Jump to content

இப்படிச் செய்யலாம் உறவுகளே !


Recommended Posts

இன்று நாம் புலத்திலிருந்த படி பல உதவிகளை தாயகத்தினை நோக்கிச் செய்கிறோம். அப்படிச் செய்யப்படும்  உதவிகள் அணைத்தும் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கயை கொண்டு நடாத்துவதற்குரிய (சுயதொழில் சார்ந்த) உதவிகளாக, அல்லது கல்வி சம்மந்தப்பட்ட ஊக்கங்களாக‌ அமைகின்றன. இவை மிகவும் இன்றியமையாதவை, காலத்தின் தேவை அறிந்து செய்யப்படும் உதவிகள், தாயகத்தினை நோக்கி இவ்வாறான உதவிகளை செய்கிறவர்கள் என்றுமே போற்றுதற்குரியவர்கள்.

 
எனினும் நாம் தாயக மக்களின் தூர‌ நோக்கில், அவர்களின்  வளமான ,உறுதியான எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். அப்படி நாம் முன்னெடுக்க வேண்டியவற்றில் (எனது அனுபவத்தில்) நான் சிறப்பாகக் கருதுவது " பட்டதாரிகளை உருவாக்குவது".
ஒவ்வொரு வருடமும் A/L  பெறுபேறுவரும் போது நல்ல சித்திகளை பெற்றவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள், பெரும்பாலானவர்கள் 3 பாடங்களிலும் சித்தி பெறுகிறார்கள் 
ஆனால் பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதில்லை. இவர்கள் தான் எமது இலக்கு
 
A/L   இல் 3 பாடங்களிலும் சித்தி பெற்ற மாணவர்களை மிக இலகுவாக வெளி நாடுகளிலுள்ள (குறிப்பாக இந்தியாவிற்கு)  பல்கலைக்கழகங்களிற்கு அனுப்பி அவர்களை 4 வருடங்களில் தகுதி வாய்ந்த பட்டதாரி மாணவர்களாக உருவாக்கலாம். பெங்களூரில் மிகச் சிறந்த  பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இருக்கின்ற‌ன. பெருமளவு இலங்கை மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். இங்கே  பயின்ற பலர் இலங்கையில் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள், பலர் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளிற்கு பட்டமேல்படிப்புகளுக்காச் சென்று அங்கே படிக்கின்றார்கள் , சிலர் அந்நாடுகளிலேயே நல்ல பதவிகளில் மிக நல்ல சம்பளத்தில் இருக்கிறார்கள்.
இங்கே செலவும் குறைவு ஏறக்குறைய 14 இலட்சம் இந்திய ரூபாய்கள் தான் ஒரு BBA  அல்லது  IT பட்டப்படிப்பிற்கு தேவைப்படுகிறதாம்,
 
இதேபோல் கிழக்கைரோப்பிய நாடுகளிற்கு வைத்தியருக்கு படிக்க அனுப்பலாம் (செலவு ஏறக்குறைய 40-50 இலட்சம் இலங்கை ரூபாய்கள்)
 
அல் கணிதம் படித்த மாணவ்ர்களை கொழும்பில் HND டிப்ளோமா படிக்க வைத்து இங்கிலாந்து போன்ற நாடுகளில் மிகச் சிற‌ந்த பொறியியல் படிப்புகளை (விமானப் பொறியியல் போன்ற ) படிக்க வைக்கலாம்.
 
தாயகத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலை தேடுபவர்களைக் கூட பட்ட மேற்படிப்ப்பிற்க்காக வெளிநாடுகளிற்கு அனுப்பி வைக்கலாம். குறிப்பாக அரசியல் விஞ்ஞானம் படித்த பட்டதாரிகளை வெளிநாடுகளிலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு மேற்படிப்புகளுக்காக அனுப்பலாம். இவர்கள் மூலம் எமது சமுதாயம் அரசியல் ரீதியில் சிறந்த பலத்தினைப் பெறும்
 
இவை சில உதாரணங்களே , இவ்வாறு பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளன. (ஒவ்வொரு ஞாயிறு வீரகேசரியிலும் பல விளம்பரங்கள் வருகின்றன.) 
 
பட்டதாரிகளினால் தான் ஒரு சமூகம் ஆற்றல் மிக்கதாகவும் , உறுதியானதாகவும் மாறும். இவர்கள் தான் எம் சமுதாயத்தினை உறுதியாகத் தாங்கும் தூண்கள்.  
 
கல்வியறிவு நிறையப்பெற்ற சமுதாயம் யாரிடமும் எதற்காகவும் கையேந்தத் தேவையில்லை , யாராலும் ஏமாற்றவும் முடியாது. மாற்றாக மற்றவர்களினால் விரும்பப்ப்டும் ஒரு சமுதாயமாக இருப்பர்கள்.
 
தனிநபராக ஒருவருக்கு உதவுவது கடினமென்றால், சிறு சிறு குழுக்களாக்ச் சேர்ந்து இவ்வாறான திட்டங்களை மேற்கொள்ளலாம் ( புலம் பெயர் நாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள், கோவில்கள் , நண்பர்கள் )
 
அருகில்100 கோடி இந்துக்கள் பார்த்திருக்க 6 கோடி தமிழர் கூப்பிடுதூரத்தில் இருக்க , யாருமற்ற அனாதைகளாக கொடூரமாக சிதைத்து சின்னாபின்னப்படுத்தப் பட்டோம்.  எமக்கு எவரும் உதவி செய்யப்போவதில்லை, யாரை நம்பியும் பயணில்லை. எமக்கு நாமே உதவினாலொழிய‌
 
புலம் பெயர் உறவுகளே தாயகத்திலுள்ள எமது உற‌வுகள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களை நாம் தான் தூக்கி நிறுத்த வேண்டும்
 
தொடர்வேன் ...,

 

Link to comment
Share on other sites

வணக்கம் ஆதவன்,
உங்கள் எண்ணம் வரவேற்கத்தக்க ஒன்று. எனினும் நடைமுறை சார்ந்து பெரும் தொகை பணத்தை நம்பி செலவளித்தலில் பல சிக்கல்கள் இருக்கிறது. இதில் யாரும் கோவிக்கக்கூடாது. கடந்தகாலங்களில் போராட்டத்தில் இணைந்த பலரை தொழில்நுட்பம் உட்பட பல விடயங்கள் சார்ந்து பட்டப்படிப்புகளுக்கு வெளிநாடுகள் அனுப்பப்பட்டார்கள். ஆனால் அந்த வழிமூலம் வெளிநாடுகள் சென்றோரில் 30சதவீதத்தையே தங்கள் குறிக்கோளுக்காக பயன்பட்டவர்கள். மீதி 70விழுக்காடும் தங்கள் சொந்த வாழ்வையே மேம்படுத்திக் கொண்டதுதான் வரலாறு.
 
ஊரில் தங்கள் பல்கலைக்கழக படிப்பை மருத்துவம் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மாதம் ஒரு 5ஆயிரம் ரூபாவை உதவி முன்னேற்றுவதற்கே பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.இந்நிலையில் ஒரு மாணவருக்கு  40-50லட்சடத்தை செலவு செய்து படிப்பித்து உருவாக்குவது என்பது நடைமுறை சாத்தியம் குறைவே.
 
கடந்த வருடம் நேசக்கரம் கிராமிய பட்டப்படிப்பு முயற்சியொன்றை ஆரம்பிக்க முயன்றோம். இன்றுவரை அத்திட்டம் கிடப்பிலேயே இருக்கிறது. காரணம் பணம் இல்லை. அதிகளவில் இளையோர் வெளிநாடு செல்லவே விரும்புகிறார்கள். அவர்களது இலக்கு வெளிநாடு போனால் பணம் வந்து குவியும் என நம்புகிறார்கள். (ஏன் நீங்கள் வெளிநாட்டில் தானே இருக்கிறீங்கள் என யாரும் அடிக்க வரப்படாது)
 
கல்வியால் மட்டுமே எங்கள் சமூகத்தின் முன்னேற்றம் உயரக்கூடிய ஒரு வழி ஒன்றே எமக்கான தற்போதைய வழி. இது நீண்டகால திட்டமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். கிராம மட்டங்களிலிருந்து பாலர் பாடசாலைகளிலிருந்தே இவை ஆரம்பிக்கப்படல் வேண்டும். எல்லாவற்றுக்கும் பணம் தான் பிரதானம். பணமிருந்தால் திறமையாளர்களை வைத்து  வெளிநாட்டுப் படிப்புகளுக்கு நிகரான திறந்த பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியும். இதற்கான வழியும் வளமும் இருக்கிறது. யாராவது ஒரு கிராம ஒன்றியம் அல்லது இதே யாழ்களத்தில் கருத்தாடும் உறவுகள் முன்வந்தால் நடைமுறைப்படுத்துவது சாத்தியம்.
 
மருத்துவம் தொழில்நுட்பம் சார்ந்த பத்து மாணவர்களுக்கே உதவிகயை ஒருங்கிணைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். 
 
2013 - 2017  நேசக்கரம் கல்விச்செயற்பாட்டு ஆண்டாக பணியாற்றுவதென முடிவெடுத்து பல முயற்சிகளை எடுத்தோம் எல்லாவற்றுக்கும் பொருளாதாரமே தடையாக நிற்கிறது. 
 
2009 - 2012 வரையில் 30பல்கலைக்கழக மாணவர்களை நம்பியிருந்தேன். நிச்சயம் தங்கள் படிப்பு முடிய நீங்கள் தரும் கல்வி செயற்பாடுகளுக்கு உதவுவோம் என சொன்னவர்களில்  தீபச்செல்வன் தவிர  இதர மாணவர்கள் யாவரும் சொன்ன வார்த்தையில் ஒரு விழுக்காடு கூட செய்யவில்லை.
 
பலர் படிப்பையும் இடையில் விட்டு கப்பல் ஏறி வெளிநாடுகளில் கோப்பை கழுவும் தொழிலில் ஈடுபட்டிருப்பதை அனுபவத்தால் கண்டுள்ளேன்.
 
