Jump to content

பாவம் றிஷானா.....


Recommended Posts

றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளமை குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனைத் தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள். அவளின் முன்பாகவே ரிஸானாவின் உயிர் பிரிந்தது.

 

 

மூதூர் றிஷானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது. இதுதொடர்பில் சாதக பாதக கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. றிஷானாவை மீட்பதில் இலங்கை அரசு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.


இறுதிக் கட்டத்தில் காத்திரமான பங்களிப்புக்களை அரசு மேற்கொள்ளவில்லை என்று  கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சூழ் நிலையில், இலங்கையின் முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் நடந்து கொண்ட அசிரத்தையான போக்குகள் குறித்த தகவல்களும் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளன.

 

 

மரணமடைந்த குழந்தையின் தாயின் மனநிலையில் மாற்றங்களை எற்படுத்த, நன்கு அரபு மொழி தெரிந்த  இலங்கை முஸ்லிம் பெண் ஒருவரை சவூதிக்கு அனுப்பி குறித்த தாயுடன் நேரடியான சந்திப்பொன்றை மேற் கொள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் முன்வைக்கப்பட்ட யோசனை அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில் றிஷானாவின் விடுதலைக்காக சவூதி சென்ற இலங்கை  முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் அங்கு என்ன செய்தார்கள்? இங்கு வந்து என்ன செய்தார்கள்? என்ற தகவல்கள் தற்போது எமக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை ஒரு விமர்சன பார்வையில் தருகிறோம்.

 

 

சவூதி அரேபியா சென்ற குழு என்ன செய்தது?

 

2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சவூதி அரேபியா சென்ற தூதுக் குழுவில் முதிர்ந்த அரசியல்வாதிகள் இருவர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவருடன் அந்த அரசியல்வாதியின் மகனும் சென்றிருந்தார். இரண்டாவது அரசியல் வாதி "பப்ளிசிட்டி' மன்னர்.

 

இவர்கள் சவூதி அரேபியா சென்றடைந்தவுடனேயே முதல் கேட்ட கேள்வி, எந்த ஹோட்டல் எமக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதே. அதன்படி சவூதி தலைநகர் ரியாத்திலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலான அல்கொஸாமியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர்.


பின்னர் மகனுடன் சென்ற முதிர்ந்த அரசியல்வாதி, மத்திய கிழக்கிற்கு பொறுப்பாக உள்ள ஜனாதிபதி ஒருவரின் உறவினருக்கு சொந்தமான Palatical villa (பலேடிக்கல் வில்லா) இல் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்ததன் பேரில் அங்கு தங்கவைக்கப்பட்டனர்

 

இலங்கையின் "பப்ளிசிட்டி' மன்னரின் புதல்வி ரியாத் நகரில் குடும்ப சகிதம்  வசிக்கின்றார். அங்கு சென்ற பப்ளிசிட்டி சில தினங்களை அங்கு கழித்து தனது பேரக் குழந்தைகளுடன் பொழுதைப் போக்கினார். இவைகளுக்குப் பிற்பாடே றிஷானா நபீக்கின் விடுதலை தொடர்பாக பேச்சு நடத்த இருவரும் ஆயத்தமாகினர் என்பது வேதனைக்குரிய செய்தி.

மரணமடைந்த குழந்தை அல் ஒடைபி வம்சத்தை சேர்ந்தது. இதற்கமைய இந்த வம்சத்தின் தலைவரான ஷேக் பைசாலை சந்தித்தது இந்தத் தூதுக் குழு. றிஷானாவை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டது. ஆனால் அவர்களிடத்தில் றிஷானாவின் குடும்பத்தை பற்றிய போதிய தகவல்கள் இருக்கவில்லை.

 

தாம் கேள்விப்  பட்டதை மட்டுமே பேசினர். இது றிஷானாவை பற்றிய அவர்களின் கடுகடுப்பு போக்கில் ஓரளவாவது மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமையவில்லை.

 

தம்மை சந்திக்க வருபவர்களை நன்கு உபசரிப்பதில் சவூதி அரேபியாவை யாரும் விஞ்சிவிட முடியாது என்பது பலரும் அறிந்த உண்மை. இலங்கையிலிருந்து சென்ற குழுவினரையும் நன்கு உபசரித்தனர்.


