Jump to content

யாழ்ப்பாணத்தமிழ் பேசும் ஜேர்மனிய பெண்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழ் மொழியின் மோகம் என்பது காலத்திற்கு காலம், நாட்டிற்கு நாடு மாறுபட்டுக்கொண்டே உள்ளது. 

 

சுவிஸ் நாட்டை பொறுத்தவரை தமிழ் மொழிக்கு வித்திட்டவர்கள் விடுதலைப்புலிகளினால் நடாத்தப்பட்ட தமிழ் பாடசாலைகளேயின்றி வேறொன்றும் இருக்க முடியாது. நான் இங்கு வந்து சில மாதங்கிளிலயே தமிழ் பாடசாலைக்கு என்னை என் பெற்றோர்கள் சேர்த்துவிட்டார்கள். ஊரில் மூன்றாம் ஆண்டு வரை படித்ததாக ஞாபகம் (பாசா பெயிலா என்று நினைவில்லை :D ). 

 

காலனியாதிக்கத்தில் வெள்ளைக்காரனின் மலம் கூட எமது மலத்தைவிட சுத்தமானது என்ற அடிமை குணத்தை எம் முன்னோர்கள் கொண்டுள்ளதன் காரணமே வேற்றுமொழிக்கு முன்னுரிமை கொடுத்து அதனை பேசுவதை கௌரவமாக நினைப்பது. அதாவது ஆங்கிலமோ அல்லது அவர்கள் வாழ்கின்ற நாட்டின் மொழி பேசுவதாலோ அவர்கள் அந்த நாட்டவரின் தரத்திற்கு தங்களை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கின்றனர். இது கலனியாதிக்க அடிமை குணமே அன்றி வேறொன்றுமில்லை. 

 

1995ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தனது பிள்ளைக்கு தமிழ் தெரியாது அவர்கள் டொச் (அல்லது ஆங்கிலம்) தான் பேசுவார்கள்  என்று பெருமைப்பட்டது ஒரு  கௌரவமாக கருத்தப்பட்டது. ஏன் தம் பிள்ளைகள் சோறு சாப்பிடுவதில்லை, பிட்சா தான் சாப்பிடுவார்கள் என்று சொல்வதும் ஒரு கௌரவமாக பார்க்கப்பட்டது. 

 

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் இந்த நிலை மாறிவிட்டது என்றே சொல்லலாம். இன்று தமிழ் தெரியாமல் இருப்பது கொஞ்சம் வெட்கப்பட வேண்டிய விடயம் என்பதை பல பெற்றோர்கள் புரிந்துவைத்துள்ளனர் (சுவிஸ் நாட்டை பொறுத்தவரை). 

 

லண்டன் கனடா போன்ற நாடுகளிலிருந்து சுவிசிற்கு வருபவர்கள் இங்கு தமிழ் சிறுவர்கள் தமிழில் பேசுவதை பார்த்து ஆச்சர்யப்பட்ட நிகழ்வுகள் நானே பார்த்திருக்கின்றேன். 

 

நான் தமிழ் பாடசாலையில் சேர்ந்த பொழுது 6ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதற்கு பின்னர் தனித்தே எனது வகுப்பில் நான் படிக்க வேண்டிவந்ததால் அத்துடன் நிறுத்திக்கொண்டேன். ஆனால் இன்று 12ஆம் வகுப்புவரை படிக்க முடியும் என்றால் அதற்கு பெற்றோர்களின் ஆதரவும் பிள்ளைகளின் ஊக்கமும் உள்ளதால் தான் முடிகின்றது (இது அனைத்து நாடுகளிற்கும் பொருந்தாது என்பது தான் வேதனனயான விடயம்). 

 

எனக்கு தமிழ்மொழியை ஊட்டியதில் தலைவரும் அவர் வழிநடத்திய தமிழ் பாடசாலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன் ஈழமுரசு மற்றும் எரிமலை போன்ற பத்திரிகைகளும் தூக்கிவிட்டன. 

