Jump to content

சாமத்திய சடங்கின் அபத்தங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய சடங்கின் அபத்தங்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

இந்த பிள்ளை ஊரில பிறந்து வளர்த்து இருந்தா இப்படி சீனை போட முடியுமா எல்லா சும்மா புகழுக்கு அலையுற ஆக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியச் சடங்குகள், செய்வதற்கு எமது கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான காரணம் இருந்தது!

 

அந்தக்கால கட்டத்தில், பெண்கள் வெளியில் போவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தன! 

 

தனது வீட்டிலும், திருமணத்துக்குத் தயாராக ஒரு பெண் இருக்கிறாள், என்று 'சூசகமாக' ஊருக்கும், உறவுகளுக்கும் தெரியப்படுத்தவே அந்தச் சடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டது!

 

வழக்கம் போலத் தமிழனும், தனது வீக்கத்துக்கு ஏற்றமாதிரி, விழாவையும் வீங்கப்பண்ணி விட்டான்! அது சடங்கின் தவறல்ல.... அதைப் பின்பற்றுபவன் தவறேயாகும்!

 

இந்தப்பெண் தனது அதிமேதாவித்தனம் மூலம், தனது இனத்தையே, முட்டாள் கூட்டமென நிரூபிக்க முனைகிறாள்! (முட்டாள் கூட்டமென்கிறது வேற விசயம்!)

 

அந்த வீடியோவைத் தமிழில் வெளியிட்டிருந்தால், நான் அவரை நிச்சயம் பாராட்டியிருப்பேன்!

 

தனக்கு விருப்பமில்லாவிட்டால், விலகியிருந்திருக்கலாம்!  :o

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டு சினிமாவுடன் வந்த இன்னொரு குப்பை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Spending too much of money for these types of puberty celebrations is utter vaste.  What this girls says is really acceptable.  Better if she would give her comments in Tamil.  Or else, translated Tamil texts could be added.

Link to comment
Share on other sites

இப்பிடி கடுமையா சிந்திச்சு தான் நாடு இல்லாம அகதியாய்  அலைகிறோம்.

 

சாமத்திய வீடு இருக்கட்டு  முதல்  அகதி என்ட பெயரை இல்லாம எடுக்க   இளையோரே யோசியுங்கோ

Link to comment
Share on other sites

இப்பிடி கடுமையா சிந்திச்சு தான் நாடு இல்லாம அகதியாய்  அலைகிறோம்.

 

சாமத்திய வீடு இருக்கட்டு  முதல்  அகதி என்ட பெயரை இல்லாம எடுக்க   இளையோரே யோசியுங்கோ

நேசன்,

 

அகதி என்ற பெயரில் என்ன பிரச்சினை?

ஐயன்ஸ்ரயின் அமரிக்காவுக்கு அகதியாகத்தான் வந்தவர்.

Link to comment
Share on other sites

pulling the money from their ****

 

:lol:  :lol:  :lol:

 

கலாச்சார ரீதியாக நாம் செய்கிறோம். யூதர்களும் செய்கிறார்கள்(ஆண்களுக்கும் சடங்கு செய்கிறார்களாம்). வேறு சடங்குகளை வேற்று இனத்தினர் செய்கிறார்கள். இதில் தவறில்லை. ஆனால் இப்படி கடன் பட்டு ஆடம்பரமாக செய்வதில் உடன்பாடில்லை. தவறும் கூட.
மற்றும் படி சடங்கு செய்யும் சிறுமிகளை பலோத்காரமாக இழுத்துக்கொண்டு வந்து சடங்கு செய்விப்பதாக யாரும் அறியவில்லை. சிறுமி உணராமல் இருக்கிறார் என்பதும் மிக அதிகம் என நினைக்கிறேன். பெற்றோர் கொடுக்கும் உணவும் அதிக சத்துள்ள உணவை கொடுக்கிறார்கள்.அதிக குருதி வெளியேறுவதால் ஊட்டச்சத்து கொடுக்கப்பட வேண்டும். காணொளியில் வருபவருக்கு பிஸ்ஸா(pizza) போதுமெனில்  மற்றவருக்கும் பிஸ்ஸா கொடுக்க வேண்டுமா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியச் சடங்குகள், செய்வதற்கு எமது கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான காரணம் இருந்தது!