அல் ஒடைபி வம்சத் தலைவரின் உபசரிப்பில் திக்குமுக்காடிப் போன குழுவில் இடம் பெற்றிருந்த பப்ளிசிட்டி மன்னர் அங்கிருந்தவாறே இலங்கையின் தமிழ் அரச ஊடகம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு, உபசரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த அறுசுவைகளைக் குறிப்பிட்டு "இதற்கமைய றிஷானா விடுதலை பெறலாம்" என ஊகத்தின் அடிப்படையில் கூறி, செய்தியை முன்பக்கமாக பிரசுரிக்குமாறும் கட்டளையிட்டார். (அரச ஊடகங்கள் ஆதாரம்)

 

 

 

இதயசுத்தியோடு செயற்படாத குழு


றிஷானா விடுதலை தொடர்பிலான முயற்சியை இந்தளவுடன் நிறைவு செய்து கொண்ட இலங்கைக் குழு நாடு திரும்பியது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரணமடைந்த குழந்தையின் தந்தையை சந்திக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லையாம்.

 

 

ஆனால் இக்குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தால் அவர்களைச் சந்தித்து பேச குழந்தையின் தந்தை விருப்பம் கொண்டிருந்ததாக குழந்தையின் தந்தை பின்னர் அறிவித்திருந்தார்.


இலங்கைக் குழு நாடு திரும்பிய போதிலும் குழுவில் இடம் பெற்றிருந்த அந்த "பப்ளிசிட்டி' மன்னர் ரியாத் நகரிலுள்ள தனது புதல்வியின் வீட்டில் சுமார் ஒருவாரம் வரை தங்கியிருந்து விட்டே நாடு திரும்பினார்.

 

இதற்கிடையில் அவர்களால் தெரிவிக்கப்பட்டதாக அரச ஊடகத்தில் வெளியான செய்தி தொடர்பில் இலங்கையிலிருந்த முக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது "றிஷானா விரைவில் விடுதலையாவார் என்று கூறாமல் எப்படி இவர்களால் நாடு திரும்ப முடியும்? நான் அறிந்த மட்டில் இவர்கள் சுற்றுலா சென்று வந்துள்ளனர்" என்றார்.


றிஷானாவின் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் பிரமுகரை சில மாதங்களுக்கு முன்னர்தொடர்பு கொண்டு றிஷானா குறித்து வினவியபோது அவர் இவ்வாறு கூறினார்.

 

"சவூதி நபர் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் மூலமாகவே ரிஸானா குறித்த தகவல்களைப் பெற்று வந்தேன். சில காலமாக அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது" என்று பதில் கூறினார். பொறுப்பு மிக்க இந்த முஸ்லிம் பிரமுகரின் பதிலைப் பாருங்கள்.


மர்ஹும் றிஷானா நபீக்கின் விடுதலை தொடர்பில் இலங்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகள்  இதயச்சுத்தியோடு செயற்பட்டிருந்தால் ரிஸானா என்றோ மூதூர் திரும்பியிருப்பாள்.

 

இதயச்சுத்தியோடு இவர்கள் செயற்படவில்லை என்பதற்கு 2005 ஆம் ஆண்டு றிஷானா சவூதி புறப்படும் போது அவளின் வீடு எப்படியிருந்ததோ அதைவிட பரிதாபகரமாக 7 வருடங்கள் கடந்த பின்பும் அந்த வீடு காணப்படுவது ஒன்றேபோதும்....


றிஷானாவின் பெயரால் ரியாத் நகரிலுள்ள குடும்பத்திருடன் பொழுதைக் கழித்தவர்களும், சுற்றுலா சென்றவர்களும், அறுசுவை உணவுகளை உண்டவர்களும், அரசியல் நடத்தியவர்களும் இன்று முதல் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி அதற்கு பிராயச்சித்தமாக ரிஸானாவுக்காக இறைவனிடம் பிரார்த்தனைகளில் ஈடுபட்டாலே போதும் வேறு எந்த உதவியையும் அவர்கள் செய்யத் தேவையில்லை என்கின்றனர் சம்பவங்களை நேரில் கண்ணுற்ற அதிகார பலமற்ற முஸ்லிம்கள்.


