Jump to content

10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

31-1396248450-21-1395384378-dream.jpg

 

10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்...

 

ஒரு இரவில் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரங்கள் வரையில் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு மனிதர்கள் உறக்கத்தில் கனவு காணுகிறார்கள். சில நேரங்களில், இந்த கனவுகளின் அர்த்தம் கனவு காண்பவருக்கு நேரடியாக புரியும். நெடுநாளைய நண்பர் மீண்டும் தெரிதல், ஒரு கடற்கரையின் ரம்மியமான காட்சி அல்லது லாட்டரியில் ஜாக்பாட் அடித்தல் என கனவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.

 
ஆனால், கனவுகள் எப்பொழுதும் கதைகள் சொல்வதில்லை. வேறு வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளை கொண்டவர்களுக்கு ஒரே மாதிரியான கனவுகள் வரும் வேளைகளில், கனவுலக ஆராய்ச்சிக்கு புதிய வடிவம் கிடைக்கிறது. இந்த கட்டுரையில், சில வகையான பொதுவான கனவுகளும், அவற்றின் அர்த்தங்களும் தரப்பட்டுள்ளன.

 

விழுதல்.

'உங்களுடைய ஆழ்மனம் காட்டும் சிவப்பு கொடி தான் இந்த கனவு' என்கிறார் லோய்வென்பெர்க் என்னும் பெண்மணி. தங்களுடைய பணி, உறவு அல்லது வேறு ஏதாவது இடங்களில் பெரிய பிரச்சனைகளை எதிர் கொள்பவர்களுக்கு இந்த வகையான கனவுகள் வரும் என்று இவர் நம்புகிறார்.

 

பணியிடம் அல்லது பள்ளியில் ஆடையில்லாம் தெரிதல்.

பலவீனம் மற்றும் பயம் ஆகியவற்றையே இந்த கனவு குறிப்பிடுகிறது என்பது வல்லுநர்களின் கருத்தாகும். இந்த வகை கனவுகள் 'பணி உயர்வை ஏற்றுக் கொண்டவர்கள், புதிய பணிக்கு சென்றவர்கள், அல்லது பொது மக்களின் பார்வைக்கு இலக்காக இருப்பவர்களுக்கு வரும்' என்கிறார்கள்.

 
தேர்வு எழுதுதல்.

பெரியவர்களிடம் இந்த கனவுகள் பள்ளி மற்றும் வேலைகளுக்கு இணையானவையாக வருகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், இந்த இரண்டு இடங்களிலும் கடுமையான நெருக்கடியான சூழல்களை நாம் எதிர் கொள்கிறோம். பணியிட நெருக்கடிகளுடன் இந்த கனவுகள் தொடர்பு பெற்றுள்ளதாக லோய்வென்பெர்க் கூறுகிறார்.

 
இறத்தல்.

இறப்பு என்பதை நாம் எதிர்மறையான விஷயமாக பார்த்தாலும், அது கனவு காண்பவரின் வாழ்வில் நிகழக் கூடிய பெரிய மாற்றத்தை குறிப்பிடுவதாகவே இருக்கும். அது ஏதோ ஒரு புதிய விஷயத்தின் வருகைக்காக, பழைய விஷயம் மறைவதை குறிப்பிடுவதாக இருக்கும்.

 
வாதம்.

கனவு காணும் போது நமது உடல் ஒரு வகையான வாதத்திற்கு உள்ளாகிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஆதன் மூலம் கனவில் செய்யும் விஷயங்களை நாம் உடல் ரீதியாக செய்யாமல் தவிர்க்கப்படுகிறோம். எனவே வாதம் பற்றி அடிக்கடி கனவு காண்பது என்பது, விழிக்கும் நிலை மேல் இருக்கும் நிலையாக இருக்கிறது. இவ்வாறு வாதம் பற்றி கனவு காண்பவர், தான் விழித்திருக்கும் வேளைகளில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாக நினைக்கிறார்.

