Jump to content

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  உடையார்

பலரது கேள்விக்கும் உங்களது  பதிலில் பதிலுள்ளது

 

 

ஒன்றை  எல்லோரும் புரிந்து கொள்ளணும்

ஏற்கனவே

முன் பள்ளிகள்

ஆசிரியைகளுக்கான சம்பளம்

ஊக்குவிப்பு

மதிய  உணவு

அவர்களுக்கான உடுப்புக்கள்

குளங்களை கிணறுகளை துப்பரவு செய்தல்

பாடசாலைக்கு கணணிகள்

ஊரைச்சுற்றி  மரம் நடுவதற்கு தண்ணிவிட ரக்டர்

.....................

.........................

 

என்று பலவற்றை  செய்திருக்கின்றோம்

செய்து வருகின்றோம்

 

இந்த திட்டம் என்பது பல வருடங்களாக( கிட்டத்தட்ட 15 வருடங்களாக)

பாடசாலை அதிபர் மற்றும்  நிர்வாகத்தாலும் மாணவர்களாலும் விடப்பட்டுக்கொண்டே இருந்தது

நான் 2003 இல் போயிருந்த போது கூட அன்றைய  அதிபர் இது பற்றி  என்னிடம் பேசியிருந்தார்

அத்துடன் வருகின்றீர்கள்

பார்க்கின்றீர்கள்

செய்வோம் என்கிறீர்கள்

அத்துடன் சரி  என அலுத்துக்கொண்டார்...

 

போன வருடம் எமது செயலாளர்  போன போதும் இதையே சொல்லி  சலித்துக்கொண்டார்..

 

எனவே செயலில் காட்டலாம் என்றே இதை எடுத்தோம்

 

இதை எடுத்ததற்கு காரணம்

மத்தியில் உள்ளது

உயர்தர மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடம் உள்ள ஒரே ஒரு பாடசாலை

பிள்ளைகள் முக்கியமாக வளர்ந்த பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் அசௌகரியங்கள்

உள்ளே வருவதற்கும் வெளியில் செல்வதற்கும் ஆயிரம் வாசல்களை  தடை செய்தல்

கால்நடைகளின் தொல்லைகளிலிருந்து பாடசாலையையும் வகுப்புக்களையும் உபகரணங்களையும் பாதுகாத்தல்

உள்ளே மரங்களை  நட்டு  சோலையாக்க பாதுகாப்பு கொடுத்தல்

சகல விளையாட்டுக்களையும் விளையாட மைதானம் அமைத்து

புங்குடுதீவு பாடசாலைகள் மட்டுமல்ல

தீவுப்பகுதி பாடசாலைகள் அனைத்தும் வந்து விளையாட வசதி  செய்தல்

அத்துடன் இதன் மூலம் இந்தப்பகுதி சனநடமாட்டம் அதிகரித்து

வாணிபம் வேலை வாய்ப்பு என்பன பெருக எம்மால் ஆனதைச்செய்தல்.....

 

இவையே  இந்த திட்டம் சம்பந்தமாக எம்மால் கவனத்தில் எடுக்கப்பட்ட நல்ல விடயங்கள்

அதே நேரம் சில தீமைகளும் இருக்கலாம்

அவற்றை   எடை  போட்டால்

எதையும் செய்யமுடியாது என்பதால் ஆரம்பித்தோம்

 

மக்களிடம் போகமுதல்

முடிவு எடுத்ததும் எமது நிர்வாக உறுப்பினர்களிடம்  கையேந்தினோம்

6500 ஈரோக்கள்  சேர்ந்தது

கோபு என்கின்ற  வர்த்தகர் தனது பிள்ளைக்கு பிறந்தநாள் செய்தார்

அவரது பிறந்த நாள் மேடையில் அவரிடம் திட்டத்தை சொன்னோம்

ஒரு செக்கன் கூட யோசிக்கவில்லை

10 ஆயிரம்   ஈரோக்கள் தருகின்றேன் ஆரம்பியுங்கள் என்று தூக்கிவிட்டார்

மிகுதிக்கு 

திருமணவீடுகள்

சாமத்தியவீடுகள்

பிறந்தநாள் விழாக்கள்

ஏன் செத்தவீடுகளில் கூட கையேந்தினோம்...

