Jump to content

வியப்பை ஏற்படுத்தியுள்ள மூவர் குழு


Recommended Posts

அரசாங்கம் நியமித்திருந்த காணாமற் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க சர்வதேச மட்டத்தினை மனித உரிமைகள் மற்றும் யுத்தகுற்றங்கள் பற்றிய சட்ட நிபுணர்கள் மூவரை வரவழைக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பது சற்றும் எதிர்பாராத ஒன்றாகும். இத்தீர்மானம் அமைச்சரவையில் உள்ள சிரேஷ்ட அங்கத்தினர்கள் சிலருக்குமே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே மனித உரிமைகள் மீறல்களும் யுத்தக் குற்றங்களும் இடம்பெற்றமை குறித்த குற்றச்சாட்டை பெருமளவுக்கு உறுதியான முறையில் அரசாங்கம் மறுத்து வந்திருக்கின்றது. அரசாங்கத்தால் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளிலுமே அவ்வாறான குற்றங்கள் எதும் இடம்பெறவில்லை, என்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடே தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் இராணுவம் விசாரணை செய்து அதில் இராணுவத்தினர் குற்றங் காணப்பட்டதிலிருந்து விடுதலை செய்யப்பட்ட விசாரணைகள் சர்வதேச ரீதியாக நம்பகத்தன்மை கொண்டதாயிருக்கவில்லை. இவ்வருடம் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை செய்த தீர்மானத்தின் படி சுதந்திரமான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவை அது நியமித்திருப்பதால் இலங்கை அரசாங்கம் அதன் கடந்த கால நிலைப்பாட்டை தவிர்க்க முடியாத வகையில் தூக்கியெறிந்து விடவேண்டியதாயிற்று.

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை இவ்வருடம் மார்ச் மாதம் செய்த தீர்மானத்தில் இரண்டு  முக்கிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதனை கவனிப்பது பயனுள்ளதாகும். சர்வதேச மக்களையும் தலைவர்களையும் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் கடந்தகால நிலைமைகள் பற்றி விசாரணை செய்வது அதில் முதலாவதாகும். அவ்வாறான விசாரணையை இலங்கை அரசாங்கம் தானாக செய்யாது போனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் உயர் ஆணையாளரை அதுதொடர்பில் சுதந்திரமான விசாரணை ஒன்றை செய்யும்படி கோருவது இரண்டாவது சரத்தாகும். மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் இலங்கையின் யுத்தம் தொடர்பாக விசாரணை செய்ய மூன்று நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்ததன் பின்னரேயே இலங்கை அரசாங்கமானது நிபுணர்களை நியமித்து அந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணைகளையும் விஸ்தரித்துள்ளதோடு, அவர்களை மேற்பார்வை செய்ய சர்வதே தரத்திலான தகமையும் நம்பகத்தன்மையும் கொண்டவர்களையும் இப்போது நியமித்துள்ளது. இப்போது அரசாங்கம் சுதந்திரமாக ஆலோசனைவழங்குவதற்கு மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளதால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் தீர்மானத்தின் முதலாவது சரத்தை அது நிறைவேற்றியுள்ளதாக தென்படுகிறது. இதன் வாயிலாக ஐ.நா. தீர்மானத்தின் இரண்டாவது பகுதியினை (சரத்தினை) நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையில்லாததாக்கிவிட்டதாக நம்பலாம்.

 

அரசாங்கம் நியமித்துள்ள ஆலோசனைக்குழு அதியுயர் அளவிலான திறமையையும் நம்பகத்தன்மையையும் கொண்டதாகும். அக்குழுவின் தவிசாளராக பணிபுரியப்போகும் அக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான சேர்.டெஸ்மன்ட் டி சில்வா ஒரு மகாராணியின் அங்கீகாரம் கொண்ட முன்னணி பிரித்தானிய வழக்குரைஞராவார். இவர் சியாரா வியோனில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம வழக்குத் தொடரும் வழக்கறிஞராக யுத்தகுற்றங்கள் தொடர்பான விசாரணையில் பணிபுரிந்ததுடன் அவர் ஒரு இலங்கை வம்சாவளியினருமாவார். இரண்டாவது அங்கத்தவரான சேர். ஜியோ பிரி றைஸ் என்பவரும் ஒரு பிரித்தானிய வழக்குரைஞராவார். இவர் ஹேக் நகரில் செயற்பட்ட முன்னாள் யூகோஸ்லாவிய நாட்டின் சுலோ போடன் மைலோஸ்விக் விசாரணைக்கு தலைமை தாங்கிய பெருமைக்குரியவர். மூன்றாவது அங்கத்தவர் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் கிரேன் என்பவராவார். இவர் சியாரா லியோன் நாடு தொடர்பிலான சிறப்பு நீதிமன்றத்தின் பிரதம வழக்கு தொடருனராகப் பணியாற்றி லைபீரியா ஜானாதிபதி சாள்ஸ் டெய்லரை குற்றவாளியாக இனங்காட்டியவர். காணமற்போனோர் பற்றிய ஆணைக்குழுவினது கடமைகளையும் ஆணைகளையும் மீள திருத்தியமைத்தபோது, ஆலோசனை குழுவுக்கான அங்கத்தவர்களை அரசாங்கம் விரும்பினால் மேலும் அதிகரிப்பதற்கான உரிமை இருப்பதாக கூறியிருப்பதால், ஒருவேளை தகுதியற்ற எவரையும் அதில் நியமித்தால் என்னவாகும் என்ற ஒரு கருத்து முரண்பாடும் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த கருத்து அரசின் மீதான நம்பகத்தன்மையிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

