Jump to content

சிறிலங்கா: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையும் - திராவிடக் கட்சிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

modi-sushma.jpg

பதவியேற்பு விழாவுக்கு மகிந்த ராஜபக்சவை அழைக்கக் கூடாது என தமிழ்நாட்டுக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் செய்தபோது அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுத்தார். 

இவ்வாறு Shastri Ramachandaran எழுதியுள்ள தனது பத்தியில் தெரிவித்துள்ளார். DNA இணையத்தில் வெளியான அந்த பத்தியை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீளவும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி இறங்கத் தீர்மானித்துள்ளது போல் தெரிகிறது. பா.ஜ.க வின் இத்தகைய செயல்கள் இந்தியாவின் திராவிடக் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க போன்றவற்றையும் பா.ஜ.க வின் தேசிய ஜநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் திராவிடக் கழகங்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன. 

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவில் தற்போது நல்லுறவு ஏற்படுகின்ற போதிலும், சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கோட்பாடு எவ்வாறான வரையறையைக் கொண்டுள்ளது என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் காணப்படவில்லை. சிறிலங்கா மீதான நரேந்திர மோடி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பமானது இந்திய காங்கிரஸ் கட்சியை எரிச்சலடைய வைத்துள்ளது. அதாவது ஈழத்தமிழர்களுக்கான உரிமைகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏற்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் போன்றன தொடர்பில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்தின் நகர்வுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் முதலில் முன்வைக்கப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது ஆதரித்து வாக்களித்த போதிலும், இவ்வாண்டு பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது புறக்கணித்திருந்தது. தமிழ்நாட்டில் தனது கட்சிக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளின் வீதங்களை ஆராய்ந்த பின்னரே மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியாவின் முன்னைய அரசாங்கம் சிறிலங்கா தொடர்பான வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்திருந்தது. ஆனால் இதே மன்மோகன் சிங், மனித உரிமைகள் பேரவையில் வாக்களிப்பு இடம்பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த நவம்பரில் சிறிலங்காவில் இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாது அதனைப் புறக்கணித்திருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இத்தகைய நடவடிக்கைக்கு இந்தியாவின் திராவிடக் கட்சிகளின் அழுத்தமே காரணமாகும். 

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள், அரசியல் அவாக்கள் மற்றும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவே இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எப்போதும் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுத்தது. இந்தியாவானது சிறிலங்கா மீது தெளிவான கோட்பாட்டை வரையறுக்காமை, சிறிலங்கா அரசாங்கம் மீதும் தமிழ் மக்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்பை இழந்தமை, திராவிடக் கட்சிகளுடன் நட்புறவைப் பேணாமை, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை இழந்தமை, சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கோட்பாடு தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் நம்பகத்தன்மையை இழந்தமை போன்றன மன்மோகன் சிங் அரசாங்கத்தின் தோல்விகளாகக் காணப்பட்டன. 

இந்தியாவின் முன்னாள் அரசாங்கத்தின் சிறிலங்கா மீதான வெளியுறவுக் கோட்பாட்டை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்துள்ளார். குறிப்பாக, தனது பதவியேற்பு விழாவுக்கு தென்னாசியத் தலைவர்களுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் அழைத்ததன் மூலம் மோடி இந்தியாவின் கடந்த கால அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினார். இப்பதவியேற்பு விழாவுக்கு மகிந்த ராஜபக்சவை அழைக்கக் கூடாது என தமிழ்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் செய்தபோது அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் சிறிலங்கா - இந்தியா உறவின் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க பிரதமர் மோடி விரும்பினார். சிறிலங்கா வெளியுறவு அமைச்சர், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவாராஜ்ஜை சந்தித்துப் பேச்சுக்கள் நடாத்தியதன் மூலம் மேலும் இவ்விரு நாடுகளுக்குமான உறவானது வலுவடைந்தது. 

சிறிலங்கா அரசாங்கமானது கடந்த காலத்தில் இந்தியாவுடன் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை விடுத்து, தற்போது புதியதொரு உறவைக் கட்டியெழுப்புவதில் ஆர்வமாக உள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அமைச்சரவை அமைச்சர்களும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க வின் மூலோபாய நடவடிக்கைக்கான ஆணைக்குழுவின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை சிறிலங்கா அதிபர் கடந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடியதானது சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவின் புதிய அரசாங்கத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதற்கு சான்று பகர்கின்றது. பா.ஜ.கவின் வெளியுறவுக் கோட்பாட்டுக் குழுவின் தேசிய அமைப்பாளர் செசாத்திரி சரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஸ் பிரபு ஆகியோர் இப்பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகித்திருந்தனர். 

இந்தியாவின் பிரதிநிதிகள் குழுவானது சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின் போது, போர்க் குற்ற விவகாரம் தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பாகவோ எவ்வித கேள்வியையும் எழுப்பவில்லை. இதற்கு மாறாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மோடி அரசாங்கமானது சிறிலங்காவுக்கு அதிக ஆதரவு வழங்கும் எனவும் சிறிலங்கா அதிபரைச் சந்தித்த இந்தியப் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது. இந்தியாவின் வெளியுறவுக் கோட்பாடு மற்றும் சிறிலங்கா அரசாங்கத்திற்கான இந்தியாவின் ஆதரவானது இந்தியத் தேசிய நலனை மையப்படுத்தியதாகவே இருக்கும் எனவும் இந்த உறவானது பிராந்திய நலனை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும் இப்பிரதிநிதிகள் குழு தெரிவித்தது. இந்தியாவின் இந்த நிலைப்பாடானது தமிழ்நாட்டுக் கட்சிகள் இந்தியாவின் சிறிலங்கா மீதான வெளியுறவுக் கோட்பாட்டில் நீண்ட காலம் செல்வாக்குச் செலுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது. 

இது பா.ஜ.க சார்புடைய அறிவித்தலாக இருந்தாலும், இந்திய மத்திய அரசாங்கத்தின் எண்ணப்பாட்டைம ட்டுமே இது பிரதிபலிக்கிறது. இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கமானது, மோடி அரசாங்கம் சிறிலங்க மீதான கோட்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறது. இது இடம்பெறாவிட்டால், இந்திய-சிறிலங்கா உறவுநிலையானது நிச்சயமற்றதாகவும், பிராந்திய அரசியலுக்கு எதிரானதாகவும், குறிப்பாக பா.ஜ.க வின் தமிழ்நாட்டுக் கூட்டணிகள் சிறிலங்கா மீதான இந்திய மத்திய அரசாங்கத்தின் புதிய வெளியுறவுக் கோட்பாட்டை வெளிப்படையாக எதிர்ப்பதாகவும் அமையும்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140731110986

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.