Jump to content

முருங்கைமரப் புனைவுகள்


Recommended Posts

ஜெனிவாத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. திருவிழாவின் பிரதான உபயகாரர் தன்னுடைய திக்குப் பாலகர்களை இலங்கைக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார்.

 

ஏற்கனவே சொன்னபடி திருவிழாவுக்கு ஏற்ற ஆயத்தங்களை இலங்கை செய்து முடித்திருக்கிறதா அல்லது முருங்கை மரத்திலிருந்து இன்னமும் இறங்காமல் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பதை அறியவேண்டியது உபயகாரரின் கடமை. இல்லாவிட்டால் திருவிழா நடத்தியும் பயனில்லை.


ஒருவேளை இன்னமும் முருங்கை மரமே தஞ்சமென்று இலங்கை வேதாளக் குணங்களோடு இருந்தால், திருவிழா மங்கலகரமாக இருக்காது. மாறாக பேயோட்டும் சடங்காக மாறிவிடும்.

 

திக்குப் பாலகர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, தாம் குடிகொண்டிருக்கும் முருங்கை மரம் பற்றிய கணிப்புகளைக் கலைக்க இலங்கையில் மணிமுடிவாசிகள் புனைவுகளை எங்கும் பரவவிடத் தொடங்கியுள்ளனர். ஆனால் இதுபோன்ற நிறைய வேதாளங்களைக் கண்டவர்கள் உபயகாரர்கள். வேடிக்கை என்னவென்றால் உபயகாரர்கள்தான் வேதாளங்களின் தலைவர்களும்கூட.


அவர்களால் ஒரு சாதாரண வேதாளம் என்ன செய்யுமென்பதையும், எந்த முருங்கை மரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதையும் ஒரு நொடியிலேயே கண்டுபிடிக்க முடியும். அமெரிக்க திரிசூலக்குழு வந்து போய்விட்டது. இந்தக் குழு வருவதற்கு முன்னர் இலங்கைப் பாதுகாப்புச் செயலர் ஒரு கூற்றை வெளியிட்டிருந்தார்.

 

அண்மைய வெற்றிகரமான புளுகுகளில் ஒன்றுதான் "இறுதிப்போரில் படையினரிடம் சரணடைந்த எவரும் காணமால் போகவில்லை. போர் நடந்த பகுதியில் இந்திய வைத்தியசாலைகள், செஞ்சிலுவைக்குழு என்பவற்றின் மூலம் கையேற்கப்பட்டவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள். எனவே, இதற்குரிய முழுப்பொறுப்பும் அவர்களுக்கே." என்று மிகச் சாதாரணமாக இந்தியா மீதும் செஞ்சிலுவைக் குழு மீதும் பூசிவிட்டு தன்பாட்டுக்கு "சோலியைப்' பார்க்க போய்விட்டார் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய.


ஆனால் அவருடைய புனைவை மிதித்துக்கொண்டு வந்திறங்கியது திரிசூலக்குழு. வந்தவர்கள் எல்லா இடங்களிலும் தமது கழுகுப் பார்வையைப் பதித்தனர். அவர்களிடம் உண்மையின் குரலாக காணாமற்போனோர் விடயமே தமிழர்களிடத்தே இப்போதுள்ள முதன்மையான பிரச்சினை என்பதை முன்வைத்தார் யாழ். ஆயர்.

 

அவர் வாய் மூடும் முன்னரே "பாதுகாப்புச் செயலர் சொன்னது உண்மையல்ல என்பதை நேரில் கண்டு உணர்ந்தோம். காணாமற்போனோரின் உறவுகள் இன்னமும் கண்ணீரோடு அவர்களை மீட்டுத் தரும்படி எம்மிடம் கெஞ்சினார்கள்." என்று திரிசூலக்குழு கூறியது.


ஓர் அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

 

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான்.