 

ஐயுறவான மதிப்பீடுகள்  விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பில் அது விடுக்கும் கோரிக்கைகளின் பேரில் ஆலோசனை வழங்க மூன்று பேரடங்கிய சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அரசாங்கம் காணாமல் போனோர் பற்றி விசாரிக்க நியமித்த ஆணைக்குழுவின் ஆணைகளை விஸ்தரித்தும் உள்ளன. அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட புதிய ஆணைகளில், யுத்தத்தின்போது உயிரிழந்த பொதுமகனது மரணத்திற்குப் பொறுப்பான காரணங்கள், சூழ்நிலைகள் என்பனபற்றி விசாரித்து அறியப்படல் வேண்டும். என்பதும், சர்வதேச மனிதாபிமான பாதுகாப்புச் சட்டம் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், மீறப்பட்டதன் காரணமாக மரணம் ஏற்பட நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனிப்பட்டவர்களோ அல்லது ஒரு குழுவோ அல்லது ஒரு நிறுவனமோ பொறுப்பாயிருந்திருக்குமானால் அவைபற்றியும் விசாரிக்க வேண்டும் என்பதும் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணையாகும். இவற்றோடு இராணுவத்தினால் தவிர்க்க முடியாததாகவும் (இன்றியமையாததாகவும்) மற்றும் ஆயுத முரண்பாடு பற்றிய சட்டங்களுக்கு ஏற்ப விகிதாசாரமாகவும் அமையவேண்டியவை பற்றி சரியாக இனங்காணப்படல் வேண்டும் என்ற தத்துவங்களுக்கு உட்படவோ அல்லது புறக்கணிக்கவோ இலங்கை ஆயுதப் படையினர் காரணமாயிருந்தனரா? என்பது பற்றியும் விசாரித்தறிந்து கொள்வதுடன், இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில், அரசு துறை சாராத ஒரு பாத்திரமாயிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளையும் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்குட்பட்டவர்களாக உள்ளடக்க வேண்டுமா என்பது பற்றியும் விசாரித்தறிந்து கொள்ள ஆணை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

 

புதிதாக விஸ்தரிக்கப்பட்ட இவ்வாறான ஆணைகள் வழங்கியிருக்கும் போது, முன்னர் காணாமற் போனோர் பற்றி விசாரிப்பதற்கான சில வரையறைகளுக்குள் செயற்பட நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் இவ்விசாரணைகள் முழுமையாக நிறைவேற்றிவிட முடியுமா என்பது இப்போது அவ்வாணைக்குழு எதிர்நோக்கும் பெரும் வினாவாகும், இதுரை ஆணைக்குழு அமைதியான தீர்மானங்களுடன் தமது விசாரணைகளை செய்து வந்திருக்கிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இதுவரை பல விசாரணைகளைச் செய்து 19,000 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. இப்போது ஆலோசனை வழங்க அரசாங்கம் நியமித்துள்ள "ஆலோசனைக்குழு' பற்றி ஐயங்களைக் கொண்டுள்ள தரப்பினரும் இருக்கின்றனர். அவர்கள் கடந்த காலத்தில் அரசாங்கம் நியமித்த இன்னொரு ஆணைக்குழுவுக்கு நேர்ந்த கதி பாரிய அனுபவத்தை நிச்சயமாக இப்போது நினைவுபடுத்திக் கொள்வார்.  அதாவது அரசாங்கம் "கடுமையான மனித உரிமைகள் மீறல்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு'  ஆலோசனைவழங்க சர்வதேச சுதந்திரமானதும், உயர்மான்பு மிக்கதான  நபர்களைக் கொண்ட குழு ஒன்றினை 2007ஆம் ஆண்டு நியமித்தது. பதினொரு அங்கத்தவர்களைக் கொண்ட அந்தக் குழுவை இவ் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைக்களை அவதானிக்க ஜனாதிபதி அழைத்திருந்தார். விசாரணைகளின் போது ஒளிவுமறைவின்மை மற்றும் சர்வதேச பெறுமானங்களும் தரங்களும் பேணப்பட்டனவா என்பதனை அவதானிப்பதே அக்குழுவின் பணியாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.

