Jump to content

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 13–ந் தேதி நடக்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 13–ந் தேதி நடக்கிறது.

குருத்தோலை திருநாள்

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழா உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 20–ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக 13–ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு இறப்பதற்கு சிலநாட்களுக்கு முன் ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவரை ஒரு கழுதை குட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக உற்சாகமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி, தாவீதின் மகனுக்கு ஓசன்னா, உன்னதத்தில் ஓசன்னா என்று பாடி ஆர்ப்பரித்தனர்.

பவனி

இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் 13–ந் தேதி குருத்தோலை திருநாளாக கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், இந்த ஞாயிறு, குருத்தோலை ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது.

அன்று கிறிஸ்தவ ஆலங்களில் தென்னை குருத்து ஓலைகள் கிறிஸ்தவர்களுக்கு மந்திரித்து வழங்கப்படும். அவற்றை அவர்கள் கையில் ஏந்தியபடி தெருக்கள் வழியாக ஓசன்னா பாடல் பாடி பவனியாக வருவார்கள். பின்னர் ஆலயங்களில் திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

நேர்ச்சை

குருத்தோலை பவனிக்கான குருத்தோலைகளை அதற்கு முந்திய நாள் கிறிஸ்தவர்கள் நேர்ச்சையாக ஆலயங்களுக்கு வழங்குவார்கள்.

http://www.dailythanthi.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.