 

அந்தக்கால கட்டத்தில், பெண்கள் வெளியில் போவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தன! 

 

தனது வீட்டிலும், திருமணத்துக்குத் தயாராக ஒரு பெண் இருக்கிறாள், என்று 'சூசகமாக' ஊருக்கும், உறவுகளுக்கும் தெரியப்படுத்தவே அந்தச் சடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டது!

 

வழக்கம் போலத் தமிழனும், தனது வீக்கத்துக்கு ஏற்றமாதிரி, விழாவையும் வீங்கப்பண்ணி விட்டான்! அது சடங்கின் தவறல்ல.... அதைப் பின்பற்றுபவன் தவறேயாகும்!

 

இந்தப்பெண் தனது அதிமேதாவித்தனம் மூலம், தனது இனத்தையே, முட்டாள் கூட்டமென நிரூபிக்க முனைகிறாள்! (முட்டாள் கூட்டமென்கிறது வேற விசயம்!)

 

அந்த வீடியோவைத் தமிழில் வெளியிட்டிருந்தால், நான் அவரை நிச்சயம் பாராட்டியிருப்பேன்!

 

தனக்கு விருப்பமில்லாவிட்டால், விலகியிருந்திருக்கலாம்!  :o

 

புங்கையூரானின்... கருத்து,

ஒரு பக்குவப் பட்ட தமிழனின் கருத்து. :)  :rolleyes:  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓமோம் எங்களுக்கும் எல்லாம் தெரியும்.....முதல்லை நடக்கவேண்டிய அலுவலை  பார்...போ....தமிழன் கெட்ட கேட்டுக்கு இவ இங்கிலிசிலை விளக்கம் குடுக்க வந்திட்டாவு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவவுக்கு மட்டும் செய்யாமல் இருந்தவையாமோ?  இவவும் செய்து போட்டுத்தான் இப்ப வந்து புலம்புறா.  முதல்ல எங்கட கலாச்சாரத்தையும் மற்றவையின்ர கலாச்சாரத்தையும் நல்லாத் தெரிஞ்சு போட்டு வந்த கதைக்கட்டும்.  இப்பிடியான அரைகுறையளாலைதான் நாங்கள் அடையாளம் இல்லாமல் நிற்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய சடங்கின் அபத்தங்கள்.

 

 

இவா தன்னை மாதிரி ஆக்களோட பேசுறா. தானும் சாமத்திய வீடு செய்யல்ல என்று தான் சொல்லுறா.

 

உண்மை தான்.. சாமத்தியவீடு செய்யேக்க.. பெட்டையள என்னெண்டு வாழ்த்திறது. "ஹாவ் எ கப்பி பீரியட்" என்றா..??! அப்படி வாழ்த்திற நமக்கே வெட்கமா இருக்குது. அவ்வளவைக்கு எவ்வளவு அவமானமா இருக்கும். இதனை பெற்றோர் புரிஞ்சு கொள்ளனும்.

மேலும்.. இந்த ஓசி விளம்பரத்தால.. காவாலிப் பையங்களின் லிஸ்டில்.. இந்தப் பொண்ணுங்க சேர்க்கப்படுறாங்க. அதனால பெற்றோருக்குப் பிரச்சனை இல்ல.. அதுங்களட்ட (பெட்டையளட்ட).. போன் நம்பர்.. பேஸ்புக் ஐடி.. இன்ஸ்ராகிராம் ஐடி.. ஸ்கைப்  ஐடி.. வாட்ஸ் அப் ஐடி.. பிபிஎம் ஐடி.. கேட்டு வாற தொந்தரவுகளை யாராம் சாமாளிக்கிறது.

