Jump to content

பொறியியல் படிப்பு: பொசுங்கிய கனவு


Recommended Posts

பன்னிரெண்டாம் வகுப்புப் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த ஆண்டும் பெருமளவில் மாணவிகளே தேர்ச்சியுற்ற நிலையில், அடுத்த கட்டக் கல்வி குறித்து மாணவர்களும், பெற்றோர்களும் திட்டமிடத் தொடங்கிவிட்டனர். நாளேடுகளை அடைத்துக் கொண்டு வெளியாகும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி விளம்பரங்கள், அதற்கான தூண்டிலை வீசி நிற்கின்றன.

 

இதே நேரத்தில் இன்னொரு செய்தியும் ஊடகங்களில் வலம் வந்தது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பொறியியல் இடங்கள் நிரம்பாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்காக பல தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள், புதிய மாணவர்களை ஈர்த்து வருவதற்காக அங்கு ஏற்கெனவே பயிலும் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது குறித்த செய்தி அது! 

 

ஏற்கெனவே பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர், இன்னொரு புதிய மாணவரை அதே கல்லூரியில் சேர்த்துவிட்டால் ரூ 10,000 முதல் 15,000 வரை பரிசளிக்கப்படுவதாகவும், பேராசிரியர்களுக்கும் இது போல சலுகைகள் உண்டென்றும் சில தனியார் நிறுவனங்கள் அறிவித்துவிட்டன.

 

உண்மையில், அத்தொகையை வேறுபல காரணங்களைச் சொல்லி ‘சிறப்புக் கட்டணம்’ என்ற பெயரில், கல்லூரி நிர்வாகங்கள் ‘அறுவடை’ செய்துவிடும் என்பது ஒரு செய்தி. இன்னொரு செய்தி, கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் பெருமளவிலான பொறியியல் கல்லூரியிடங்கள் நிரம்பாமல் போய்விடுவதைத் தடுக்கச் செய்வதற்கான தனியார் நிர்வாகங்களின் தந்திரம் இது! ஏனெனில், கடந்த 2012-13ஆம் ஆண்டு கல்வியாண்டில், தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் மொத்த இடமான 1.73 இலட்சத்தில், சற்றொப்ப 1.20 லட்சம் இடங்களே நிரம்பின. 50,000க்கும் அதிகமான இடங்கள் நிரம்பாமல் காலியாகவே இருந்தன. இந்தாண்டு இந்த எண்ணிக்கை மேலும் குறையும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கவே இந்த ‘சலுகை’ ஏற்பாடுகள்!

 பொறியியல் கல்வி என்பது அறிவு சார்ந்த படிப்பாக பார்க்கப்படாமல், வெறும் பணம் ஈட்டும் வழிமுறையாகவே பார்க்கப்படும் சமூகத்தில், இது வெறும் செய்தி மட்டும் அல்ல. ‘பொறியியல் கல்வி படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம்’ என ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் பெருங்கனவிற்கு இச்செய்தி ஏற்புடையதும் அல்ல.

 ஏனெனில், தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில், பொறியியல் படித்த சற்றொப்ப 1 கோடிக்கும் அதிகமானோர் இன்னும் சரியான வேலையின்றி இருக்கின்றனர். தமிழகத்தில், கடந்த 2012 சூன் நிலவரப்படி, இளநிலைப் பொறியியல் (பி.இ) படித்துவிட்டு, 2 லட்சத்துக்கு அதிகமானோரும், முதுநிலைப் பொறியியல் (எம்.இ) படித்துவிட்டு 1 லட்சத்துக்கு அதிகமானோரும் வேலை வேண்டி வேலைவாய்ப்புத் துறையிடம் பதிவு செய்துள்ளனர். உண்மையில், இது பல இலட்சங்களைத் தாண்டும்.

