Jump to content

மண்டேலா: அன்புசூழ் உலகு


Recommended Posts

564xNxmandela2_2008928g.jpg.pagespeed.ic

 

இன்று மண்டேலாவின் 96-வது பிறந்த நாள்

கருணை, அன்பு, மன்னிப்பு: இதுதான் உலகுக்கு மண்டேலாவின் செய்தி.

சுமார் 27 ஆண்டுகளாக நெல்சன் மண்டேலாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர பார்த்ததில்லை; ஒரு பேச்சுப்போட்டிக்கு நடுவராகச் செயல்பட நான் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு 1950-களில் வந்தபோது ஒரு முறை பார்த்தேன். அடுத்து 1990-ல் பார்த்தேன். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, பழைய உறுதியும் வேகமும் அவரிடம் இருக்காது, மிகவும் கலங்கியிருப்பார் என்று சிலர் அஞ்சினார்கள். புகழ்ந்து பேசும் அளவுக்கு அவர் பெரிய ஆளாக வர மாட்டார் என்றே பலர் சந்தேகப்பட்டனர். அவர் விடுதலையாவதைவிட சிறையிலிருப்பதே கட்சிக்கு லாபம் என்றுகூட சிலர் கருதினர்.

அசாதாரணமான சம்பவங்கள்

சிறையிலிருந்து அவர் விடுதலையானதும் அசாதாரணமான விஷயங்கள் நடைபெற்றன. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வெள்ளையர்களில் பலர் அவரைப் பயங்கரவாதி என்றே தொடர்ந்து சாடினாலும், வெள்ளையர்களின் தரப்பு என்ன, அவர்களுடைய அச்சம் என்ன என்று அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார் மண்டேலா. அவர் செய்த சில செயல்கள், வார்த்தைகளைவிட வெகு வலுவாக அவருடைய எண்ணங்களைப் பறைசாற்றின.

அவர் அதிபராகப் பதவி ஏற்றபோது. சிறைச்சாலையில் அவருக்கு சிறை அதிகாரியாக இருந்தவரை முக்கியப் பிரமுகராக வரவேற்று அரங்கில் இடம்பெறச் செய்தார். அவருக்கு எதிராக அரசுத்தரப்பில் வாதாடிய வழக்கறிஞரை மதிய உணவு விருந்துக்கு வரவழைத்து அருகில் அமர்ந்து உண்டார். எப்பேர்ப்பட்ட மகத்தான பெருந்தன்மை அது. அவருக்கு எதிராக வாதாடிய அந்த அரசு வழக்கறிஞர், அவருக்கு மரண தண்டனைக்குக் குறைவாக எந்த தண்டனையும் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்று தீவிரமாக வாதாடியவர். அதுமட்டுமல்ல, காலம்சென்ற தென்னாப்பிரிக்க வெள்ளையின அரசியல் தலைவர்களின் மனைவி யர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். 1958 முதல் 1966 வரை தென்னாப்பிரிக்கப் பிரதமராக இருந்தவரும், நெல்சன் மண்டேலாவைச் சிறைக்கு அனுப்பியதோடு தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸைத் தடைசெய்தவருமான எச்.எஃப். வெர்வேர்டின் மனைவிக்கும் அழைப்பு அனுப்பினார். உடல்நலம் சரியில்லாததால் வர முடியவில்லை என்று அந்த அம்மையார் தெரிவித்ததும், அவர் குடியிருந்த வீட்டுக்கே நேரே சென்று அவரிடம் நலம்விசாரித்து, தேநீர் அருந்திவிட்டு வந்தார்.

அன்பின் உறைவிடம்

நம்ப முடியாத அளவுக்கு அன்பின் உறைவிடமாகத் திகழ்ந்தார். முதல்முறையாகச் சுதந்திரத் தேர்தல் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகளின்போது எதிராளிகளுக்குச் சலுகைகளை விட்டுத்தர அவர் தயாராக இருந்தவிதம் வியப்பூட்டுவதாக இருந்தது. இன்காதா சுதந்திரக் கட்சியின் தலைவர் புத்தலேசி, தங்களுடைய கட்சிக்கு இந்தச் சலுகை வேண்டும், அந்தப் பதவி வேண்டும், இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று எதைக் கேட்டாலும் சிரித்தபடியே, சரி எடுத்துக்கொள்ளுங்கள் என்று அன்போடு கூறினார். இன்காதா ஒன்றும் நியாயமான விடுதலை இயக்கம் அல்ல என்று அவருடைய கட்சியைச் சேர்ந்த சிலர் கூறியபோது மனம் வருந்தினார். புத்தலேசி கேட்டால் மூத்த அமைச்சராகக்கூட அவரைச் சேர்த்துக்கொள்வேன் என்றார். நாட்டில் மீண்டும் ரத்தக்களரி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

