Jump to content

தமிழகத்தால் முடியும், தமிழீழத்தை மீட்க!


Recommended Posts

இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிரஸ் அல்லாத கட்சிகளாலேயே அமைக்கப்படும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களும், அதிருப்திகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், காங்கிரசின் பிரதித் தலைவராகவும், அடுத்த பிரதமர் வேட்பாளராகளும் ராகுல் காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சி தற்போது, அவரது குடும்பச் சொத்தாகவே மாற்றம் பெற்றுள்ளது. இதனால், எதிர்வரும் தேர்தல் சோனியா குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்தே நிர்ணயம் செய்யப் போகின்றது.

 

 

தற்போதைய இந்திய ஆட்சி முறையில், மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் கொண்ட தென் மாநிலங்களே மத்திய ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. 543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்திற்கான 130 உறுப்பினர்களைத் தென் மாநிலங்களே தெரிவு செய்கின்றன. இந்த மாநில உறுப்பினாகளின் தயவிலேயே தற்போதைய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அதிலும், கடந்த தேர்தலில் புதுவையின் 1 தொகுதி உட்பட, தமிழகத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்றிய தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியே தற்போதைய ஆட்சியின் மிகப் பெரிய பலமாகும்.


கடந்த தேர்தலைப் போலல்லாது, தற்போது தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்களால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் இந்தக் கூட்டணிக்குச் சவால் மிக்கதாகவே இருக்கப் போகின்றது.

 

இவர்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்று முடிந்த ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பு யுத்தத்தினை தமிழக மக்கள் இன்றுவரை மறந்து விடுவதாகத் தெரியவில்லை. ஈழத் தமிழர்களது அழிவைத் தடுத்து சிறுத்தும் ஆற்றலும், அதிகாரமும் கொண்டிருந்த அன்றைய தமிழக முதல்வர் தனது சுயநல தேவைகளுக்காகத் தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டார் என்ற ஆதங்கத்தின் வெறுப்பு இன்னமும் அடங்குவதாக இல்லை. இதே காரணத்தினாலேயே கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களில் பெரும்பான்மையினோர் மக்களால் தண்டிக்கப்பட்டனர்.


எதிர்வரும் தேர்தலுக்காகத் தன்மீதான களங்கத்தைத் துடைப்பதற்காகவே கலைஞர் கருணாநிதி ‘டெசோ’ நாடகத்தைப் பல அரங்குகளிலும் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றார். ஈழத் தமிழர்கள் மீதான இந்திய ஆட்சியாளர்களின் அணுகுமுறை தற்போதும் பலத்த விமர்சனங்களுக்குள்ளாகி வருவதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழக காங்கிரசுக்குப் பலத்த சவாலைத் தோற்றுவித்துள்ளது.

 

இந்த நிலையில், ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள சிறிலங்காவுக்கெதிரான தீர்மானம் இந்திய ஆட்சியாளர்களுக்குப் பெரும் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா சிறிலங்காவை ஆதரிப்புமாக இருந்தால், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும். இதனால், இந்திய ஆட்சியாளர்கள் அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது ஈழத் தமிழர்களுக்கு சாதகமானதொரு கள நிலையை சர்வதேச அரங்கில் உருவாக்கும்.


தற்போதைய நிலையில், இந்தியாவின் ஆட்சியாளர்கள், தங்களது அடுத்த தேர்தல்வரை தமிழீழ மக்களுக்கெதிரான எந்த நகர்வுகளையும் மேற்கொள்ள வாய்ப்பில்லை. இந்தியாவின் இக்கட்டான இந்த நிலைக்கு, தமிழக மக்களின் தமிழின உணர்வே காரணமாக அமைந்துள்ளது. இது கூர்மைப்படுத்தப்பட வெண்டும். இந்திய காங்கிரஸ் கட்சியின் நலனும், தமிழீழ மக்களின் நலனும் ஒரு கோட்டில் சந்திக்கவேண்டிய கட்டாய நிலையைத் தமிழகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு தரப்பு நலன் சார்ந்த மாற்றம் இரு தேசங்களின் நலன் சார்ந்ததாக மாறவேண்டும். அதற்குத் தமிழகம் மாபெரும் சக்தியாக மாறவேண்டும்.

 

தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் தமிழீழ நலன் சார்ந்ததாக உறுதிப்படுமானால், இந்தியாவின் எந்த ஆட்சியாளர்களாலும் தமிழீழத்தை வஞ்சிக்க முடியாது. தமிழர்களைக் கொலைக் களத்தில் நிறுத்த முடியாது.

 

தமிழகத்தால் முடியும், தமிழீழத்தை மீட்க!

 

- அகத்தியன் -

 

http://www.eelamview.com/2013/02/06/tamilnadu-to-eelam/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.