Jump to content

செக்ஸ் உறவு கொள்ளும் நேரத்தில் நம்ம ஊர் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தனர், அதில் "இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம், அவர்களது செக்ஸ் விருப்பு வெறுப்புகள், செக்சில்  அவர்களது எதிர்பார்ப்புகள்" போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர்.

இந்த சர்வே அடிப்படையில் வந்துள்ள முடிவுகள் பெண்கள் ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது…”- என்கிறார்.

சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்?

- `நாளை என்ன சமையல் செய்வது?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.

- `இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.

- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.

கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது.

51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கிறார்கள்.

தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு …..

- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

- அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

Thanks to http://inimaiyanaillaram.blogspot.com/

 
Link to comment
Share on other sites

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

 

அதானே..... இவ்வளவிற்கும், 1326 பேர் வாசித்து விட்டுcomputer_0010.gif, நசுக்கிடாமல் போயிருக்கிறார்கள்.

உங்களையாவது.... இந்தத் திரியில் கண்டது, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :lol:  :D

Link to comment
Share on other sites

இங்கபார்ட ஒருத்தருமே இந்த திரியை பார்க்கலையாம், வாருது நல்லா வாயிலை, ம்ம்ம் கெழம்புங்கள்.

 

எல்லாம் ஒரு பொறாமையால் தான் பாஸ்

 

நாங்களெல்லாம் லிஸ்ட் போட வெளிக்கிட்டால் யாழ்களத்தின் மொத்த பக்கங்களின் நீளத்தினை விட கூடவாக இருக்கும். ஹ்ம்ம்.. அந்த மனுசன் கொடுத்து வைத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு பொறாமையால் தான் பாஸ்

 

நாங்களெல்லாம் லிஸ்ட் போட வெளிக்கிட்டால் யாழ்களத்தின் மொத்த பக்கங்களின் நீளத்தினை விட கூடவாக இருக்கும். ஹ்ம்ம்.. அந்த மனுசன் கொடுத்து வைத்தவர்.

 

எந்த மனுசன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மனுசன் :rolleyes:

 

 

அவர்  இன்னும் பேய்த்திரியிலிருந்து வெளியில் வரவில்லை... :icon_mrgreen:  :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143482#entry1029523

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்டால் அவர் குளிச்சவரோ,பல்லை வடிவாய் தீட்டினவரோ,கீழ் உறுப்பை வடிவாய் கழுவினவரோ என்று தான் நினைப்பன்:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் ஓட வெளிக்கிட முதல் யோசிக்க வேண்டியவிசயம் உது.......ரயில் ஓட வெளிக்கிட்டாப்பிறகு எல்லாம் ரூ லேற்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் மாட்டுக்குத் தவிடு புண்ணாக்கு வைத்ததா
சாணம் பொறுக்கியாச்சா என்ற எண்ணம் வரவில்லை :D:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் அலை தோன்றும் போது தெரிவதில்லை , கரையில் மோதி சாரல் அடிக்கும் போதுதான்  தேகம் சிலிர்க்கின்றது.

 

அந்த உறவே நினைவுகளை மறக்கடிப்பதாய் இருக்க வேண்டும் , அங்கும் நினைவு இருக்குமெனில் அது வெறும் விறகுதான்...!!

Link to comment
Share on other sites

ரதி,
 
 
பெண் பெயரில் வந்து இப்படி தரம் குறைவாக எழுதுவதை விட ஆண் பெயரில் வரலாமே!!
 
அருவருப்பாக இருக்கிறது!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி செக்கப் செய்வதைப் பார்த்தால் ஆள் ஒருநாளிலேயே விட்டிட்டு ஓடிடுவார்.அதுக்கு எப்ப மூட் வருமென்று தெரியாது.வருகிற சந்தர்பந்தைப் பாவிச்சுடணும்.மற்றதெல்லாம் பிறகு யோசிக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் அடிக்கடி கோமாவுக்கு போறதுன்டோ  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி செக்கப் செய்வதைப் பார்த்தால் ஆள் ஒருநாளிலேயே விட்டிட்டு ஓடிடுவார்.அதுக்கு எப்ப மூட் வருமென்று தெரியாது.வருகிற சந்தர்பந்தைப் பாவிச்சுடணும்.மற்றதெல்லாம் பிறகு யோசிக்க வேணும்.

 

அப்பிடியெண்டால் பக்கத்திலை நிக்கிறவன் வலுகவனமாய் நிக்கோணும் எண்டுறியள் :lol:

புலவர் தகவலுக்கு நன்றி.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படுத்துட்டு(நித்திரையால)எழும்பைக்கைதான் நல்ல புத்துணர்ச்சியாய் இருக்கும் எண்டது எல்லாருக்கும் தெரிந்தவிடயம்தானே!!!!நித்திரையை எல்லாம் கேமா இல்ல தம்பி.கோமா வந்தால் செத்திட வேண்டியதுதான்.

பூட்டுக்கதான் சாவியைப் போடவேணும்கு.சா அண்னை!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

பெண் பெயரில் வந்து இப்படி தரம் குறைவாக எழுதுவதை விட ஆண் பெயரில் வரலாமே!!

அருவருப்பாக இருக்கிறது!!

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

 
நான் நினைக்கிறேன் அவர் எதை எங்கே பேச வேண்டும் என்று ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் அப்படி என்று சொல்ல வருகிறார் என்று.
 