 

ஆனால் அந்த ஆலோசனைக்குழுவோ ஆணைக்குழு தனது விசாரணைகளைச் செய்வதில் போதிய முன்னேற்றங்களைக் கொண்டதாக இல்லை என்பதால் ஒரு முடிவுக்குக்  கொண்டு வரப்பட்டுவிட்டது. அக்குழுவின் அபிப்பிராயங்கள் அப்படியொன்றும் எமக்கு சாதகமாயிருக்க வில்லை. பல முரண்பாடான கருத்துக்கள் வெளியாகியிருந்தன. அப்போது ஏற்பட்ட தகர்வு அல்லது வீழ்ச்சியைப் பற்றி இப்போது அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்கும் என நம்பலாம். ஏனெனின் இப்போது இந்த விசாரணைக்கு சமாந்திரமாக ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரமான ஒரு விசாரணை யுத்தகால குற்றங்கள் தொடர்பில் எங்கோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதாலாகும். அரசாங்கம் எச்சரிக்கையுடன் கவனமாக கவனிக்கவேண்டிய இன்னொரு காரியமும் உண்டு. நாட்டில் நிலவும் வேறுபட்ட பிரச்சினைகளை தனித்தனியாக கையாள்வதன் மூலம் கடந்த காலத்தில் நடந்தவை பற்றியும் தற்போது நிலவும் ஆட்சி நிலவரங்கள் பற்றியும் சர்வதேச நியமங்களுக்கு உட்பட்ட வகையில் கண்டறிய முடியுமா என்பதும் கேள்விக்குரியதாகவே உள்ளது. யுத்தம் முடிந்ததன் பின்னர் குற்றம் செய்தவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாக்கும் கலாசாரம்  தொடர்வதாக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் எனப்படும் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த வன்முறைகளின் போது பாதுகாக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் நிரூபித்து வருகிறது. அத்துடன் சிவில் சமூகக்குழுக்களது சுதந்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் கட்டுப்படுத்துவதன் மூலமும் அது சர்வதேச நியமங்களை மீறி வருகின்றது. இவையாவற்றையும் விட அதிகார பரவலாக்கம் தொடர்பில் ஏற்கனவே உறுதியளித்தவை (13+) போன்றவற்றிலும் அரசாங்கம் தவறியுள்ளது. சர்வதேச நாடுகளிடமும் சமூகங்களிடமும் நாட்டில் நல்லிணக்கச் செய்முறை வழியில் தான் சென்று கொண்டிருப்பதாக கூறிவரும் அரசாங்கம் நாட்டில் முரண்பாடுகளிலும், பகைமையைவளர்த்துக் கொள்வதிலும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான களநிலவரத்தை கண்காணித்து வரும் இலங்கை மீது கரிசனம் கொண்ட தரப்பினர்கள், இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செய்முறையில் காட்டும் நேர்மையான நடத்தை குறித்து அதன் தரக் குறைவானதாகவே மதிப்பிடுவார்கள். தென்னாபிரிக்கா தென்னாபிரிக்காவின் சிறப்புத்தூதுவர் சிறில் ரமபோச இலங்கைக்கு வந்ததைத் தொடர்ந்து இலங்கையில் நல்லிணக்கத்திற்கான செய்முறையில் ஏதேனும் புதிய வழி ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இருந்தபோதிலும் தேசிய நல்லிணக்கச் செய்முறை தொடர்பில் ஆவன செய்வதில் அரசாங்கத்தினர் இதுவரை பின்பற்றிய அணுகு முறையிலிருந்து எதுவித மாற்றமும் தென்படுவதாக இல்லை.

 

தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் வடமாகாண முதலமைச்சருடன் ஒத்துழைக்கக் கூடியதானவரும், அவருடன் முரண்பாடு காட்டாதவருமான ஒருவரை ஆளுநராக நியமிக்கும் படி அரசாங்கத்திடம் கேட்டுவரும் நிலையிலும், அரசாங்கமானது ரமாபோõச இலங்கையை விட்டு வெளியேறிய உடனேயே முன்னிருந்த ஆளுநரையே மீண்டும் அப் பதவிக்கு நியமித்துள்ளது. சர்வதேச மட்டத்தில் இலங்கையின் விவகாரங்களில் கரிசனம் கொண்ட பலரும், அவர்களிடம் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியினை மீறியவகையில் வடமாகாண ஆளுநரையே மீண்டும் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவே பார்க்கின்றனர். வடமாகாண சபைக்கான தேர்தலை நடாத்தப்போவதாக கூறிய சந்தர்ப்பத்தில் தான் ஜனாதிபதி புதிய ஆளுநரை நியமிக்கப்போவதாக கூறிய வாக்குறுதிகளையும் மீறியிருக்கிறார். வாக்குறுதியின் ஒரு பகுதியான தேர்தல் நடத்துவதை நிறைவேற்றினாலும் மறுபகுதியை உதாசீனம் செய்திருக்கின்றனர். ரமபோச இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் நல்லிணக்கச் செயல்முறைகளை பின்பற்ற போவதான நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகத் தெரியத்தக்கதான வகையில் எதுவித நடவடிக்கைகளுமோ அல்லது அரசாங்க தரப்பில் நல்லெண்ணமோ வெளிப்படுத்தப்படவில்லை. இலங்கையின் பிரச்சினைகளில்  சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு பற்றியும் தென்னாபிரிக்காவின் பங்கு உறுதிசெய்யும் என்றும் தனியே இலங்கை அரசாங்கத்தை மட்டும் இலக்காக கொண்டிருக்காது என்றுமே எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறாக உருவாக்கப்பட்ட தென்னாபிரிக்காவினை பங்காளியாகக்கொண்ட உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான வழிமுறையினூடாகவே தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதும் சர்வதேச விசாரணைகளை அனுசரிப்பதுமான உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான செய்முறையினை தொடர்ந்து எடுத்துச் செல்ல ஆதரவினை வழங்குவதாயிருக்கும் அரசாங்கத்திற்கும் ரமபோசவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது விவாதித்தவற்றில், அரசாங்கம் அவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செய்முறையில் இணையத் தூண்டும்படி கேட்டுக் கொண்டது. மாத்திரமே வெளிவந்துள்ளது. "ரமாபோசவிடம். அவர் இலங்கைக்கு வந்திருந்தபோது இலங்கையின் தேசியப் பிரச்சினை சார்ந்த முக்கிய விவாதத்திற்கு தீர்வுகாண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அவர்கள் பங்கு கொள்வதன் முக்கியத்துவம் பற்றி விளக்கி அதனை ஏற்றுக் கொள்ளச் செய்யும்படி அரசாங்கம் கேட்டுக் கொண்டது' என்ற செய்தியானது வெளிவிவகார அமைச்சின் வலைப்பின்னல் அமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் தேசியப் பிரச்சினைபற்றிய வினாவிற்கு ஒரு அரசியல் தீர்வினைக் கொண்டு வரச் செய்வதற்காக "பாராளுமன்றத் தெரிவுக்குழு என்னும் பொறிமுறையே' அரசாங்கத்தின் தெரிவாக இருந்துவருகிறது.  பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் செய்யும் விவாதத்தின் மூலம் அடையும் அரசியல் தீர்வே ஏற்றுக்கொள்ளக் கூடியது என்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் பிடிவாதமாகவே இருந்து வருகிறது.

 

இருந்த போதிலும் மறுபுறத்திலோ எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுகுழுவில் இணையாது பகிஷ்கரித்து வருவதுடன், பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் தீர்வுகண்டறியப்படும் என்ற கருத்திலும் உடன்பாடில்லாது இருக்கின்றன. அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நடைபெற்ற அனைத்து கட்சிகளதும் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாநாடு 128 முறை கூடி விவாதித்த முடிவுகளுக்கு நடந்த கதி துர்பாக்கியமானது என்று மிகவும் விழிப்பாக இருக்கின்றனர். அம்மகாநாட்டின் இறுதி அறிக்கை வெளிப்படுத்தப்படவும் இல்லை. அல்லது அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவும் இல்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கடமைகள், ஆணைகள் என்பவற்றில் போதிய திருத்தங்களைச் செய்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரையும் எதிர்க் கட்சியினரையும் அதில் பங்கேற்கச் செய்வதற்கு தென்னாபிரிக்கா ஏதேனும் ஏற்பாடுகளைச் செய்யுமேயானால், அந்நிலையில் இதில் மாற்றம் ஏற்பட வழிஏற்படலாம். அரசாங்கம் நியமித்த விசாரணை ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நிபுணர்கள்குழு இப்போது நியமிக்கப்பட்டிருப்பது போன்று பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆலோசனை வழங்கவும் இன்னுமோர் நிபுணர்கள் குழு நியமிக்கப்படுதலும் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் அது 2007 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழுவுக்கு நேர்ந்த கதியை ஒத்ததாக இருந்து விடக்கூடாது. -

 

http://thinakkural.lk/article.php?article/wqx1kwerzx75650e274e1d1a15521bshwf8948f16f0227e4ec1965a8fchoh#sthash.iF3Fu1dU.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.