Jump to content

தமிழீழத்தேசியக்கொடி


Recommended Posts

[size=4]22048_1337367481250_1443010417_947762_4332683_a.jpg[/size]

ஒரு நாட்டின் தேசிய

இனங்கள் நாட்டு மக்களின்

பண்புகள்,ஆட்சி,இறைமை

என்பவை உட்பட அந்த

நாட்டைக் குறிக்கின்ற

ஒட்டுமொத்தமான பொதுச்

சின்னமாகத் தேசியக்

கொடி விளங்குகின்றது .

ஒவ்வொரு நாட்டின்

இயல்புகள்

நிலைமைகள் ,எண்ணங்களின்

வெளிப்பாடாக அந்தந்த

நாட்டுக் தேசிய கொடிகளின்

சின்னம் நிறம் அளவு என்பன

வேறுபட்டிருக்கும் .தேசியக்

கொடியின்

அளவு பெரும்பாலும் 3:2 என்ற

அளவினதாகவே இருக்கின்றது.

சில நாடுகளின் தேசியக்

கொடிகள் 2:1, 1:1 என்ற

அளவினைக் கொண்டதாகவும்

இருக்கின்றது

நாம்

போற்றி வணங்குதற்கூடாக

தேசியக் கொடிக்கு வணக்கம்

செலுத்தப்படுகின்றது .

தேசியக்கொடியை வணங்குவது

நாட்டை வணங்குவது போலாகும்.

நாட்டை போற்றி

வணங்குவதற்கூடாகத்

தேசியக் கொடிக்கு வணக்கம்

செலுத்தப்படுகின்றது .

தேசியக்கொடியை வணங்குவது

நாட்டை வணங்குவது போலாகும்.

நாட்டின் தலைவர்களைவிட,

படை, ஆட்சி என்பவற்றைவிட

உயர்ந்ததாகத் தேசியக்

கொடி மதிக்கப்படுகின்றது.

எனவேதான் எந்த

ஒரு நாட்டிலும் எந்தச்

சிறப்பு நிகழ்வுகளின்

போதும் நாட்டின்

தலைவர் ,படை,அரசலுவலர்,

குடிமக்கள் அனைவரும்

கொடிவணக்கம் செய்கின்றனர்.

தேசியக்

கொடிக்கு வழங்கப்படுகின்ற

மதிப்பு ,சிறப்பு என்பன

அந்த நாட்டைச்

சென்றடைகின்றன.அது போன்றே

தேசியக்

கொடிக்கு ஏற்படுத்தப்படும்

இழிவு ,

புறக்கணிப்பு என்பனவும்

அதன் நாட்டைச்

சென்றடையும் ,எனவேதான்

தேசியக்கொடிக்கு

ஏற்படுத்தப்படும்

இழிவு பெருங்குற்றமாகக்

கருதப்படும்

அக்குற்றத்துக்குக் கடும்

ஒறுப்பு (தண்டணை)

வழங்கப்படுகின்றது.

எமது தேசியத் தலைவர்

மேதகு வே .பிரபாகரன்

அவர்களால் 1977 ஆம்

ஆண்டு,விடுதலைப் புலிகள்

இயக்கத்திற்கென

உருவாக்கப்பட்டுப்

பயன்படுத்தப்பட்டு வந்த

புலிக்கொடியில் இருந்த

எழுத்துக்கள்

நீக்கபட்டு தமிழீழத்தின்

தேசியக்கொடியாக 1990 ஆம்

ஆண்டு தேசியத் தலைவர்

அவர்களால்

அறிவிக்கட்பட்டது . 1990

ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம்

நாள் மாவீரர் எழுச்சிவாரத்

தொடக்க நாளன்று முதல்

தடவையாகத் தமிழீழத்

தேசியக் கொடி எமது தேசியத்

தலைவர் அவர்களால்

ஏற்றிவைக்கபட்டது .