நண்பர்கள்

அண்ணன

தம்பி

மச்சான்

மாமன்

சித்தப்பன் என ஊர் உறவுகள் அனைவரிடமும் கையேந்தினோம்

கையேந்தி வருகின்றோம்

 

திட்டத்தின் முன்னேற்றத்தை

படங்களை காட்டி பேசிவருகின்றோம்

நெருங்கிவிட்டோம்

செய்து முடிப்போம்....

 

இப்பொழுது நம்பிக்கை வருகிறது

அடுத்த வருடம்

அடுத்த திட்டம்

1 கோடி

 

எல்லோரும் வந்து கை கோருங்கள்

திட்டத்தை தாருங்கள்

செய்து முடிக்கலாம்

 

 

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஆண்டு இப்படி பாஞ்சனீிங்கள்.

 


மதில் கட்டியிருந்த மானிப்பாய் இந்துவிலேயே எத்தனை தரம் பாச்சிருக்கம் அதனால் அந்த ஆசிரியர்களுக்கு எத்தனை தலையிடி ஊரவர்களால். அவர்களை ஒழுங்காக படிப்பிக்க விட்டால்தானே.

 

 


எனக்கும் ஒரு கேள்வி குறை நினைக்காதையுங்கோ.மதில் இந்த முறையில் கட்டுவது நேரத்தையும் செலவவையும் அதிகப்படுத்தும் என்று எங்கடை இசை எங்கையோ சொன்ன மாதிரி இருக்கு.அவரையும் ஒருக்கா கேட்டுப்பாருங்கோ.மற்றும்படி உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.எனக்கும் ஒரு கேள்வி குறை நினைக்காதையுங்கோ.மதில் இந்த முறையில் கட்டுவது நேரத்தையும் செலவவையும் அதிகப்படுத்தும் என்று எங்கடை இசை எங்கையோ சொன்ன மாதிரி இருக்கு.அவரையும் ஒருக்கா கேட்டுப்பாருங்கோ.மற்றும்படி உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியில் தப்பில்லை

எங்களுக்கும்   முதலில் அவ்வாறு தான் இருந்தது

நாங்கள் 25 லட்சமே  முதலில் நினைத்திருந்தோம்

 

ஆனால்  கேள்விக்கோரல் செய்தபோது

ஒரு   இடத்திலிருந்து

77 லட்சமும்

இன்னொரு இடத்திலிருந்து 56 லட்சமும் கோரப்பட்டது

 

அதிபருடனும்

சர்வோதய  அமைப்புடனும் தொடர்பு கொண்டு

56 லட்சத்தை தெரிவு செய்தோம்..

அத்துடன்  மலசலகூட வசதியுடன் 60 லட்சம் மதிப்பிட்டோம்....

(மதில் 600 அடி நீளமானது.  எட்டு அடி உயரமானது. அத்துடன் அத்திவாரம்  உவர் தண்ணீருக்கு பழுதாகாமலும்  நீண்ட காலம்  இருக்கக்கூடியவாறும் விசேச ஏற்பாட்டுடன் பதியப்படுகிறது. அத்துடன் ஒரு பக்கத்தில் குளம் இருப்பதால் அந்த இடத்துக்கு மட்டும் 18 லட்சம் முடிகிறது)

 

இதற்கான கடிதப்போக்குவரத்துக்கள் ஒப்பந்தங்கள் என்பன 

3 பகுதியிடமும் உண்டு.

 

தேவையானால்  இங்கு பதியப்படும்....

 

உங்கள் விளக்கத்திற்கும்

தனிமடலில் அனுப்பி வைத்த ஆதாரங்களுக்கும்

நன்றி ஐயா.

 

 

ஒரு அரசு செய்யும் வேலையை எதுக்கு நாம் செய்ய வேணும் என்பதுதான் கேள்வி அதுபோக ...இந்த அறுபது லட்சம் பணத்தில் அங்கு இருக்கும் முன்பள்ளி குழந்தைகளுக்கு வங்கியில் போட்டுட்டு ஒவ்வெரு நாளும் சத்துணவு கொடுத்து இருக்கலாம் பாலும் பயறுமா ..

 

இவ்வாறு இலட்சம் செலவு செய்து செய்யும் திட்டங்களை மக்கள் நலனுக்கு செய்யுங்கள் சுயதொழில் ...நாலு தையல் மிசின் ...ஒரு மூணுபேருக்கு ஆட்டோ ...இருவருக்கு சைக்கிள் என்று நன்மை அளிக்கும் .

 

தம்பி அஞ்சரன்,

 

உங்கள் திட்டமும் நன்றாக இருக்கு.