 வங்கிகளில் கடன் வாங்கியும், சொத்துக்களை அடகு வைத்துக் கட்டணம் செலுத்தியும் இங்கு சேர்ந்த பெற்றோரின் நிலை கேள்விக் குறி! பொறியியல் கல்வி குறித்து ஊதிப் பெருக்கிய ஊடகங்களோ, அடுத்து வேலைக்குச் சென்று விட்டன.

 இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஒரிசாவிற்கு அடுத்து, அதிகளவிலான பொறியியல் கல்லூரிகளைக் கொண்டு, அதிகளவிலான பொறியியலாளர்களை உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டிற்கு இது நிச்சயம் கவலைக்குரிய செய்தி!

 சற்றொப்ப 7 அரசுப் பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 18 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 525 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 553 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. இவை தவிர, 69 எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ. மட்டுமே பயிற்றுவிக்கும் உயர்கல்வி கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும், தமிழகத்தில் பெருகிய பொறியியல் கல்லூரிகளின் காரணமாக, ஜார்கண்ட் – பீகார் – ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்து மாணவர்கள் இங்கு குவிந்துள்ளனர். 

 

1980களில் இந்த நிலை கிடையாது. அப்போது, பொறியியல் கல்வி என்றாலே அது வசதிமிக்கவர்களின் படிப்பு என்ற நிலை இருந்தது. ஆனால், இப்பொழுது நிலை தலைகீழ்! வீதிக்கு வீதி பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டன. கடந்த 2006-2007ஆம்  கல்வியாண்டில் சற்றொப்ப 1511 பொறியியல் கல்லூரிகளையும், 1132 மேலாண்மைக் கல்லூரிகளையும் கொண்டிருந்த ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு, 2012-2013ஆம் கல்வியாண்டில் 3495 பொறியியல் கல்லூரிகளும், 2450 மேலாண்மை கல்லூரிகளும் இந்தியாவில் இயங்குகின்றன என்கிறது.

 இந்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் இயங்கும் இந்த ஏ.ஐ.சி.டி.இ. (AICTE) எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி வாரியம் தான், இந்தியத் துணைக் கண்டமெங்குமுள்ள தொழில்நுட்பக் கல்வி சார்ந்த நிறுவனங்களையும், கல்வியையும் ஒழுங்குபடுத்துதற்காக செயலாற்றுகிறது. மேலும் மேலும் அதிகாரக் குவிப்பை விரும்புகிற இந்திய அரசு,   இந்தியாவெங்கும் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைத் தொடங்க, இவ் அமைப்பிடம்தான் அனுமதி பெற வேண்டும் என்றது.

 மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில்தான் குறைந்த கூலியில் நிறைவான உழைப்பைத் தரும் உழைப்பாளிகள் இருக்கிறார்கள் என உணர்ந்து கொண்ட பல பன்னாட்டு  நிறுவனங்கள், 1990களில் செயலுக்கு வந்த புதியப் பொருளியல் கொள்கையுடன் இந்தியாவில் காலூன்றின. இந்நிறுவனங்களில் பணியாற்ற பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வியும், ஆங்கில மொழியும் அவசியமாக இருந்தது.

 வெவ்வேறு மொழிகளுடன் இயங்கும் பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தி மேலாதிக்கம் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை, ஆங்கில மேலாதிக்கமாவது முதலில் இருக்கட்டும் என்ற வகையில், இந்திய அரசுக்கும் இது உவப்பாய் இருந்தது. தொழில்நுட்பக் கல்வியின் அதிகார மையமாக ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு, செயலாற்றியது.

 தில்லியிலிருந்து வரும் இவ்வமைப்பின் அதிகாரிகள், ஒர் தொழில்நுட்பக் கல்லூரி இயங்குவதற்கான இடம், வசதிகள், தொழில்நுட்ப ஏற்பாடுகள் என அனைத்தையும் பார்வையிட்ட பிறகுதான் அக்கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்பது விதிமுறை. ஆனால், உண்மையில் நடப்பதோ வேறு! பெருமளவிலான ஊழல்களும், கையூட்டுகளும் தான் அங்கு நடக்கின்றன. அதிகாரக் குவிந்துள்ள இடங்களில் தான் ஊழல்களும், விதிமுறை மீறல்களும் எளிதாக நடக்கின்றன என்பது புரியாத செய்தி ஒன்றுமல்ல. ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பின் செயலாளர் ஒருவரே நேரடியாக கையூட்டு பெறும் போது சிக்கிக் கொண்டார்.