 

அது என்ன "யாழ்ப்பணத்தமிழ்"?  வெறும் தமிழ் என்று போட்டால் என்ன இவர்களிற்கு? அதில் பேட்டியெடுப்பவரும் யாழ்ப்பாணத்தமிழ் என்றே சொல்கிறார். இந்த தமிழ் வேறு இடங்களில் பேச மாட்டார்களா (உண்மையிலயே தெரியாத படியால் கேட்கின்றேன்).  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில் எனது மருமக்கள் பலர் இருக்கின்றனர். எல்லோரும் ஜெர்மனியிலேயே பிறந்தவர்கள் . தமிழ்ப்பாடசாலையின் பேருதவியால் அங்கேயே தமிழ் கற்று இப்போது தமிழ் ஆசிரியை ஆகும் அளவு (12ம் வகுப்பு என நினைக்கின்றேன்) தேர்ச்சி பெற்றுள்ளனர். :D

Link to comment
Share on other sites

ஜெர்மன்காரி கேட்டாவம் தாய் மொழியை மறக்க நாங்க என்ன தமிழரா என்று அதை பெருமையா முதலே சொல்லுது அந்த அறிவிப்பாளர் ............ ..

அடிமை புத்தி ..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மன்காரி கேட்டாவம் தாய் மொழியை மறக்க நாங்க என்ன தமிழரா என்று அதை பெருமையா முதலே சொல்லுது அந்த அறிவிப்பாளர் ............ ..

அடிமை புத்தி ..!

 

நீங்கள் குறிப்பிடும் அறிவிப்பாளர் சகோதரர்  பிரேம்

பிரான்சில் தான்  இருக்கிறார்

தமிழுக்காக  பேசுபவர்களில்

உழைப்பவர்களில் முக்கியமானவர்.

 

எமக்கு தேவையான  பல  செய்திகளையும்

போராட்டங்களையும்

ஆய்வுகளையும் செய்யும் பண்பாளர்.

 

அவரை  அவமதிப்பதாக  உள்ளது தங்கள் எழுத்து

Link to comment
Share on other sites

நீங்கள் குறிப்பிடும் அறிவிப்பாளர் சகோதரர்  பிரேம்

பிரான்சில் தான்  இருக்கிறார்

தமிழுக்காக  பேசுபவர்களில்

உழைப்பவர்களில் முக்கியமானவர்.

 

எமக்கு தேவையான  பல  செய்திகளையும்

போராட்டங்களையும்

ஆய்வுகளையும் செய்யும் பண்பாளர்.

 

அவரை  அவமதிப்பதாக  உள்ளது தங்கள் எழுத்து

 

அவர் அவ்வளவு தமிழரை அவமதிக்கிறார் அது உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லை அண்ணே ..எல்லோரும் எதோ ஒரு வழியில் முக்கியம் ஆனவர்கள் அவர் அந்த கருத்து தவிர்த்து இருக்க வேணும் ஒரு அனுபவம் மிக்க அறிவிப்பாளர் நக்கல் பேச்சு எதுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அவ்வளவு தமிழரை அவமதிக்கிறார் அது உங்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லை அண்ணே ..எல்லோரும் எதோ ஒரு வழியில் முக்கியம் ஆனவர்கள் அவர் அந்த கருத்து தவிர்த்து இருக்க வேணும் ஒரு அனுபவம் மிக்க அறிவிப்பாளர் நக்கல் பேச்சு எதுக்கு .

 

 

தமிழர்கள் தமிழை   மறந்திருப்பதும்

தமிழைப்பேசுவதை மரியாதைக்குறைவாக பேசுவதும்

தமிழோடு பிற  மொழிகளைக்கலந்து பேசுவதும் உண்மைதானே.

அதற்கு எதற்காக  நமக்கு கோபம் வரணும்  அஞ்சரன்??? :(  :(  :(

Link to comment
Share on other sites

தமிழர்கள் தமிழை   மறந்திருப்பதும்

தமிழைப்பேசுவதை மரியாதைக்குறைவாக பேசுவதும்

தமிழோடு பிற  மொழிகளைக்கலந்து பேசுவதும் உண்மைதானே.

அதற்கு எதற்காக  நமக்கு கோபம் வரணும்  அஞ்சரன்??? :(  :(  :(

 

ஒரு சிலரின் நடைமுறை பார்த்து ஒட்டு மொத்தமா முடிவு எடுக்க கூடாது ஐநாவை நோக்கி திரள்வதும் நாங்களே என்பதை மறக்காமல் இருங்கோ .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மன்காரி கேட்டாவம் தாய் மொழியை மறக்க நாங்க என்ன தமிழரா என்று அதை பெருமையா முதலே சொல்லுது அந்த அறிவிப்பாளர் ............ ..

அடிமை புத்தி ..!

 

உண்மையைத்தானே சொல்லியிருக்கின்றார். ஒருசில நாடுகளிலை இருக்கிற எங்கடை சனம் செய்யிற மொழி கேவலங்களை தாங்கள் இன்னும் காணேல்லை போல....