 

இதனை நீங்கள் ஏன் பொறுப்பெடுத்து

மற்றவர்களின் உதவிகளையும் பெற்று

நடைமுறைப்படுத்தக் கூடாது?

 

கேள்விகள் மட்டும் தான் கேட்பம் செயல்கள் செய்ய மாட்டம் என்ற கூட்டத்தில் நீங்கள்

இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றோம்

Link to comment
Share on other sites

உங்கள் விளக்கத்திற்கும்

தனிமடலில் அனுப்பி வைத்த ஆதாரங்களுக்கும்

நன்றி ஐயா.

 

தம்பி அஞ்சரன்,

 

உங்கள் திட்டமும் நன்றாக இருக்கு.

 

இதனை நீங்கள் ஏன் பொறுப்பெடுத்து

மற்றவர்களின் உதவிகளையும் பெற்று

நடைமுறைப்படுத்தக் கூடாது?

 

கேள்விகள் மட்டும் தான் கேட்பம் செயல்கள் செய்ய மாட்டம் என்ற கூட்டத்தில் நீங்கள்

இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றோம்

அதுக்கான செயலின் முதல் கட்டம் தான் அங்கு ஒரு அனைத்து வட்டாரமும் இணைத்த ஒரு நிர்வாக குழு உருவாக்கம் இனி அவர்கள் ஊடா அங்கு உள்ள இப்பொழுதைய தேவை பற்றி அறிந்து அதை நிவர்த்தி செய்வது ...

 

முதல் கட்டமா ஊரைதீவு ..கேரதீவு பிள்ளைகள் பாடசாலை வர வெகு தூரம் நடப்பதால் அவர்களுக்கு ஆக இரண்டு ஆட்டோ எடுத்து இரு குடும்ப தலைவர்களுக்கு கொடுத்து அவர்களின் வேலை காலையில் பிள்ளைகளை ஏற்றி வந்து பள்ளியில் விட்டுட்டு அவர்கள் வேறு வாடகை தேவைக்கு போகலாம் பின்னர் பின்னேரம் வந்து அவர்களை ஏற்றி கொண்டுசென்று விட்டால் சரி ...

 

ஆக அவர்களுக்கும் ஒரு தொழிலா இருக்கும் பிள்ளைகளும் படித்ததா இருக்கும் அதை பாரிஸில் இருக்கும் கமலாம்பிகை பழைய மாணவர்கள் தாங்கள் செய்வதா உறுதி அளித்துள்ளார்கள் அண்ணே ..

 

இப்படியான சந்திப்புகள் செயல்பாடுகள் நாம் இப்பொழுது ஆரம்பித்துள்ளோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்ச்சி அஞ்சரன். வெற்றி பெற வாழ்த்துகள்


எந்த ஆண்டு இப்படி பாஞ்சனீிங்கள்.

 


 

 

1985-1989 வரை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடுகையில் பலவிடையங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும்,

 

கேட்கப்ப்டும் கேள்விகள் (அவை அறிவுசார்ந்ததாக இல்லாது விட்டாலும், "நாங்கள் அப்படித்தான் கேட்பம் கோவிக்கக்கூடாது") அன்றேல் விமர்சனங்களுக்குப் பொறுப்பாகப் பதில் சொல்லும் ஜனநாயகத் தன்மை இருப்பதே புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் வெற்றி, இதைத் தொடர்வீர்களாகவிருந்தால் சாதிக்கலாம்.

Link to comment
Share on other sites

கோபு என்கின்ற  வர்த்தகர் தனது பிள்ளைக்கு பிறந்தநாள் செய்தார்

அவரது பிறந்த நாள் மேடையில் அவரிடம் திட்டத்தை சொன்னோம்

ஒரு செக்கன் கூட யோசிக்கவில்லை

10 ஆயிரம்   ஈரோக்கள் தருகின்றேன் ஆரம்பியுங்கள் என்று தூக்கிவிட்டார்

பிறந்தநாள் செலவில் 3வீதம்தான் :)

Link to comment
Share on other sites

பிறந்தநாள் செலவில் 3வீதம்தான் :)

அதுக்கு இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பாடகர் செலவு அதை விட அதிகம் அதனால் இது பெரிய காசே இல்லை அவர்களுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் செலவில் எத்தனை வீதமாகவும் இருக்கட்டும் கொடுப்பதற்கு மனம் வேண்டும்.

