Jump to content

குட்டிமணி முதல் நிமலரூபன் வரை


Recommended Posts

[size=5]'ஆடியும் ஜூலையும் : குட்டிமணி முதல் நிமலரூபன் வரை' [/size]

[size=4]ஜூலையில் முந்தி ஆடிப்பிறப்பு வரும். அதுக்கெண்டு ஒரு நாள் விடுமுறையும் வரும்.[/size]

[size=4]'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை, ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழும் குடித்திடலாம்...' என்று பள்ளிச்சிறுவர்களெல்லாம் ஆடிப்பாடுவார்கள். ஆடிப்பிறப்பு அன்றைக்கு பள்ளிகள் மட்டுமல்ல அரசாங்க அலுவலகங்களிலும் விடுமுறை இருந்தது.[/size]

[size=4]ஆடிப்பிறப்பன்று எல்லா வீடுகளிலும் கூழ் காய்ச்சப்படும். இந்தக்கூழ் மச்சக்கூழல்ல. இது பனங்கட்டிக்கூழ். கலவை ஏதுமில்லாத பனங்கட்டி வாசம் வீசும் இந்தக்கூழை வயிறுமுட்டத் தமிழரெல்லாம் குடித்தார்கள். குடித்துக் கொண்டாடினார்கள். கூழுடன் கொழுக்கட்டையும் அவித்துத் தின்றார்கள்.[/size]

[size=4]கூழைக் குடித்துக்கொண்டே 'தங்கத்தாத்தா' என்ற சோமசுந்;தரப்புலவரின் அந்தப் பாட்டைப் பாடினார்கள்.[/size]

[size=4]அப்போது ஆடிக் கூழுக்கொரு பாட்டும் ஒடியற்கூழுக்கு இன்னொரு பாட்டுமாக இரண்டு பாடல்கள் இருந்தன. அப்போதென்ன இப்போதும் அந்தப்பாட்டுகள் இருக்கின்றனதான். ஆனால் அதையெல்லாம் யார்தான் பாடுகிறார்கள்?[/size]

[size=4]ஆடிப்பிறப்புக்கும் அந்தக்கூழுக்கும் நவாலி சோமசுந்தரப்புலவர் அருமையாகப் பாடிவைத்திருந்தார். அப்பொழுது அந்தப்பாட்டு பள்ளிப்பாடப்புத்தகத்திலும் இருந்தது.[/size]

[size=4]அதேபோல ஒடியற்கூழைப்பற்றி 'ஆசுகவி கல்லடி வேலன்' என்ற வேலுப்பிள்ளை பாடியிருந்தாhர். இந்தப்பாட்டும் பாடப்புத்தகங்களில் இருந்தது.[/size]

[size=4]ஆடியில் (ஜூலையில்) அப்படியே ஆடிப்பூரத்திருவிழா வரும். கொழும்பில் ஆடி வேல்விழா வரும். இப்படிப் பொதுவாகவே ஆடியென்றால் ஒரே கொண்டாட்டம்தான். கீரி மலைக்குப்போய் தந்தையர்க்குப் பிதிர்க்கடன் நிறைவேற்றும் ஆடி அமாவாசையும் ஜூலையில்தான் வரும்.[/size]

[size=4] [/size]

[size=4]இது மட்டுமா 'ஆடிப்பெருக்கு' என்று ஒரு படமும் அந்தநாளில் வந்தது. ஏ.எம் ராஜா, ஜிக்கி பாடிய அருமையான பாடல்களும் அந்தப் படத்தில் இருந்தன. அதையும் தமிழர்கள் பார்த்தார்கள். பார்த்து மகிழ்ந்தார்கள்.[/size]

[size=4]'ஆடித் தள்ளுபடி' என்று பொருட்களில் விலைக்குறைப்பு, சலுகை வழங்கல் எல்லாம் ஆடியில் சிறப்புத் தள்ளுபடியாக நடந்தன. இன்றைக்கும் 'ஆடித் தள்ளுபடி' என்று தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.[/size]