2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஜனவரி 09ஆம் திகதி வரை மேற்சொன்ன அலட்டிக் கொள்ளாத நிலைமைகளே மூதூர் றிஷானா விடயத்தில் நடந்துள்ளன.

 

சவூதி நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அரபு பிரமுகர்களும், சாதாரண மக்களும் ரிஸானா விடுதலையில் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் ஒரு துளியையேனும் எமது நாட்டின் சகல துறைகளிலும் வளம் பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்யவில்லை என்பதை  மிக வேதனையுடன் உறுதியாக கூறக்கூடியதாகவுள்ளது.

றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்த மறுநிமிடமே "றிஷானா விடுதலை விடயத்தில் ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி" என்று கூறுமளவுக்கு கல் நெஞ்சம் பிடித்த கொடூரர்கள் "முஸ்லிம் அரசியல் பிரமுகர்" என்ற நாமத்தில் உலாவருவதையிட்டு முஸ்லிம்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

 

இந்தச் சந்தர்ப்பத்தில் எவரது நன்றியையும் ஜனாதிபதி எதிர்பார்த்திருக்கவில்லை. ரிஸானா விடுதலை தொடர்பில் ஜனாதிபதி இதய சுத்தியோடுதான் செயற்பட்டார். ரிஸானா விடுதலைக்காக சவூதி சென்ற குழுவினர் சுற்றுலா மேற்கொண்டதைக் கேள்வியுற்று ஆத்திரப்பட்ட ஜனாதிபதி ஒரு போதும் இந்தக் குள்ளநரியின் நன்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார்.


றிஷானாவின் விடுதலைக்காக அரும் பணியாற்றியது மட்டுமன்றி உறுதுணையாகவுமிருந்த சவூதியில் பணியாற்றும் கண்டியைச் சேர்ந்த பல்வைத்திய நிபுணர் டாக்டர் கிபாயா  இப்திகார் நன்றி கூறப்படவேண்டியவர்களில் முக்கியமானவர். சமூக நோக்குடன் அவர் செயற்பட்ட விதம் இறைவனிடத்தில் அபரிமித நன்மையை அடைந்து கொள்ள வழிவகுக்க வேண்டும்.

 

 

 

இரக்கமில்லா கல் நெஞ்சக்காரி

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க றிஷானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவிருந்த இறுதித் தருணம் குறித்த சில தகவல்கள் எமக்கு சவூதியில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. கல் நெஞ்சங்களையே உருகவைக்கும் அந்தச் சம்பவம் இது தான்.

 

 

இறுதி நேரத்திற்கு முன்பு றிஷானாவிடம் அவரது இறுதி ஆசை குறித்து வினவப்பட்டது இரண்டு "ரக் அத்' தொழ வேண்டும். தன்னிடம் இருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த இரு கோரிக்கைகளும் ஏற்கப்பட்டன.


தான் வறுமையில் வாடிய போதிலும் தனது இறுதி வாழ்வை தெரிந்திருந்தும் பிறருக்கு உதவி செய்ய அந்த பெண் முன்வந்த அந்தச் சம்பவம் அங்கு நின்ற பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் இன்னுமொரு கொடூரமும் நடந்துள்ளது.

 

றிஷானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது குறித்து மரணமடைந்த குழந்தையின் தாய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கல் நெஞ்சக்காரி சற்றும் மனக்கவலை கொள்ளாது அதனை தானும் பார்வையிட வேண்டுமெனக் கூறி சிறைச்சாலைக்கு வந்துள்ளாள்.


அவளின் முன்பாகவே றிஷானாவின் உயிர் பிரிந்தது. இந்த கல் நெஞ்சக்காரி ஓர் ஆசிரியை. பாவம் ரிஸானா...!

 

 

றிஷானாவின் இறுதி ஆசை;

"இரண்டு "ரக் அத்' தொழ வேண்டும். தன்னிடம் இருந்த சிறு தொகை பணத்தை ஸதகா செய்யும் வகையில் தனது உறவினர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும்....!''

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=8260245728310199

Link to comment
Share on other sites

சில முஸ்லீம் அரசியல்வாதிகள் கூட இந்த சிறுமியின் மரணதண்டனையில் முக்கிய பங்காளிகளே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.