 
பந்தயத்தில் தோற்கடிக்கப்படுதல்.

இது மிகவும் அதிகமாக குறிப்பிடப்படும் கனவுகளில் ஒன்றாகும். கனவின் போது நாம் கொண்டிருக்கும் பயத்தின் காரணமாக இந்த கனவு மிகவும் உயிரோட்டம் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும், இந்த கனவுகளின் காரணம் நாம் தோற்கடிக்கப்படுவதல்ல, நாம் எதைப் பார்த்து ஓடுகிறோம் என்பதைப் பொறுத்ததே. இது போன்று கனவுகளில் பந்தயங்கள் வந்தால், நாம் இது வரை சரியாக கவனிக்காத ஒரு விஷயம், நம்முடைய கவனத்தைப் பெற எத்தனிக்கிறது என்று அர்த்தமாகும்.

 
துணைவர் ஏமாற்றுதல்.

பெரும்பாலானவர்கள் இந்த வகை கனவுகளை நுண்ணறிவுடன் சேர்த்து யோசிக்க வேண்டாம் என்கிறார்கள். உங்களுடைய துணைவர், உங்களுக்கு சம்மந்தமில்லாத ஒரு விஷயத்தில் அதிக கவனத்தை செலுத்தும் வேளைகளில், அவர் ஏமாற்றுவது போன்ற கனவுகள் வரும்.

 
ஏதோ ஒரு விஷயத்திற்கு தாமாதமாக வருதல்.

வால்லஸ் என்பவரின் கருத்துப்படி, யாரோ ஒருவர் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறார் மற்றும் அதிகமாக செய்து கொண்டிருக்கிறார் என்று பொருளாகும். இது தொடர்பாக, 'உங்களால் காப்பாற் முடியாத சத்தியத்தை செய்யாதீர்கள்' என்று காலதாமாத்திற்கான கனவைப் பற்றி கிராண்ட் குறிப்பிடுகிறார்.

 
பறத்தல்.

இந்த கனவின் மூலம் தற்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை கவனிக்கவும் மற்றும் இயற்கையாகவே அனைத்து விஷயங்களும் நடக்கச் செய்யவும் உதவும். அதே நேரம், 'வாழ்க்கையில் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டை மீறி செல்வதையும்' பறத்தல் குறிக்கும் என்று கிராண்ட் கூறுகிறார்.

 
குழந்தை.

கனவில் ஒரு குழந்தை வந்தால், புதியதொரு விஷயத்தை அது பிரதிபலிக்கிறது என்று பொருளாகும். அது ஒரு புதிய ஐடியாவாகவோ, புதிய பணிக்கான திட்டமாகவோ, புதியதொரு வளர்ச்சியாகவோ அல்லது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியயில் நடக்கும் குறிப்பிடத்தக்க மாற்றமாகவோ இருக்கும்.

நன்றி தற்ஸ்தமிழ்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்.......................... பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................        
    • நேரம் எடுத்து கடந்த கால அரசியல் செயல்களை தெரியபடுத்தியதற்கு நன்றி. தமிழர்கள் பிரதேசங்களை அபிவிருத்தியடையாமல் வைத்திருந்தால் தான் தமிழர்கள் தங்களின் கீழ் இருப்பார்கள் என்று தமிழ் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் போலும் யாழ்பாண பல்கலைக்கழகம் திறக்கவும் எதிர்ப்பு என்பது விரக்தியை தான் ஏற்படுத்துகின்றது.
    • கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?   2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?   Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST   NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket. "I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league. https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#
    • முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா இப்ப‌ நில‌மை வேறு மாதிரி ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮......................... 2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................  
    • இன்னும் ரெண்டு ஓவர் குடுத்திருந்தால் 50 அடித்திருப்பார்கள் ..... அவ்வளவு வெறியோடு களத்தில் நின்றவர்கள்.......!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.