அன்றிலிருந்து

தமிழீழத்தில் நடைபெறும்

சிறப்பு நிகழ்வுகள்

தமிழீழத்

தேசியக்கொடி ஏற்றப்பட்டே

தொடங்கப்படுகின்றன .

தேசியக்கொடி

ஏற்றப்படும்போது தமிழீழத்

தேசியக்கொடி வணக்கப்பண்

பாடப்படுகின்றது .

தலைவர்கள்,

சிறப்புக்குடிமக்கள்

போன்றோரின்

மறைவையொட்டி ஏற்படும்

நாட்டின் துயர

நிகழ்வுகளின்போது

தேசியக்கொடி

கொடிக்கம்பத்தின்

உச்சிவரை ஏற்றப்பட்டு

கொடிக்கம்பத்தின்

நடுப்பகுதிவரை இறக்கிக்

கட்டிப்

பறக்கவிடப்படுவது வழக்கம்.

இதன்மூலம் நாட்டின் துயரம்

உணர்த்தப்படுகின்றது .

எமது நாட்டை அமைப்பதற்கான

விடுதலைப்

போராட்டத்தை வீறு

கொள்ளவைத்த ,

மக்களை விடுதலை

இயக்கத்தின்பால்

ஈர்த்து அணி திரளவைத்த

தமிழீழ விடுதலைப் புலிகள்

இயக்கத்தின் கோட்குறியான

( இலட்சினையான) பாயும்

புலியே எமது

தேசியக்கொடியின் நடுவில்

அமைந்திருக்கிறது .

எமது தேசியக்கொடியை மஞ்சள்,

சிவப்பு,கறுப்பு,வெள்ளை

ஆகிய நான்கு நிறங்கள்

அழகுபடுத்துகின்றன .

தமிழீழ

மக்களுக்கு ஒரு தாயகம்

உண்டு . அந்த தாயகம்

அவர்களது சொத்துரிமை.

தமிழீழ மக்கள்

ஒரு தனித்துவமான தேசிய

இனம் என்பதால்

அவர்களுக்குத்

தன்னாட்சி (சுயநிர்ணய)

உரிமை உண்டு.இந்த

தன்னாட்சி உரிமை அவர்களது

அடிப்படை அரசியல்

உரிமை .தமது தாயகத்தை

மீட்டெடுத்து,தன்னாட்சி

உரிமையை நாட்டுவதற்கு

தமிழீழ மக்கள்

மேற்கொண்டுள்ள தேசிய

விடுதலைப் போராட்டம்

அறத்தின்பாற்பட்டது .மனித

தர்மத்தை அடிப்படையாகக்

கொண்டது என்பதை மஞ்சள்

நிறம் சுட்டி நிற்கின்றது.

ஏற்றத் தாழ்வுகளற்ற,

வர்க்க, சாதிய,

முரண்பாடுகளற்ற

பெண்ணடிமைத்தனமற்ற

புரட்சிப்பாங்கான அரசியல்

இலக்கைச் சிவப்பு நிறம்

குறியீடு செய்கின்றது .

கரடுமுரடான, சாவும்

அழிவும் தாங்கொணாத்

துன்பங்களும் நிறைந்த

வழிக்கூடாகச்

சென்று எமது இலக்கை

அடைவதற்கு வேண்டிய

உருக்குப்போன்ற உள்ள

உறுதியைக் கறுப்பு நிறம்

குறித்துக்காட்டுகின்றது.

அமைப்பினதும்

போராட்டத்தினதும்

தூய்மையை ,

நேர்மையை வெள்ளை நிறம்

வெளிப்படுத்தி நிற்கின்றது

.

எமது தேசியக் கொடியை நாம்

எமது உயிரிலும் மேலாகப்

போற்றிப்

பேணிப்பாதுகாப்பது எமது

தலையாய கடமையாகும் .

கொடிவணக்க ஒழுங்குமுறை

தேசியக்கொடி ஏற்றப்படும்

கொடிக்கம்பத்தின் உயரம்

22 அடிக்குக் குறைவாக

இருக்கக்கூடாது.