அந்தந்த வட்டத்தில நின்று பார்த்தால் தான் சில விடயங்கள் புரியும். பெரிசுங்க.. பெட்டையளுக்கு சாமத்திய வீடு செய்யுறதில தான் கலாசாரம் பண்பாடு காக்கப் போகினமாம். ஆனால் அவைட பொண்டில் மாருக்கு.. சுடிதார் தான் போட்டு அழகு பார்க்கினம். முதலில அதுக்கு முடிவு கட்டுங்க அங்கிள் களா.!!  :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியம் என்பது ஒரு சடங்கு.

 

இதைவிடுத்து கணாததை கண்ட சனமெல்லாம் எது என்னத்துக்கு எண்டு தெரியாமல் , தலைகால் தெரியாமல் செய்ய வெளிக்கிட்டால் அதுக்கு தமிழனும் அவன் கலாச்சாரமும் பொறுப்பில்லை.......

ஒருத்தன் கெலியிலை இருந்து ரோசாப்பூ தூவ மற்றவன் தடியிலை கமரா கட்டி படமெடுக்க......இதை வைச்சு ஒட்டுமொத்த இனத்தையும் கணக்கு பண்ணுவதும் ஒரு முட்டாள்த்தனம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா தன்னை மாதிரி ஆக்களோட பேசுறா. தானும் சாமத்திய வீடு செய்யல்ல என்று தான் சொல்லுறா.

 

உண்மை தான்.. சாமத்தியவீடு செய்யேக்க.. பெட்டையள என்னெண்டு வாழ்த்திறது. "ஹாவ் எ கப்பி பீரியட்" என்றா..??! அப்படி வாழ்த்திற நமக்கே வெட்கமா இருக்குது. அவ்வளவைக்கு எவ்வளவு அவமானமா இருக்கும். இதனை பெற்றோர் புரிஞ்சு கொள்ளனும்.

மேலும்.. இந்த ஓசி விளம்பரத்தால.. காவாலிப் பையங்களின் லிஸ்டில்.. இந்தப் பொண்ணுங்க சேர்க்கப்படுறாங்க. அதனால பெற்றோருக்குப் பிரச்சனை இல்ல.. அதுங்களட்ட (பெட்டையளட்ட).. போன் நம்பர்.. பேஸ்புக் ஐடி.. இன்ஸ்ராகிராம் ஐடி.. ஸ்கைப்  ஐடி.. வாட்ஸ் அப் ஐடி.. பிபிஎம் ஐடி.. கேட்டு வாற தொந்தரவுகளை யாராம் சாமாளிக்கிறது.

அந்தந்த வட்டத்தில நின்று பார்த்தால் தான் சில விடயங்கள் புரியும். பெரிசுங்க.. பெட்டையளுக்கு சாமத்திய வீடு செய்யுறதில தான் கலாசாரம் பண்பாடு காக்கப் போகினமாம். ஆனால் அவைட பொண்டில் மாருக்கு.. சுடிதார் தான் போட்டு அழகு பார்க்கினம். முதலில அதுக்கு முடிவு கட்டுங்க அங்கிள் களா.!!  :D:icon_idea:

நெடுக்கர், இது கொஞ்சம் ஓவர் போல உங்களுக்குத் தெரியவில்லையா?

 

தமிழ் சமுதாயத்தில் ஒரு பெண்ணின் இடம் மிகவும் முக்கியமானது! தமிழ் சமுதாயத்தில் மட்டுமல்ல, எல்லா சமுதாயங்களிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறன! பெண்ணென்பவள் ஒரு வருங்காலத் தலைமுறையின் 'உருவாக்கத்தில்' முக்கிய பங்களிக்கப் போகின்றவள்!

 

ஆண்களின் பங்கு இப்படியான கொண்டாட்டங்களில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது!

 

இப்படியான விழாக்களுக்கு, உங்களை ஆரத்தி எடுக்க அழைக்கவும் மாட்டார்கள்! பொதுவாக, நெருங்கிய உறவினர்களும், அயலவர்களும் மட்டுமே இதில் பங்கெடுப்பார்கள்!

