Jump to content

சிறிலங்கா: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையும் - திராவிடக் கட்சிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

modi-sushma.jpg

பதவியேற்பு விழாவுக்கு மகிந்த ராஜபக்சவை அழைக்கக் கூடாது என தமிழ்நாட்டுக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் செய்தபோது அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுத்தார். 

இவ்வாறு Shastri Ramachandaran எழுதியுள்ள தனது பத்தியில் தெரிவித்துள்ளார். DNA இணையத்தில் வெளியான அந்த பத்தியை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீளவும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி இறங்கத் தீர்மானித்துள்ளது போல் தெரிகிறது. பா.ஜ.க வின் இத்தகைய செயல்கள் இந்தியாவின் திராவிடக் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க போன்றவற்றையும் பா.ஜ.க வின் தேசிய ஜநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் திராவிடக் கழகங்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன. 

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் தற்போது நல்லுறவு ஏற்படுகின்ற போதிலும், சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கோட்பாடு எவ்வாறான வரையறையைக் கொண்டுள்ளது என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் காணப்படவில்லை. சிறிலங்கா மீதான நரேந்திர மோடி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பமானது இந்திய காங்கிரஸ் கட்சியை எரிச்சலடைய வைத்துள்ளது. அதாவது ஈழத்தமிழர்களுக்கான உரிமைகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏற்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் போன்றன தொடர்பில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தின் நகர்வுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் முதலில் முன்வைக்கப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது ஆதரித்து வாக்களித்த போதிலும், இவ்வாண்டு பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது புறக்கணித்திருந்தது. தமிழ்நாட்டில் தனது கட்சிக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளின் வீதங்களை ஆராய்ந்த பின்னரே மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியாவின் முன்னைய அரசாங்கம் சிறிலங்கா தொடர்பான வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்திருந்தது. ஆனால் இதே மன்மோகன் சிங், மனித உரிமைகள் பேரவையில் வாக்களிப்பு இடம்பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த நவம்பரில் சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாது அதனைப் புறக்கணித்திருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இத்தகைய நடவடிக்கைக்கு இந்தியாவின் திராவிடக் கட்சிகளின் அழுத்தமே காரணமாகும். 

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள், அரசியல் அவாக்கள் மற்றும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவே இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எப்போதும் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுத்தது. இந்தியாவானது சிறிலங்கா மீது தெளிவான கோட்பாட்டை வரையறுக்காமை, சிறிலங்கா அரசாங்கம் மீதும் தமிழ் மக்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்பை இழந்தமை, திராவிடக் கட்சிகளுடன் நட்புறவைப் பேணாமை, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை இழந்தமை, சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கோட்பாடு தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் நம்பகத்தன்மையை இழந்தமை போன்றன மன்மோகன் சிங் அரசாங்கத்தின் தோல்விகளாகக் காணப்பட்டன. 

இந்தியாவின் முன்னாள் அரசாங்கத்தின் சிறிலங்கா மீதான வெளியுறவுக் கோட்பாட்டை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்துள்ளார். குறிப்பாக, தனது பதவியேற்பு விழாவுக்கு தென்னாசியத் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் அழைத்ததன் மூலம் மோடி இந்தியாவின் கடந்த கால அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இப்பதவியேற்பு விழாவுக்கு மகிந்த ராஜபக்சவை அழைக்கக் கூடாது என தமிழ்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் செய்தபோது அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் சிறிலங்கா - இந்தியா உறவின் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க பிரதமர் மோடி விரும்பினார். சிறிலங்கா வெளியுறவு அமைச்சர், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவாராஜ்ஜை சந்தித்துப் பேச்சுக்கள் நடாத்தியதன் மூலம் மேலும் இவ்விரு நாடுகளுக்குமான உறவானது வலுவடைந்தது. 

சிறிலங்கா அரசாங்கமானது கடந்த காலத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை விடுத்து, தற்போது புதியதொரு உறவைக் கட்டியெழுப்புவதில் ஆர்வமாக உள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அமைச்சரவை அமைச்சர்களும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க வின் மூலோபாய நடவடிக்கைக்கான ஆணைக்குழுவின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை சிறிலங்கா அதிபர் கடந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடியதானது சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவின் புதிய அரசாங்கத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதற்கு சான்று பகர்கின்றது. பா.ஜ.கவின் வெளியுறவுக் கோட்பாட்டுக் குழுவின் தேசிய அமைப்பாளர் செசாத்திரி சரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஸ் பிரபு ஆகியோர் இப்பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகித்திருந்தனர். 

இந்தியாவின் பிரதிநிதிகள் குழுவானது சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின் போது, போர்க் குற்ற விவகாரம் தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பாகவோ எவ்வித கேள்வியையும் எழுப்பவில்லை. இதற்கு மாறாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மோடி அரசாங்கமானது சிறிலங்காவுக்கு அதிக ஆதரவு வழங்கும் எனவும் சிறிலங்கா அதிபரைச் சந்தித்த இந்தியப் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது. இந்தியாவின் வெளியுறவுக் கோட்பாடு மற்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கான இந்தியாவின் ஆதரவானது இந்தியத் தேசிய நலனை மையப்படுத்தியதாகவே இருக்கும் எனவும் இந்த உறவானது பிராந்திய நலனை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் இப்பிரதிநிதிகள் குழு தெரிவித்தது. இந்தியாவின் இந்த நிலைப்பாடானது தமிழ்நாட்டுக் கட்சிகள் இந்தியாவின் சிறிலங்கா மீதான வெளியுறவுக் கோட்பாட்டில் நீண்ட காலம் செல்வாக்குச் செலுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது. 

இது பா.ஜ.க சார்புடைய அறிவித்தலாக இருந்தாலும், இந்திய மத்திய அரசாங்கத்தின் எண்ணப்பாட்டைம ட்டுமே இது பிரதிபலிக்கிறது. இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கமானது, மோடி அரசாங்கம் சிறிலங்க மீதான கோட்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறது. இது இடம்பெறாவிட்டால், இந்திய-சிறிலங்கா உறவுநிலையானது நிச்சயமற்றதாகவும், பிராந்திய அரசியலுக்கு எதிரானதாகவும், குறிப்பாக பா.ஜ.க வின் தமிழ்நாட்டுக் கூட்டணிகள் சிறிலங்கா மீதான இந்திய மத்திய அரசாங்கத்தின் புதிய வெளியுறவுக் கோட்பாட்டை வெளிப்படையாக எதிர்ப்பதாகவும் அமையும்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140731110986

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.