[size=4]ஆடியில் இன்னும் சில காரியங்களிருந்தன. ஆடியில்தான் கிணறு வெட்டினார்கள். அது கடுங்கோடை காலமல்லவா. கடுங்கோடையில் கிணறு வெட்டினால் பிறகு எந்தக் கோடையிலும் தண்ணீர் வற்றாது என்பது ஒரு காரணமும் நம்பிக்கையும். 'ஆடிக்கிணறு ஆழக்கிணறு'.[/size]

[size=4]'ஆடி விதை தேடி விதை' என்றொரு பழமொழியுமுண்டு. ஆடியில் விதை எடுத்தால் அந்த விதை நூறு வீதம் விளைச்சலைத் தரும் வினைத்திறனிருக்கும் என்பது அனுபவம். 'முளைதிறனும் விளைதிறனும்' ஆடிவிதைக்கு சிறப்பாக உண்டென்று விவசாயத் துறையாளர் சொல்கிறார்கள்.[/size]

[size=4]ஆடிமாதம் பற்றி இன்னுமுண்டு. 'ஆடிக்காற்றுக்கு அம்மியும் பறக்குமெ'ன்பார்கள். அந்தளவுக்கு ஆடியில் காற்றடிக்கும். அது சோழகக்காற்று. கடைச் சோழகம். அந்தக்காற்றுக்கு குளம் குட்டையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவே வற்றிவிடும். அது கடுங்கோடைக்காற்று. அனலாய் வீசும்.[/size]

[size=4]ஆனால், 'ஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழைபெய்யும்;' என்று சொல்வார்கள். ஆடிக்காற்றை தமிழகத்தில் 'மேகாத்து' என்றும் சொல்வார்கள். ஒரு காலத்தில் ஆடிமாதத்தில் வெள்ளம்பாயக்கூடிய அளவுக்கு மழை பெய்யும். அதை வைத்துத்தான் 'ஆடிப்பெருக்கு' என்று சொன்னார்கள். பிறகு அதை வைத்தே 'ஆடிப்பெருக்கு' என்ற படமும் அந்தநாளில் வந்தது. ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த முதற்படம். [/size]

[size=4]இந்தப் படத்தில்[/size]

[size=4]'காவேரி ஓரம் கவி சொன்ன காதல்[/size]

[size=4]கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்[/size]

[size=4]அலை மோதும் நிலை கூறவா..' என்ற பாடலும் இருந்தது.[/size]

[size=4]ஆடியில் பெய்யும் மழையைத் தொடர்ந்து விதைப்புக்கான ஆரம்பவேலைகள் தொடங்கிவிடும். வயலில் வரம்பு கட்டுவார்கள். பதிவான நிலத்தில் 'புழதி' போடுவார்கள். 'புழுதி போடுவது' என்றால் மாரிமழைபெய்யும் போது வெள்ளம் மூடிப் பயிர் அழிந்து விடாமல் இருப்பதற்கான முன்னேற்பாடு. அதாவது வெள்ளத்துக்கு 'முந்திப்பயிர் வளர்த்தல்'.[/size]

[size=4]தமிழர்கள் ஆடிப்பிறப்பைத்தான் பெரிதாகக் கொண்டாடினார்கள். ஆடிப்பிறப்பை வருசப் பிறப்பு மாதிரியே அவர்கள் கருதினர். ஆடியை விதைப்புக் காலம் என்றும் தை மாதத்தை விளைச்சலை அறுவடை செய்யும் காலம் என்றும் வகைப்படுத்தி வைத்திருந்தார்கள். அது ஆறுமாதப் பயிர் வளர்த்த காலம். நெல்லும் ஆறுமாதப் பயிராகவே இருந்தது. மரவள்ளியும் ஆறுமாதமாகவே இருந்தது. ஆடியிலே புதிதாகத் தொழில் தொடங்கினார்கள். இன்றும் பல இடங்களில் இந்த வழக்கமுண்டு. ஆரியர் வந்து ஆடியை ஒதுக்கி வைக்கும் வரையில் ஆடிதான் சிறப்புக் காலம்.[/size]

[size=4]இப்படி ஆடிபற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக ஆடி என்பது தமிழர்களின் வாழ்வில் முக்கியமாக இருந்தது.[/size]

[size=4]இப்படியெல்லாமிருந்த ஆடியில்தான் எங்களுக்கு எல்லாப் பொல்லாப்புகளும் வந்தன.[/size]