தென்னாப்பிரிக்க வெள்ளையர்களுக்குக் கருப்பர்கள் பற்றிய அச்சம் நீங்கி, நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக தென்னாப் பிரிக்க ரக்பி அணியான ஸ்பிரிங்பாக்கின் ஜெர்சியை அணிந்து விளையாட்டுத் திடலுக்குச் சென்றார். வேறு எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அந்த உடையை அருவருப்பாகப் பார்த்திருப்பார். அவரோ பெருமையோடு அணிந்து சென்றார். அந்த இடத்தை அவர் அடைந்தபோது அங்கிருந்தவர்களில் 99% வெள்ளையர்கள்தான் என்றாலும் அவர்களாலும் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் ‘நெல்சன், நெல்சன்’ என்று ஓலமிட்டு வாழ்த்தினார்கள்.

கோபமும் வரும்

அவருக்குக் கோபம் வந்தும் பார்த்திருக்கிறேன். 1992-ல் போய்படாங் என்ற இடத்தில் நடந்த படுகொலைகளில் 42 பேர் இறந்தபோது, அரசுடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை விலக்கிக்கொண்டார். இதுகுறித்து ஏற்கெனவே அதிபர் எஃப். டபிள்யு. கிளார்க்குக்கு எச்சரிக்கை வந்தபோதும் அவர் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சரியாக எடுக்கவில்லை, கருப்பர்கள் உயிர் என்றால் அற்பம்தானே என்று மண்டேலா கோபப்பட்டார்.

ஆஸ்லோ நகரில் நோபல் பரிசு பெறச் சென்றபோது நடந்த சம்பவமும் மண்டேலாவைக் கோபமுறச் செய்தது. ஆப்பிரிக்க சுதந்திரப் போராட்டக் காலத்துப் பாடலை குழுவினர் இசைத்துக் கொண்டிருந்தபோது முன்னாள் அதிபர் கிளார்க்கும் அவருடைய மனைவியும் சளசளவென்று பேசிக்கொண்டே இருந்தார்கள். இதைக் கவனித்தபோதும் அவர் கோபமுற்றார். ஆனால், அவ ருடைய பொறுமை, மன்னிக்கும் தயாள குணத்தைவிட அவருடைய கோபம் எந்த நாளிலும் பெரிதாக இருந்ததில்லை.

அதிபராக அவர் பதவிவகித்தது சில ஆண்டுகளே என்றாலும் அப்போது செய்த சாதனைகளைப் பார்க்கும்போது சிறையில் 27 ஆண்டுகளை வீணாகக் கழித்துவிட்டாரே என்ற வேதனை ஏற்படுவதுண்டு. ஆனால், சிறைவாசத்தை வீண் என்று கருத வேண்டியதுமில்லை. ஏனென்றால், அங்குதான் அவர் பக்குவப் பட்டு, பண்பட்ட தலைவராகத் திரும்பிவந்தார். சிறைக்குச் சென்ற போது அவர் கோபக்கார இளைஞராக இருந்தார். ஆனால், திரும்பிவந்தபோது எவரையும் மன்னிக்கும் மனோபாவம் அவரிடம் மிகுந்திருந்தது.

வெள்ளையர்களின் தவறுகளை மறந்து மன்னித்துவிடுங்கள் என்று அவர் கூறினால், ‘மன்னிப்பதா, சிறைக்குப் போய் அடி பட்டிருந்தால் உங்களுக்கு அந்தக் கஷ்டம் புரியும்’ என்று சொல் வதற்கு வாய்ப்பில்லாமல், அவரே 27 ஆண்டுகள் வெஞ்சிறையில் இருந்துவிட்டார். வின்னியை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் அவரை விட்டுப் பிரிய நேர்ந்ததுதான் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய துயரம். ஆனால், அதை ஓரளவு ஈடுகட்டும் வகையில் அவருக்கு கிரேசா கிடைத்தார்.

அவர் எதை நிறுவ விரும்பினாரோ அதை நிறுவுவதுதான் அவருக்கு நாம் செய்யக்கூடிய பொருத்தமான அஞ்சலி. உலகில் யாருமே, இழக்க முடியாத அளவுக்கு முக்கியமானவர்கள் இல்லை என்பது அவருடைய கருத்து. ஆப்பிரிக்க தேசிய காங் கிரஸ் கட்சியைவிட தான் பெரியவன் அல்ல என்று பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் நமக்கு உண்மை தெரியும். உலகின் எந்த மூலையில் யார் தலைமைப் பதவிக்கு வந்தாலும், தலை வராக இருப்பதற்கான தகுதிகள் எவை என்பதை மண்டேலா உணர்த்திவிட்டார்.

- டெஸ்மாண்ட் டூடூ, மனித உரிமை ஆர்வலர், ஆர்ச்பிஷப், சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

தி கார்டியன், தமிழில்: சாரி

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81/article6223647.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.