Jump to content

தமிழின் எதைக் கற்கக் குழந்தைகள் கடினப்படுகின்றார்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்த் தமிழ்க் குழந்தைகள் தமிழ் கற்கும்போது பல சவால்களைச் சந்திப்பதாகவே உணர்கின்றேன். அவர்களுக்கு இலகுவான வகையில் சொற்களை அடையாளம் செய்யும் வகையில் எந்தவித வகையும் செய்வதாகத் தோன்றவில்லை. ஊரில் உள்ளது போல இலக்கணப் புத்தகங்களைக் கடினமாக்கியே வைத்துள்ளனர். ஏன் சாதாரணதரப் பரீட்சை எடுக்கும்வரையும் எனக்கும் தமிழ் இலக்கணம் என்பது மிகவும் வெறுப்புக்குரிய பாடமாகவே இருந்தது....

இத்தலைப்பின் நோக்கம். உங்களின் குழந்தைகள் எதைக் கற்கக் கடினப்படுகின்றார்கள் என்பதும், அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றி ஆராய்வதுமாகும்...

---------------------------

எல்லாக் குழந்தைகளும் சொல்வது ல,ள,ழ அத்தோடு ர,த,ற உச்சரிப்பது,அடையாளம் செய்வது என்பது மிகப் பெரிய பிரச்சனை.

ழ- நாக்கு உள்நாக்கில் ஒட்டும் வண்ணம் வளைத்துப் பேச வேண்டும்.

ள-நாக்கு மேல்வாயின் நடுப்பகுதியிலும்

ல-முன் பற்களில் ஒட்டும் வண்ணம் உச்சரித்தால் போதுமானது...

என் அனுமானங்கள்.யாராவது சரியாகத் தெரிந்தால் தெரிவியுங்கள். ல,ள,ழ சொற்களை எப்படி அடையாளம் செய்வது என்பதுக்குத் தெளிவான பதில் என்னிடம் இல்லை.

Link to comment
Share on other sites

இப்படித்தான் சொல்லிக்கொடுக்கிறேன். அதில் கொஞ்சம் பலனும் இருப்பதுபோல் தெரிகிறது.

 

இன்னுமொன்று. ர, ற போன்ற சொற்களை உச்சரிக்கவும் சிரமப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் இவற்றுக்கான உச்சரிப்பு முறை வேறுமாதிரியானதாக இருப்பதால் இந்த சிரமம் ஏற்படுகிறது என நினைக்கிறேன். (ஆங்கில R உச்சரிப்பில் நாக்கு அண்ணத்தைத் தொடாது அல்லவா.. ) இதைத் திருத்துவதும், பல்லைக் கையால் பிடுங்குவதும் ஒன்றுபோல் இருக்கு.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மருமகளுக்கு தவும், றவும் சரியான குழப்பத்துக்குரிய உச்சரிப்புக்கள்.. அது ஏன் என்றே தெரியவில்லை. இப்போது ஒன்று தோன்றுகின்றது. ரவுக்கும், றவுக்கும் குழப்பம் எனில் ஆங்கிலத்தில் எழுதிப் பழக்கப்படுத்தலாம் என நினைக்கின்றேன். என்பதைக் குழந்தைகள் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியவை. ta- ர ra-ற

ஆம் இல்லைக் கேள்வி ---- எந்த ஒரு வசனத்தின் பின்னரும் "ஆ" ஐ இணைக்கும்போது அது ஆம், இல்லைக் கேள்வியாக வரும். கந்தன் வந்தான் +ஆ என்பது கந்தன் வந்தானா? என்பது போல அமையும். இதற்கு முதல் தமிழ்ச் சொற்கள் எவ்வாறு புணர்ச்சியடையக் கூடியவை என்பது தெரிந்திருப்பது அவசியமானது..

Link to comment
Share on other sites

தமிழ்ப் பாடசாலைக்கு பிள்ளைகளை தொடர்ந்து அனுப்ப வேண்டும். அதே நேரம் பெற்றோரும் முடிந்த வரை பிள்ளைகளுடன் தமிழில் பேச வேண்டும். அவர்கள் ஆங்கிலத்தில் கதைத்தாலும் நீங்கள் தமிழிலேயே தொடருங்கள். 
 
இன்னொரு விசயம் கவனித்தேன். தமிழ்ப் பாடசாலைப் பாடப்புத்தகங்களை பிள்ளைகள் வாய் விட்டு வாசிக்க செய்யுங்கள். வாரத்திற்கு மூன்று முறையாவது இப்படிச் செய்யுங்கள். இதன் மூலம் அவர்களின் உச்சரிப்பில் திருத்தம் ஏற்படுகின்றது. அத்தோடு பாடசாலைச் சோதனைகளிலும் நல்ல புள்ளிகள் எடுப்பார்கள். இதனால் அவர்களுக்கு தமிழில் ஓர் ஊக்கமும் ஏற்படும்.
 
 
எழுத்து உச்சரிப்பு குழப்பங்களை நீக்க உதாரணங்களை நாங்கள் பாவிப்போம்.
 
ல - இலை
ள - ‍விளக்கு
ழ - பழம்
 
ற - பறவை
ர - மரம்
 
ன - அன்னம்
ண - அண்ணா
 
இப்படியாக சொல்வோம். இலைக்கு வரும் லானா, விளக்குக்கு வரும் ளானா...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் உள்ள இலக்கண நூல்கள் போல தமிழுக்கும் இலகுபடுத்தினால் என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.