 இன்னொரு புறத்தில், கலை – அறிவியல்  உள்ளிட்ட கல்விகளில் அதிகளவில் பணம் ஈட்ட முடியாதென முடிவுக்கு வந்த நடுத்தர வர்க்கம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி மீது அதிகளவில் மோகம் கொண்டது. இப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய சில ஆயிரம் பேர் மட்டுமே தேவை என்ற நிலையிலும் கூட, அதற்கு நேர் மாறாக பல இலட்சம் பொறியியலாளர்கள் இங்கு உருவாக்கப்பட்டனர். வட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளைச் சேர்ந்தும் கூட உருவாக்க முடியாத வகையில், இந்தியாவில் சற்றொப்ப 1.5 மில்லியன் பொறியியலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கப்படுகின்றனர்.

 கல்வி வணிகமாக்கத்தின் ஒரு பகுதியாக, பொறியியல் கல்வி ‘பொன் முட்டையிடும் வாத்து’ போன்று ஒரு முக்கியத் தொழிலாக உருவானது. அரசியல்வாதிகள் ‘கல்வி வள்ளல்’கள் ஆனார்கள். தமக்கென சொந்தமாகக் கல்வி நிறுவனம் கொண்டிராத அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவில், ஒவ்வொரு மாநிலத்திலும் இதே நிலை உருவானது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியத் துணைக் கண்டத்தின் இதர மாநிலங்களிலும் இதே நிலையே நீடிக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக ஒரிசாவை அடுத்து, தமிழ்நாடு நிற்கிறது.

 பொறியியல் கல்வியில் சேர கடும் போட்டி உருவானது. ஆனால், எந்த நிலையிலும் பொறியியல் கல்வியின் தரமோ – கல்லூரிகளின் தரமோ உயரவில்லை. மேற்கத்திய நாடுகளின் பொறியியல் கோட்பாடுகளும், வழிமுறைகளுமே இங்கு கல்வியாகக் கற்பிக்கப்பட்டன. பயிற்சிகள் தரப்பட்டன. இதன் காரணமாக இங்குள்ள பொறியியல் கல்லூரிகள் பொறியியலாளர்களை உற்பத்தி செய்யவில்லை. மாறாக, பொறியியல் அறிவு கொண்ட பணியாளர்களையே உற்பத்தி செய்கின்றன.

ஆஸ்பிரிங் மைன்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்வி மற்றும் மாணவர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வெளியிட்டு வருகின்றது. கடந்த 2013ஆம் ஆண்டு சூன் மாதம், இந்நிறுவனம் பொறியியல் கல்வி பயின்றோரின் நிலை குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில், இந்தியாவில் பொறியியல் கல்வி பயின்றவர்களில் 47 விழுக்காட்டினர் எந்தவித வேலைக்கும் தகுதியானவர்கள் அல்ல என்றது அவ் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், ஒட்டு மொத்த இந்தியப் பொறியியலாளர்களில் வெறும் 17.45 விழுக்காட்டினரே பொறியியல் வேலைகளுக்குத் தகுதியானவர்கள் எனத் தெரிவித்தது. (காண்கதி இந்து, எடுகேசன் பிளஸ், 12.03.2012).

 

கோடி, கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்படும் இப்பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் கல்விக் கூடங்களுக்கு தேவையான அடிப்படை வசதியோ, தேவையான ஆராய்ச்சிக் கூடங்களோ கிடையாது. குறைந்தபட்ச தகுதி கூட இல்லாத ஆசிரியர்களை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் நியமித்து பாடம் கற்பித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பல கல்லூரிகளில் போதிய ஆசிரியர் இல்லாத நிலையும் உள்ளது. இதனால், தரமான கல்வியின்றியும் மாணவர்கள் திணறுகின்றனர்.