 

சிங்களவன்.. 'எயா தான் லொக்கு லமயாக்கு' என்று ஒரு படமே எடுத்திருக்கிறான்! ஓஹோ என்று தான் ஓடியது!

 

அதைப்பற்றி, இந்தப்பெண் வாய் திறந்து ஒரு வீடியோ பதிவு போட முடியுமா?

 

அல்லது முஸ்லிம்கள் செய்கின்ற சுண்ணத்துச் சடங்கு பற்றி வாய் திறக்கத் தான் முடியுமா?

 

வட இந்தியா முழுக்கத் தானே செய்கிறார்கள்? அவர்களது 'வளைகாப்பு' நிகழ்ச்சியைப் பற்றி, இந்தப் பெண்ணால் வாய் திறந்து ஒரு வார்த்தை ஒரு விமரிசனம் தான் வைக்க முடியுமா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய வீடு என்பது முழுக்க முழுக்க அந்தப் பெண் முடிவு செய்ய வேண்டிய விடயம். அதில் பெற்றோரோ யாருமோ மூக்கை நுழைப்பது அவளின் தனிமனித சுதந்திரத்தை கையில் எடுக்கும் செயல். அதுல தான் எங்கட கலை கலாசாரம்.. பண்பாடு இருக்குது என்பது பச்சைப் பொய். வெறும் சுத்துமாத்து.

 

மேலும்.. இந்தியா.. சிறீலங்கா போன்ற நாடுகளில் வெறும் வார்த்தை அளவில் தான் மக்களின் உரிமைகள் உள்ளன. அங்கு பெண்கள் என்ன.. மனிதர்கள் சுதந்திரமாக வாழவும் முடியாது கருத்துச் சொல்லவும் முடியாது. அவற்றை எல்லாம் எடுகோளில் காட்டக் கூடாது.

 

அதேவேளை மேற்குலகில் 7 வயதுக்கு மேலே பிள்ளைகளை பெற்றோர் தங்கள் அறையில் கூட படுக்க வைக்கக் கூடாது. அவர்களின் தனி உரிமைக்கு  முக்கியம் அளிக்கச் சொல்லுகிறார்கள். ஆனால்.. நம்மவர்கள் இன்னும் அந்த நடைமுறைகளுக்கு வரவில்லை. வெறுமனவே கலாசாரம்.. பண்பாடு... அடக்குமுறைக்கூடாக கொண்டு செல்லப்பட முடியாது.

 

மேற்கு நாடுகளில்.. பிள்ளைகள் ஆண்டு 5 அல்லது 6 இலேயே.. கல்வி மூலம் பீரியட் என்றால் என்ன என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்குரிய சுகாதார நடவடிக்கைகள் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆக.. சாமத்திய வீடு என்பது இங்கு அவசியமற்ற ஒன்று. அதற்குள் இன்னும் கலாசாரம் பண்பாட்டை செருகி வைத்திருப்பது ஆரோக்கியமான விடயமும் அல்ல.

 

பிள்ளைகள் சிந்திக்க தொடங்குகின்ற போது.. இப்படியான காணொளிகள் பெருகும். அதுவே கருத்துக்களாக மிஞ்சும். அவர்களின் தலைமுறையில்.. சாமத்திய வீடு ஒழியும். நாம் யதார்த்தத்தை உள்வாங்காது வரட்டுத்தனமாக கலாசாரத்தை செருகிக் கொண்டிருப்பின் அது காணாமல் போவதை தடுக்க முடியாது. இதில் நுட்பமான மாற்றங்களும்.. மன ஓட்டங்களைப் புரிந்து கொண்ட மாற்றங்களும் வந்தால் அன்றி... எமது கலாசாரம்.. இன்னும் இரண்டு தலைமுறைகளோடு மேற்கு நாட்டில் அல்லாடும்.. என்பது உறுதி.

