Jump to content

அமெரிக்க இந்திய அரசுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் துணிச்சலுடன் இலங்கை


Recommended Posts

obama-india.jpg

மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுத்தால், சீனாவிடம் போய் உதவி கேட்போம் என்று கடந்தவாரம் ஒரு மிரட்டலை விடுத்திருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் போதிய கவனம் எடுத்து, விசாரணைகளை நடத்தாத நிலையில், இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பின்னணியில், அமெரிக்காவில் மேலதிகப் பயிற்சிக்காக இலங்கை இராணுவத் தலைமையகத்தால், தெரிவு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்து விட்டது.

 

53வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றினார் என்பதற்காகவே, அவரை பயிற்சித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள அமெரிக்கா மறுத்திருந்தது. இந்தநிலையில் தான், அமெரிக்கா ஒன்றும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதில்லை என்றும், பயிற்சிகளை மட்டும் தான் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டிருந்த கோத்தாபய ராஜபக்ச, அதையும் நிறுத்தினால் கூடக் கவலைப்படப் போவதில்லை என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது, இலங்கை இராணுவத்தினருக்கு அளித்து வரும் பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்தினால், அதற்காக சீனாவின் உதவியை நாடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை அமெரிக்காவுக்கு விடுத்த எச்சரிக்கை என்று கருதினாலும், ஆழமாகப் பார்க்கப் போனால், இதற்குள் இந்தியாவுக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ள முடியும். எனக் குறிப்பிடும் அவர்,

தனது விரிவான ஆய்வில்,

 

பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் என்று வரும் போது, அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில், சீனாவைத் தான் இலங்கை வைத்துள்ளது, இந்தியாவை அல்ல என்பதே அந்தச் செய்தி.

சில மாதங்களுக்கு முன்னர், இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் பெரியளவில் எதிர்ப்புக் கிளம்பியது நினைவிருக்கலாம்.

 

தாம்பரம் விமானப்படைத் தளத்தில், பயிற்சி பெற்ற இலங்கை விமானப்படையினர் 9 பேர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்ப்பு மற்றும் தமிழக அரசியல்கட்சிகளின் போராட்டங்களை அடுத்து. அங்கிருந்த வெளியேற்றப்பட்டனர். இதுபோல குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி நிலையத்தில் கருத்தரங்கிற்காகச் சென்ற மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் எதிர்ப்புகளால் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதே சூட்டோடு சூடாக, இந்தியாவில் எங்குமே இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படக் கூடாது என்று அரசியல்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதங்கள் எழுதினார். கருணாநிதி அறிக்கைகளை வெளியிட்டார். ஏனைய அரசியல் கட்சிகளும், அறிக்கைப் போர்களை நடத்தின. வீதிமறியல், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு என்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், கடைசியில், அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.

 

இப்போது யாருமே அதுபற்றிப் பெரிதாகப் பேசுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்றால், இந்திய மத்திய அரசு இலங்கைப் படையினருக்கான பயிற்சிகளை நிறுத்தப் போவதில்லை என்றும், தமிழ்நாட்டில் வேண்டுமானால் அவற்றை நடத்தாமல் விடலாம், ஆனால், இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவது உறுதி என்றும் தெளிவாகக் கூறிவிட்டது. இதற்கு ஒரு காரணத்தையும், இந்திய மத்திய அரசு கூறியிருந்தது.

அதாவது, இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்தால், அவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து ஏற்படாது என்றும், இந்தியா பயிற்சியளிக்க மறுத்து, சீனாவோ, பாகிஸ்தானோ அவர்களுக்கு பயிற்சி அளித்தால், தமிழர்களுக்கு ஆபத்தானதாகி விடும் என்றும் கூறப்பட்டது. இந்தியா, போர்ப்பயிற்சிகளுடன் மனிதாபிமானத்தையும் சேர்த்தே ஊட்டுவதால், இலங்கைப் படையினர் நன்நடத்தையுடன் நடந்து கொள்வர் என்று தமிழ்நாட்டின் பிரபல நாளேடுகள் கூட ஆசிரியர் தலையங்கங்களை எழுதின.