அந்த ஏழை சொன்னான், "அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்." அரசனுக்கு கோபம் வந்துவிட்டது. "நீ பொய் சொல்கிறாய். நானாவது  உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?' என்று கத்தினான்! உடனே ஏழை சொன்னான்,

 

"அரசே, நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதி யின்படி எனக்கு ஆயிரம் பொற் காசுகள் கொடுங்கள்." அரசன், தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந் தான். உடனே சொன்னான்,

 

"இல்லை, இல்லை, நீ பொய் சொல்லவில்லை." என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்," நல்லது அரசே, நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்," அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

 

நல்ல வேளையாக இப்போது இது போன்ற புளுகுப் போட்டிகள் நடப்பதில்லை. நடந்தால் இலங்கையில் ஏட்டிக்குப் போட்டியாக புனைவுகளை நினைத்தபாட்டுக்கு அவிழ்த்து விட்டுப் பின்னர் சில கணங்களிலேயே தங்களது பொய்கள் நிர்வாணமாகிவிட, அவமானப்பட்டு, அதிகாரச் சாட்டையை ஏந்தியிருப்பவர்கள் தோற்றுப் போகவேண்டியிருக்கும்.

தங்களது புனைவுகளின் சாயம் மறுநொடியே கரைந்து ஒழுகிப்போனாலும், அதைப்பற்றி கிஞ்சித்தும் இவர்களுக்குக் கவலையில்லை. தொடர்ந்தும் ஒருவரையொருவர் மிஞ்சிக்கொண்டு தினமும் தம்சார்பான பொய்களை எந்தவித கூச்சமுமின்றி கூவிக்கூவி காற்றில் மிதக்கவிடுகிறார்கள் இவர்கள்.

 

பாதுகாப்புச் செயலர் காணாமற்போனோர் பற்றி தான் "கண்டுபிடித்த' விளக்கத்தில் "இறுதிப் போரின் போது எங்கு ஓடுவது என்று திசைதெரியாமல் தவித்த மக்கள்  செஞ்சிலுவைக் குழு ஊடாகவும், இந்திய வைத்திய சிகிச்சை நிலையம் ஊடாகவும் மாத்திரமே படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்தனர்." என்று சொல்லி கண்ணீரில் தவிக்கும் மக்களை வெறுப்பேற்றியுள்ளார்.


அவரது கூற்று படையினரால் பிடிக்கப்பட்டு, காணாமற்போனோர் பற்றிய இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பாதுகாப்புச் செயலர் கூட தான் சொன்னதைத் தானே நம்பியிருக்கமாட்டார். அந்தளவுக்கு கலப்படமற்ற தூய பொய் அதுவென்று அவருக்கு மட்டுமன்றி அகில உலகத்துக்குமே தெரிந்த ஒன்று.

 

போரின் தணல்கள் உயிர் தின்னும் பேராசையுடன் குறு நிலப்பரப்பில் குருதியாற்றை ஓடவிட்ட தருணத்தில் செந்நிறமான சிலுவையை தாங்கிய கொடிகளோ அல்லது அசோகச் சக்கரத்தோடு அசைந்தாடும் மூவர்ணக் கொடிகளோ மக்களை வரவேற்கவில்லை.


ஏனெனில் போரின் வெம்மை இந்தக் கொடிகளையெல்லாம் தூர ஓடவைத்திருந்தது.  போர் நடைபெறும் இடத்திலிருந்து எட்டவாகவே இவற்றின் அமைவிடங்கள் இருந்தன. எந்தவழியால் தப்பிப்பது என்பது தெரியாமல் கொதிக்கும் போர் என்ற எண்ணெய்ச் சட்டிக்குள் தவித்த மக்கள் படைக் கட்டுப்பாட்டுப் பிரதேச "அடுப்புக்குள்' வந்து விழுந்தனர்.

 

இந்த அடுப்பு எரிந்து கொண்டிருந்த பகுதிகளில் மக்களை வாள் ஏந்திய சிங்கங்களைக் கொண்டிருந்த கொடிகளே வர வேற்ற துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது. போரின் மரபார்ந்த நெறிமுறைகளையெல்லாம் மிதித்துவிட்டு வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு நகர்ந்தன.