தேசியக்கொடியின்

நீளம் 4 அடியாகவும்

உயரம் 3 அடியாகவும்

இருத்தல் வேண்டும்

தேசியக்கொடியுடன்

வேறு கொடிகளும்

ஏற்றப்படின் அக்கொடிகள்

தேசியக்கொடியைவிடப்

பெரிதாக இருக்கக்கூடாது.

தேசியக்கொடியேற்றப்பட்ட

கொடிக்கம்பத்தைவிட ஏனைய

கொடிக்கம்பங்கள் 2

அடி உயரம் குறைந்ததாக

இருக்க வேண்டும் .

தேசியக்கொடியுடன்

பிறநாடுகளின்

தேசியக்கொடிகள்

ஏற்றப்படுவதாயின்

ஒரே அளவு உயரமுள்ள

கொடிக்கம்பத்தில்

ஒரே அளவான

கொடிகளை ஏற்றலாம்.ஆனால்

எமது தேசியக்கொடிக்கு

இடப்புறமாகவே

ஏனையநாடுகளின் கொடிகள்

பறக்கவிடப்படவேண்டும் .

எமது தேசியகொடியுடன்

பிறநாட்டுத்

தேசியக்கொடிகளை

ஏற்றுவதாயின்

எமது தேசியக்கொடி

ஏற்றப்பட்டதன்

பின்பே ஏனைய

தேசியக்கொடிகள்

ஏற்றப்படவேண்டும்.

கொடிகள்

இறக்கப்படும்போது ஏனைய

கொடிகள்

இறக்கப்படவேண்டும் .

பின்பு இறுதியாகவே எமது

தேசியக்கொடி இறக்கப்பட

வேண்டும் .ஏனைய கொடிகள்

பறந்துகொண்டிருக்போது

எமது தேசியக்கொடியை

ஒருபோதும்

இறக்கக்கூடாது .

ஊர்வலங்களில்

தேசியக்கொடியை எடுத்துச்

செல்வதாயின் கொடியின்

உயரத்தின் 4

பங்கு உயரமான கம்பத்தில்

கட்டி நெஞ்சுக்கு

நேராகவோ அன்றி

வலத்தோளிலோ ஏந்திச்

செல்ல

வேண்டும் .தேசியக்கொடியை

ஏந்திச்செல்பவருக்கு

முன்பாக வேறு எந்தக்

கொடியை ஏந்துபவரும்

முந்திச் செல்லக்கூடாது.

கூட்ட மேடைகளில்

பேச்சாளரின்

தலைக்கு மேலாக பின்

புறத்தட்டியில்

தேசியக்கொடியைக்

கட்டலாம் .

தேசியக்கொடியில்

எதுவும்

எழுதப்பட்டிருக்கக்

கூடாது .

தேசியக்கொடி கிழிந்தோ,

சிதைந்தோ போனால் அதைப்

பழந்துணியாகப்

பயன்படுத்தவோ

குப்பைத்தொட்டியில்

வீசவோகூடாது .

தேசியக்கொடியை வணிக

விளம்பரத்துக்கோ ,

விரிப்பாகவோ அன்றி

வேறெந்தத்

தேவைகளுக்காகவோ பயன்படு;

த்தக்கூடாது.

குறிப்பிட்ட சில உயர்

அரச பணியகக்

கட்டிடங்களில் மட்டும்

தேசியக்கொடி

கொடிக்கம்பத்தில்

ஏற்றப்படலாம் .

கட்டிடங்களில்

கொடிக்கம்பத்தில்

ஏற்றப்படும்

தேசியக்கொடி நாள்தோறும்

கதிரவன் எழுந்ததற்குப்

பின்னர்

ஏற்றப்பட்டு மறைவதற்கு

முன்பாக

இறக்கப்படவேண்டும் .

ஆட்சிப்பொறுப்பிலுள்ளோர

்,தலைவர்கள் ,உயர்

அலுவலர்கள் வீடுகளிலும்

எந்நாளும் பகலில்

தேசியக்கொடி பறக்க

விடப்படலாம் .