எங்கட ஆக்களுக்கு இதுதான் வேலை அவன் அதுக்கு செலவழிக்கிறான் இதுக்கு செலவழிக்கிறான் என்று புலம்புவது. ஒன்றுமே செய்யாது பலர் இருக்கிறார்கள் அவர்களை அணுகுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் செலவில் எத்தனை வீதமாகவும் இருக்கட்டும் கொடுப்பதற்கு மனம் வேண்டும்.

எங்கட ஆக்களுக்கு இதுதான் வேலை அவன் அதுக்கு செலவழிக்கிறான் இதுக்கு செலவழிக்கிறான் என்று புலம்புவது. ஒன்றுமே செய்யாது பலர் இருக்கிறார்கள் அவர்களை அணுகுங்கள்.

 

 

ஏதாவது  செய்தவன் 

செய்து கொண்டிருப்பவன்

ஒரு போதும்  எமக்கு ஆதரவாய் நீண்ட  கையை  பதம் பார்க்கமாட்டான்.......... :(  :(  :(

Link to comment
Share on other sites

இங்குள்ள அரசியல் உள் வெளி குத்துகள் எனக்கு புரியாது. ஆனால் எனது கருத்து :-
 
நாட்டில் அரசாங்கம் செய்யும் வேலைகளை ஏன் நாங்கள் செய்வான் என புறம்தள்ளினால் அங்கே எங்கள் இனத்தின் இருப்பும் வாழ்வும் இன்னொரு 10வருடத்தில் தடங்கள் அற்றுப்போய்விடும். 
 
இலங்கையில் பல பாடசாலைகளை Unichefபோன்ற நிறுவனங்கள் கட்டிக்கொடுத்துள்ளது. அதுபோல பல சிங்கள கிராமங்களில் வெளிநாட்டவர்கள் பள்ளிகள் கட்டிக்கொடுத்து படிக்க உதவுதல் முதல் ஆதரவற்ற சிங்கள குழந்தைகளுக்கு உதவுகிறார்கள். இங்கு யேர்மனியில் கூட பல யேர்மனியர்கள் சிங்கள பகுதிகளில் உதவிவருகிறார்கள். 
 
பல கிராமங்கள் கிழக்கில் தமிழர்களின் தடங்களும் வரலாறுகளும் அழிந்து கொண்டு போகிறது. இப்படி கிராமங்கள் தமிழர்களின் நிலமாக இருந்தது என்பதற்கான அடையாளங்களையும் இழந்து போக வைக்கிறது இக்கால நிலவரம். 
 
என்னைப் பொறுத்தவரை யாராவது தமிழ் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் நிலத்தில் காலூன்ற வேண்டும். இந்த முன்னெடுப்பிற்கு பேதம் களைந்து ஆதரவை வழங்கி சில இராஜதந்திர பணிகளை முன்னெடுக்க வேண்டும். நாங்கள் யாருமில்லாத அந்த நிலத்தில் யாரையும் போய் வாழ் என்று சொல்லவோ வரலாற்றை பாதுகார் என்று சொல்லவோ உரிமையற்றவர்களாக இருக்கிறது தற்போதைய குழுவாத அரசியல்.
 
உலககோடு நாம் போராடும் சமவேளையில் தாயகத்தில் வாழும் உரிமையிழந்த மக்களுக்கான மனிதாபிமானப்பணிகளை வழங்குவதிலும் அக்கறை செலுத்த வேண்டும். 
 
ஸ்கொட்லாந் பிரிந்து போக நடைபெற்ற வாக்கெடுப்பில் மறுப்பு வாக்கை வழங்கிய தலைமுறைக்கு ஸ்கொட்லாந்தில் வலிகள் தெரியாது. அதேபோன்றதொரு நிலமை எங்களுக்கு வந்துவிட எங்களது குழுவாத அரசியல் இடம் கொடுக்க அனுமதிக்காமல் குறைந்த பட்சம் ஒற்றுமைப்பட முடியாது போனலும் ஒற்றுமையாக முயற்சிப்போம். அல்லது ஒற்றுமை போல வெளியில் காட்டிக்கொள்ளவாவது கற்றுக் கொள்வோம்.
 
பி.கு :- இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. யாரும் பின் கதவு அயல் கதவால் வந்து அடிக்கப்படாது சொல்லீட்டன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் சுவிஸ் ரஞ்சன் தான் அனைத்து தேசிய வாதிகளையும் வழி நடத்துகிறார் மதில் கட்டுவதுக்கு

 

கௌரவமான யாழ் கள உறவு என்ற ரீதியில்  உங்களுக்கான எனது பதில்..

