Jump to content

அரசியற் கட்சிகளிடையே பொது உடன்பாடு: சிவில் சமூகத்தின் முயற்சிகளும் தமிழரசுக் கட்சியின் நேரமின்மையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியற் கட்சிகளிடையே பொது உடன்பாடு: சிவில் சமூகத்தின் முயற்சிகளும் தமிழரசுக் கட்சியின் நேரமின்மையும்

முத்துக்குமார்
 

 

அண்மைக்காலமாக தமிழ் அரசியலில் மூன்று முக்கிய விடயங்கள் பேசுபொருளாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம், தமிழ் சிவில் சமூகத்தின் தமிழ் அரசியற் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டமை என்பனவே அம் மூன்றுமாகும்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தற்போது உறுதியாகிவிட்டது. ஜனவரி 29ம் திகதி அவர்கள் செல்லவிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசாங்கத்திற்கு ஜெனிவா நெருக்கடிகள் வருகின்ற போதெல்லாம் சம்பந்தன் ஓடிச்சென்று அரசாங்கத்தைப் பாதுகாப்பது வழக்கம். தென்னாபிரிக்க விடயமும் அதன் அடிப்படையிலானதா என்ற சந்தேகம் தற்போது பலரிடையே எழுந்துள்ளது. நீண்டகாலம் இந்த விஜயம் பற்றி பேசப்பட்டபோதும் ஜெனிவா நெருக்கடி ஆரம்பித்த நேரத்தில் இந்த விஜயம் இடம்பெறுவது இயல்பாகவே சந்தேகத்தைக் கிழப்பிவிட்டிருக்கின்றது.

 

இந்தத் தடவை ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு பொறி இருப்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் நடைமுறைப்படுத்துவது பற்றி மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதனால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கின்றது. அதைவிட பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவிநீக்கப் பிரச்சினையும் இந்தத் தடவை போனஸாக கூடியுள்ளது. இந்த போனஸ் விடயம் சிலவேளைகளில் நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகள் நடைமுறைப்படுத்துகின்ற விடயத்தின் கனதியையும் குறைக்கப் பார்க்கும். போர்க்குற்றம், நல்லிணக்கம் என்பவற்றின் கனதிகளைக் குறைப்பதற்காகத்தான் அரசாங்கம் புதிது புதிதாக பிரதம நீதியரசர் பிரச்சினை, முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகள், சிறீதரன் அலுவலக விவகாரம் என திசைதிருப்பி விடுகின்றதோ என சந்தேகிக்கத் தோன்றுகின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சில் பெரிதாக எதுவுமில்லை என்பது வேறுகதை.

 

ஜெனிவா நெருக்கடியை தணிக்கச் செய்யும் ஆற்றல் இந்தியாவிற்கே உள்ளது. இதனால்தான் வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்திருக்கின்றார். இந்திய நலனைப்பேணும் வகையில் பல ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் ஊக்குவிப்பும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஜயத்திற்கு காரணமாக இருக்கலாம். கூட்டமைப்பு சில மாதங்களுக்கு முன்னர் அல்லது ஜெனிவா கூட்டத்திற்கு பின்னர் பயணத்தை மேற்கொண்டிருந்தால் சந்தேகங்கள் பெரிதாக எழுந்திருக்காது. ஜெனிவா கூட்டம் ஆரம்பமாகும் நிலையில் பயணத்தை மேற்கொள்வதுதான் சந்தேகத்தை உருவாக்குகின்றது. ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னர் அரசாங்கப் பிரதிநிதிகள் தென்னாபிரிக்கா சென்று வந்திருந்தனர். அக் காலத்திலிருந்தே கூட்டமைப்பு தென்னாபிரிக்கா செல்லும் என்ற பேச்சு அடிபட்டது. அரசாங்கப் பிரதிநிதிகள் சென்று வந்தவுடன் கூட்டமைப்பினரும் சென்றிருந்தால் இந்த முயற்சியை உண்மையானதாகக் கருதியிருக்கலாம்.