[size=4]'ஒரு ஆடி கலங்கினால் ஏழு ஆடி கலங்கும்' என்று ஆச்சி சொல்லுவா. ஆச்சி சொன்ன மாதிரியே காரியங்கள் நடந்தன. இப்போது நாங்கள் ஏழு ஆடியில் மட்டுமா கலங்குகிறோம். வருகின்ற எல்லா ஆடியும் கலங்கவைக்கும் ஆடியாகத்தானிருக்கு.[/size]

[size=4]ஆடிக்கலக்கம் அல்லது ஆடிக்கலகம் இன்னும் தீரவில்லை. 1983 ஜூலையில் ஜே.ஆர். மூட்டிய தீ.... இன்னும் அடங்கவில்லை. அது எரிகிறது. எரிந்து கொண்டேயிருக்கிறது. பாருங்கள் தமிழர்களின் ஆடியில் என்னமாதிரித் தீயை மூட்டியிருக்கிறார்கள் என்று.[/size]

[size=4]அன்றைக்கு மூட்டிய தீயில் தென்னிலங்கையில் தமிழர்கள் எரிந்தனர். சிறையிலிருந்த தமிழர்களையும் அது விட்டு வைக்கவில்லை. தங்கத்துரை, ஜெகன், குட்டிமணி, இராசகிளி என்று 53 பேரை அது தின்று தீர்த்தது.[/size]

[size=4]அந்தத் தீ இந்த ஆண்டும் (2012 இலும்) கொழுந்து விட்டுக் கொண்டேயிருக்கிறது. இப்போது அதே மாதிரிச் சிறையில் நிமலரூபனை அது தின்று தீர்த்திருக்கிறது.[/size]

[size=4]யாரோவெல்லாம் வருகிறார்கள், போகிறார்கள். இலங்கைப்பிரச்சினை பற்றிப் பேசாத ஆட்களும் இல்லை. நாடுகளும் இல்லை. அவரவர் தங்கள் தங்கள் விருப்பம், நோக்கம், தேவைக்கேற்றமாதிரி ஒவ்வொரு அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் சொல்கிறார்கள்.[/size]

[size=4]ஆனால் தமிழர்கள் தெருவிலும் திண்ணையிலும் குடிசையிலும் அகதி முகாமிலும் சிறையிலும் கிடந்து வாழவேண்டியதே யதார்த்தமாயிருக்கிறது.[/size]

[size=4]1983 ஜூலையில் தமிழர்களின் மீது தீப்பிடித்தது என்றேன். அப்பொழுது இலங்கையில் ஆட்சியிலிருந்தார் ஜே.ஆர் என்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனா. பண்டாரநாயக்கா, 1956 இல் செல்வநாயகத்துடன் தமிழரின் பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காணும் நோக்கில் உடன்படிக்கை ஒன்றைச் செய்தபோது அதற்கெதிராகக் கொழும்பிலிருந்து கண்டிக்குப் பாத யாத்திரை போனவர் இந்த ஜே.ஆர். இப்ப அவரே 'எல்லாம் வல்;ல' பெரும் அதிகாரத்திலிருந்தார். அதனால் தன்னை எதிர்ப்பவர் யார்? என்று கேட்டார். தமிழர்களைப் பார்த்துப் போர் என்றால் போர் என்று அறைகூவல் விடுத்தார்.[/size]

[size=4]எனவே நாடு தீப்பற்றி எரிந்தது.[/size]

[size=4]அப்போது மெல்;ல மெல்ல தமிழர்களின் போராட்டம் சூடு பிடித்திருந்த காலம்.[/size]

[size=4]யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் நடந்தது. அது 1983 ஜூலை 13. அதுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் எந்த வீதியில் போனாலும் எந்த ஒழுங்கைக்குள் சென்றாலும் அங்கே எப்போதென்று தெரியாமல் வருகிற ஆமிக்காரர்கள் சனங்களைத் தாக்கினார்கள்.[/size]

[size=4]அப்படிச் சனங்களைத்தாக்கிய இராணுவத்தின் மீது ஒரு கண்ணி வெடித்தாக்குதல். அதிலே பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதுவரையும் படையினருக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே அந்தத் தாக்குதல்தான் பெரிய தாக்குதல். தாக்குதல் நடந்த இடத்திலேயே பதின்மூன்று இராணுவத்தினர் பலியாகினர். அந்தத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவராகிய செல்லக்கிளி அம்மான் என்பவர் சாவடைந்திருந்தார்.[/size]

