Jump to content

நாளை சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் மாதம் 20–ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் வாரத்திற்கு முந்திய 40 நாட்கள் ஏசுவின் சிலுவைபாடுகளை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

இது சாம்பல் புதன் வழிபாட்டு நாளில் இருந்து தொடங்கும். நாளை சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. கடந்த குருத்தோலை நாளில் அளிக்கப்பட்ட ஓலகளை எரித்து அதில் இருந்து கிடைக்கும் சாம்பலை ஆலயங்களுக்கு வரும் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார் பூசுவார். அப்போது ‘‘மனிதா நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்’’ என்று கூறுவார்.

இதன்மூலம் உலக வாழ்க்கை நிலையானது அல்ல. தவறு செய்வோர் தன்னை திருத்திக் கொள்ளவும், அதற்காக மனம் வருத்தப்படவும் வேண்டும் என்பது நினைவூட்டப்படுகிறது. நாளை முதல் ஏசுவின் பாடுகளை நினைவு கூறும் தவக்காலம் தொடங்குகிறது.

இந்த 40 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள். வீடுகளில் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது. அன்னதானம் வழங்குவர். ஆலயங்களில் வெள்ளிக்கிழமை தோறும் ஏசுவின் இறப்பை நினைவூட்டும் சிலுவைபாதை வழிபாடு நடைபெறும்.

இந்த தவக்காலத் தின் கடைசி வாரமான ஏப்ரல் 17, 18–ந்தேதிகளில் புனித வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. புனித வியாழன் அன்று ஏசுவின் கடைசி விருந்து, புனித வெள்ளியில் ஏசுவின் சிலுவை மரணம் ஆகிய வற்றை நினைவூட்டும் வழிபாடுகள் நடைபெறும். 19–ந்தேதி புனித சனி இரவில் ஈஸ்டர் வழிபாடும், 20–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் கொண்டாட்டமும் நடைபெறுகிறது.

 

http://www.maalaimalar.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

தவக்காலம்... தூய்மையின் காலம்!

 

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டிடச் சொன்னவர் இயேசு கிறிஸ்து. தாழ்ந்து போகிறவர் கெட்டுப் போவது இல்லை என்பதும் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதும் ஆன்றோரின் அமுத மொழி.

தவக்காலம் என்பது சோதனையின் காலம். சோதனை எல்லாம் வல்லவருக்கு மட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் அதனை எதிர் கொண்டே ஆக வேண்டும். பட்டினி கிடப்பதனால், வழிபாடுகளில் தவறாது கலந்து கொள்வதினால் மட்டும் நாம் தவக் காலத்தினை சிறப்பித்திட முடியாது. ஒவ்வொரு ஆண்டும் தவக் காலம் நம்மைக் கடந்து செல்லும்போது நமது உள்ளத்தில் ஏதாவது மாற்றதை விட்டுச் செல்ல வேண்டும். பட்டினி கிடப்பதாலோ தியானம் செய்வதாலோ தவக்காலத்தை சிறப்பித்திடலாம் என்று எண்ணி விட முடியாது.

நாம் செய்கிற தியாகமெல்லாம் அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிய வேண்டும். மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று செய்கின்ற தியாகமெல்லாம் தியாகமாகாது. கண்ணீரும் துன்பமும் எல்லோருக்கும் பொது. அந்தக் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக்குவதும் சோகக் கண்ணீராக்குவதும் அவரவர் வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைந்திடும்.

புனிதர்களின் வாழ்வைப் புரட்டிப் பார்த்து மட்டும் அல்ல, படித்துப் பார்த்து அதனைப் பின்பற்றுதல் வேண்டும். அன்னை மரியாளின் தாழ்மை, இந்த பூமியிலே அவளுக்கு கடவுளின் அன்னை என்ற மணிமகுடத்தை பெற்றுத் தந்தது. விண்ணக, மண்ணக அரசியாக அவளை உயர்த்தியது. அவளது பிள்ளைகள்தான் நாம் என்பதை நமது வாழ்வில் அவளது வாழ்வைப் பிரதிபலிப்பதன் மூலம் உறுதிப்படுத்தலாம். இப்படி நடந்தால் அது இறைவனுக்கு மிக உகந்ததாக இருக்கும். அதனால் இறைவனின் ஆசிர் நமக்குக் கிட்டும்..