 

இந்தியாவில் ஆண்டுக்கு 800இற்கும் அதிகமான இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகள், 2000ம் ஆண்டுகளிலேயே தொடங்கி விட்டன. அதற்கு முன்னரும் இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சி அளித்தது. ஆனால், அது குறிப்பிட்டளவு அதிகாரிகளுக்கான பயிற்சியாகவே இருந்தது. பயிற்சித் திட்டம் விரிவாக்கப்பட்ட பின்னர், கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 5000இற்கும் குறையாத இலங்கைப் படையினர் இந்தியாவில் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

ஆனாலும், இலங்கை அரசாங்கம், இராணுவ உதவிகளுக்காக இந்தியாவை முழுமையாக நம்பியிருக்கத் தயாரில்லை என்பதே உண்மை. ஆண்டுதோறும் 800 படையினரை பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வந்தாலும் கூட, சீனாவுடன் அதனை ஒரே தராசில் வைத்துப் பார்க்க இலங்கை தயாராக இல்லை. “அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளை அளிக்க மறுத்தால், பக்கத்து நாடான இந்தியா உள்ளது.

 

ஆண்டுக்கு 800 படையினரை பயிற்றுவிக்கும் இந்தியா இன்னும் கூடுதலாகச் சிலருக்குப் பயிற்சி அளிக்காதா?” என்று பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தால் இந்தியாவின் மனம் நெகிழ்ந்து போயிருக்கும். ஆனால், அவர் அப்படிக் கூறவில்லை. அமெரிக்கா போனால் போகட்டும், எங்களுக்குச் சீனா உள்ளது, அவர்களிடம் போய் உதவி கேட்போம் என்று தான் கூறியுள்ளார்.

சீனாவுடன் ஒப்பிடும்போது, இரண்டாம் நிலையில் தான் இந்தியாவை அவர் வைத்துள்ளார் என்பதற்கு, இதை ஒரு எடுத்துக் காட்டாக கொள்ளலாம். இந்தியா பயிற்சி வழங்க மறுத்தால் தான், சீனாவிடம் இலங்கை ஓடிப் போய் விடும் என்று இந்தியா நம்பிக் கொண்டிருந்தது. ஆனால் இலங்கையோ, அமெரிக்காவுக்கு நிகரான உயர் பயிற்சிக்குரிய நாடாக இந்தியாவைப் பார்க்கவில்லை. இந்தியா பயிற்சி கொடுத்தாலும் நிறுத்தினாலும், சீனாவில் பயிற்சி பெறுவதை தடுக்க முடியாது என்பதை கோத்தாபய ராஜபக்ச வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை, இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கையைக் கைவிடப் போவது இல்லை.

 

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தொடர்ந்து இலங்கைப் படையினருக்குப் பயற்சி அளிப்போம் என்று கடந்த புதன்கிழமை கூடக் கூறியுள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் பயிற்சி அளிக்காவிட்டாலும் பரவாயில்லை, எங்களுக்குச் சீனா உள்ளது என்ற மிதப்பில் உள்ளது.

 

sonia-manmohan-obama.jpg

இது ஒருவகை மிரட்டல் தான்.

 

 

சீனாவை வைத்து – உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளையே மிரட்டும் அளவுக்குப் போயுள்ளது இலங்கை. இந்த இராஜதந்திரம் இதுவரை பலித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் இலங்கையின் அமைவிடமே. இதனால் தான், “எம்மிடம் எரிபொருள் வளம் இல்லாவிட்டாலும், கேந்திர இடஅமைவு உள்ளது” என்று பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். இந்த கேந்திர அமைவிடம் தான், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் கண்களில் இலங்கை விரலை விட்டு ஆட்டுகின்ற துணிச்சலைக் கொடுத்துள்ளது. ஆனால், தனியே ஒரு இடத்தின் கேந்திரத் தன்மை மட்டும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும், முதன்மையானதாகப் பார்க்கப்படுவதில்லை என்பதையும் கருத்தில் கொண்டாக வேண்டும்.

 

இபோதமிழ் -ஹரிகரன்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.