[size=4]செல்லக்கிளியோடு கிட்டு, புலேந்திரன், சந்தோசம், அப்பையா, விக்ரர் மற்றும் பஸீர் காக்கா இப்படி விடுதலைப்புலிகளின் முக்கியமான போராளிகளெல்லாம் அந்தத் தாக்குதலில் பங்குபற்றினார்கள்.[/size]

[size=4]அந்தத்தாக்குதலில் புலிகளின் தலைவர் பிரபாகரனும் நேரடியாக ஈடுபட்டிருந்தார். 'அவர் (பிரபாகரன்) அந்தத்தாக்குதலில் நான்கு இராணுவத்தினரை சுட்டுக் கொன்றார்' என்று அந்தத் தாக்குதலைப்பற்றி கிட்டு எழுதியிருக்கிறார்.[/size]

[size=4]அந்த ஜூலை (ஆடி) யில் அது ஒரு சரித்திர நிகழ்வாக இருந்தது. இந்தத்தாக்குதல் நடந்து இரண்டு நாளில் தங்களுடைய தோல்வியின் வெப்பியாரத்தைக் காட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய இனவாதிகளைக் கொண்டு பெரும் இன வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.[/size]

[size=4]இதிலேதான் கொழும்பு எரிந்தது. தமிழரின் வீடுகளும் கடைகளும் கொழுத்தப்பட்டன. சிறிலங்காப் படையினரும் பொலிஸூம் பார்த்துக் கொண்டிருக்க இனவெறியர்கள் [/size]

[size=4]தமிழர்களின் மீது கத்தியைப் பாய்ச்சினர்.[/size]

[size=4]கொழும்பிலிருந்து தமிழர்கள் அகதியாக தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு, பாதி உயிரோடு கப்பலேறி அகதியாக ஊருக்கு வந்தார்கள். ஆக, ஒரு பக்கத்தில் சிறைச்சாலைப் படுகொலைகள். மறுபக்கத்தில் தென்னிலங்கை வன்முறை. அடுத்த பக்கத்தில் அங்கிருந்து அகதிகளாக வெளியேற்றம்.[/size]

[size=4]இதெல்லாம் சர்வதேச சமூகத்தை உலுக்கியதோ இல்லையோ தமிழ் மக்களை கடுமையாகத் தாக்கியது. அவர்களுக்கு இது ஆறாத வடு. தீயும் கண்ணீரும் பெருகிய ஆறாத காயம் அது. அந்த ஜூலை தமிழர்களின் வரலாற்றில் காயங்களின் பதிவு எனவாகியது. அதுவே கறுப்பு ஜூலை என்றானது.[/size]

[size=4]இதெல்லாம் பழைய கதைதான். இதை இங்கே ஏன் திரும்பவும் சொல்லி சலிப்பூட்டுவான்? அல்லது 'இப்ப இதைச் சொல்லி இன்னும் பகையை ஏன் வளர்க்க வேணும்?' என்று நீங்கள் கேட்கலாம். நான் மறக்கத்தான் நினைக்கிறேன். ஆனால், இதையெல்லாம் மறப்பதற்கு ஒரு அவகாசம் வேணும். ஒரு மாற்றம் வேணுமே. அப்படியா நடக்கிறது நாட்டில்?[/size]

[size=4]மீண்டும் அதே ஜூலையில், அதே மாதிரிச் சிறையில், அதே மாதிரி அரசியற் கைதியாக இருந்த தமிழர்களின் மீது தாக்குதல் என்றால்....?[/size]

[size=4]ஜூலை எங்களுக்குக் கறுப்புத்தான். ஆடி எங்களுக்கு நெருப்புத்தான்.[/size]

[size=4]1987 ஜூனில் யாழ்ப்பாணத்தை முழுதாக ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு ஜே.ஆர். வடமராட்சிப் பிரதேசத்தின் மீது பெரும் படையெடுப்பைச் செய்தார். சனங்களின் மீது படையெடுப்பைச் செய்யும் ஒரு மரபை இலங்கையில் தொடங்கி வைத்தார் ஜே.ஆர்.[/size]