வெளிநாடுகளிலுள்ள

எமது கிளைகளிலும்

தூதரகங்களிலும் பகலில்

எந்நாளும்

எமது தேசியக்கொடி பறக்க

விடப்படலாம் .

குறிப்பிட்ட சில

நாட்களில் மட்டும்

பொதுமக்கள் வீடுகளில்

கட்டிடங்களில் ,

தேசியக்கொடி

பறக்கவிடப்படலாம்.இவை

முறையாகக் கம்பங்களில்

மட்டுமே

ஏற்றப்படவேண்டும் .

தெருவுக்குக்

குறுக்காகவோ பக்கமாகவோ

கயிறுகளில் தேசியக்கொடி

தொங்கவிடப்படக்கூடாது .

தேசியக்கொடியைத்

தலைகீழாக

பறக்கவிடக்கூடாது.

தேசியக்கொடியிலுள்ள

புலி ,கொடிக்கம்பத்தைப்

பார்த்தவாறு

பறக்கவிடக்கூடாது.

புலியின் பார்வை

கொடிக்கம்பத்துக்கு

எதிர்ப்புறமாகக்

கொடி பறக்கும் பக்கமாக

இருக்கும் வகையில் கொடி

பறக்கவிடப்படவேண்டும் .

தேசியக்கொடியைக்

கீழிருந்து

பறந்தபடியிருக்கும்

நிலையிலேயே ஏற்றவேண்டும்

. மடித்தபடி மேலே ஏற்றி

அங்கிருந்து விரிந்து

பறக்கும் வகையில்

தேசியக்கொடி

ஏற்றக்கூடாது .

தேசியக்கொடியை ஏற்றுபவர்

கொடி வணக்கம் செலுத்த

அணிவகுத்து நிற்கும்

மக்களுக்கும் ,

கொடிக்கம்பத்திற்கும்

இடையில்

நின்று கொடியை ஏற்றுதல்

கூடாது . தேசியக்கொடியை

ஏற்றும்போது அனைவரும்

எழுந்து நின்று வணக்கம்

செலுத்த வேண்டும் .

தேசியக்கொடி

ஏற்றப்படுவதுபோல்,

இறக்கப்படுவதும்

ஒழுங்கு முறையிலான

சிறப்பு நிகழ்வாகவே

இருக்கவேண்டும் .

கொடியை இறக்குபவரும்

முதன்மையானவராக ,

தகுதியானவராக இருத்தல்

வேண்டும் .

தேசியக்கொடி

இறக்கப்படும்பொழுது

நிலத்தில்

விழாது எட்டக்கூடிய

உயரத்திலேயே வைத்து

கைகளில் ஏந்தி எடுத்தல்

வேண்டும்.

தேசியக்கொடி இறக்கும்

நிகழ்வின்போது கையொலி

எழுப்பக்கூடாது .

அந்நிகழ்வு அமைதியாக

நடைபெறவேண்டும் .

தேசியக்கொடி பொதுவாக

மாலை 6.00

மணிக்கு முன்னர்

முறைப்படி

இறக்கப்படவேண்டும்.

கொடியேற்றித்

தொடக்கப்படும்

நிகழ்சிகள் மாலை 6.00

மணிக்குப் பின்னரும்

தொடருமாயின்

நிகழ்ச்சி முடிவுற்றதும்

கொடியை முறைப்படி

இறக்கலாம் .

கொடியேற்றித்

தொடங்கப்படும்

நிகழ்ச்சி நாட்கணக்கில்

தொடருமாயின் அந்த

நிகழ்ச்சிகள்

முடிவுறும்

வரை தேசியக்கொடி இரவும்

தொடர்ச்சியாகப்

பறக்கவிடப்படலாம் .

நிகழ்ச்சிகள்

முடிவடைந்தபின்

முறைப்படி தேசியக்கொடி

இறக்க வேண்டும்.

நன்றி - ஈழம் தேவதை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.