 

இன்றைய புலம்பெயர் தலைமுறையின் எண்ண ஓட்டங்களை சரிவர உள்வாங்காது விட்டால் அவர்கள் உங்களை விட்டு தூர விலகிப் போகும் நிலை அதிக ஏற்படும். அது இப்போதுள்ளதை விட மோசமான விளைவுகளை கொண்டு வரலாம். அல்லது கலாசாரம்.. பண்பாடு பற்றி பேசவே முடியாத நிலையை தோற்றுவிக்கலாம். :):icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விழாக்கள் எடுப்பதும்,விடுவதும் ஒவ்வொருத்தரினதும் மனதை பொறுத்தது.

சில இடங்களில் பிள்ளைகளுக்கு அது,அதுக்கு உரிய வயது வர முன்னமே, எப்போ என்று  ஒவ்வொரு வைத்தியராக கொண்டு திரிகிற அம்மாக்களும் இந்த நாடுகளில் இருக்கவே செய்கிறார்கள்...இது கொஞ்சம் ஓவர் என்றும் சொல்லலாம்..பட் ஏதாச்சும் சொல்லப் போனால் இவாக்கு என்ன என்று கேக்கிற மக்கள் மத்தியில் வாழ்கிற படியால் எழுதிட்டு நடையைக் கட்ட வேண்டியது தான்..

மற்றும் சில பிள்ளைகள் வேறு இடங்களில் கோலாகலமான விழாவாக நடப்பதை பார்த்துட்டு இதை விட பெரிதாக தான் தனக்கு  செய்ய வேண்டும் என்று கேட்டு நிக்கிற பிள்ளைகளும் இருக்கவே செய்கிறார்கள்..அப்பா பேசுவார் என்றால் அவர் கிடந்தார் என்று சும்மா இருக்கிற பிள்ளைகளுக்கு ஆசைகளை ஊட்டி வளர்க்கிற அம்மாக்களும் தான் இதற்கு காரணம்...

எதற்கும் பெண் பிள்ளைகளோடு இருக்கிற தந்தைமார் பாடு தான் கஸ்ரம்..அந்தப் பிள்ளைகளின் உணர்வுகளுக்கும்  சிறிதளவாவது மதிப்பளிக்கனும்.

அக்காவுக்கு  எல்லாம் செய்யிறார்கள் தங்கைக்கு செய்யிறார்கள்..  ஆனால் தனக்கு ஒன்றும் செய்யிறார்கள் இல்லையே  என்று இரண்டாவதாக பிறந்த பெண் பிள்ளை வேதனைப்படக் கூடாது...இப்படியான சம்பவங்களும் நடக்கிறது..

Link to comment
Share on other sites

சாமத்திய வீடு என்பது முழுக்க முழுக்க அந்தப் பெண் முடிவு செய்ய வேண்டிய விடயம். அதில் பெற்றோரோ யாருமோ மூக்கை நுழைப்பது அவளின் தனிமனித சுதந்திரத்தை கையில் எடுக்கும் செயல். அதுல தான் எங்கட கலை கலாசாரம்.. பண்பாடு இருக்குது என்பது பச்சைப் பொய். வெறும் சுத்துமாத்து.

 

மேலும்.. இந்தியா.. சிறீலங்கா போன்ற நாடுகளில் வெறும் வார்த்தை அளவில் தான் மக்களின் உரிமைகள் உள்ளன. அங்கு பெண்கள் என்ன.. மனிதர்கள் சுதந்திரமாக வாழவும் முடியாது கருத்துச் சொல்லவும் முடியாது. அவற்றை எல்லாம் எடுகோளில் காட்டக் கூடாது.

 

அதேவேளை மேற்குலகில் 7 வயதுக்கு மேலே பிள்ளைகளை பெற்றோர் தங்கள் அறையில் கூட படுக்க வைக்கக் கூடாது. அவர்களின் தனி உரிமைக்கு  முக்கியம் அளிக்கச் சொல்லுகிறார்கள். ஆனால்.. நம்மவர்கள் இன்னும் அந்த நடைமுறைகளுக்கு வரவில்லை. வெறுமனவே கலாசாரம்.. பண்பாடு... அடக்குமுறைக்கூடாக கொண்டு செல்லப்பட முடியாது.