[size=4]பிறகென்ன? மூண்டது மறுபடியும் நெருப்பு.[/size]

[size=4]இந்த நெருப்பை ஏந்தியே ஒரு தாக்குதல். 1987 இல் நடந்த கரும்புலித் தாக்குதல், முதற்கரும்புலியாக மில்லர் நெல்லியடியில் படை முகாமிற்குள் பாய்ந்தார். இது சரியோ பிழையோ என்பதற்கப்பால், அப்படிப் பாயக்கூடிய ஒரு ஆவேசத்தை அன்றைய நிலைமைகள் ஏற்படுத்தியிருந்தன.[/size]

[size=4]கறுப்பு ஜூலையாக தமிழரின் மனங்களில் பதிவாகியிருந்த ஜூலை அன்று கரும்புலிகளின் ஜூலையாக மாறியது.[/size]

[size=4]ஒரு காலம் அழுது வடிந்த தமிழர்கள் அழுவதற்குப் பதிலாக அழ வைத்தவர்களை கதிகலங்க வைக்கும் புதிய மரபைத் தொடங்கினார்கள். இப்போது எல்லாமே மாறிவிட்டது. வரலாறு யாரும் எதிர்பார்க்காத மாதிரி தன்போக்கில் பயணிக்கிறது.[/size]

[size=4]மில்லர் நடத்திய தாக்குதலில் நிலை குலைந்த இலங்கை இராணுவத்தை எப்படி வழிப்படுத்துவதென்று தெரியாமல் தத்தளித்தது ஜே.ஆர் அரசாங்கம். அப்போது சந்தர்ப்பம் பார்த்து இந்தியா உள்நுழைந்தது.[/size]

[size=4]அதே ஜூலையில் இந்தியா முதலாவது பகிரங்க நடவடிக்கையை 'ஒப்பிரேஷன் பூமாலை' என்ற பெயரில் நடத்தியது. ஜே.ஆரின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்த தமிழர்களின் பிரதேசங்களில் இந்திய விமானங்கள் உணவுப் பொருட்களை வீசின.[/size]

[size=4]அதற்குப்பிறகு அதே ஆண்டில் (1987) ஜூலையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்தது. அந்தஒப்பந்தம் தமிழருக்கு இன்னொரு தீ வைப்பு என்றானது. பிறகு இரண்டாண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் இந்திய இராணுவத்தால் படாத பாடெல்லாம் பட்டார்கள்.[/size]

[size=4]இதெல்லாம் நடந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததைப்போல இருக்கிறது.[/size]

[size=4]பட்ட கதையெல்லாம் மீண்டும் இங்கே வேண்டாம். ஆனால் இப்போதும் கறுப்பு ஜூலையின் முப்பது ஆண்டுகளைத் தொடுகின்ற இந்த நாட்களில், கரும்புலிகளின் அத்தியாயம் ஆரம்பமாகி இருபத்தி ஆறு ஆண்டுகளின் பின்னும், தமிழர்கள் போகவேண்டிய தூரம் பற்றி இன்னும் இந்த ஜூலையில் வேறு ஆட்களெல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.[/size]

[size=4]இந்தியா பேசுகிறது. இந்தியாவுக்கு அப்பால் யப்பானியர்கள் பேசுகிறார்கள். நோர்வேக்காரர்கள் பேசுகிறார்கள். அமெரிக்கர்கள் பேசுகிறார்கள். பிரித்தானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், சீனர்கள் என்று எல்லோரும் பேசுகிறார்கள்.[/size]

[size=4]போதாக்குறைக்கு மனித உரிமை அமைப்புகள், ஐ.நா, சனல் 4, பி.பி.ஸி என இன்னும் ஏதேதோ எல்லாம் பேசுகின்றன....![/size]

[size=4]2012 ஜூலையில் சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபன் இந்த வரலாற்றுக்கு இன்னொரு சாட்சி. பலருடைய மனச்சாட்சிக்கும் அவருடைய மரணம் ஒரு சாட்சியே.[/size]

[size=4]http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=da98e70a-d7b8-4ee5-a86f-d30f5b7e92d2[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.