1000 பொறியியல் கல்லூரிகளோடு தமிழகத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளி நிற்கும் ஒரிசாவில், பொறியியலாளர்களின் நிலை மிகவும் மோசமானது. கடந்த 2012-2013ஆம் கல்வியாண்டில் சற்றொப்ப 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலும், 227க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ. கல்லூரிகளிலும் 41,603 இடங்கள் நிரம்பாமல் இருந்தன. 2013-2014ஆம் கல்வியாண்டில் இது 52 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. வேலையில்லாப் பொறியியலாளர்களின் எண்ணிக்கையும் இங்கு பலமடங்கு அதிகமானது.

 எனவே இது குறித்து ஆராய ஒரிசா அரசு ஓர் குழுவை நியமித்தது. மாதுங்கா வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத் துணைவேந்தர் தலைமையில் நியமிக்கப்பட்ட அக்குழு, கடந்த 2014 பிப்ரவர மாதம் தனது ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்தது. அவ்வறிக்கை, ஒரிசா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் நிலையை எடுத்துக்காட்டியது.

 இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலுமுள்ள தொழில்நுட்பக் கல்வியையும், கல்வி நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்டது தான், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி வாரியம் (AICTE) என்ற அமைப்பாகும். ஆனால், அவ்வமைப்பு பொறியியல் கல்விக்கு அனுமதி அளிக்கிறோம் என்ற பெயரில் நடத்தியுள்ள கூத்துகளை இவ்வறிக்கை அம்பலப்படுத்தியது.

 புதிதாக தொடங்கப்படும் பொறியியல் கல்வி நிறுவனங்கள், புதிய புதிய தொழில்நுட்பக் கல்வியைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் ஏற்கெனவே உள்ள பொறியியல் கல்விகளின் பெயரில் சில மாற்றங்களைச் செய்து, அதை வேறு பெயரில் கற்பிக்கி முற்படுன்றன.

 உதாரணத்திற்கு, AICTE அமைப்பு, electrical engineering, electrical and electronics engineering, electrical and power engineering, electrical engineering (electrical and power), electrical engineering (electronics and power), electrical and electronics (power system) என சற்றொப்ப 42 மின் பொறியியல் படிப்புகளுக்கு அனுமதியளித்துள்ளது. இவற்றை ஒழுங்குபடுத்தி மின் பொறியியல் என்ற ஒரே தலைப்பில் கல்வியாக அளிக்க வேண்டுமெனச் சொல்ல வேண்டியதுதான் AICTE அமைப்பின் கடமை. ஆனால், தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களின் ‘நலன்’களுக்காக இத்தனைப் பெயர்களுக்கும் அனுமதி அளித்துள்ளது AICTE. இவற்றையெல்லாம் இவ் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியதோடு, இதனை தனது பரிந்துரையாகவும் வெளிப்படுத்தியது. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 17.02.2014).

 இந்தியாவெங்கும் நடைபெறுகின்ற பொறியியல் கல்லூரி மோசடிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய AICTE – தனக்கு ஆள்பற்றாக்குறை இருப்பதால் இவற்றை செய்யமுடியவில்லை என்கிறது. அனைத்துக் கல்வியையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் முழுவதுமாக விட்டுவிட்டால் இக்கேள்விக்கு இடமிருக்காது. ஆனால், அதிகாரக்குவிப்பையே முழுநேரமாகக் கொண்டு செயல்படும் இந்திய அரசு, இதற்கு அனுமதி மறுக்கிறது.