நீங்கள் குறிப்பிடும் பட்டப்படிப்புக்கான திறந்த பல்கலைக்கழகங்களை நாங்கள் எங்கள் பிரதேசங்களில் உருவாக்கலாம். வெளிநாடுகளுக்கு நிகரான சான்றிதழ்களையும் கிடைக்க வழிசெய்து உருவாக்குதல் நாங்கள் அடுத்த பத்து ஆண்டில் எமது இலக்கில் 20விழுக்காடு வெற்றியடையும் வாய்ப்பை பெற முடியும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த வருடம் நேசக்கரம் எடுத்த முயற்சியின் செய்தி கீழே :-
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேசக்கரம் கிராம அபிவிருத்தி பட்டப்படிப்பு உதவி.

diploma_zpsf1d21498.jpg
    

படித்த மாணவர்களை அவர்களின் கிராமங்களை மேம்படுத்தவும் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி தொழில்சார் துறைகளில் முன்னேற்றவும் Brightfuture Nesakkaram அமைப்பின் ஒன்றரை வருட கற்கைநெறியினை ஆரம்பிக்கவுள்ளோம்.போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் 19வயது தொடக்கம் 24வயதுக்கு உட்பட்டவர்கள் கிராம அபிவிருத்தி பட்டப்பட்டிப்பில் பங்கேற்க முடியும்.

கற்றலுக்குத் தேவையான தகைமை :- கல்விப்பொதுத்தராதரம் குறைந்தது 3பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டும்.


பாடத்திட்டம் :-


1)    தகவல்தொழில்நுட்பம்

2)    பொருளாதாரஅபிவிருத்தி

3)    அனர்த்தமுகாமைத்துவம்

4)    உளவியல்

5)    சிறுவர்மேம்பாடு

6)    கிராமிய வள முகாமைத்துவம்


கால எல்லை : 1 ½ வருடம் (பாடநெறி : 1 வருடம், செயற்திட்டம் : ½ வருடம்)


பிரதேசம் : யுத்தித்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்

(ஒரு மாவட்டத்தில் ஒரு கற்கை நிலையம்)


செலவு விபரம் மாதாந்தம் மாவட்டம் ஒன்றிற்கு :-


விரிவுரையாளர்கள் கொடுப்பனவு : 10000.00ரூபா

மாணவர்கள் கையேடு : 5000.00ரூபா

உதவியாளர் கொடுப்பனவு : 4000.00 ரூபா

சிற்றூண்டி செலவுகள் : 5000.00ரூபா

மொத்தம் : 24000.00 ரூபா


ஒரு மாவட்டத்திற்கான மாதாந்த செலவு – 24000,00ரூபா (அண்ணளவாக 150€) தேவைப்படுகிறது.


ஒரு மாவட்டத்திற்கான ஒன்றரை வருட மொத்தக் கற்பித்தல் செலவு – 432000,00ரூபா(அண்ணளவாக 2700,00€)


மாவட்டம் ஒன்றுக்கு ஒரு கல்றை நிலையமே முதல்கட்டம் நிறுவப்படும். 300முதல் 500மாணவர்கள் வரை எதிர்பார்க்கப்படுகிறது.


படித்த மாணவர்கள் ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்பற்று தங்கள் எதிர்காலம்
பற்றிய கனவுகளை மட்டும் சுமந்தபடி தங்கள் வாழ்வை மேம்படுத்த வழியற்றுத்
தவிக்கிறார்கள். ஒவ்வொருவராலும் செய்யக்கூடிய முன்னேறக்கூடிய தொழில்சார்
பட்டப்படிப்பை வழங்குவதன் மூலம் தன்னையும் மேம்படுத்துவதோடு தனது கல்வி
மூலம் தான் சார்ந்த சமூகத்தையும் கிராமத்தையும் வளமாக்கும் திறனையும் வழங்க
முடியும்.


கிராமிய அபிவிருத்திப் பட்டப்படிப்பினை நிறைவு செய்வதற்கான கால எல்லை
ஒன்றரை வருடங்கள் ஆகும். முதல் ஒருவருடம் கற்பித்தலும் இறுதி 6மாதங்கள்
செயற்திட்டத்தினை வழங்க வேண்டும். இறுதிச் செயற்திட்டத்திற்கு 50வீதமான
புள்ளிகள் வழங்கப்படும். செயற்திட்டத்தில் வழங்கப்படும் புள்ளிகள்
அடிப்படையிலேயே சான்றிதழ்கள் வழங்கப்படும்.


இறுதி செயற்றிட்டத்திற்கு கிராமிய கடன் அடிப்படையில் நிதியுதவி
வழங்கப்படும். இக்கடனுதவியை குறித்த மாணவரின் நிரந்தர வாழ்வாதார
மேம்பாட்டிற்கான ஆதாரமாக அமைகிற நேரம் கிராமங்கள் சுயதொழில்
முன்னேற்றத்திலும் ஏற்றம் காண முடியும்.


தங்கள் தங்கள் மாவடங்கங்களில் வாழும் படித்த மாணவர்களின் வாழ்வை
மேம்படுத்தி அவர்கள் மூலம் அந்த சமூகத்தை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பை வழங்க
உலகுவாழ் தமிழர்கள் அனைவரையும் ஆதரவு தருமாறு அன்போடு வேண்டுகிறோம்.

இம்முயற்சியில் நீங்கள் தருகிற ஆதரவுகள் மூலமே எங்கள் எதிர்கால இளைய
தலைமுறையின் வாழ்வாதாரம் தங்கியிருக்கிறது என்பதனை புரிந்து கொண்டு உங்கள்
ஆதரவை நல்குங்கள். ஆரோக்கியம் மிக்க கிராமங்களையும் தமிழ் மாணவர்களையும்
வளர்த்தெடுப்போம்.

செயற்றிட்ட அறிக்கை :-

DiplomaCourse_zps157e38a5.jpg

இத்திட்டத்திற்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் :-


Bank information



Germany:


NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart


Other countrys:


NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany


Paypal Account – nesakkaram@gmail.com


Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany


Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418


nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh


www.nesakkaram.org

 

http://nesakkaram.or...கிராம-அபிவிருத/

 

------------------------------------------------------------------------------------------------------------------------------

பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிகோரல் செய்தி :-

------------------------------------------------------------------------------------------------------------------------------

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136466

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைகழக மாணவர்களுக்கான உதவி கோரல் செய்தியில்...இலக்கம் 3 ஏற்கனவே பொறுப்பெடுத்தாயிற்று...இந்த மாதம் தொடக்கம் அந்த மாணவிக்கான உதவித் தொகை அவரை சென்றடையும்..

Link to comment
Share on other sites

பல்கலைகழக மாணவர்களுக்கான உதவி கோரல் செய்தியில்...இலக்கம் 3 ஏற்கனவே பொறுப்பெடுத்தாயிற்று...இந்த மாதம் தொடக்கம் அந்த மாணவிக்கான உதவித் தொகை அவரை சென்றடையும்..

நன்றி யாயினி செல்லம். நீங்கள் ஏற்கனவே எடுத்த பொறுப்பு அது நிறைவேறும் பிரச்சனையில்லை.

 

5வது இலக்கத்துக்கு உரிய மாணவரை பொறுப்பேற்க விரும்பியவர் தனது பிரதேசத்தின் பிள்ளையொன்றுக்கே உதவ விரும்புகிறார். நாங்கள் தெரிவு செய்த பிள்ளை வேறு பிரதேசம்.  அதனால் நீங்களும் , பெயர் குறிப்பிட விரும்பாத தம்பியொருவரின் உதவியும் , சகாராவும் வாக்குறுதியளித்தபடி 3பிள்ளைகளுக்கே உதவி தயார். மற்றைய 7மாணவர்களுக்கும் இன்னும் ஏற்பாடு எதுவும் வரவில்லை.

 

Link to comment
Share on other sites

புலம் பெயர் தேசத்து கோயில்கள்...................?
 
இங்கே சுவிசில் ஏறக்குறைய 24 கோயில்கள் இருக்கின்றன, ஒவ்வொரு கோயிலினதும் மாதாந்த சராசரி செலவு கிட்டத்தட்ட 3000 - 6000 பிராங்குகள். எப்படிப் பார்த்தாலும் மாதாந்தம் ஒரு லட்சம் பிராங்குகள் கோயில்களுக்காக செலவழிக்கப்படுகின்றன.
ஒரு வருடத்தில் 1.2 மில்லியன் பிராங்குகள் (வருடாந்த திருவிழா செலவுகள் தனி). 
1.2 மில்லியன் பிராங்குகள் = 17.4 கோடி இலங்கை ரூபாய்கள்
 
ஒவ்வொரு வருடமும் 40 வைத்தியர் அல்லது 70 பொறியியலாளர் அல்லது 70 MBA பட்டதாரிகளை  உருவாக்கலாம்
 
இது சுவிசில் மட்டும் , மொத்த புலம் பெயர் நாடுகளையும் சேர்த்தால் !
 
புலம் பெயர் தேசங்களில் தற்போதய style சொந்த கோயில் கட்டுவது. சுவிசில் 4 அல்லது 5 கோயில்கள் கட்டப்படுகின்றன, இன்னும் சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கோயில்களின் பெறுமதியும் 2 - 4மில்லியன் பிராங்கள்.மக்களிடம்  மாதாமாதம் காசு சேர்த்து 7- 8 லட்சங்களை சேர்த்து விடுகிறார்கள், பின்னர் வங்கியில் தமது சேமிப்பில் இவ்வளவு இருக்கிறது, மாதாமாதம் இவ்வளவு வருகிறது எனக்காட்டுகிறார்கள். வங்கியும் கடன் கொடுக்க அனுமதிக்கிறது. கட்டுகிறார்கள்.
உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் இவ்வளவு மில்லியன் பிராங்குகளைக் களைக் கொட்டி புலம் பெயர் பெயர் தேசங்களில் கோயில்கள் தேவையா? 
 
கிழமையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் , அதுவும் ஆகக்கூடியது 4 அல்லது 5 மணித்தியாலங்கள் தான் அங்கே நிற்கப் போகிறார்கள், அதற்குப் போய் இவ்வளவு பணத்தினைக் கரியாக்கலாமா? 
 
சிறிய சுவிஸ் நாட்டில் 24 க்கு மேற்பட்ட கோயில்கள் தேவையா?
அதற்கு மாதாந்தம் ஒரு லட்சம் பிராங்குகள் செலவழிக்க வேண்டுமா?
மில்லியன்களை கடன் வாங்கி சொந்தக் கோயில்கள் அவசியந்தானா?
 
இங்கே கட்டப்படும் சொந்தக் கோயில்களுக்கான வங்கிக்கடனைச் செலுத்த‌ எப்படியும் 25- 30 வருடங்களுக்கு மேல் செல்லும் , அப்படியாயின் இந்தக்கோயில்களின் எதிர்காலம் எப்படி அமையும் ?
 
நாட்டில் இருந்து அகதிகள் வருவது முற்றாகவே நின்று விட்டது, இன்னும் 25- 30 வருடங்களில் நாம் எல்லோரும் 65-70 வயதை அடைந்து விடுவோம். அப்படியாயின் இந்தக் கோயில்களை யார் பொறுப்பெடுப்பது? எமது பிள்ளைகள் முன்னெடுப்பார்களா? வங்கிக்குரிய மிகுதிக் கடனைத் தொடர்ந்து கட்டுவார்களா?  நிச்சயமாக இல்லை.
பிள்ளைகள் ஏதோ ஒரு 14,15 வயது வரை பெற்றோருடன் கோயில்களுக்கு வருகிறார்கள் பின்னர் படிக்க வேண்டும் என்று ஏதோ ஒரு சாக்குப் போக்கு சொல்லி தவிர்க்கப் பார்க்கிறார்கள். அதையும் மீறி கட்டாயப்படுத்தி கோவிலுக்குக் கூட்டி வந்தால் எத்தனை பேர் சாமி கும்பிடுகிறார்கள் ?
 
எல்லாரும் பின்னால் நின்று ஐ போனை நோண்டிக் கொண்டு நிற்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது ஏனெனில் எமது கோயில்களில் அவர்களுக்கு ஆன்மீகம் சொல்லிக்கொடுக்கப் படுவதில்லை , எனது பார்வையில் எமது ஐயர்மாருக்கும்  ஆன்மீகம் தெரியாது. இங்குள்ள‌ பிள்ளைகளுக்கு எதையும் காரணங்களுடன் தெளிவாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் , இல்லாவிடில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வாழும் நாடுகள் அப்படி.
 
இந்தக் கோயில்களெல்லாம் எதிர்காலங்களில் வங்கிக்குரிய பணம் கட்டமுடியாமல் , வங்கிகளினால் தான் பொறுப்பெடுக்கப் படப்போகின்றன. கோயில்களுக்காக மாதாந்தம் 100, 200, 300 பிராங் என பணம் செலுத்துபவர்களே சற்று யோசியுங்கள் !
 
 
கோயில்களில் திருவிழாக்கள் என்ற பெயரில் நாம் எவ்வளவு அநியாயங்களைச் செய்கிறோம்.
 
(தேரிழுப்பின் போது) காசைக் குடுத்து தேங்காய்களை இறக்குமதி செய்து வீதிகளில் அடித்துடைத்து, வீதியைத் துப்பரவு செய்வதற்கு Gemeinde (council)காரனுக்கு காசு கொடுத்து பிறகு எல்லாவற்றையும் அள்ளி குப்பையில் போடுகிறம். எவ்வளவு பெரிய மடமைத்தனம், இது ஆன்மிகமா? 
யோசித்துப் பாருங்கள் உறவுகளே , நாம் வாழும் நாடுகளில் எம்மோடு வாழும் நூறு , நூற்றைம்பதுக்கு மேற்பட்ட நாட்டுக்காரர்களில் யாராவது ஒருத்தர்  இப்படியான‌ மடமைகளில் ஈடுபடுகின்றனரா?
 
இது வரை நாம் புலம் பெயர் நாடுகளில் உடைத்து குப்பைகளில் போட்ட தேங்காய்களின் பெறுமதியே ஒரு லட்சம் பிராங்குகளைத் தாண்டுமே.
 
 
என்னைப் பொறுத்த வரையில் கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள், கடவுள் கோயில்களில் இருக்கிறார் என்று சொல்பவன் படு முட்டாள். 
 
கோயில் கட்டி, கோயில்களில் உபயம் செய்து, அர்ச்சணை செய்து, இருக்கிற ஐயர் போதாது என்று ஊரிலிருந்து ஐந்தாறு ஐயர் மாரை வரவழைத்து அவர்களுக்கு பளபளக்கும் பட்டுக் குஞ்சம் கட்டி வரிசையாக நிக்கவைத்து புரியாத பாசையில் ஏதோ எல்லாம் சொல்ல வைத்து திருவிழா செய்து , தேரிழுத்து   
தேங்காய் உடைத்து, தீர்த்தமாடி கடவுளின் கிருபையை நீங்கள் பெறலாமென நினைத்தால். உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
கடவுளின் குழந்தைகளான ஏழ்மையான மக்களுக்கு உதவிகளைச் செய்து, அவர்களும் எம்மைப் போல் எல்லாம் பெற்று வாழ, எம்மால் முடிந்த முயற்சிகளைச்  செய்து,  இப்படியான நல்ல பண்புகளை எமது குழந்தைச் செல்வங்களிற்கும் சொல்லிக்கொடுத்து கடவுளையும், கடவுளின் கிருபையையும் என்றும் எம்முடனும் எமதுகுழந்தைகளுடனும் இருக்கப்பண்ணுவோம்.
 
கோயில்கள் எனும் பெயரில் மில்லியன் கணக்கான பணத்தினை பாழாக்குவதைத் தடுப்போம்.
 
என்னைப் பொறுத்த வரை புலம் பெயர் நாடுகளில் பெருந்தொகை பணத்தை விழுங்கி எழுந்து நிற்கும் கோயில்கள் எல்லாம் , எமது தாயக மக்களின் முன்னேற்றத்திற்கு கட்டப்பட்ட சமாதிகளே.
 
உறவுகளே தாயகத்தில் உள்ள எமது மாணவர்களையெல்லாம் பட்டதாரிகளாக்குங்கள். வெளிநாடுகளிலுள்ள மிகச்சிறந்த   பல்கலைக்கழகங்களில் அவர்களைக் கற்க வைத்து அதி உச்சத்தை தொட வையுங்கள் , எதையும் சாத்தியம் இல்லை என்று சொல்லாதீர்கள்.
 
சாத்திய‌மில்லை என  நினைத்திருந்தால், திருமதி இந்திரா (தமிழ் நாட்டில் சாதரண குடும்பத்தில் பிறந்த தமிழச்சி) PEPSI COLA வின் பிரதம தலைமை நிர்வாகியாகியிருக்க (CEO)முடியுமா? உலகில் அதிக சம்பளம் பெறும் பெண்களில் Top 10 இற்குள் இருக்க முடியுமா?
 
சாத்திய‌மில்லை என  நினைத்திருந்தால்
ஹைதராபாத்தில் சாதரண குடும்பத்தில் பிறந்த சத்யா  நாடெல்லா 
உலகின் முக்கிய பதவிகளில் ஒன்றான Micro soft இன் CEO ஆகியிருக்க முடியுமா?
 
இந்திரா , சத்யா  நாடெல்லா  போன்றவர்களை நாமும் உருவாக்கலாம் உறவுகளே , தாயகத்திலுள்ள எமது மாணவர்கள் அதி உச்சத்தைத் தொடக்கூடிய அறிவும் , ஆற்றலும் நிரம்பப் பெற்றவர்கள், அவர்களுக்கு இருக்கிற ஒரேயொரு தடை பணம் தான்,  அந்தத் தடையை உடைக்கக்கூடிய ஒரேயொரு பலம் புலத்துத் தமிழர் தான்.
 
நாம்  கட்டவேண்டியது அவர்களுக்குரிய கல்விக்கட்டணமேயொழிய , நிச்சயமாக கோவில்கள் இல்லை.

 

Link to comment
Share on other sites

புலம் பெயர் தேசத்து கோயில்கள்...................?

இங்கே சுவிசில் ஏறக்குறைய 24 கோயில்கள் இருக்கின்றன, ஒவ்வொரு கோயிலினதும் மாதாந்த சராசரி செலவு கிட்டத்தட்ட 3000 - 6000 பிராங்குகள். எப்படிப் பார்த்தாலும் மாதாந்தம் ஒரு லட்சம் பிராங்குகள் கோயில்களுக்காக செலவழிக்கப்படுகின்றன.

ஒரு வருடத்தில் 1.2 மில்லியன் பிராங்குகள் (வருடாந்த திருவிழா செலவுகள் தனி).

1.2 மில்லியன் பிராங்குகள் = 17.4 கோடி இலங்கை ரூபாய்கள்

ஒவ்வொரு வருடமும் 40 வைத்தியர் அல்லது 70 பொறியியலாளர் அல்லது 70 MBA பட்டதாரிகளை உருவாக்கலாம்

இது சுவிசில் மட்டும் , மொத்த புலம் பெயர் நாடுகளையும் சேர்த்தால் !

புலம் பெயர் தேசங்களில் தற்போதய style சொந்த கோயில் கட்டுவது. சுவிசில் 4 அல்லது 5 கோயில்கள் கட்டப்படுகின்றன, இன்னும் சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கோயில்களின் பெறுமதியும் 2 - 4மில்லியன் பிராங்கள்.மக்களிடம் மாதாமாதம் காசு சேர்த்து 7- 8 லட்சங்களை சேர்த்து விடுகிறார்கள், பின்னர் வங்கியில் தமது சேமிப்பில் இவ்வளவு இருக்கிறது, மாதாமாதம் இவ்வளவு வருகிறது எனக்காட்டுகிறார்கள். வங்கியும் கடன் கொடுக்க அனுமதிக்கிறது. கட்டுகிறார்கள்.

உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் இவ்வளவு மில்லியன் பிராங்குகளைக் களைக் கொட்டி புலம் பெயர் பெயர் தேசங்களில் கோயில்கள் தேவையா?

கிழமையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் , அதுவும் ஆகக்கூடியது 4 அல்லது 5 மணித்தியாலங்கள் தான் அங்கே நிற்கப் போகிறார்கள், அதற்குப் போய் இவ்வளவு பணத்தினைக் கரியாக்கலாமா?

சிறிய சுவிஸ் நாட்டில் 24 க்கு மேற்பட்ட கோயில்கள் தேவையா?

அதற்கு மாதாந்தம் ஒரு லட்சம் பிராங்குகள் செலவழிக்க வேண்டுமா?

மில்லியன்களை கடன் வாங்கி சொந்தக் கோயில்கள் அவசியந்தானா?

இங்கே கட்டப்படும் சொந்தக் கோயில்களுக்கான வங்கிக்கடனைச் செலுத்த‌ எப்படியும் 25- 30 வருடங்களுக்கு மேல் செல்லும் , அப்படியாயின் இந்தக்கோயில்களின் எதிர்காலம் எப்படி அமையும் ?

நாட்டில் இருந்து அகதிகள் வருவது முற்றாகவே நின்று விட்டது, இன்னும் 25- 30 வருடங்களில் நாம் எல்லோரும் 65-70 வயதை அடைந்து விடுவோம். அப்படியாயின் இந்தக் கோயில்களை யார் பொறுப்பெடுப்பது? எமது பிள்ளைகள் முன்னெடுப்பார்களா? வங்கிக்குரிய மிகுதிக் கடனைத் தொடர்ந்து கட்டுவார்களா? நிச்சயமாக இல்லை.

பிள்ளைகள் ஏதோ ஒரு 14,15 வயது வரை பெற்றோருடன் கோயில்களுக்கு வருகிறார்கள் பின்னர் படிக்க வேண்டும் என்று ஏதோ ஒரு சாக்குப் போக்கு சொல்லி தவிர்க்கப் பார்க்கிறார்கள். அதையும் மீறி கட்டாயப்படுத்தி கோவிலுக்குக் கூட்டி வந்தால் எத்தனை பேர் சாமி கும்பிடுகிறார்கள் ?

எல்லாரும் பின்னால் நின்று ஐ போனை நோண்டிக் கொண்டு நிற்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது ஏனெனில் எமது கோயில்களில் அவர்களுக்கு ஆன்மீகம் சொல்லிக்கொடுக்கப் படுவதில்லை , எனது பார்வையில் எமது ஐயர்மாருக்கும் ஆன்மீகம் தெரியாது. இங்குள்ள‌ பிள்ளைகளுக்கு எதையும் காரணங்களுடன் தெளிவாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் , இல்லாவிடில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வாழும் நாடுகள் அப்படி.

இந்தக் கோயில்களெல்லாம் எதிர்காலங்களில் வங்கிக்குரிய பணம் கட்டமுடியாமல் , வங்கிகளினால் தான் பொறுப்பெடுக்கப் படப்போகின்றன. கோயில்களுக்காக மாதாந்தம் 100, 200, 300 பிராங் என பணம் செலுத்துபவர்களே சற்று யோசியுங்கள் !

கோயில்களில் திருவிழாக்கள் என்ற பெயரில் நாம் எவ்வளவு அநியாயங்களைச் செய்கிறோம்.

(தேரிழுப்பின் போது) காசைக் குடுத்து தேங்காய்களை இறக்குமதி செய்து வீதிகளில் அடித்துடைத்து, வீதியைத் துப்பரவு செய்வதற்கு Gemeinde (council)காரனுக்கு காசு கொடுத்து பிறகு எல்லாவற்றையும் அள்ளி குப்பையில் போடுகிறம். எவ்வளவு பெரிய மடமைத்தனம், இது ஆன்மிகமா?

யோசித்துப் பாருங்கள் உறவுகளே , நாம் வாழும் நாடுகளில் எம்மோடு வாழும் நூறு , நூற்றைம்பதுக்கு மேற்பட்ட நாட்டுக்காரர்களில் யாராவது ஒருத்தர் இப்படியான‌ மடமைகளில் ஈடுபடுகின்றனரா?

இது வரை நாம் புலம் பெயர் நாடுகளில் உடைத்து குப்பைகளில் போட்ட தேங்காய்களின் பெறுமதியே ஒரு லட்சம் பிராங்குகளைத் தாண்டுமே.

என்னைப் பொறுத்த வரையில் கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள், கடவுள் கோயில்களில் இருக்கிறார் என்று சொல்பவன் படு முட்டாள்.

கோயில் கட்டி, கோயில்களில் உபயம் செய்து, அர்ச்சணை செய்து, இருக்கிற ஐயர் போதாது என்று ஊரிலிருந்து ஐந்தாறு ஐயர் மாரை வரவழைத்து அவர்களுக்கு பளபளக்கும் பட்டுக் குஞ்சம் கட்டி வரிசையாக நிக்கவைத்து புரியாத பாசையில் ஏதோ எல்லாம் சொல்ல வைத்து திருவிழா செய்து , தேரிழுத்து

தேங்காய் உடைத்து, தீர்த்தமாடி கடவுளின் கிருபையை நீங்கள் பெறலாமென நினைத்தால். உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கடவுளின் குழந்தைகளான ஏழ்மையான மக்களுக்கு உதவிகளைச் செய்து, அவர்களும் எம்மைப் போல் எல்லாம் பெற்று வாழ, எம்மால் முடிந்த முயற்சிகளைச் செய்து, இப்படியான நல்ல பண்புகளை எமது குழந்தைச் செல்வங்களிற்கும் சொல்லிக்கொடுத்து கடவுளையும், கடவுளின் கிருபையையும் என்றும் எம்முடனும் எமதுகுழந்தைகளுடனும் இருக்கப்பண்ணுவோம்.

கோயில்கள் எனும் பெயரில் மில்லியன் கணக்கான பணத்தினை பாழாக்குவதைத் தடுப்போம்.

என்னைப் பொறுத்த வரை புலம் பெயர் நாடுகளில் பெருந்தொகை பணத்தை விழுங்கி எழுந்து நிற்கும் கோயில்கள் எல்லாம் , எமது தாயக மக்களின் முன்னேற்றத்திற்கு கட்டப்பட்ட சமாதிகளே.

உறவுகளே தாயகத்தில் உள்ள எமது மாணவர்களையெல்லாம் பட்டதாரிகளாக்குங்கள். வெளிநாடுகளிலுள்ள மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் அவர்களைக் கற்க வைத்து அதி உச்சத்தை தொட வையுங்கள் , எதையும் சாத்தியம் இல்லை என்று சொல்லாதீர்கள்.

சாத்திய‌மில்லை என நினைத்திருந்தால், திருமதி இந்திரா (தமிழ் நாட்டில் சாதரண குடும்பத்தில் பிறந்த தமிழச்சி) PEPSI COLA வின் பிரதம தலைமை நிர்வாகியாகியிருக்க (CEO)முடியுமா? உலகில் அதிக சம்பளம் பெறும் பெண்களில் Top 10 இற்குள் இருக்க முடியுமா?

சாத்திய‌மில்லை என நினைத்திருந்தால்

ஹைதராபாத்தில் சாதரண குடும்பத்தில் பிறந்த சத்யா நாடெல்லா

உலகின் முக்கிய பதவிகளில் ஒன்றான Micro soft இன் CEO ஆகியிருக்க முடியுமா?

இந்திரா , சத்யா நாடெல்லா போன்றவர்களை நாமும் உருவாக்கலாம் உறவுகளே , தாயகத்திலுள்ள எமது மாணவர்கள் அதி உச்சத்தைத் தொடக்கூடிய அறிவும் , ஆற்றலும் நிரம்பப் பெற்றவர்கள், அவர்களுக்கு இருக்கிற ஒரேயொரு தடை பணம் தான், அந்தத் தடையை உடைக்கக்கூடிய ஒரேயொரு பலம் புலத்துத் தமிழர் தான்.

நாம் கட்டவேண்டியது அவர்களுக்குரிய கல்விக்கட்டணமேயொழிய , நிச்சயமாக கோவில்கள் இல்லை.

சிறந்த ஆலோசனைகள் தொடருங்கள்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
இங்கே சுவிசில் அண்மையில் கோயில் ஒன்று கட்டுவதற்கு விண்ணப்பித்திருந்தார்கள். ஆனால் அவர்களது விண்ணப்பம் இறுதியில் நிராகரிக்கப்பட்டு விட்டது. விண்ணப்பித்த செலவாக 70,000 பிராங் இழப்பு ஏற்பட்டதாக கூட்டத்தில் அறிவித்தார்கள். இவர்கள் இது வரை 3 தடவைகள் விண்ணப்பித்திருப்பார்கள் ஒவ்வொரு தடவையும்  நிராகரிக்கப்பட்டு விட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பிராங்குகள் வரை இழப்பு ஏற்பட்டிருக்கும். யோசித்துப் பாருங்கள்  , யாராவது தனது சொந்தக் காசில்  ஒன்றரை லட்சம் பிராங்குகளை இழக்க விரும்புவார்களா? மக்களிடம் காசைச் சேர்த்து இப்படிக் கரியாக்குகின்றார்கள். இப்போது அடுத்த தடவையும் முயற்சிப்பார்கள்.....!
கோயில் கட்டிக் கும்பிட்டால் கடவுள் கோயிலுக்குள் இருந்து எம்மைக் காப்பாற்றி அருள் புரிவாரா?
 
ஊரில் நாம் கட்டாத கோயில்களா?  செய்யாத‌ திருவிழாக்களா?
இருந்தும் நாம் மிகப் பெரிய பேரழிவையும் , பெருந்துயரத்தையும் சந்தித்த இனமாக அல்லவா இருக்கிறோம் ஏன்?
 
