Jump to content

மஹிந்தவை கட்டுப்படுத்த முடியும் என பிரபாகரன் கருதினார்– கே.விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவை கட்டுப்படுத்த முடியும் என பிரபாகரன் கருதினார்– கே.விக்னேஸ்வரன்

- குளோபல்தமிழ்ச் செய்தியாளர்

01 செப்டம்பர் 2014

Prabakaran_CI.jpg

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டுப்படுத்த முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கருதினார் என முன்னாள் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துரித கதியில் ஈழத்தை எட்டுவதற்கு தேவையான சூழலை அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், பிரபாகரன் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஜனாதிபதியினால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளில், தமக்கு சாதக நிலைமை ஏற்படும் என புலிகள் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குறித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தப்புக் கணக்கே அவர்களின் பாரிய பின்னடைவிற்கான ஏதுவாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கக் கூடாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வடக்கு மக்கள் வாக்களிப்பில் பங்கேற்காமையே, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தோல்வியை சந்திக்க ஏதுவாக அமைந்தது என ஐக்கிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

வன்னி கிழக்கு முன்னரங்கப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் சிவிலியன் இழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்க மேற்குலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும், இதனால் இழப்புக்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாரியளவில் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்க தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னி கிழக்கு முன்னரங்கப் பகுதிகளில் இலங்கை அரச படையினர் பின்பற்றிய யுத்த தந்திரோபாயங்கள் பாரியளவில் இழப்புக்களை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேற்கு பகுதியில் ஒரு விதமான யுத்த தந்திரோபாயம் பின்பற்றப்பட்டதாகவும், கிழக்கு பகுதியில் வேறும் ஓர் தந்திரோபாயம் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கிளிநொச்சியிலிருந்து வெளியேறியிருக்கக் கூடாது எனவும் அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றியிருக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னிக் கிழக்கு முன்னரங்கப் பகுதியில் யுத்த சூன்ய வலயம் அறிவிப்பது குறித்து புலிகளுடன் அரசாங்கம் எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை எனவும், இவ்வாறு தன்னிச்சையாக அரசாங்கம் யுத்த சூன்ய வலயம் பற்றி அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் யுத்த சூன்ய வலயத்தை புலிகள் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் மற்றுமொரு யுத்த சூன்ய வலயத்தை அரசாங்கம் எதன் அடிப்படையில் அறிவித்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்க இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வைத்தியசாலைகள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது படையினர் நடத்திய தாக்குதல்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்hளர்.

ஆளில்லா உளவு விமானங்களின் மூலம் கள நிலவரங்களை அறிந்து கொண்டே படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கம் யுத்த வலங்களுக்கு போதியளவு மருத்துவ வசதிகளை வழங்கவில்லை எனவும், மருந்து பொருட்களை அனுப்பி வைக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மனிக்பாம் முகாமில் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு அரசாங்கம் உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் வெற்றி புலிகளுக்கு சாதக நிலைமையை ஏற்படுத்தும் என்ற கருதுகோள் பிழையானது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111127/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.