Link to comment
Share on other sites

ஓம் உண்மைதான்..யாழ்ப்பாணத்தான் மற்ற தமிழ்பேச்சுவழக்குகளை நக்கலடிச்சதில்லை.ஆனால் வேறை தமிழ்பேச்சு நடைகளிலை கதைக்கிறவயள் யாழ்ப்பாண தமிழை அந்தமாதிரி  நக்கலடிக்கிறது உங்களுக்கு தெரியதோ?

மட்டக்களப்பிலை நான் கொஞ்சக்காலம் இருந்தபோது அவையள் அடிச்ச நக்கல் கொஞ்சநஞ்சமில்லை.பகிடிக்குத்தான் நக்கலடிச்சாலும்......அதையே திருப்பித்திருப்பி நக்கலடிக்கேக்கை அது பகிடியில்லை.

தமிழகத்திலையும் இது இருக்குது.திரைப்படங்களிலை யாழ்ப்பாணத்தமிழை வைச்சு அடிக்கும் நகைச்சுவையளுக்கும் பஞ்சமில்லை.......

யாழ்பாணத்தவர்களை வெறுத்தவர்கள், பெரும்பாலும், யாழ்ப்பாணத்திலிருந்து வந்து குடியேறி அங்கு சில தலைமுறைகளாக வாழ்பவர்களே. இவர்களில் இருந்து வந்தவர்களே அரசியல் தலைவர்களாக அங்கு முடிசூட்டிக் கொண்டுள்ளனர். இவர்களே மக்கள் வாக்குகளைக் கவர்வதற்காக மட்டக்களப்பு யாழ்ப்பாணம் பேதங்களை வித்திட்டு வளர்த்தவர்களும் ஆகும்.

மட்டக்களப்பில் புயல் அழிவைப் பார்வையிட, பிரமதாசாவோடு அமிர்தலிங்கமும் அங்குவந்தபோது, "யாழ்ப்பாணத்தவருக்கு இங்கு என்ன வேலை" என்று தேவநாயகத்தின் மனைவி கூறியபோது, "நீங்கள் போகும்போது அவவையும் கூட்டிக்கொண்டு போங்கோ" என்று பிரமதாச அமிர்தலிங்கத்துக்குச் சொல்லி நக்கலடித்ததாக செய்தியொன்று அப்போது பிரசித்தமாகி இருந்தது. தேவநாயகத்தின் மனைவி மானிப்பாய் யாழ்ப்பாணம் என்று தெரியவந்தது.

Link to comment
Share on other sites

1980இல் மட்டக்களப்பிற்கு சென்றபோது, அங்கே பல வருடங்களாக வாழும் யாழ்ப்பாணக் குடும்பமொன்று கூறியது....

 

"போவிட்டு வாறோம்" என்று விடைபெறுவதை அடிக்கடி சொல்லிக்காட்டி கேலிசெய்வார்களாம். 

ஒருமுறை முதற்தடவையாக நடிகமணி வீ.வீ.வைரமுத்து அவர்களின் "அரிச்சந்திர மயான காண்டம்" எனும் கூத்து நிதி வசூல் காட்சியாக மட்டக்களப்பில் மேடையேற்றப்படும்போது...  கூத்தைப்பற்றி யாழ்ப்பாணத்தானுக்கு என்ன தெரியும் என்று எள்ளிநகையாடினார்களாம்.

ஆனால்..

அந்த கூத்து மேடையேறிய பின், கூத்துப் பற்றிய யாழ்ப்பாணத்தவரின் திறமையையும் பாராட்டினார்களாம்.

 

http://www.youtube.com/watch?v=-YbrRidLdsg

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி தமிழ் ...மட்டக்கிளப்பு தமிழ் எல்லாம் எப்ப கதைப்பா அதையும் போடுங்கோ அண்ணே ..

 

 

ஜெர்மன்காரி கேட்டாவம் தாய் மொழியை மறக்க நாங்க என்ன தமிழரா என்று அதை பெருமையா முதலே சொல்லுது அந்த அறிவிப்பாளர் ............ ..

அடிமை புத்தி ..!

 

தமிழகத்தில்... மதுரைத் தமிழ்,  கோவைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ், சென்னைத் தமிழ் என்று வட்டார வழக்கில் பேசும் போது.. மற்றைய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதனை பெரிது படுத்துவதில்லை.

பலர் அதனை.... ரசிப்பார்கள்.

