Jump to content

மோடியின் இந்தியா என்ன சொல்ல முற்படுகிறது? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் இந்தியா என்ன சொல்ல முற்படுகிறது? - யதீந்திரா

BtEvZwsCMAAybZ5.jpg-large-800x365.jpg

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம்.

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய சுவாமியே இக்குழுவினருக்கு தலைமை ஏற்றிருந்தார். சுவாமி, பாரதிய ஜனதாவின் உயர் மட்டத்தினருக்கு நெருக்கமானவர் என்பது இரகசியமல்ல. ஆனால், அவர் பாரதிய ஜனதா கட்சியின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவராக இருக்கின்றார் என்பது புதிய தகவலாகும். இது கூட்டமைப்பினருக்கு பேரதிர்ச்சியாக இருக்கலாம். சுப்பிரமணிய சுவாமி புலிகள் விடயத்தில் மிகவும் கடும்போக்கு கொண்டவராவார். அத்துடன், தமிழ் நாட்டு திராவிட கட்சிகளை தன்னுடைய பரம வைரியாகவும் கருதுபவர். எனவே, இவ்வாறான ஒருவர் பாரதிய ஜனதா கட்சியின் மூலோபாய திட்டமிடலாளராக இருப்பது கூட்டமைப்பு புதுடில்லியை அணுகுவதில் பெரிய தடையாகவே அமையும். ஏனெனில், கூட்டமைப்பு தமிழ் நாட்டின் ஆதரவாளர்களை கருத்தில் கொண்டே, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களுடன் தொடர்புகளை பேணியிருக்கவில்லை.

இதேவேளை, இக்குழுவில் அங்கம் வகித்தவர்களின் ஒருவரான பாரதிய ஜனதா கட்சியின் வெளிவிவகார கொள்கையின் தேசிய அமைப்பாளரும், பா.ஜ.கவின் தேசிய நிறைவேற்று உறுப்பினருமான கலாநிதி சேசாத்திரி சாரி குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களும் இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கவை. “கொழும்புக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையிலான பிரச்சினை உள்நாட்டு விவகாரமாகும். எனவே, இந்தப் பிரச்சினைகளை அனைத்துலக மயமாக்குவதற்கு பதிலாக கொழும்பிற்கும் புதுடெல்லிக்கும் இடையில், இதனை சிறந்த முறையில் தீர்க்க முடியும். தீர்மானங்கள் மற்றும் தடைகள் விதிக்கும் யோசனைகளால் பயனில்லை. அவை எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியதை இரண்டாவது அணுகுண்டு பரிசோதனைக்குப் பின்னர் இந்தியா, ஈரான் மற்றும் மியன்மாரில் பார்த்திருக்கிறோம்.” இவ்வாறு குறிப்பிட்டிருக்கும் சாரி, கொழும்பு தமிழர்களின் கவலைகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இங்கு ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, இலங்கையின் உள் விவகாரம் முற்றிலுமாக இந்தியாவின் கைகளிலிருந்து விலகிச் செல்வதை மோடியின் திட்டமிடலாளர்கள் விரும்பவில்லை. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படின் அதன் விளைவுகளை இந்தியாவும் சந்திக்க நேரிடும் என்றே அவர்கள் கருதுகின்றனர். கொழும்பின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்குலக அழுத்தங்களின்போது, இந்தியா முற்றிலுமாக கொழும்பை கைவிடுவதானது, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாமென்று அவர்கள் கருதுவதாகவே தெரிகிறது. மேலும் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த குழுவினர் எத்தகையதொரு உள்நோக்கத்துடன் வருகை தந்திருந்தனர் என்பது வெளியாகாவிட்டாலும் கூட, ஜ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலேயே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். இதன் மூலம் இவ்வாறான விசாரணைகளுக்கு ஆதரவாக இந்தியா இருக்காது என்பதே அவர்கள் சொல்ல முற்படும். இதன் மூலம் ஜ.நா. விசாரணையின் வாயிலாக சில மாற்றங்கள் வரக்கூடுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர் தரப்பிற்கும் இந்தியா ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறது. இப்போது கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது? கூட்டமைப்பின் முன்னால் இரண்டு தெரிவுகள்தான் இருக்கின்றன. ஒன்று, இந்தியாவின் ஆலோசனைகளை புறம்தள்ளிவிட்டு மேற்குலகை சார்ந்து செயற்படுவது. மேற்குலகின் இறுதி இலக்கு ஒரு ஆட்சி மாற்றமாக இருக்கலாம். இல்லாவிட்டால், புதுடில்லியின் எல்லையை விளங்கிக் கொண்டு, அதற்குள்ளால் பயணிப்பது. கூட்டமைப்பால் அவ்வளவு எளிதாக இந்தியாவை விட்டுவிட்டு விலக முடியாதென்பதும் இரகசியமான ஒன்றல்ல. சுப்பிரமணிய சுவாமியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒருபுறமாக வைத்துவிட்டு, கொழும்பு வந்திருந்த பா.ஜ.கவின் மூலோபாய திட்டமிடலாளர்கள் குழுவினர் தெரிவித்திருக்கும் கருத்துக்களிலிருந்து இந்தியா தமிழர் விவகாரத்தை கொழும்பு – புதுடில்லி என்னும் நிலையில் தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவே தெரிகிறது. இதன் மூலம் ஒரு விடயம் தெளிவாகிறது. இந்தியாவின் மத்தியில் எவர் ஆட்சியில் இருப்பினும், அவர்கள் இலங்கை தமிழர் தொடர்பில் காட்டும் அக்கறையின் எல்லையானது, இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவான மாகாண சபை முறைமைதான்.