நிற்க ,
 
ஒருக்கா சுவிசினுள் சென்று விட்டு மீண்டும்  இந்த வினாவுக்கு வருவோம்.
 
அண்மையில் ஒரு நாள் வேலை முடிந்து உடுப்பு மாற்றிக் கொண்டிருந்தேன், என்னுடன் வேலை செய்யும் சுவிஸ் பெடியணும் வேலை முடித்து வீட்டுக்கு போவதற்கு உடுப்பு மாற்ற வந்தான் (போன வருடம் வரை  Lehrling (apprentice)ஆக இருந்து இப்போது தான் முழு நேர வேலை செய்கிறான் ) அவன் சப்பாத்து போடும் போது பார்த்தேன் அவனது சப்பாத்து வித்தியாசமாக ஆனால் வடிவாக இருந்தது. உனது சப்பாத்து நல்ல வடிவாக இருக்கிறது என்றேன் , நன்றி சொன்னவன்  போன வாரம் தான் வாங்கினேன்  480 பிராங் என்றான் . என்ன 480 பிராங்கா, NIKE, adidas என்று ஒரு மார்கையும் கானேல ,480 பிராங் என்கிறாய் என்றேன். NIKE, adidas எல்லாம் உங்கள் மாதிரி ஆக்கள் போடுறது. இது ( ஏதோ ஒரு பெயர் சொன்னான் நினைவிலில்லை), முன்னால் ஹொலன்ட் கால் பந்து வீரர் ஒருவர் பிரத்தியோகமாக ஒரு சின்ன தொழிற்சாலை வைத்து தயாரிக்கிறார். மிக குறைந்த அளவில் தான் உற்பத்தி செய்கிறார், சூரிச்சில் ஒரு sports  கடையில் வாங்கினேன் என்றான்
 
இங்கே சுவிசில் சம்பளம் அப்படித்தான் . 19 வயதில் 4500 பிராங்குக்கு மேல் எடுப்பார் கள். ஒரு Lehre முடித்துவிட்டு ஒரு weiterbildung  (further training) முடிப்பார்கள் சம்பளம் 5000 பிராங்கைத் தாண்டும். எனது அனுபவத்தில் பலரைக் கண்டுள்ளேன்.எனது factory இல் lehrling  ஆக படித்த இப்போது வேறு இடத்தில் technische verkäufer வேலை செய்யும் பெடியன் ஒருவரை போன வாரம் சந்தித்தேன் 22 வயதில் 7000 பிராங் சம்பளம் (+ கொமிசன் ) எடுக்கிறார்.
 
எங்கள் வேலைத்தளத்தில்  வேலை செய்யும் 22 வயது பெடியன் போனவாரம் VW Golf R புதிய கார் வாங்கி யிருந்தார் கிட்டத்தட்ட 60 000 பிராங்குகள்
 
உண்மை தான்  உறவுகளே சுவிசில் உண்மையிலே நல்ல சம்பளம் தான் , சம்பளம் மட்டும் என்றில்லை, மருத்துவ வசதி, வீட்டு வசதிகள், பாதூகாப்பு, காலநிலை, கல்வி வசதிகள் என்று எதை எடுத்தாலும் இங்கு 5 நட்சத்திர தரம் தான். (ஒவ்வொரு துறையின் சிறப்புகளையும் பற்றி பந்தி பந்தியாக எழுதலாம்) 
 
நான் அடிக்கடி நினைப்பேன் இவர்களுக்கு  கடவுளின்  ஆசிர்வாதம் குறைவில்லாமல் கிடைகிறது என:
 
ஆனால் இவர்கள் . கோயில்களுக்கு போவதே மிக அரிது, வீடுகளில் சாமியறையே இருப்பதில்லை, பலர் வருடத்திற்கு ஒரு முறைகூட கோயிலுக்குப் போற‌தில்லை. அப்படியாயின் கடவுளின் கிருபை இவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது. கடவுள் ஏன் இந்த நாட்டைச் சொர்க்க பூமியாக வைத்திருக்கிரார்? 
 
இங்கே தான் சுவிஸ் காரர் எலோருக்கும் முன் மாதிரியாகாத் திகழ்கிறார்கள்.
 
தான தர்மம் செய்வதில் சுவிஸ் மக்களுக்குள்ள  ஆர்வமும் அக்கறையும் மிகப் பெரியது உலகத்தில் எங்கே பாதிப்பேற்பட்டாலும் உடனடியாக மக்களிடம் நிதி சேகரித்து அனுப்புவார்கள். ஹெய்ட்டியில் பூகம்பம் ஏற்பட்ட போது 2 நாட்களில் 20 மில்லியணுக்கு மேற்பட்ட பணத்தினைச் சேர்த்து அனுப்பியிருந்தார்கள், இது ஒரு சாதனை, சுவிசிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் அணைத்தும் மக்களின் தாராளமனதைப் பெரிதும் பாராட்டியிருந்தது. 
 
ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் காலத்தில் ஒரு நகரத்தினை மையப்படுத்தி , எதாவதொரு வேலைத் திட்டத்திற்கு பணம் சேர்ப்பார்கள். போன வருடம் லுசேர்ன் நகரை மையபப்படுத்தி "ஆண் துணை யில்லாமல் தனித்து வாழும் தாய்க்கும் பிள்ளைக்கும் உதவுதல்"  எனும் வேலைத்திட்டத்திற்கு பணம் சேர்த்திருந்தார்கள்.  போன வருடம் மட்டும் மொத்தமாக 52.2 மில்லியன் பிராங்குகள் சேர்த்திருந்தார்கள். இந்தப் பணத்தில் ஒரு சதத்தினை கூட அவர்கள் சுவிஸ் மக்களுக்காகப் பயண்படுத்தப் போவதில்லை, அனத்தும் வேறு நாடுகளில் உள்ள ஏழைகளுக்கே பயண்படப் போகின்றன.
 
மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மிகப் பெரிய குப்பை மலைகளில் பிளாஸ்டிக் பொறுக்கி வாழ்க்கை நடத்தும் குழந்தைகளின் நிலையை நினைத்து இப்போது பெரிதும் கவலைப்படுகிறார்கள், அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, பாடசாலைக்கு அவர்களை அனுப்புவதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறார்கள். 
 
உலக மக்கள் எப்படியெல்லாம் துன்பப் படுகிறார்கள் என்பது இவர்களுக்கு எப்படித் தெரியும்?  
 
Documentry film - இங்குள்ள TV களிலெல்லாம் வாரத்திற்கு பல Documentry film  போடுவார்கள், எப்படியும் ஒன்றிரண்டு உலக நாடுகளில் உள்ள மக்களின் துன்பன்களைப் பற்றி விபரிக்கும் (எங்களுக்கும் இருக்குதே தமிழ் TV கள் ? கருமம்)
 
சுனாமி பேரழிவு ஏற்பட்ட நேரம். நாம் இங்கு மக்களிடம் உடுப்புகள் சேர்த்து நாட்டுக்கு அனுப்புவதற்குரிய வேலைத்திட்டம் ஒன்றை செய்திருந்தோம், எமது நண்பர் ஒருவர் வேலை செய்யும்  தொழிற்சாலையினுடைய களஞ்சிய அறை ஒன்று எமது வேலைகளுக்காக இலவசமாகக் கிடைத்திருந்தது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை , நாம் உடுப்புகளை தரம் பிரித்துக் கொண்டிருந்தோம், வாகனங்களும் வருவதும் போவதுமாக இருந்தன, அருகிலிருந்த வீட்டுக்காரர்கள் பல்கணியால் வந்து எட்டிப் பார்த்தார்கள்.(சுவிசில் ஞாயிற்றுக் கிழமை என்பது மிகவும் அமைதியான நாள் சிறிய சத்தம் எழும் உள் வேலைகளைல் கூட யாரும் செய்ய மாட்டார்கள் ) நாம் போட்ட சத்தம் நிச்சயம் அவர்களை எரிச்சலடைய வைத்திருக்கும். சிறிது நேரத்தில் ஒருவர்  வந்தார் , நீங்கள் அதிக சத்தம் போடுகிறீர்கள் இன்று  ஞாயிற்றுக் கிழமை எனத் தெரியாதா என்ன செய்கிறீர்கள் என்றார்?  நாம் அவருக்கு விளங்கப்படுத்தினோம், அவரும் டிவியில் சுனாமி அவலங்களைப் பார்த்தபடியால் ஒன்றும் கதைக்கவில்லை சென்று விட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் வந்தார், எம்மிடம் 100 பிராங் காசினைத் தந்து எமக்கு ஆறுதல் சொல்லிவிட்டுச் சென்றார்.
 
யோசித்துப் பாருங்கள் உறவுகளே 
 
அந்தசுவிஸ் காரருக்கு நாம் யார், 
 
வேறு நாடு, வேறு கண்டம், வேற்று மதம் , வேறு மொழி, வேறு நிறம் , அவர் ஏன் எமக்கு உதவ வேண்டும் , பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டியது தனது கடமை என நினைக்கிறார், அதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்தவுடன் உடனடியாகச் செயற்படுகிறார். அந்த 100 பிராங் பண‌ம் நேர்மையாக போய் சேருமா? எனக் கூட அவர் நினக்கவில்லை. தனது கடமையை அவர் செய்கிரார். இதன் மூலம் கடவுளின் விருப்பத்திற்குரியவராகின்றார். இதன் பலன் இவரின் முழு சந்ததியையும் சென்றடைகிறது.
 