 

மதில் கட்டுவது France  - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

அதற்கு பங்களிப்பு செய்வோர் பிரெஞ்சுவாழ் புங்குடுதீவு மக்கள்

இதற்கும் வேறு நாட்டு ஒன்றியங்களுடனோ வேறு நபர்களுடனோ தொடர்புகளோ பங்களிப்போ கிடையாது

 

சுவிஸ் ரஞ்சன் என்பவர் சுவிசிலுள்ள புங்குடுதீவு விளிப்புணர்வு ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் என்பதை அவரே பல  இடங்களில் பதிந்துள்ளார்.  தனது முழுமையான முகவரி  தொலைபேசி இலக்கங்கள் இணையமுகவரிகள்.. அனைத்தையும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

அவருடன் தொடர்பு  கொண்டு அவருடைய  செயல்களுக்கு விளக்கம் கேட்கலாம்

 

அவருடைய  முன்னைய  அரசியல் நிலைப்பாடு சார்ந்து

எம்மிடம் கேட்டால்...........

அவருடைய முன்னைநாள் தலைவரே இன்றைய  கூட்டமைப்பில்  நின்று அமோக வெற்றி  பெற்றுள்ளார்..

 

என்னுடைய  தனிப்பட்ட கருத்து

என்ன செய்கிறார் என்று தான் பார்ப்பேன்

எவர் செய்கின்றார் என்று பார்ப்பதில்லை

அந்த தடிப்பில் தமிழினம் இன்று இல்லை...........

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மழை  காரணமாக சிறிது தடைப்பட்ட  வேலைகள் மீண்டும் தொடர்கிறது.....

 

SAM_0355.jpg

 

SAM_0357.jpgSAM_0358.jpgSAM_0361.jpgSAM_0362.jpgSAM_0365.jpgSAM_0366.jpgSAM_0369.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முனைப்பு.

 

பள்ளி வளாகத்தினுள்ளே ஏகப்பட்ட நிலம் பொட்டலாக கிடக்கிறது..விளையாடும் நிலம் போக மீதி இடங்களில் வரிசையாக மரங்களை நட்டால் குளிர்ச்சியாக இருக்கும்..

 

சமூக விரோதிகளின் தொந்திரவு இருந்தால், மதிற்சுவரில் கண்ணாடி துண்டுகளையும் இறுதியில் பதித்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முனைப்பு.

 

பள்ளி வளாகத்தினுள்ளே ஏகப்பட்ட நிலம் பொட்டலாக கிடக்கிறது..விளையாடும் நிலம் போக மீதி இடங்களில் வரிசையாக மரங்களை நட்டால் குளிர்ச்சியாக இருக்கும்..

 

சமூக விரோதிகளின் தொந்திரவு இருந்தால், மதிற்சுவரில் கண்ணாடி துண்டுகளையும் இறுதியில் பதித்துவிடுங்கள்.

 

 

 

 

பிள்ளைகள் படிக்குமிடம்

கண்ணாடித்துண்டுகளை  வைப்பது ஆபத்து

ஆனால் எட்டடிக்கு உயர்த்தப்படுகிறது

அதற்கு மேலும் கம்பி வேலி  போடப்படும்..........

அடுத்து

மைதானமும் மரம் நடுகையும் ஆரம்பிக்கப்படும்...

பேசியபடியுள்ளோம்...

 

நன்றி  ஐயா

அக்கறைக்கும் ஊக்குவிப்புக்கும்........

Link to comment
Share on other sites

இப்படியான சுவர்களை எட்டடிக்கு உயர்த்துவது நல்லதில்லை. இவை இரும்பினால் உரம் வழங்கப்படாமையால் (unreinforced type) பக்கவாட்டு விசை செலுததப்படும்போது உருக்குலையும் (brittle) தன்மையை கொண்டவை ஆகின்றன. இத்தகைய தன்மை இருந்தால் திடீரென்று இடிந்து விடும் (sudden collapse) நிலமை இருக்கும்.

இத்தகைய சிமென்ட் கல் செய்யும் வேலையை முதலில் நிறுத்த வேண்டும். Masonry blocks செய்ய ஆரம்பித்தால் விலையும் குறையும். தேவைப்பட்டால் இரும்புக் கம்பிகளையும் உள்நுழைத்து உறுதியாக்கலாம்.