 

கூட்டமைப்பினர் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக பயணம் செய்வதாகக் கூறியிருந்தனர். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் உண்மையை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஒரு "வசதிப்படுத்தினர்" பாத்திரத்தை தென்னாபிக்கா வகிக்க முயல்வதாக அவர் கூறியிருக்கிறார். தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தமிழ்மக்கள் தொடர்பாக சற்று அனுதாபங்களைக் கொண்டுள்ள போதிலும் தென்னாபிரிக்க அரசாங்கம் - அரசுடனான தொடர்பு என்றவகையிலும், இந்தியாவின் தூண்டுதலினாலும் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாகவே உள்ளது. அது இலங்கைக்குச் சார்பாக ஜெனிவாவில் ஒரு தடவை வாக்களித்தும் இருக்கின்றது.

 

அரசாங்கம் கூட்டமைப்பின் இந்தப் பயணத்தை ஜெனிவா கூட்டத்தொடரில் நிச்சயம் பயன்படுத்தும். இணக்க முயற்சிகள் தொடர்கின்றன என்ற தோற்றத்தை அது கொடுக்கப்பார்க்கும். ஆனால் உண்மைநிலை இதற்கு மாறானது. அரசாங்கத்திற்கு அரசியல்தீர்வை முன்வைக்கும் எண்ணம் அறவே கிடையாது. உண்மையில் அந்த எண்ணம் இருந்திருந்தால் தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியான பச்சை ஆக்கிரமிப்புக்களை அது நிறுத்தியிருக்கும். தமிழ்மக்களின் மத்தியில் இயல்பு நிலையினைக் கொண்டு வருவதில் அதிகம் ஒத்துழைத்திருக்கும்.

 

கூட்டமைப்பு இந்நேரத்தில் பயணம் செய்யவேண்டியது உண்மையில் தென்னாபிரிக்காவுக்கு அல்ல. மாறாக ஜெனிவாவிற்கே! அங்கு வருகின்ற நாடுகளின் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் தமிழ்மக்களின் இன்றைய நிலையினைத் தெளிவுபடுத்தியிருக்ககூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும். ஆனால் கூட்டமைப்பின் தலைமை இவற்றிற்குத் தயாராக இருக்கவில்லை. அண்மையில் அயர்லாந்து பாராளுமன்றக் குழுவினர் சம்பந்தனைச் சந்தித்தபோது அரசாங்கம் தமிழர் தாயகத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்துவருகின்றது எனக்கூறி பாராட்டியிருக்கின்றார். தமிழ்மக்களுக்கு இப்போதுள்ள பிரச்சினை புனர்வாழ்வுதான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் கொடுத்தால் போதும் என்றும் கூறியிருக்கின்றார். தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பச்சை ஆக்கிரமிப்புகள் பற்றியோ, அரசியல் தீர்வில் அரசாங்கம் அக்கறை இல்லாது இருக்கின்றது என்பது பற்றியோ சம்பந்தன் வாயே திறக்கவில்லை.

 

அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளனர். அங்கு தமிழ்மக்களுக்கு குரல்கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, 'நீங்கள் உண்மைநிலை தெரியாமல் பேசக்கூடாது' என்றும் கூறியிருக்கின்றனர். இங்குள்ளவர்களின் கருத்துக்களைக் கேட்பதைவிட இலங்கையில் தமிழ்மக்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம்தான் உண்மையான தகவல்களை நீங்கள் கேட்டறியவேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். புலம்பெயர் இணையத் தளங்கள் சம்பந்தனின் இக்கருத்தை கடுமையாக விமர்சித்திருக்கின்றன. ஆனால் இலங்கைத் தமிழ் ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் எவற்றையும் காணோம்.