இப்போது மீண்டும் மேலேயுள்ள‌ எனது வினாவுக்குச் செல்லுங்கள்
 
 
நான் 4 அல்லது 5  வ்குப்பு படிக்கும் போது நடந்த சம்பவம்
 
எமது வகுப்பில் கூலித்தொழிலாளி ஒருவரின் மகனும் படித்தான். நன்றாகப் படிப்பான் , மிக நன்றாகப் படிப்பான் என்று சொல்லலாம் எனெனில் அவன் ரியூசனுக்குப் போறதில்லை , இரவிலும் படிக்க மாட்டான்  (அவனுடய குடிசை வீட்டில் கரண்ட் இல்லை), மாலை வேலையில் வீட்டில் உள்ள மாட்டிற்கு புல் செருக்குவான் (தாயும் தந்தையும் கூலி வேலைக்கு செல்வதால் மாடு வளர்ப்பது இவனுடைய பொறுப்பு). பாடசாலையில் படிப்பதை வைத்து மட்டும் நன்றாகவே படிப்பான்,
 
ஆனால் இவனது பெரிய பிரச்சனை நீலக் காற்சட்டை. அவனிடம் ஒன்று தான் இருந்திருக்க வேண்டும் அழுக்கானால் மாற்றுக் 
 காற்சட்டை இல்லாதனாலோ , அல்லது சகோதரத்துடன் பகிர்ந்து போட வேண்டியதாலோ என்னவோ வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் அவன் நீலக் காற்சட்டை போடமாட்டான், வேறு கலர் காற்சட்டை போடுவான் , இது எமது வகுப்பாசிரியைக்கு கொஞ்ச‌மும் பிடிக்காது. அந்த நாட்களில் அவன் எப்படியும் முதல் இரண்டு பாடங்கள் வெளியில் நின்று கொண்டு தான் பாடத்தைக் கவணிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் அவன் வெளியில் நிற்பதென்பது வழமை இது பக்கத்து வகுப்பாசிரியைகளுக்கும் தெரியும். பக்கத்து வகுப்பாசிரியை இவனைக் கண்டால் "என்னடா இன்டைக்கும் உனக்கு கல்யாண வீடே கலர், கலர் காற்சட்டைகளோட பள்ளிக்கூடம் வாறாய்" என்ற படி தான் கடந்து போவா. இவன் ஒரு சிரிப்புடன் எல்லவற்றயும் தாங்கிய  படி நிற்பான், அவனுக்கு வீட்டில் வறுமை, காற்சட்டை கேட்டிருப்பான் , கொஞ்ச நாள் சமாளி பிறகு பார்ப்போம் எனச் சொல்லியிருப்பார்கள் , அவன் என்ன தான் செய்வது?
 
இந்தச் சந்தர்ப்பத்தில் எமது வகுப்பாசிரியை  என்ன செய்திருக்க வேண்டும்? (அவன் படிக்கக் கூடிய மாணவனென்பதும் அவாவிற்குத் நன்கு தெரியும்)
 
அவனை அழைத்து " இங்க வா  ப்பு , எனக்குத் தெரியும் உனக்கு வீட்டில் கஸ்டம் என்று  அதனால் தானே நீ  நீலக் காற்சட்டை போடுறதில்லை, நான் உனக்கு இரண்டு காற்சட்டை வாங்கித் தாறன் . நீ நல்லாப் படிச்சு பெரியாளக வளர்ந்து நல்லா உழைச்சு உன்ர அப்பா அம்மாவைப் காப்பாற்று , பாவம் தானே அவையள் உன்னைக் கூலி வேலை செய்து கஸ்ட்டப் பட்டுத்தானே வளர்க்கினம் நீ தானே அவர்களை எதிர் காலத்தில் நல்லா வைத்திருக்க வேண்டும் "
எனச் சொல்லி இரண்டு காற்சட்டைகளும் வாங்கிக் கொடுத்திருந்தால் அவன் சிகரம் தொட்டிருப்பான். ஆனால் எமக்கு தானே இப்படியான நல்ல மனம் கிடையாதே.  இப்படியான நல்ல‌ மனங்கள் எமக்கு இருந்திருந்தால் நாம் இப்போது சுதந்திர தமிழீழத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருப்போம்.
 
எமது வகுப்பாசிரியரின் கணவரும் அரசாங்கத்தில் உயர் தொழிலில் இருக்கிறார். இவர்கள் ஊரில் உள்ள கோயிலுக்கு  பெயின்ற் அடித்து , ரியூப் லைற் எல்லாம் வாங்கிக் கொடுத்து அந்த ரியூப் லைற்றில் தமது பெயரையும் எழுதியிருந்தார்கள்.  லைட் எரியும் போது கடவுள் பார்ப்பார். யார் தனக்கு லைட் வாங்கிக் கொடுத்தென்று , பிறகு அவர்களின் வீட்டிற்குச் சென்று அருள் மழையை அள்ளிப் பொழிவார்..........?  மோட்டுக் கூட்டங்கள்.....!
 
வாழும் மனிதனுக்கு ஒரு நூறு கொடுத்து  காற்சட்டை வாங்கிக் கொடுக்க மனமில்லை, சில பல ஆயிரங்கள் கொடுத்து கல்லுக்கு பெயின்ற் அடித்து , ரியூப் லைற் எல்லாம் வாங்கிக் கொடுக்கத்தெரியுது. 
 
கடவுளின் அருள் உங்களுக்கு கிடைக்குமா.? 
 
கடவுள் என்ன உங்களைப் போல் முட்டாளா?  யாரை ஏமாற்றுகிறீர்கள்? 
 
அன்மையில் அவுஸ்திரேலியா தமிழ் அகதிகளை ஏற்கவில்லை என எத்தனை பேர் இணையத்தில் வெளுத்து வாங்கினீர்கள்? உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் புலம் பெயர்தமிழர் தாயகத்தில் உள்ள உங்கள் உறவுகளுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?,  மொத்தப் புலம் பெயர் நாடுகளிலும் உள்ள கோவில்களினதும் பெறுமதி யென்ன? அதற்கான வருடாந்திர செலவென்ன?  கோயில்களுக்காக வீணாக்கப் படும் பணத்தின் ஒரு கால்பங்குப் பணத்திலேயே தாயகத்தில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தலாமே? 
 
அவுஸ்திரேலியன் அன்னியன் அவன் ஏன் எம்மை ஏற்க வேண்டும்? 
 
 அவன் மீது குற்றப் பத்திரிகை வாசிக்க எமக்கு என்ன தகுதி யுண்டு?
 
தாயகத்தில் அல்லல் படுபவருக்கு உதவாமல், இங்கு கோயில்கள் எனும் பெயரில் மில்லியன்களைக் கரியாக்குவது என்பது ஊரில் சிறுவயதில் எனது வகுப்பாசிரியை ஏழை மாண‌வனுக்கு காற்சட்டை வாங்கிக் கொடுக்காமல்,  கோயிலுக்கு  பெயின்ற் அடித்து , ரியூப் லைற்  வாங்கிக் கொடுத்து செயலுக்கு சமமானது.
 
சுவிஸ் நாடு சொர்க்கம் என்று சொல்ல நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள் , இங்கு வாழ்பவன் , இவர்களின் வாழ்க்கை முறையை அனுபவரீதியாக உணர்ந்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன் உண்மையிலேயே சுவிஸ் ஒரு பூலோக சொர்க்கம் தான்.
 
ஏழ்மையான மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்து  அதன் மூலம் கடவுளின் பரிபூரண அருளையும்  பாதுகாப்பையும் தமக்கும் தமது சந்ததிமுழுவதிற்கும் பெற்றுள்ளார்கள் என்பது எனது அசையாத நம்பிக்கை.
 
உதவி செய்வோம் உறவுகளே , எமது மண்ணில் உள்ள எமது மக்களுக்கு உதவுவோம். பிறருக்கு உதவி வாழும் வாழ்க்கையே ஒரு இனிமையான அனுபவம் நண்பர்களே..............

 

 

Link to comment
Share on other sites

பதிவு சற்று பெரிதாக உள்ளதிற்கு மன்னிககவும். (எனக்குள் இருக்கும் கோபங்களும் பெரியது), நேரம் கிடைத்தால் இன்னும் வரும்......
ஆதவன் 
Link to comment
Share on other sites

 

பதிவு சற்று பெரிதாக உள்ளதிற்கு மன்னிககவும். (எனக்குள் இருக்கும் கோபங்களும் பெரியது), நேரம் கிடைத்தால் இன்னும் வரும்......
ஆதவன் 

 

ஆதவன் எழுதுங்கள். எங்கேனும் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தினாலே அது பெரிய வெற்றி. உங்கள் ஆதங்கம் கோபம் நியாயமானது. எனினும் எங்களது பரம்பரை வாழ்வியல் சூழல் மத நம்பிக்கைகளை மாற்றுவது என்பது இலகுவான விடயமல்ல.நீண்டகால உழைப்பு போராட்டம் மட்டுமே மாற்றத்தை உருவாக்கக்கூடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புலம் பெயர் தேசத்து கோயில்கள்...................?
 
இங்கே சுவிசில் ஏறக்குறைய 24 கோயில்கள் இருக்கின்றன, ஒவ்வொரு கோயிலினதும் மாதாந்த சராசரி செலவு கிட்டத்தட்ட 3000 - 6000 பிராங்குகள். எப்படிப் பார்த்தாலும் மாதாந்தம் ஒரு லட்சம் பிராங்குகள் கோயில்களுக்காக செலவழிக்கப்படுகின்றன.
ஒரு வருடத்தில் 1.2 மில்லியன் பிராங்குகள் (வருடாந்த திருவிழா செலவுகள் தனி). 
1.2 மில்லியன் பிராங்குகள் = 17.4 கோடி இலங்கை ரூபாய்கள்
 
ஒவ்வொரு வருடமும் 40 வைத்தியர் அல்லது 70 பொறியியலாளர் அல்லது 70 MBA பட்டதாரிகளை  உருவாக்கலாம்
 
இது சுவிசில் மட்டும் , மொத்த புலம் பெயர் நாடுகளையும் சேர்த்தால் !
 