அதற்கு மேலாக இந்திய மத்திய அரசு செல்லாது. இதன் காரணமாகவே, இலங்கை ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பின்போதே மோடி 13ஆவது திருத்தச் சட்ட விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, எங்கெல்லாம் சுற்றி வந்தாலும் இறுதியில் அனைவரும் தரித்து நிற்கப் போகும் இடம், முன்னர் தமிழர் தரப்புக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அந்த மாகாணசபை முறைமைதான். ஆனால், மாகாண சபை முறைமையை சிறந்த முறையில் நடாத்திச் செல்வதற்கு கூட்டமைப்பிற்கும் – ஆளும் அரசிற்கும் இடையில் ஒரு நல்ல புரிந்துணர்வு இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும். ஒருவேளை, மோடி இந்தியா அவ்வாறானதொரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் கூடும். அதற்கு முன் நிபந்தனையாக கூட்டமைப்பு மேற்குலக அழுத்தங்களுக்கு ஆதரவளிப்பதை தவிர்க்க வேண்டிவரும். ஆனால், அது கூட்டமைப்பால் முடியுமா? கூட்டமைப்பு, மக்கள் மத்தியில் மேற்குலக அழுத்தங்கள் குறிப்பாக, அமெரிக்கப் பிரேரணைகள் மற்றும் மனித உரிமை விவகாரம் தொடர்பில் அதீத நம்பிக்கையை ஏற்கனவே ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில், அதனை முற்றிலுமாக கைவிட்டுவிட்டு புதியதொரு அரசியல் அரங்கில் அவ்வளவு எளிதாக பிரவேசிக்க முடியாது. அவ்வாறு பிரவேசிக்க வேண்டுமாயின், இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை மட்டும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கும் நிலைக்கு கூட்டமைப்பு தன்னையொரு அரசியல் பண்பு மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும்.

நிலைமைகள் முற்றிலும் சிக்கலாக இருக்கின்றன. தற்போது இருக்கின்ற நிலைமையை கருத்தில்கொண்டே இப்பத்தி சில விடயங்களை இங்கு பதிவு செய்கிறது. மோடி தலைமையிலான இந்தியா, அயல் நாடுகளுடன் இணக்கத்துடன் பயணிக்க முயல்வதாகவே தெரிகிறது. இந்த பின்புலத்தில் கொழும்புடன் நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா எதிர்பார்க்கிறது. அதேவேளை, இலங்கை தற்போது சர்வதேச ரீதியாக எதிர்கொண்டிருக்கின்ற நெருக்கடிகளால் புதுடில்லியிருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது என்னும் கரிசனையும் இந்தியாவிடம் உண்டு போல் தெரிகிறது. எனவே, இவ்வாறான விடயங்கள் அனைத்தும் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது, இலங்கை தமிழர் விவகாரத்தில் புதிதாக எதனையும் செய்யக் கூடிய சூழல் இந்தியாவிற்கு இல்லை. இருப்பது முன்னர் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒரு உடன்பாட்டின் கீழ் செயலாற்றுமாறு வலியுறுத்துவது ஒன்றே. எனவே, மோடி இந்தியாவின் திட்டமிடலாளர்களின் கருத்துக்கள் மூலம் தமிழர் தரப்பிற்கு சொல்லப்படுகிறது, நீங்கள் இந்தியாவிடமிருந்து 13ஆவதற்கு மேல் எதிர்பார்க்காதீர்கள் என்பதே!

எனவே, கூட்டமைப்பிற்கு முன்னால் இருக்கின்ற பணி, 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள உரிமையை தமிழ் மக்கள் முழுமையாக அனுபவிப்பதற்கு தடையாக இருக்கின்ற விடயங்களை இந்தியாவின் கவனத்திற்கு கொண்டு செல்வதுதான். ஏலவே உள்ள உடன்பாட்டிற்கு அமைவாக கொழும்பு நடந்துகொள்வதற்கு மோடி இந்தியா உதவவேண்டும் என்பதை கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும். கூட்டமைப்பு மாகாண சபை விவகாரத்தில் அசமந்தப் போக்கோடு இருக்குமாயின், அரசிற்கு அது வாய்ப்பாகவே அமையும். 13ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தை புறம்தள்ளி கூட்டமைப்பு செயற்படுமாயின், இந்தியா அதில் ஈடுபாடு காட்ட வாய்பிருக்காது. அரசு, மோடி இந்தியாவோடு நெருங்கிச் செயற்படவே முயல்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக, தமிழர் விவகாரத்தில் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு இந்தியா வலியுறுத்த முடியும். இந்தியாவின் எல்லைக்குள் பயணிக்க கூட்டமைப்பு விரும்பவில்லையாயின், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட புதிதாக வருபவர்களும் உடனடியாக தமிழர்களுடன், ஒரு சமஷ்டி அரசுக்கு இணங்குவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

http://maatram.org/?p=1603

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.