தவக்காலம் மனமாற்றத்தின் காலம் என்பதனை உணர்ந்திவோம். மன்னிப்பை இதயத்தில் நிறுத்தி, நல்ல பண்பாட்டினை கரத்தில் ஏந்தி, நிமிர்ந்து நடக்கும்போது இறை ஆசீரும், இறை அன்னையின் வழி நடத்தலும் நமக்குத் துணை இருக்கும். தவக்காலத்தை மனதைத் தூய்மைப்படுத்தும் காலமாக மாற்றிக் காட்டுவோம்.

 

http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article1511250.ece

 

 

 

 

Link to comment
Share on other sites

சிலுவைப்பாதை

 

சிலுவைப்பாதை அன்பின் பாதை; அருளின்பாதை; இரக்கத்தின் பாதை; தியாகத்தின் பாதை. ஆண்டவர் இயேசு நாம் நலமுடன், அருளுடன், உறவுடன் வாழ, தம்மையே தியாகமாக்கிய அதே சிலுவைப்பாதையின் வழிகளில் நம்மையும் ஈடுபடுத்தி ஆண்டவர் இயேசு ஏற்றுக்கொண்ட துன்பங்களில் ஒரு சிறிதளவாவது பங்கேற்கும் போதுதான்; திருந்திவாழ முயற்சிக்கும் போதுதான் இந்த வழிபாடு நமக்கு பொருளுள்ளதாக அர்த்தம் நிறைந்த வழிபாடாக அமையும். இத்தகைய சிந்தனைகளுடன் இயேசு நடந்து வந்த பாதைகளை சிந்திக்க நமது பாவங்கள்,குற்றம் குறைகளை ஏற்றுக்கொள்வோம் மனம் வருந்துவோம்.

 

முதலாம் நிலை:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோடு வேலை செய்கிற சிலர் இப்படி சாம்பலால் , ஒரு சிலுவை வைத்த்து கொண்டு வந்திருந்தார்கள் ..தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பன்னிரென்டாம் நிலை:

 

http://www.youtube.com/watch?v=XtPlIxkOZdI

 

பதின் மூன்றாம் நிலை:

http://www.youtube.com/watch?v=GT-THaDfAas

 

பதின் நான்காம் நிலை:

http://www.youtube.com/watch?v=laQaeq7BjGs

Link to comment
Share on other sites

  • 10 months later...

https://www.youtube.com/watch?v=kdW-ZbOw-YM

 

உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறுவாயா? (2)
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா? (2)

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)

உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா?
ஊழியம் செய்ய வருவாயா? (2) - உனக்காக

மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? (2) - உனக்காக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கிறிஸ்தவர்கள் அல்லாத மற்ற மதத்தவரும் ...
பூமியில் வன்முறையை ஒழித்து அன்பை பேணி எல்லோரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று 2000 வருடம் முன்பு புரட்சி செய்த மகானை நினைவு கூர்ந்து.
பூமியில் வன்மறை ஒழிந்து சமாதானம் தோன்ற இந்நாட்களில் பிரார்த்தனை செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்!
 
2000ம் ஆண்டு முன்பு ஜேசு கூறியதை மனிதர்கள் செவி மடுத்திருந்தால் 
இன்று எத்தனை அழிவுகள் இல்லாது போயிருக்கும்.
 
தற்போதைய பல அரசுகள் ஆயுதம் செய்வதற்கு (பாதுகாப்பு செலவு) அதிக வரி பணத்தை செலவழிக்கின்றன.
மக்கள் உரிய மருத்துவம் உணவு கல்வி போன்ற அடிப்படைகளுக்கு நாளும் நாளும் அல்லாடுகிறார்கள்.
 
பூமியில் சாந்தியும் சமாதானமும் தோன்ற பிரார்த்திப்போம் !
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.