புலம் பெயர் தேசங்களில் தற்போதய style சொந்த கோயில் கட்டுவது. சுவிசில் 4 அல்லது 5 கோயில்கள் கட்டப்படுகின்றன, இன்னும் சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கோயில்களின் பெறுமதியும் 2 - 4மில்லியன் பிராங்கள்.மக்களிடம்  மாதாமாதம் காசு சேர்த்து 7- 8 லட்சங்களை சேர்த்து விடுகிறார்கள், பின்னர் வங்கியில் தமது சேமிப்பில் இவ்வளவு இருக்கிறது, மாதாமாதம் இவ்வளவு வருகிறது எனக்காட்டுகிறார்கள். வங்கியும் கடன் கொடுக்க அனுமதிக்கிறது. கட்டுகிறார்கள்.
உறவுகளே சற்று சிந்தித்து பாருங்கள் இவ்வளவு மில்லியன் பிராங்குகளைக் களைக் கொட்டி புலம் பெயர் பெயர் தேசங்களில் கோயில்கள் தேவையா? 
 
கிழமையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் , அதுவும் ஆகக்கூடியது 4 அல்லது 5 மணித்தியாலங்கள் தான் அங்கே நிற்கப் போகிறார்கள், அதற்குப் போய் இவ்வளவு பணத்தினைக் கரியாக்கலாமா? 
 
சிறிய சுவிஸ் நாட்டில் 24 க்கு மேற்பட்ட கோயில்கள் தேவையா?
அதற்கு மாதாந்தம் ஒரு லட்சம் பிராங்குகள் செலவழிக்க வேண்டுமா?
மில்லியன்களை கடன் வாங்கி சொந்தக் கோயில்கள் அவசியந்தானா?
 
இங்கே கட்டப்படும் சொந்தக் கோயில்களுக்கான வங்கிக்கடனைச் செலுத்த‌ எப்படியும் 25- 30 வருடங்களுக்கு மேல் செல்லும் , அப்படியாயின் இந்தக்கோயில்களின் எதிர்காலம் எப்படி அமையும் ?
 
நாட்டில் இருந்து அகதிகள் வருவது முற்றாகவே நின்று விட்டது, இன்னும் 25- 30 வருடங்களில் நாம் எல்லோரும் 65-70 வயதை அடைந்து விடுவோம். அப்படியாயின் இந்தக் கோயில்களை யார் பொறுப்பெடுப்பது? எமது பிள்ளைகள் முன்னெடுப்பார்களா? வங்கிக்குரிய மிகுதிக் கடனைத் தொடர்ந்து கட்டுவார்களா?  நிச்சயமாக இல்லை.
பிள்ளைகள் ஏதோ ஒரு 14,15 வயது வரை பெற்றோருடன் கோயில்களுக்கு வருகிறார்கள் பின்னர் படிக்க வேண்டும் என்று ஏதோ ஒரு சாக்குப் போக்கு சொல்லி தவிர்க்கப் பார்க்கிறார்கள். அதையும் மீறி கட்டாயப்படுத்தி கோவிலுக்குக் கூட்டி வந்தால் எத்தனை பேர் சாமி கும்பிடுகிறார்கள் ?
 
எல்லாரும் பின்னால் நின்று ஐ போனை நோண்டிக் கொண்டு நிற்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது ஏனெனில் எமது கோயில்களில் அவர்களுக்கு ஆன்மீகம் சொல்லிக்கொடுக்கப் படுவதில்லை , எனது பார்வையில் எமது ஐயர்மாருக்கும்  ஆன்மீகம் தெரியாது. இங்குள்ள‌ பிள்ளைகளுக்கு எதையும் காரணங்களுடன் தெளிவாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் , இல்லாவிடில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் வாழும் நாடுகள் அப்படி.
 
இந்தக் கோயில்களெல்லாம் எதிர்காலங்களில் வங்கிக்குரிய பணம் கட்டமுடியாமல் , வங்கிகளினால் தான் பொறுப்பெடுக்கப் படப்போகின்றன. கோயில்களுக்காக மாதாந்தம் 100, 200, 300 பிராங் என பணம் செலுத்துபவர்களே சற்று யோசியுங்கள் !
 
 
கோயில்களில் திருவிழாக்கள் என்ற பெயரில் நாம் எவ்வளவு அநியாயங்களைச் செய்கிறோம்.
 
(தேரிழுப்பின் போது) காசைக் குடுத்து தேங்காய்களை இறக்குமதி செய்து வீதிகளில் அடித்துடைத்து, வீதியைத் துப்பரவு செய்வதற்கு Gemeinde (council)காரனுக்கு காசு கொடுத்து பிறகு எல்லாவற்றையும் அள்ளி குப்பையில் போடுகிறம். எவ்வளவு பெரிய மடமைத்தனம், இது ஆன்மிகமா? 
யோசித்துப் பாருங்கள் உறவுகளே , நாம் வாழும் நாடுகளில் எம்மோடு வாழும் நூறு , நூற்றைம்பதுக்கு மேற்பட்ட நாட்டுக்காரர்களில் யாராவது ஒருத்தர்  இப்படியான‌ மடமைகளில் ஈடுபடுகின்றனரா?
 
இது வரை நாம் புலம் பெயர் நாடுகளில் உடைத்து குப்பைகளில் போட்ட தேங்காய்களின் பெறுமதியே ஒரு லட்சம் பிராங்குகளைத் தாண்டுமே.
 
 
என்னைப் பொறுத்த வரையில் கடவுள் இல்லை என்று சொல்பவன் முட்டாள், கடவுள் கோயில்களில் இருக்கிறார் என்று சொல்பவன் படு முட்டாள். 
 
கோயில் கட்டி, கோயில்களில் உபயம் செய்து, அர்ச்சணை செய்து, இருக்கிற ஐயர் போதாது என்று ஊரிலிருந்து ஐந்தாறு ஐயர் மாரை வரவழைத்து அவர்களுக்கு பளபளக்கும் பட்டுக் குஞ்சம் கட்டி வரிசையாக நிக்கவைத்து புரியாத பாசையில் ஏதோ எல்லாம் சொல்ல வைத்து திருவிழா செய்து , தேரிழுத்து   
தேங்காய் உடைத்து, தீர்த்தமாடி கடவுளின் கிருபையை நீங்கள் பெறலாமென நினைத்தால். உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 
கடவுளின் குழந்தைகளான ஏழ்மையான மக்களுக்கு உதவிகளைச் செய்து, அவர்களும் எம்மைப் போல் எல்லாம் பெற்று வாழ, எம்மால் முடிந்த முயற்சிகளைச்  செய்து,  இப்படியான நல்ல பண்புகளை எமது குழந்தைச் செல்வங்களிற்கும் சொல்லிக்கொடுத்து கடவுளையும், கடவுளின் கிருபையையும் என்றும் எம்முடனும் எமதுகுழந்தைகளுடனும் இருக்கப்பண்ணுவோம்.
 
கோயில்கள் எனும் பெயரில் மில்லியன் கணக்கான பணத்தினை பாழாக்குவதைத் தடுப்போம்.
 
என்னைப் பொறுத்த வரை புலம் பெயர் நாடுகளில் பெருந்தொகை பணத்தை விழுங்கி எழுந்து நிற்கும் கோயில்கள் எல்லாம் , எமது தாயக மக்களின் முன்னேற்றத்திற்கு கட்டப்பட்ட சமாதிகளே.
 
உறவுகளே தாயகத்தில் உள்ள எமது மாணவர்களையெல்லாம் பட்டதாரிகளாக்குங்கள். வெளிநாடுகளிலுள்ள மிகச்சிறந்த   பல்கலைக்கழகங்களில் அவர்களைக் கற்க வைத்து அதி உச்சத்தை தொட வையுங்கள் , எதையும் சாத்தியம் இல்லை என்று சொல்லாதீர்கள்.
 
சாத்திய‌மில்லை என  நினைத்திருந்தால், திருமதி இந்திரா (தமிழ் நாட்டில் சாதரண குடும்பத்தில் பிறந்த தமிழச்சி) PEPSI COLA வின் பிரதம தலைமை நிர்வாகியாகியிருக்க (CEO)முடியுமா? உலகில் அதிக சம்பளம் பெறும் பெண்களில் Top 10 இற்குள் இருக்க முடியுமா?
 
சாத்திய‌மில்லை என  நினைத்திருந்தால்
ஹைதராபாத்தில் சாதரண குடும்பத்தில் பிறந்த சத்யா  நாடெல்லா 
உலகின் முக்கிய பதவிகளில் ஒன்றான Micro soft இன் CEO ஆகியிருக்க முடியுமா?
 
இந்திரா , சத்யா  நாடெல்லா  போன்றவர்களை நாமும் உருவாக்கலாம் உறவுகளே , தாயகத்திலுள்ள எமது மாணவர்கள் அதி உச்சத்தைத் தொடக்கூடிய அறிவும் , ஆற்றலும் நிரம்பப் பெற்றவர்கள், அவர்களுக்கு இருக்கிற ஒரேயொரு தடை பணம் தான்,  அந்தத் தடையை உடைக்கக்கூடிய ஒரேயொரு பலம் புலத்துத் தமிழர் தான்.
 
நாம்  கட்டவேண்டியது அவர்களுக்குரிய கல்விக்கட்டணமேயொழிய , நிச்சயமாக கோவில்கள் இல்லை.

 

இது ஆறு அறிவும் செயட்பட்டில் உள்ளவர்களுடந்தான் பேச கூடிய விடயம்.
 
மக்கள் உதவிகள் அற்று கேட்போர் அற்று நிற்க என்ன காரணம்? அங்கே யார் நிற்கிறான்?
என்னுடைய உங்களுடைய சகோதர்கள்தான் நிற்கிறார்கள்.
 
தமிழனின் சுயநலத்தால்தான் அவர்கள் அங்கு அப்படி நிற்கிறார்கள்.
குறுக்குவழியால் கடவுளுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் சீரும் சிறப்பும் பெற்று வாழாலாம் என்று வாழ்பவன் இடம் இதை பற்றி பேசி அவனுக்கு ஏதாவது புரியுமா?
 