 

மேற்கு நாடுகளில்.. பிள்ளைகள் ஆண்டு 5 அல்லது 6 இலேயே.. கல்வி மூலம் பீரியட் என்றால் என்ன என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்குரிய சுகாதார நடவடிக்கைகள் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆக.. சாமத்திய வீடு என்பது இங்கு அவசியமற்ற ஒன்று. அதற்குள் இன்னும் கலாசாரம் பண்பாட்டை செருகி வைத்திருப்பது ஆரோக்கியமான விடயமும் அல்ல.

 

பிள்ளைகள் சிந்திக்க தொடங்குகின்ற போது.. இப்படியான காணொளிகள் பெருகும். அதுவே கருத்துக்களாக மிஞ்சும். அவர்களின் தலைமுறையில்.. சாமத்திய வீடு ஒழியும். நாம் யதார்த்தத்தை உள்வாங்காது வரட்டுத்தனமாக கலாசாரத்தை செருகிக் கொண்டிருப்பின் அது காணாமல் போவதை தடுக்க முடியாது. இதில் நுட்பமான மாற்றங்களும்.. மன ஓட்டங்களைப் புரிந்து கொண்ட மாற்றங்களும் வந்தால் அன்றி... எமது கலாசாரம்.. இன்னும் இரண்டு தலைமுறைகளோடு மேற்கு நாட்டில் அல்லாடும்.. என்பது உறுதி.

 

இன்றைய புலம்பெயர் தலைமுறையின் எண்ண ஓட்டங்களை சரிவர உள்வாங்காது விட்டால் அவர்கள் உங்களை விட்டு தூர விலகிப் போகும் நிலை அதிக ஏற்படும். அது இப்போதுள்ளதை விட மோசமான விளைவுகளை கொண்டு வரலாம். அல்லது கலாசாரம்.. பண்பாடு பற்றி பேசவே முடியாத நிலையை தோற்றுவிக்கலாம். :):icon_idea:

 

அருமை நெடுக்ஸ்.... 100 பச்சைப்புள்ளிகள்..

Link to comment
Share on other sites

நானும் இந்த விடயத்தில் நூறு வீதம் நெடுக்கரின் கட்சிதான் .

 

இந்த பிள்ளை ஊரிலை இருந்தா இப்படி பேசுமா ? என்று கேட்கினம் .

 

இது என்ன கேள்வி .முன்னேற விடமாட்டார்கள் போலிருக்கு .

 

யாழில் பலர் இப்பவும் வடலிக்க தான் போகினம் போல . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

காணொலியைப் பார்க்கவில்லை.
 
சாமத்தியச் சடங்கு பெண்ணின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு. அது ஒரு சீராட்டப்படும் ஞாபகமாக இருப்பது அவர் அவர் சூழ்நிலையப் பொறுத்தது.
 
சகோதரியின் சாமத்திய சடங்கிற்கு உறவினர்களை ஒவ்வொருவராக வீட்டிற்குச் சென்று அழைத்தது, அவர்கள் ஒன்று கூடலில் சடங்கு செய்தது எல்லாம் இனிமையான ஞாபகங்கள்.
 
நாங்கள் தனித்தவர்கள் அல்ல, ஒரு சமூகத்தவர்கள் என்பதை சடங்குகள் மூலம் கொண்டாடுகின்றோம். பெண்ணும் தனக்கு நகை அணிவித்தவர்கள், தலை முழுக நீராட்டியவர்கள், சீலை தந்தவர்கள் என்று தன் சுற்றத்தை நினைத்து சந்தோசப்பட்டு மனப் பலமும் அடைகின்றாள்.
 
உண்மையில் இவை வேண்டாம் என்பவர்கள் சந்தோசமும் சுற்றமும் வேண்டாம் என்பவர்களே. பரிதாபம்!!  
 
 
http://www.youtube.com/watch?v=3lIQAwqov8E
Link to comment
Share on other sites

 

 
உண்மையில் இவை வேண்டாம் என்பவர்கள் சந்தோசமும் சுற்றமும் வேண்டாம் என்பவர்களே. பரிதாபம்!!  
 