வெளிநாடுகளில் பெரும்பாலும் உறுதியான கம்பி வேலிகளைத்தான் அமைக்கிறார்கள். செலவு குறைவு. பழுதானால் இலகுவில் திருத்தலாம். சாய்ந்தாலும் யாருக்கும் ஆபத்து வராது.

எது எவ்வாறாயினும் இத்திட்டம் பிரச்சினைகள் இன்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இப்படியான சுவர்களை எட்டடிக்கு உயர்த்துவது நல்லதில்லை. இவை இரும்பினால் உரம் வழங்கப்படாமையால் (unreinforced type) பக்கவாட்டு விசை செலுததப்படும்போது உருக்குலையும் (brittle) தன்மையை கொண்டவை ஆகின்றன. இத்தகைய தன்மை இருந்தால் திடீரென்று இடிந்து விடும் (sudden collapse) நிலமை இருக்கும்.

இத்தகைய சிமென்ட் கல் செய்யும் வேலையை முதலில் நிறுத்த வேண்டும். Masonry blocks செய்ய ஆரம்பித்தால் விலையும் குறையும். தேவைப்பட்டால் இரும்புக் கம்பிகளையும் உள்நுழைத்து உறுதியாக்கலாம்.

வெளிநாடுகளில் பெரும்பாலும் உறுதியான கம்பி வேலிகளைத்தான் அமைக்கிறார்கள். செலவு குறைவு. பழுதானால் இலகுவில் திருத்தலாம். சாய்ந்தாலும் யாருக்கும் ஆபத்து வராது.

எது எவ்வாறாயினும் இத்திட்டம் பிரச்சினைகள் இன்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இதை நாம சொன்னா  :)

Link to comment
Share on other sites

இதை நாம சொன்னா  :)

நீங்கள் சொன்னால் இதுக்குள் ஏதும் உள் நுண் அரசியல் இருக்குமோ என்று சந்தேகப்பட வைக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சுவர்களை எட்டடிக்கு உயர்த்துவது நல்லதில்லை. இவை இரும்பினால் உரம் வழங்கப்படாமையால் (unreinforced type) பக்கவாட்டு விசை செலுததப்படும்போது உருக்குலையும் (brittle) தன்மையை கொண்டவை ஆகின்றன. இத்தகைய தன்மை இருந்தால் திடீரென்று இடிந்து விடும் (sudden collapse) நிலமை இருக்கும்.

இத்தகைய சிமென்ட் கல் செய்யும் வேலையை முதலில் நிறுத்த வேண்டும். Masonry blocks செய்ய ஆரம்பித்தால் விலையும் குறையும். தேவைப்பட்டால் இரும்புக் கம்பிகளையும் உள்நுழைத்து உறுதியாக்கலாம்.

வெளிநாடுகளில் பெரும்பாலும் உறுதியான கம்பி வேலிகளைத்தான் அமைக்கிறார்கள். செலவு குறைவு. பழுதானால் இலகுவில் திருத்தலாம். சாய்ந்தாலும் யாருக்கும் ஆபத்து வராது.

எது எவ்வாறாயினும் இத்திட்டம் பிரச்சினைகள் இன்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 

 

வணக்கம் இசை

 

உங்களுக்கு

இது சம்பந்தமான சகல தரவுகளையும் (வரைபடம் கட்டுமான சேர்ககைகள்  உட்பட)

தனி  மடலில் அனுப்பியுள்ளேன்.

 

 

இந்த நிறுவனம் பல கோயில் கோபுரங்களையும் கட்டிடங்களையும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறார்கள்....

 

நாட்டில் உள்ளதை வைத்தும்

அதில்  நிபுணத்துவமானவர்களின் ஆலோசனைகளின் படியும் தான் திட்டத்தை செய்ய முனைகின்றோம்..

 

இங்கிருக்கும் புது வடிவங்களை  அல்லது  புது தொழிற்நுட்பங்களை  அங்கு பாவிக்கும் நிலை தற்போதைக்கு வருமா எனத்தெரியவில்லை.  அதுவரை................?

 

இது மக்கள் பணம்

முடிந்தவரை

தீரவிசாரித்து

ஊரிலுள்ள  பாடசாலை அதிபர் உட்பட பலரிடமும்  பேசியே  முடிவுக்கு வந்தோம்

 

அத்துடன் வடபகுதி  கல்வித்திணைக்களத்திடமும்  இதைக்காட்டி அனுமதி  பெற்றிருந்தோம்....