 இதே ஆய்வு நிறுவனம், இந்தியாவெங்கிலும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே ஆங்கிலப் பயன்பாடு குறித்து ஓர் ஆய்வு நடத்தியது. அதில், சற்றொப்ப 43 விழுக்காட்டுப் பொறியியலாளர்களுக்கு ஆங்கிலத்தை சரியான வகையில் எழுதத் தெரியாது என அவ்வமைப்புக் கண்டறிந்தது. 25லிருந்து 35 விழுக்காட்டுப் பொறியியலாளர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள முடியாதவர்களாக உள்ளனர் என்றும் அவ்வறிக்கைத் தெரிவித்தது. (காண்கதி பிசினஸ் ஸ்டான்டர்டு, 25.07.2012)

 இந்தியத் துணைக் கண்டமெங்கும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் பொறியியல் கல்வி, உண்மையில் மாணவர்களைப் போய்ச் சேரவில்லை. சேரவும் வாய்ப்பில்லை. தாய்மொழி வழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்விகளை கொண்டு சென்றால் மட்டுமே, அக்கல்வியின் தரம் உயர வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவில் அது கேள்விக்குறியே!

 இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் மாநில மொழியில் பொறியியல் கல்வி பயிலும் முறை இருக்கிறது. 1999ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசிடம் போராடி, பல தடைகளைத் தகர்த்துதான் தமிழ்வழிப் பொறியியல் கல்வி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெறும் காட்சிக்காக ஒரே வகுப்பை வைத்திருக்கும் நிலையை மாற்றி, இதை தமிழகமெங்கும் விரிவுபடுத்துவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில மக்களின் மொழியில் கல்வியைப் பயிற்றுவித்து அம்மக்களை அடுத்த நிலைக்குக் கொண்டுச் செல்வதும்தான் ஆக்கப்பூர்வமான அரசின் கடமை. ஆனால், இந்தி – ஆங்கில மொழித் திணிப்பை ‘தேசியப்பணி’யாக செய்து வரும் இந்திய அரசு, இதற்கு ஒருபோதும் முன்வராது.

 பள்ளிக்கல்வி – உயர்க்கல்வி என அனைத்தையும் அந்தந்த மாநில அரசுகளின் கையில் முழுவதுமாக விட வேண்டிய இந்திய அரசு, நடைமுறையில் அதிலுள்ள மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதைப் போராடி முறியடிக்காமல், தொழில்நுட்பக் கல்வியின் தரம் உயர வாய்ப்பே இல்லை.

 இலட்சக்கணக்கில் பொறியியலாளர்களை உற்பத்தி செய்யும் தமிழகத்தில் இயங்குகின்ற பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களில், சில ஆயிரம் பொறியியலாளர்களுக்கே பணி கிடைக்கிறது. அதிலும், தலைமை அதிகாரிகளாக இந்நிறுவனங்களில் உள்ளவர்களில் கணிசமானவர்கள் வெளி மாநிலத்தவரும், பார்ப்பனர்களுமே இருக்கின்றனர். பணியாளர்களில் கணிசமானவர்களாகவும் வெளி மாநிலத்தவரே உள்ளனர். தமிழகத்திற்குள் அயல் இனத்து  மாணவர்களை அதிகளவில் நிரப்பியதன் வெளிப்பாடு இது!

 எனவே, இந்நிலையை மாற்ற, தமிழகத்தில் இயங்கும் அனைத்து பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களும், எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அவர்களது பணியிடங்களுக்குத் தேவையானவர்களை மாநில அரசின் வேலைவாய்ப்புத் துறையிடம் கேட்டுப் பெற்றே இட ஒதுக்கீடு வழங்கி நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அப்பொழுதுதான், தமிழர்களுக்கு இந்நிறுவனங்களில் சமூக நீதி அடிப்படையில் வேலை கிடைக்கும். அதுவரை, தமிழ்நாடு அயலாரின் வேட்டைக் காடாகவேத் திகழும். பொறியியல் கல்வி போல, கலை – அறிவியல் உள்ளிட்ட ஆராய்ச்சி வகைக் கல்வியிலும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.  

-க.அருணபாரதி

arunabharthi@gmail.com

http://sengodimedia.com/Blog/Description.aspx?id=4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.