 
 

 

 

சுற்றமும் சந்தோசமும் தேவை என்பதைக் காட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. எத்தனையோ ஒன்றுகூடுவதற்கான வசதிகளும் உள்ளன. "என் பெண் பிள்ளை பிள்ளைப் பெற தயாராவிட்டாள்  வாங்கோ வந்து பாருங்கோ" என்று ஊர் முழுக்க பெண்ணை கேவலப்படுத்தி விளம்பரப்படுத்தித் தான் இவற்றை நிரூபிக்கத் தேவையில்லை.

 

இஸ்லாம் நாடுகளில் முன்னர் ஒரு வழக்கம் இருந்தது. தம் பெண் பிள்ளைகள் பருவம் எய்தி விட்டால் வீட்டின் முன் சிறு கொடியை கட்டி விட்டு இவ் வீட்டில் மணமுடிக்கும் வயதுடைய பெண் இருக்கின்றாள் என்று ஏனையவர்களுக்கு உணர்த்துவதற்கு. இன்று சவூதியின் பின் தங்கிய பகுதிகளிலும் சில அடிப்படைவாத இஸ்லாமிய பகுதிகளிலும் தான் இப் பழக்கம் மிச்சம் இருக்கின்றது. ஆனால் எம் மத்தியில்...............?

இது தொடர்பாக என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. மருத்துவ ரீதியிலான காரணங்களால் மாதவிடாய் வரவே வராத பெண்கள் உள்ளனர். இவர்களை பருவம் எய்திய பெண்கள் என்று அழைக்க முடியாதா? இவர்களுக்கு பெண்ணுக்குரிய வாழ்க்கையே இல்லாமல் போய்விடுமா?

Link to comment
Share on other sites

பெண் பிள்ளைகளை பெறாதவர்களுக்கு சுற்றமும் சந்தோசமும் இல்லையோ ?

எழுத முதல் கொஞ்சம் யோசியுங்கள் .

Link to comment
Share on other sites

கிராமங்களில் 'பக்குவப்பட்டிட்டா' என்பார்கள். அதற்கு சடங்கு செய்தார்கள்.

 

இப்ப கொண்டாட்டங்களிலும் பக்குவம் இல்லை.. அதைப்பற்றி கூறுபவர்களிடமும் பக்குவம் இல்லை.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை நெடுக்ஸ்.... 100 பச்சைப்புள்ளிகள்..

 

கலியாணம் கட்டிக்கொண்டு வாழுறதையே கேவலமாய் நினைக்கிற நெடுக்கருக்கு நூறில்லை ஆயிரம் பச்சை குடுக்கலாம்... :lol:  :D

Link to comment
Share on other sites

இவா தன்னை மாதிரி ஆக்களோட பேசுறா. தானும் சாமத்திய வீடு செய்யல்ல என்று தான் சொல்லுறா.

 

உண்மை தான்.. சாமத்தியவீடு செய்யேக்க.. பெட்டையள என்னெண்டு வாழ்த்திறது. "ஹாவ் எ கப்பி பீரியட்" என்றா..??! அப்படி வாழ்த்திற நமக்கே வெட்கமா இருக்குது. அவ்வளவைக்கு எவ்வளவு அவமானமா இருக்கும். இதனை பெற்றோர் புரிஞ்சு கொள்ளனும்.

 

இதேபோல பிறந்த நாள் வாழ்த்தை.. உங்க கொச்சை எண்ணத்தில் "கவட்டுக்கால வந்த நாள் வாழ்த்து?' என்றும் கூறினா அவமானமாகத்தான் இருக்கும். ஆகவே மானமும் அவமானமும் ஒருவனின் அணுகுமுறையைப் பொறுத்தது...

 

இங்கே விழாவின் தலைப்பு பீரியட்டை கூறவரவில்லை... அவர் (வாழ்க்கைக்கு தேவையான) சாமர்த்தியம் அடைந்ததையே சுட்டிக் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.