 

இந்தச் சீத்துவத்தில் மட்டக்களப்பில் சம்பந்தன் அகிம்சைப் போராட்டங்களை நடாத்தப் போவதாக அறைகூவல் விடுத்திருக்கின்றார். போருக்குப் பின் நடைபெற்ற எத்தனை போராட்டங்களில் சம்பந்தனும், சுமந்திரனும் கலந்துகொண்டிருக்கின்றனர்?  முறிகண்டிப் போராட்டத்தை தவிர வேறு எவற்றிலும் கலந்து கொள்ளவில்லை. சம்பந்தன் நோய்காரர் எனக் காரணம் கூறலாம். சுமந்திரன் ஏன் கலந்து கொள்ளவில்லை. வழக்குகள் அதிகம் இருந்ததா? பகுதிநேரத்தில் பகுதி நேரம்தான் இவர் அரசியல் செய்வதென்றால் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மிதவாத அமைப்பு என பலர் கூறுகின்றனர். உண்மையில் மிதவாத அமைப்புக்கான தகுதிகூட கூட்டமைப்புக்கு இருக்கின்றது என்பது கேள்விக்குறியே!

 

இரண்டாவது விடயம் தமிழ்ச் சிவில் சமூகத்தின் தமிழ் அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள். இது தோல்வியில் முடிந்திருக்கின்றது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் இதற்கான முயற்சிகளை செய்திருந்தார். முதலில் ஜனவரி 19ம் திகதி சந்திப்பதற்கு கேட்கப்பட்டது. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் இதற்கு உடன்பட்டபோது, தமிழரசுக்கட்சி தனக்கு நேரமில்லை எனக் கூறியிருக்கின்றது. சிவில் சமூகம் வேறு மூன்று திகதிகளைக் கொடுத்தபோதும் தமிழரசுக்கட்சி அதற்கு பதிலளிக்கவில்லை. நேரமில்லை என்பது சாட்டுக்குக் கூறப்பட்டதே தவிர தமிழரசுக் கட்சி அந்தப் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்பதே உண்மையாகும். தமது தனித்த ஓட்டத்திற்கு இவை தடையாகிவிடும் என்பதே இதற்கு காரணமாகும். இது விடயத்தில் தமிழரசுக் கட்சியை மட்டும் முதன்மைப்படுத்துவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்கு சமனாகும் என்ற ஆனந்த சங்கரியின் குற்றச்சாட்டு ஒருவகையில் உண்மையானது என்றே கூறவேண்டும்.

 

தமிழ் சிவில் சமூகத்தினர் அனைத்துக்கட்சிகளும் ஏற்கக்கூடிய பொதுக் கொள்கையையும், பொது வேலைத்திட்டத்தையும் உருவாக்குவதனையே இது விடயத்தில் நோக்கமாகக் கொண்டிருந்தனர். தமிழரசுக் கட்சிக்கு இது உவப்பானதல்ல. தமிழரசுக் கட்சி இதுவிடயத்தில் தொடர்ச்சியாக முரண்டுபிடித்ததால் ஏனைய கட்சிகள் பொதுக்கொள்கையையும், பொது வேலைத்திட்டத்தையும் உருவாக்கி செயற்படுதல் தவிர்க்கமுடியாததாக இருக்கும். இதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவதற்கு தமிழரசுக்கட்சிக்கு எந்த அருகதையும் இல்லாமல் போய்விடும்.

 

புலம்பெயர் சக்திகள் தாயகம், புலம், தமிழகம் என்பவற்றில் செயற்படும் சக்திகளை ஒன்றிணைத்து பொது வேலைத்திட்டத்தை நகர்த்துவதற்கு முயன்று வருகின்றனர். தமிழ்த் தேசிய சபை ஒன்றினை உருவாக்குவதும் அவர்களது நோக்கமாக உள்ளது. இது தொடர்பாக விரைவில் ஒரு மாநாடும் கூட்டப்பட இருக்கின்றது. இந்த முயற்சிகளுக்கெல்லாம் தடையாக இருப்பது தமிழரசுக் கட்சியே.

