாம் இப்போதுள்ள சர்வதேசச் சூழலை அதன் உள்ளோட்டங்களோடு சிறிது ஆழமாகப் பார்க்கவேண்டும்.


இப்போதுள்ள உலகச் சூழலை அமெரிக்காவின் நோக்கு நிலையிலிருந்து கூறின் ‘பச்சை ஆபத்திற்கு” எதிரான போரின் இறுதிக் கட்டம் என்று வர்ணிக்கலாம். சில மேற்கத்தைய ஆய்வாளர்கள் கடந்த நூற்றாண்டில் ரஷ்யா தலைமையிலான கொம்யூனிச நாடுகளுக்கு எதிராக நடந்த கொடுபிடிப்போரை சிவப்பு ஆபத்திற்கு எதிரான போர் என்று வர்ணித்தார்கள். சிவப்பு ஆபத்திற்கு எதிரான போரின் முடிவில் அமெரிக்கா உலகின் ஏகப்பெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது. அந்த போரின்; இறுதிக் கட்டத்தில் பச்சை ஆபத்து என்று அவர்கள் அழைக்கும் இஸ்லாமிய்த் தீவிரவாதம் முன்னிலைக்கு வந்தது. ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிகழ்ந்து வரும் இந்தப் பச்சை ஆபத்திற்கு எதிரான போரின் முடிவானது மஞ்சள் ஆபத்திற்கு எதிரான போரின் தொடக்கமாக அமையலாம் என்றும் மேற்படி ஆய்வாளர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.


மஞ்சள் ஆபத்து என்று இங்கு கூறப்படுவது மஞ்சள் அல்லது மங்கோலிய இனமான சீனர்களைத் தான். எனவே, இப்போது நிலவும் பச்சை ஆபத்திற்கு எதிரான போரின் இறுதிக் கட்டமே மஞ்சள் ஆபத்திற்கு எதிரான போராக விரிவடையக்கூடிய ஏது நிலைகள் ஊகிக்கப்படுகின்றன. பச்சை ஆபத்திற்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் சிரியாவும், ஈரானும் மிச்சமுள்ளன. சிரியா ஏற்கனவே, சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி இலக்காக ஈரான்தான் காணப்படுகின்றது. ஈரானை முறியடிப்பது என்பது ஏற்கனவே, அரபு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ‘அரப் ஸ்பிறிங்” எனப்படும் தூண்டப்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சிகளின் மூலம் மட்டும் சாத்தியப்படாது என்பது சிரிய அனுபவத்திலிருந்து தெரியவந்துவிட்டது. எனவே, அது உள்நாட்டுக் கிளர்ச்சி என்பதற்கும் அப்பால் இரு அல்லது பல நாடுகளுக்கிடையிலான நேரடி மோதலாக அமையக்கூடும் என்ற அச்சம் பரவலாகக் காணப்படுகின்றது. இது விசயத்தில் இஸ்ரேல் ஒரு கருவியாக பயன்படுத்தப்படலாம்.
இவ்விதம் ஈரானுக்கு எதிரான மோதலானது ஒரு பிராந்திய போராக விரியுமிடத்து அதன் இறுதிக் கட்டத்தில் உலகளாவிய ஒரு பேரழிவுப் போராக அது விரிவடையுமா இல்லையா என்பது சீனாவின் கைகளில்தான் தங்கியுள்ளது. சீனா இப்போது இருப்பதைப்போல 21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவத்திற்கு தலைமை தாங்கும் வேட்கையோடு மோதல்களைத் தவிர்த்து ஒதுங்கியிருந்து முன்னேறும் ஒரு உத்தியை தொடர்ந்தும் பேணுமாக இருந்தால் நிலைமை வேறாயிருக்கும். எனினும் சீனாவானது மேற்காசிய மோதல்களிலிருந்து ஓதுங்கி நிற்பது என்பது அது மறைமுகமாக அமெரிக்காவின் மேலான்மையை அங்கீகரிப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும்.


மாறாக, சீனாவும் களத்தில் இறங்கினால் நிலைமை பேரழிவுதான். அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகளும், இஸ்ரேலும் ஏற்கனவே, ஈரானைக் குறிவைத்துவிட்டன. பச்சை ஆபத்திற்கு எதிரான இறுதிக் கட்டப் போரை எப்பொழுது தொடங்குவது என்பது பெரும்பாலும் சிரியாவின் வீழ்ச்சிப் பின்னரே தீர்மானிக்கப்படும்.


அப்படியொரு தருணத்தில் பச்சை ஆபத்திற்கு எதிரான போரில் இறுதிக் கட்டமே மஞ்சள் ஆபத்திற்கு எதிரான போராக விரிவடையுமா இல்லையா என்பதை சீனாதான் தீர்மானிக்கவேண்டியதாயிருக்கும். சீனாவின் முடிவிற்கு ஏற்ப பிராந்தியத்தில் தற்போது நிலவும் வலுசமநிலை குலையக்கூடும். இவ்வாறு பிராந்திய வலுச்சமநிலை குலையும் போதுதான் இலங்கைத் தீவில் இப்போதுள்ள அரசியல் நிலைமைகளில் ஏதும் பெரிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம். அதாவது இலங்கை தீவின் விதி எனப்படுவது இப்போதுள்ள நிலைமைகளைப் பொறுத்த வரை சீனப் பேரரசின் எழுச்சி அல்லது வீழ்ச்சியோடு பிரிக்கப்படவியலாதபடி பிணைக்கப்பட்டிருக்கின்றது.


10-01-2013
உதயன்

 

http://www.nillanthan.net/?p=13

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.