 

ஆனால்.... ஈழத்தமிழர் சிலருக்கு, யாழ்ப்பாணத் தமிழ், வன்னித் தமிழ், மட்டக்களப்பு தமிழ் என்று... எவரும் பேசும் போது....

சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்து... பிரதேச வாதத்தை கிளப்ப, முன்னுக்கு வந்து விடுவார்கள்.

இதற்குள், மற்றவனைப் பார்த்து... "அடிமைப் புத்தி" என்று மேதாவித் தனமாக எழுதுகின்றார்.

 

அவர்களின் நோக்கம்... இங்கு, அந்த ஜேர்மன் பெண்ணின் அரிய ஆற்றலையும், பேட்டி காணும் பிரேமில் பிழையை பிடித்து... குட்டையை குளப்புவதில் தான்... இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

 

நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்திருந்தாலும்... இன்று, அந்த வட்டாரப் பேச்சை என்னால்... முன்பு போல் பேச சிரமமாக இருக்கும்.

 

இந்த வகையில்... அந்த ஜேர்மன் பெண்ணை, வாழ்த்தி.... வணங்குகின்றேன். :)

 

Link to comment
Share on other sites

தமிழகத்தில்... மதுரைத் தமிழ்,  கோவைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ், சென்னைத் தமிழ் என்று வட்டார வழக்கில் பேசும் போது.. மற்றைய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதனை பெரிது படுத்துவதில்லை.

பலர் அதனை.... ரசிப்பார்கள்.

 

ஆனால்.... ஈழத்தமிழர் சிலருக்கு, யாழ்ப்பாணத் தமிழ், வன்னித் தமிழ், மட்டக்களப்பு தமிழ் என்று... எவரும் பேசும் போது....

சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்து... பிரதேச வாதத்தை கிளப்ப, முன்னுக்கு வந்து விடுவார்கள்.

இதற்குள், மற்றவனைப் பார்த்து... "அடிமைப் புத்தி" என்று மேதாவித் தனமாக எழுதுகின்றார்.

 

அவர்களின் நோக்கம்... இங்கு, அந்த ஜேர்மன் பெண்ணின் அரிய ஆற்றலையும், பேட்டி காணும் பிரேமில் பிழையை பிடித்து... குட்டையை குளப்புவதில் தான்... இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

 

நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்திருந்தாலும்... இன்று, அந்த வட்டாரப் பேச்சை என்னால்... முன்பு போல் பேச சிரமமாக இருக்கும்.

 

இந்த வகையில்... அந்த ஜேர்மன் பெண்ணை, வாழ்த்தி.... வணங்குகின்றேன். :)

தமிழனை கிண்டல் பண்ண தமிழனால் மட்டும் முடியும் என்று சொல்கிறேன் ஒரு முத்த அனுபவம் வாய்த்த அறிவிப்பாளர் பாவிக்கும் சொல்லாடல் இல்லை ..அது என்ன நாங்கள் என்ன சொன்னாலும்  மேதாவித்தனம் அதை கொஞ்சம் பிரபலம் சொன்னால் கெட்டித்தனம் எப்ப மாறும் எங்க சமூகம் :(

Link to comment
Share on other sites

எங்களூடைய ஊடகவியலாளர்களை எடுத்துக் கொண்டால் முறைப்படி பயின்று வந்தவர்களல்ல.
அனுபவங்களின் அடிப்படையில் தங்களை வளர்த்துக் கொள்பவர்கள்!

இது ஊடகத்துறைக்கு மட்டுமல்ல. எம்மவர் சம்பந்தப்பட்ட பல விடயங்களுக்கும் பொருந்தும்.

 

ஆழமறியாமல் காலை விடாதே என்பது முதுமொழி.

ஆழமறியாது காலைவிட்டு, அதன் பின் உள்ள ஆழத்திற்கேற்றவாறு போராடியோ அல்லது சமாளித்தோ வெற்றியடைவதுதான் எம்மவர்களின் தனி இயல்பு.

 

அந்த வகையில், தான் ஏனைய தமிழர்கள் சிலரால் பட்ட அனுபவத்தின் அடிப்படையில், அந்த பெண்மணியினால் ஏற்பட்ட உணர்வு மேலீட்டினால் சில வார்த்தைகளை பிரேம் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி வெளிவிட்டாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.  :o

Link to comment
Share on other sites

என்ன பண்ணுறது நாங்க படிச்ச படிப்பு அப்படி அதுக்கு தகுந்தால் போலதான் தமிழ் எழுத முடியும் நீங்கள் எல்லாம் உசுப்பேத்தி போட்டு வெளிநாடு வர ஓடி திரிந்தது நாங்கள் எல்லே ..