 

தேசிய இனஒடுக்குமுறை என்பது அத்தேசிய இனத்திற்கு வெளியில் இருந்துவரும் ஒடுக்குமுறையாகும். தேசிய இனத்திலுள்ள அனைத்து சக்திகளையும் கொள்கை ரீதியான ஒரு ஐக்கிய முன்னணியின் கீழ் ஒன்று திரட்டிச்செயற்படும்போதே அதன் விடுதலையைச் சாத்தியமாக்க முடியும். இது ஒரு பொதுவிதி. இப் பொதுவிதிக்கு உடன்படாதவர்கள் தேசிய இனத்தின் விடுதலையை விரும்பாதவர்கள் என்பதே அர்த்தமாகும். இங்கு கொள்கை ரீதியான ஐக்கிய முன்னணியைக் குறிப்பிடுகின்றேனே ஒழிய வெறும் தேர்தல் கூட்டைக் குறிப்பிடவில்லை. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேர்தல் கூட்டாகவே உள்ளது. இதனை ஒரு கொள்கை ரீதியான ஐக்கிய முன்னணியாக வளரவிடாமல் தடுப்பது தமிழரசுக் கட்சியே! இது ஒரு கொள்கை ரீதியான ஐக்கிய முன்னணியாக இருந்தால் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அதில் இணைந்து செயற்படுவதில் எந்த சங்கடங்களும் இருக்கப்போவதில்லை.

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சமஸ்டி ஆட்சி முறைக்கு எதிரானவர்களல்ல. ஆனால் இந்தச் சமஸ்டி ஆட்சிமுறை தமிழ்மக்களை ஒரு தேசமாக அங்கீகரித்து உருவாக்கப்படல் வேண்டும் என்றே அவர்கள் கூறிவருகின்றனர். இக் கொள்கை நிலைப்பாடு தவறானதல்ல. சில ஊடகங்கள் அதனை தவறாக நினைத்து கருத்துக்களைக் கூற முற்படுகின்றன. அவை யதார்த்தமற்றது எனக் கூறப் பார்க்கின்றன. அரசியல் அறிஞர்கள் எனத் தம்மைக் கருதிக் கொள்கின்ற சிலரும் இக்கருத்துக்களை முன்வைக்கின்றனர். அவர்களது ஓரு நாடு இரு தேசங்கள் என்பதை இரு நாடுகள் ஒரு தேசம் என்று கூட பிரச்சாரப்படுத்துகின்றனர். தேசம் என்ற பதம் அண்மைக் காலத்தில் எழுச்சியடைந்தது. 'இறைமை கொண்டவர்கள்', 'தங்களைத் தாங்களே ஆளும் தகுதி பெற்றவர்கள்' என்பதே இதன் அர்த்தமாகும். இந்தச் சக்திகள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் தமிழ்மக்கள் ஒரு தேசமாக இருக்கின்றனர் என்பதே உண்மை நிலையாகும். அதனால்தான் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி வாகை சூடக் கூடியதாக உள்ளது. தேச எதிர்ப்புச் சக்திகளினால் பெரியளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவ முடியவில்லை.

 

எனது முன்னைய கட்டுரைகளில் கூறியது போல, இன்று தமிழ் மக்களுக்கு தேவையானது தேர்தல்களில் கூத்தாடும் அரசியல் கட்சியல்ல. மாறாக தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் சர்வதேசம் தழுவிய வகையில் முன்னெடுக்கக் கூடிய தேசிய அரசியல் இயக்கமே. அந்த இயக்கம் உருவானால் தமது 'ஜொலி' அரசியலுக்கு இடமில்லாமல் போய்விடும் என்பதனாலேயே தமிழரசுக்கட்சி அதனைத் தவிர்க்க முனைந்தது. அது மேற்குலகத்திற்கும், இந்தியாவிற்கும் குற்றேவல் செய்யும் ஒரு அமைப்பாகவே தன்னை வைத்திருக்க முயல்கின்றது.