இப்படி எத்தனை பேரை நாங்கள் யாழில் பர்த்துவிட்ட்டோம்.
எதை எப்படி எழுதுவது என்று எங்களுக்கு சொல்லிதர இவர்கள் யார்?? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் அவர் எதை எங்கே பேச வேண்டும் என்று ஒரு நாகரீகம் இருக்க வேண்டும் அப்படி என்று சொல்ல வருகிறார் என்று.

இப்படி எத்தனை பேரை நாங்கள் யாழில் பர்த்துவிட்ட்டோம்.

எதை எப்படி எழுதுவது என்று எங்களுக்கு சொல்லிதர இவர்கள் யார்??

நான் பொருத்தமான திரியில் தான் என்ட கருத்தை வைத்துள்ளேன்.தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் ஆட்டுக்குள்,மாட்டை செருகும் உங்கள் பழக்கம் எனக்கில்லை

Link to comment
Share on other sites

ரதி எழுதியதில் எந்த தவறும் இல்லை.  சரியான இடத்திலேயே தனது கருத்தை எழுதியுள்ளார். பாலியல் உறவு சுகாதாரத்துடன் சம்பந்தபட்டது. இங்கு எல்லோரும்  உறுப்பினர்கள் எல்லோருமே வயது வந்தவர்களே. உடலியல் சுகாதாரம் என்ற பாங்கிலேயே அவரின் கருத்து எடுத்து கொள்ளப்பட வேண்டும். ஒரு பெண் இதை எழுதக்கூடாது என்றால் ஆணும் எழுதக்கூடாது. ஏனெனில் பாலியல் உறவு என்பது பெண், ஆண் இருவருடனும் சம்பந்தப்பட்டது.  அதில் ஏற்படமு இன்பம், துன்பம் இரண்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொருத்தமான திரியில் தான் என்ட கருத்தை வைத்துள்ளேன்.தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் ஆட்டுக்குள்,மாட்டை செருகும் உங்கள் பழக்கம் எனக்கில்லை

உங்களுக்கு சாதகமாக எழுதியதற்கு போய்  இப்படி திட்டுகிறீர்கள்?
 
ஈசன் போன்றவர்கள் எப்படி எதை எழுதுவது என்பது பற்றி பாடம் எடுக்க தேவை இல்லை. நீங்கள் முதிர்சி பெற்றவர் அப்படி என்று பொருள் வைத்துதானே எழுதிள்ளேன்??????
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஒரு ஆண் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்/செய்யலாம்.ஆனால் பெண் செய்யக் கூடாது. அப்படித் தானே!...நீங்கள் அப்பட்டமான ஆணாதிக்கவாதி.நான் மேலே எழுதியதில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.உங்களைப் பொறுத்த வரை கூட இந்தக கருத்தை ஒரு பெண் எழுதியத் தான் பிழை இல்லையா?

அதே.... இங்கு ஆம்பிளைங்க எவ்வளவோ எழுதுறாங்க... ஆனா ஒரு பெண் அப்படி எழுதியதை பலராலும் பொறுக்க முடியவில்லை... இந்த திரி புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் முதல் தலைமுறைக்கும் இடையிலான பெரும் இடைவெளிக்கு ஒரு சிறந்த உதாரணம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே.... இங்கு ஆம்பிளைங்க எவ்வளவோ எழுதுறாங்க... ஆனா ஒரு பெண் அப்படி எழுதியதை பலராலும் பொறுக்க முடியவில்லை... இந்த திரி புலம்பெயர்ந்த தேசத்தில் பிறந்த பிள்ளைகளுக்கும் முதல் தலைமுறைக்கும் இடையிலான பெரும் இடைவெளிக்கு ஒரு சிறந்த உதாரணம்...

 

 

உங்களது  கருத்தோடோ

அல்லது ரதியின் எழுத்தின் மீதோ மாற்றுக்கருத்துக்கிடையாது

 

இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் ரதி  என்ற எங்களது சக கருத்துக்கள   உறவு மீது 

நாம் வைத்திருக்கும் அன்பால்

மதிப்பால்

மற்றும்  அவரது வரும்கால நன்மை கருதியதாக இருக்கலாம் என்றே  நான் நினைக்கின்றேன்

 

ஆண் எழுதலாம்

பெண் எழுதலாமா என்ற  கேள்விக்கு

இவ்வாறு நான்  எழுதிவிட்டு எல்லோரையும் சந்திப்பேன்

இதை ரதியால் செய்யமுடியுமா???

எதிர் காலத்தில்

இது போன்ற  எழுத்துக்களே  அவரை ஒதுங்கச்செய்துவிடலாம் இல்லையா???

இதற்கு எந்த தலைமுறையும் அடங்கும்.....

 

நம்ம  சமூகம்

பார்க்க  பேசத்தான் கீரோக்கள்

உண்மையில் பக்கா   வில்லன்கள் தம்பி............

Link to comment
Share on other sites

 

உங்களுக்கு சாதகமாக எழுதியதற்கு போய்  இப்படி திட்டுகிறீர்கள்?
 
ஈசன் போன்றவர்கள் எப்படி எதை எழுதுவது என்பது பற்றி பாடம் எடுக்க தேவை இல்லை. நீங்கள் முதிர்சி பெற்றவர் அப்படி என்று பொருள் வைத்துதானே எழுதிள்ளேன்??????

 

 

ifeel_zps9673b157.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.