 

அறிவாளிகள் கூடித்தான் எங்க போராட்டம் இந்த நிலைக்கு வந்தது அல்லது பேசவேண்டிய விடையம் நிறைய இருக்கு ஒரு வெள்ளையை கொண்டுவந்து தமிழ் பேசுறா பாருங்கோ என்று இந்தியன் டீவி கணக்கா சீன் போட முடியுமா ...

 

இதையும் ஒருக்கா பிரேம் இடம் கொடுங்கோ போடசொல்லி மழலை தமிழில் கனடிய பெண் என்று தமிழ் பிள்ளைகள் மம்மி டாடி என்று சொல்ல இந்த பிள்ளை பாட்டு படிக்குது என்று ..

 

 

 

Link to comment
Share on other sites

ஜேர்மனியப் பெண்ணொருவர் சரளமாகத்தமிழ் பேசுவது தமிழர்களாகிய
நமக்கு வியப்புத்தரும் விடயமாகும்.அடிமைமோகத்தில் மூழ்கியுள்ள
நம்மவர்களுக்கு அது பலவகையில் வழிகாட்டுவதாகும்; அது நம் கண்க-
ளைத் திறக்க வைக்கவேண்டும்.ஜேர்மனியர்கள் பலவகையில் விசேட-
மானவர்கள். உதாரணமாக, முதலாவது, இரண்டாவது உலகப்போர்களில்
மிகப்பெரிய அழிவுகளைச் சந்தித்தபோதும் தமது விடாமுயற்சியால்
அவற்றை ஈடுசெய்து பொருளாதார வளர்ச்சியில் இன்று முதன்மையான
இடத்தைப் பிடித்து அதனைப் பேணிவருகின்றனர். அறிவுசார்ந்த பல்வேறு
துறைகளில் ஜேர்மனியர்களே முதன்மையான இடத்தை வகிக்கின்றனர்.
மேற்குலகத் தத்துவஞானம்,சிந்தனைத்துறைகளில் அவர்களின் பங்க-
ளிப்பு மிகக் காத்திரமானது. கார்ல் மார்க்ஸ் ஒரு ஜேர்மனியரே. மக்ஸ்
முல்லர்[ Max Muller]  என்ற ஜேர்மனியர் இந்துசமய வேதஉபநிடதங்களை
ஜேர்மன்மொழியில் மொழிபெயர்த்துள்ளார். சுவாமி விவேகானந்தர்
ஐரோப்பா சென்றபோது மக்ஸ் முல்லரைச் சந்தித்துப் பாராட்டியுள்ளார்.
 
தாங்கள் விசேடமானவர்கள் என்ற எண்ணம்,கர்வம், ஜேர்மனியரிடம்
ஊறிப்போயுள்ளது.கிட்லரின்[ Hitler ] வாழ்வில் இது பளிச்சிடுவதைக்
காணலாம்.அவர்கள் தாய்மொழிப்பற்று மிக்கவர்கள்; அத்துடன்
நாட்டுப்பற்றும் கொண்டவர்கள். அடிமைவாழ்வை வெறுப்பவர்கள்.
அறிவார்வம் மிகுந்த முயற்சிகளின் முன்னோடிகள். அதனுடைய
ஒரு வெளிப்பாடே அந்த மதிப்புக்குரிய அம்மையாரின் தமிழ்பேசும்
முயற்சியும் எனலாம்.
 
புலம்பெயர்ந்து மேற்குநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் -- குறிப்பாக
தமிழ்மாணவர்கள் --- தாம்வாழும் நாட்டுமக்களின் மொழி,அவர்களின்
கலாச்சாரம்,வாழ்க்கைமுறைகள் என்பவற்றிலுள்ள சிறப்பான,
போற்றத்தக்க அம்சங்களை இனம்கண்டு அவைகளைப் பின்பற்ற
வேண்டும்; நம்மவர்களிடையே பரப்பவேண்டும். நாம் ஏன்
அடிமைகளாக,அகதிகளாக அலைகிறோம் என்பதைக் கண்டறிந்து
சரிசெய்யவேண்டும்.அங்ஙனம் நமது இழிநிலை போக்கும்வகையில்
நமது செயற்பாடுகள் அமையுமாயின் நமது புலம்பெயர்வு, அலைதல்
கூட பயனுள்ளதாகலாம்.

===  முகநூல்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.