 

மூன்றாவது விடயம், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலக விவகாரமாகும். இந்த விவகாரத்தில் மிகவும் சோகமான விடயம் சிறீதரன் தனித்து விடப்பட்டமையாகும். அவரது அலுவலகத்தில் படையினரின் அத்துமீறலை மனோ கணேசனைத் தவிர கூட்டமைப்பின் தலைமையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ கண்டிக்க முன்வரவில்லை. சுமந்திரன் மட்டும் பாராளுமன்றத்தில் இதுபற்றிப் பேசியிருக்கின்றார். சிறீதரனின் செயற்பாடுகள் அவர்களது 'ஜொலி' அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடும். அதனால் எல்லோரும் சேர்நது சிறீதரனை பழிவாங்க முற்பட்டிருக்கின்றார்கள்.

 

சிறீதரன் கிளிநொச்சியில் அலுவலகம் அமைத்து வன்னியில் நடைபெறுகின்ற இராணுவ அத்துமீறல்களை வெளிப்படுத்த முற்பட்டிருக்கின்றார். போராட்டங்களை நடாத்த முற்பட்டிருக்கின்றார். இது இராணுவத்தினரின் இராணுவ நிர்வாகத்திற்கு இடைஞ்சலான ஒன்றாகும். அதனாலேயே வெடிபொருட்கள் அலுவலகத்தில் வைத்திருந்ததாகக் கூறி இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார்.

 

இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கால்களில் தடக்குப்படுகின்ற வடபிரதேசத்தில் இப்போதைக்கு ஆயுதப் போராட்டம் பற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாது. அதைவிட தமிழ்த் தேசிய அரசியல் சர்வதேச மட்டத்திற்கு சென்ற நிலையில் ஆயுதப்போராட்டம் இன்று முதன்மையானதுமல்ல. இது இராணுத்தினருக்கும் நன்றாகத் தெரியும். இராணுவத்தினருடைய இலக்கு எல்லாம் ஒரு தேசிய அரசியல் இயக்கம் வளரவிடாமல் தடுப்பதே! தேசிய அரசியல் இயக்கம் பற்றி சம்பந்தன் தலைமைக்கும் அக்கறை இல்லாததினால் சிறீதரன் மீதான நடவடிக்கைகளை அவர்களும் மௌனமாக வரவேற்றிருக்கக்கூடும்.

 

இராணுவத்தினரின் இந் நடவடிக்கைகளுக்கு சிறீதரனும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறார். யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை இறுதியில் குழப்பியடித்தவர் இவரே. தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அதற்கு வெள்ளைப்பூச்சு அடிப்பதற்காகவும், தன்னிச்சையாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர் விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பினரும் இணைந்து உருவாக்கப்பட்ட 'மாணவர்களை விடுவிக்கும் குழுவினையும்' புறக்கணிப்புச் செய்தார். அந்தக் குழுவினை வளர்த்திருந்தால் மாணவர்களுக்காக தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்தியிருக்க முடியும். சிறீதரன் முகம் கொடுக்கும் நெருக்கடிக்கு ஒரு கூட்டுக்குரலையும் உரத்து எழுப்பியிருக்கமுடியும். எல்லாவற்றையும் போட்டுடைத்து இன்று சிறீதரன் தனிமரமாகி நிற்கிறார்.

 

சிறீதரன் தமிழ்த்தேசிய அரசியலுக்காக நேர்மையாக உழைப்பதில் அக்கறை கொண்டிருப்பின் அவர்இருக்கவேண்டிய இடம் தமிழரசுக்கட்சியல்ல.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=82349391-a9b2-4821-87b9-cae48776ea35

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.