 

இதற்கு மேல்....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நாம சொன்னா  :)

 

 

இதுவரை

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் பிரான்சின் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்துக்கு ஆதரவு தந்துள்ளீர்களா?

ஆதரவாக கருத்தாவது வைத்துள்ளீர்களா?

காட்டுங்கள்...........

 

தவறுகளைச்சுட்டிக்காட்டுவதற்கும் பிழை பிடிப்பதற்கும்  பல ஆயிரம் வித்தியாசம்.

 

உலகில் மிகவும் இலகுவானதும் மலிவானதுமான வேலை பிழை பிடிப்பது....?

 

ஆனால் செயலில் இறங்கும் போதே

நல்லது கெட்டதும்

சரி பிழைகளும் தெரியும்

தெரியவரும்...

அது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை........... :(  :(  :( 

Link to comment
Share on other sites

இதுவரை

புங்குடுதீவு  மக்கள் ஒன்றியம் பிரான்சின் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்துக்கு ஆதரவு தந்துள்ளீர்களா?

ஆதரவாக கருத்தாவது வைத்துள்ளீர்களா?

காட்டுங்கள்...........

 

தவறுகளைச்சுட்டிக்காட்டுவதற்கும் பிழை பிடிப்பதற்கும்  பல ஆயிரம் வித்தியாசம்.

 

உலகில் மிகவும் இலகுவானதும் மலிவானதுமான வேலை பிழை பிடிப்பது....?

 

ஆனால் செயலில் இறங்கும் போதே

நல்லது கெட்டதும்

சரி பிழைகளும் தெரியும்

தெரியவரும்...

அது உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை........... :(  :(  :( 

பிரான்ஸ் ஒன்றியம் உருப்படியா என்ன திட்டம் செய்துள்ளது ஆதரவு தருவதற்கு ...

சரி இதில் தவறு இருக்கு என்று சொன்னால் கூட அதை கேட்கும் நிலையிலாவது இருந்து உள்ளீர்களா ..

 

உங்களுக்கே தெரியும் தானே புங்குடுதீவு மண்ணும் அதன் சூழும் சுவர்கள் பலகாலம் நின்று பிடிப்பதில்லை என்று கடல் காற்றுக்கு கம்பிகள் துருப்பிடிக்கும் அப்படியே வீங்கி மதில் வெடிக்கும் இதை தொண்ணூறுக்கு முன்னம் எங்கள் பாடசாலை மதில் கட்டமுன் இவ்வாறு விவாதம் எல்லாம் செய்தபின் மதில் கட்டாது வேலி அடைத்தவர்கள் ...அதாவது அப்பவே இருபத்தி ஐந்து லட்சம் பணத்துடன் சுவிஸ்சில் இருந்து கிளி மாஸ்டர் வந்தவர் பின்னர் அப்பணம் வங்கியில் இட்டு இன்றும் வட்டியுடன் இருக்கு கணேசா மகாவித்தியாலத்தில் .

 

ஆக நீங்கள் செய்யும் திட்டம் இவ்வளவு பணத்தை சேர்த்து மண்ணில் சும்மா போடுவது போலானது விளம்பரத்துக்கு உதவும் பள்ளிக்கு உதவாது ..

 

மகா வித்தியால அதிபரை கேளுங்கள் ஒருநாள் எத்தினை ஆசிரியர் வருகிறாகள் என்று குறைந்தது இருவர் வருவது இல்லையாம் படம் நடப்பது இல்லை ஏன் சம்பளம் ..போக்குவரத்து பிரச்சினை முடிந்தால் அவைகளை தீர்க்க ஏதாவது செய்யுங்க ..

 

உங்கள் ஒன்றியத்தை விட அங்கு தனிநபர்கள் அதிகம் செய்கிறார்கள் நீங்கள செய்திக்கும் ...விளம்பரத்துக்கும் செய்யும் வேலையை அவர்கள் சத்தம் இல்லாமல் செய்திட்டு வருகிறார்கள் அவைகள் உங்களுக்கு தெரியாமல் இல்லை ...

 

 

நிர்வாக கேள்வி எழுதல் என்பது பிழை பிடிப்பு அல்ல விமர்சனம் பொதுவெளிக்கு வந்தால் சந்தித்தே ஆகணும் அதை திசை திருப்பி விடுதல் அழகல்ல ...