அரச பாதுகாப்புப்  படைகள் ஏந்தி நின்ற கொடிகளில் பொறிக்கப்பட்டிருந்த சிங்கத்தின் வாளில் 24 மணி நேரமும் குருதி எந்தவித உறைதலுமின்றி வழிந்தோடிக்கொண்டேயிருந்தது. எங்கும் கூக்குரல்கள்.

 

காயங்களோடு மீட்பர்களுக்காகக் காத்திருந்து, காத்திருந்து உயிரற்றுப்போன உடலங்கள். மனித உடல்களைத் தின்று கொழுத்துப்போன காகங்கள். இந்த எல்லையில் வாள் ஏந்திய சிங்கக்கொடிகளுக்கு, தூரத்தே தெரியும் வெள்ளைக்கொடிகள் கூட புலிக்கொடிகளாகவே உருமாறின.


மஞ்சள் காமாலை பிடித்தவனுக்கு காணுகின்ற எல்லாக் காட்சியும் மஞ்சளாகவே தெரியும். கந்தகப் புகையும், வெற்றி மமதையும் படைகளின் கண்களை மறைத்திருந்தன. குருடாகிப் போன கண்களுக்கு புலிக்கொடிக்கும் வெள்ளைக் கொடிக்குமான பேதம் எப்படித்தெரியும்? சாட்சிக்கு யாரும் இல்லை. வேலியும் ஓணானும் மட்டுமே எஞ்சியிருந்தன.

 

என்னதான் கண்முன்னே வேலி ஆயிரம் பேரை கழுத்தறுத்துக் கொன்றிருந்தாலும்,  "நான் நிரபராதிதானே?" என்று வேலி கேட்டால், "ஓம்" என்று தலையாட்டுவதுதானே ஓணானின் குணம். ஓணான்கள் இங்கே காட்டிக்கொடுக்கும் சாட்சிகளாயின.


அவையும் பேதம் பாராமல் தலையாட்டிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு தலையாட்டுதலுக்கும் ஒவ்வொருவர் அதிகாரத்தின் குகைக்குள் தள்ளப் பட்டுக்கொண்டிருந்தனர்.

 

ஏதும் செய்யமுடியாமல் ஊமைச்சாட்சியாய் விரிந்துகிடந்த வானம், கண்ணீர்த் துளிகளை மழைவழியே சிந்துவதைவிட வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. ஓணானும் வேலியும் ஒன்றுகூடிச் செய்த வேள்வியில் கருகிப்போன உயிர்கள் பற்றிய கடைசிச் செய்தி புகைப்படங்களாகவும், காணொலிகளாகவும் வந்தவண்ணமேயுள்ளன.


ஆனாலும் கூட சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக தன் மீதான பழியை இந்தியா மீதும் செஞ்சிலுவைக்குழு மீதும் "அலாக்காகத்" தூக்கிப் போட்டிருக்கிறார் கோத்தா. கலப்படமற்ற பொய் என்பது அவருக்கு மிக நன்றாகவே தெரியும்.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? எப்போதுமே தன்னுடைய புளுகுக்கலையை உலகுக்கு காட்ட அவர் இப்படித்தான் ஏதாவது நம்பமுடியாத விடயங்களை சொல்லிக்கொண்டேயிருப்பார்.


உலகும் மக்களும் பொய் என்று தெரிந்தும் நம்புவது போல் நடித்து, திரிசூலக்குழுவைப்போல கேட்டுச் சிரித்துவிட்டுப் போகவேண்டியதுதான். என்னதான் புனைவுகளின் மீது படுத்துறங்கினாலும் ஜெனிவாத் திருவிழாவில் பேயோட்டம் ஒன்று நடக்கப்போவது மட்டும் மிகத் துலக்கமாகத் தெரிகிறது...!

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=6195345804289527

Link to comment
Share on other sites

ஜெனீவா போயோட்டம் எமது மக்களுக்கான கதவுகளை திறந்து விடட்டும் !

 

150636_330338003732634_405371878_n.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.