 

ஊர் கூடி தேர் இழுக்கும் போது ஒருவன் குறுக்க கட்டை வைப்பான் ஏன் சாமி மேல் கோவமா இல்லை இழுப்பவர் மேல் கோவமா இல்லையே தேர் பிழையான பாதையில் போகக்கூடாது என்பதற்கே . :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மகா வித்தியால அதிபரை கேளுங்கள் ஒருநாள் எத்தினை ஆசிரியர் வருகிறாகள் என்று குறைந்தது இருவர் வருவது இல்லையாம் படம் நடப்பது இல்லை ஏன் சம்பளம் ..போக்குவரத்து பிரச்சினை முடிந்தால் அவைகளை தீர்க்க ஏதாவது செய்யுங்க"

 

படம் காட்ட இது சினிமா கொட்டகையல்ல பாடசாலை.

 

உங்கள் திட்டம் இதுவரை எந்தளவில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ஒன்றியம் உருப்படியா என்ன திட்டம் செய்துள்ளது ஆதரவு தருவதற்கு ...

சரி இதில் தவறு இருக்கு என்று சொன்னால் கூட அதை கேட்கும் நிலையிலாவது இருந்து உள்ளீர்களா ..

 

 

Page_1_ACFr_Og_Cf_Lyxb_FFP3_EWjt_Jt0h_rqPage_2_ACFr_Og_Cf_Lyxb_FFP3_EWjt_Jt0h_rqPage_3_ACFr_Og_Cf_Lyxb_FFP3_EWjt_Jt0h_rqPage_4_ACFr_Og_Cf_Lyxb_FFP3_EWjt_Jt0h_rqPage_5_ACFr_Og_Cf_Lyxb_FFP3_EWjt_Jt0h_rq

http://www.pungudutivu.fr/p/12-15-804000.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்கு  செய்துள்ளோம்

கிழக்குக்கு செய்துள்ளோம்

மன்னாருக்கு செய்துள்ளோம்

(திருகோணமலைக்கு  செய்துள்ளோம்)

 

 

புலத்தில்

தாயகத்தில் புனர்வாழ்வுக்கழகத்துடன் தோழோடு தோழாக நின்றுள்ளோம்

புலத்தில் எடுக்கப்பட்ட அத்தனை ஊர்வலங்கள் மாநாடுகளில் பங்கு பற்றியுள்ளோம்

எம்மால் முடிந்தவரை அவர்களுக்கு நிதிப்பங்களிப்பு செய்துள்ளோம்

உதாரணமாக லண்டனிலிருந்து யெனீவா வரை நடைப்பயணம் மேற்கொண்ட தம்பியுடன் பிரான்சில் கை கோர்த்து

அவருக்கான உணவு பானங்கள் உட்பட வழங்கி

 500 ஈரோக்களை  கொடுத்த ஒரே ஒரு அமைப்பு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தான்....

மாவீரர் தினத்தில் மக்கள் மண்டபத்து வருகை தர இலகுவாக வாகன வசதிகளை இலவசமாக  செய்து வருகின்றோம்...

லண்டனிலிருந்து

ஒரு பல்கலைக்கழக மாணவர் இலங்கைக்கு திருப்பி  அனுப்பப்பட இருந்தபோது

அவருக்கு தேவையான 2650 ஈரோக்களை வழங்கி  அவரது படிப்பு தொடரவும்

திருப்பி  அனுப்படாது தடுக்கவும் உதவியிருந்தோம்...

 

அத்துடன்  புலம் பெயர் சிறுவர்கள் மாணவர்களுக்காக 

அறிவுத்திறன் போட்டிகளை  நடாத்தி

மாணவர்களை ஊக்கப்படுத்தி  வருகின்றோம்

இன்று அவர்கள் பேச்சாளர்களாக

திறமையை  வெளிப்படுத்துபவர்களாக வளர்ந்து வருகிறார்கள்

 

எமது  இன ஒடுக்குதல்களை வெளியில் கொண்டுவர

குறும்படத்துறையை  ஊக்கப்படுத்தி பரிசளித்துவருகின்றோம்

எம்மால்  ஊக்கப்படுத்தப்பட்டவர்கள்

இன்று பிரான்சையும் தாண்டி

சர்வதேச அளவில் பரிசுகளை  எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்

அவர்களே அதை மேடைகளில் சொல்லி  வருகிறார்கள்........

 

 

இதில் ஒன்று கூடவா

உங்களுக்கு ஆதரவாக கருத்தெழுத முடியாததாக உள்ளது

 

அப்படியென்றால் திருந்தவேண்டியது நாமல்ல............

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.