 
கனடாவில் இந்துகல்லூரி பெயரில் வருடா வருடம் நிகழ்ச்சி நடக்கிறது. காசு சேர்த்து கல்லூரிக்கு அனுப்புகிறார்களாம். அப்படி அனுப்பினால் இப்போ இந்து வளாகத்திற்குள் நிற்க இடம் இருக்காது எல்லா இடமும் கட்டிடம்தான் இருக்கும்.
நிகழ்ச்சி 6 மணிக்கு ஆரம்பம் .........
மதுக்கடை 5 மணிக்கே திறப்பு  "இந்து கல்லூரி பழைய மாணவர்" சிறப்புடன் ஒன்றுகூடுவது.
என்னத்திற்கு என்று நான் எழுதினால் அது தப்பாக மாறிவிடலாம்.
எது நடந்ததோ ........... அதை அப்படியே எழுதுகிறேன்.
 
இந்த புத்தியின் பாரபலனைதான் அவர்கள் அங்கே அனுபவிக்கிறார்கள். தமிழனின் புத்தியை மாற்றுவதற்கு முதலில்  முயற்சிக்க வேண்டும்.
 
சுயவிளம்பர தாரிகள் கோவில் சுவர்ல்களை இப்போ தமதாக்கி கொண்டு விட்டார்கள். எல்லா கோவிலும் தலை நிமிர்ந்து  நிற்கிறது.
ஏழ்மையை காட்டி மிரட்டி கோவில் வீதியிலேயே விபச்சாரம் நடக்கிறது.
Link to comment
Share on other sites

அப்படியே அல்லேலூயாவிற்கு தாவி அங்கு நடப்பவற்றையும் எழுதுங்கள். போதகரும் அவரின் மனைவி பிள்ளைகளும் BMW,BENZ, RANGER ROVER என்று சுற்றுவதையும், இலங்கையில் ஊழியம் செய்ய என காசு திரட்டி விடுமுறைக்கு செல்வதையும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
கணணி மென் பொறியியலாளர் ஒருவரை உருவாக்கிய எனது அனுபவம்
 
5 வருடங்களுக்கு முன்னர்
 
நான் ஒருமுறை ஊரிலுள்ள எனது அம்மாவிற்கு தொலை பேசி எடுத்த போது , எமது பழைய குடும்ப நண்பர் ஒருவரின் மகனும் வீட்டில் இருந்தார் அவர்கள் சற்று வறுமையான குடும்பத்தவர்கள்.
அவரை எனக்குத் தெரியும், நான் வெளி நாடு புற‌ப்படும் போது சிறுவர்களாக இருந்தவர்கள். அவருடன் கதைத்த  போது...
ஊரில் என்ன செய்கிறீர்கள் என்றேன்
ஒரு சின்ன வீடியோ கடை வைத்திருக்கிறேன் என்றான்,
வருமானம் காணுமோ என்றேன்
இல்லை, சும்மா இருப்பதற்கு பதில் ஏதாவது செய்வம் என்று செய்கிறேன் என பதில் வந்தது.
 
என்ன படித்தனிங்கள் என்றேன்
 A/L Maths படித்தேன்2C 1S
 
வேறு ஏதும் செய்ய ஏலாதோ எனக் கேட்ட போது,
 
இங்கு என்னத்த்தைச் செய்வது, A/L படித்தால் பல்கலைக் கழகம்
போக வேண்டும் , தவறினால் வெளி நாடு, அதுக்கு காசில்லாதவர்கள், இப்படி ஏதாவது சுய தொழில் தான் என விரக்தியாக பதில் வந்தத்து.
நீங்கள் நல்லா படிப்பீர்கள் என கேள்விப்பட்டேன், அப்ப ஏன் A/L pass பண்ணவில்லை என்றேன்.
 
நல்லா படிச்சனான், ஆசிரியர்மாரின் விருப்பத்திற்குரிய மாணவனாக எல்லாம் இருந்தணான், என்ன செய்ய எனது திறமையை 3 மணித்தியால டெஸ்ட் பேப்பரில காட்டமுடியாம போச்சு.
 
எங்க படிச்சனிங்கள்
Jaffna Hindu
 
அப்ப ஏன் வீடியோ கடை வைத்திருக்கிறீர்கள்?
எனக்கு இதுவாவது கிடைத்தது, எவ்வளவு கெட்டிக்கர பெடியன்கள் எல்லாம் பல்கலைக் கழக வாய்ப்பு கிடைக்காமல் , இதுவும் கிடைக்காமல் சும்மா இருக்கிறார்கள்.
 
ஏன் அப்படி வேறு ஒரு வழியும் இல்லையா என்றேன்?
இருக்குது, கொழும்பில் HND படித்து மேற்கொன்டு ஏதாவது படித்து லண்டன் டிகிரிகள் எடுக்கலாம் , இது எல்லாம் மிகப்பெரிய செலவான வழி பணக்காரர்களுக்குத் தான் சரிவரும், என்றான்
 
எனக்கு அவருடன் கதைத்த போது மிகவும் கவலையாக இருந்தது, ந‌ல்லா படித்த மாணவர் இல் மூன்று பாடம் பாஸ் பண்ணியிருக்கிறார் ஆனால் வீடியோ கடைவத்திருக்கிறார், இவருக்கு ஏதாவது உதவி செய்யச் சொல்லி என் உள் மனம் உறுத்திக் கொண்டிருந்தது. சரி ஏதாவது செய்வம் என முடிவடுத்து அவரிடம் கேட்டேன்,  உஙகளுக்கு ஏதாவது உதவிகள் தேவையா எனக் கேட்டேன் , இல்லை என சொன்னார், மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கேட்டேன்,
 
ஒரு Computer வாங்கித்தந்தால் , நல்லா இருக்கும் CD write பண்ண உதவியாக இருக்கும், நான் அந்தப் பணத்தினைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பித் தருகிறேன் என்றான்.
 
நான் சொன்னேன், நான் இந்த உதவியைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை நீங்கள் மேற்கொண்டு ஏதாவது படிப்பது தொடர்பாக ,HND  படிக்க ஆர்வம் இருக்குதா ? என்றேன்
 
எனக்கு கணணி தொடர்பாக ஆர்வம் இருக்குது, இங்கே சில Programm language படித்தேன் , ஆர்வமாக இருந்தது, ஆனால் செலவுகள் கூட இப்போது படிக்கப்போவதில்லை,எனது நண்பன் ஒருவர் கொழும்பில் HND  படிக்கிறார். அவர் என்னையும் படிக்கச் சொல்லி சிபார்சு செய்தார்.......... எனத் தொடர்ந்தார். 
செலவு எவ்வளவு வரும் என்றேன்.
fees மாத்திரம் 3 லட்சம் அளவில் வரும் எனக் கூறினார்
 
எனக்கு ஏற்கனவே ஒரு மாணவரை யாவது எனது செலவில் பட்டதாரி ஆக்க வேண்டும் என்ற இலட்சியம் இருந்த படியால் நான் அதிகம் யோசிக்க வில்லை. 
நீங்கள் கொழும்பு சென்று HND படிக்கிற முழுச் செலவையும் நான் ஏற்கின்றேன், நீங்கள் அதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள் எனக் கூறினேன்.
அவர் அதிர்ந்தே போனார்.அவரால் அதை நம்ப முடியாமல் இருந்தது என நினைக்கிறேன். மீண்டும் மீண்டும் கேட்டார், 
நான் தெளிவாகச் சொன்னேன் ஆம்மாம் நீங்கள் கொழும்பு சென்று HND படிபதற்கான, மற்றும் தங்குவதற்கான ரூம் மற்றும் சாப்பாட்டுச் செலவு அணைத்தையும் நான் தருகிறேன் ஒன்றைப் பற்றியும் யோசிக்காமல் நீங்கள் படியுங்கள் என்றேன்.
அவர் கொழும்பு வந்து  HND  கல்வியைத் தொடர்ந்தார், அதே நேரம் பிரத்தியோகமாக computer programming, english class களுக்கும் போனார், நான் எல்லாவற்றுக்கும் போகச் சொன்னேன், ஒரு நிமிடத்தையும் வீணாக்க வேண்டாம் எனச் சொண்னேன் , எல்லாவற்றுக்கும் பணம் அனுப்பினேன்.
 
எனக்கு ஆங்கில மொழி மீது அலாதிப் பிரியம், அறிவியல் ரீதியில் முன்னேறுவதற்கு  ஆங்கிலம் மிக மிக அவசியம், அதனைத் தெளிவாகக் கற்க வேண்டும். சும்மா கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கற்று பழுதாக்கக் கூடாது,
எனது நண்பன் ஒருவர் சேரசிங்க எனும் ஒரு ஆங்கில ஆசிரியரைப் பற்றி எனக்கு அறியத்தந்தார். மிகச் சிறந்த ஆங்கில ஆசிரியர். கனடாவில் வாழ்ந்தவர். நல்ல அனுபவம் மிக்கவர் என்றார்,
நான் சேரசிங்கவின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து அவரிடம் ஆங்கில வகுப்பிற்கு போகச் சொண்னேன். அவர் முதல் வகுப்புக்கு போய் வந்து என்னிடம் தயங்கித் தயங்கிச் சொன்னார் , அவரிடம் வருபவர்கள் எல்லாம் high class ஆக்களாக இருக்கிறார்கள், அவ்வளவு பேருக்கும் முன்னால் என்னை எழுப்பிப் பேசிப்போட்டார், எனது உச்சரிப்பு படுமோசம் என்கிறார், அத்துடன் fees உம் கூட என்றார்.
நான் சொண்னேன் , அப்படியா,
 அப்படியென்ரால் அவர் தான் உங்களுக்கு ஆங்கிலம் படிக்க சரியான ஆள் அவரிடம் தொடர்ந்து செல்லுங்கள், நான் இந்த மாதத்திலிருந்து 20 பிராங் காசு கூடப் போட்டு விடுகிறேன் என‌,
சில மாதங்கள் கழித்து என்னிடம் சொனன்னார்  நான் தான் இப்போது வகுப்பிலேயே சிறந்த மாணவன் என, ஆசிரியரின் விருப்பத்திற்குரிய மாணவனாக உள்ளேன் என்றார்.
இப்படி அவரை சகல வழிகளிலும் நான் ஊக்குவித்தேன்.
 
சிறப்பாக HNDமுடித்தவர். இன்கிலாந்தின் University of Greenwich இன் Bsc computer science degree இனை இலங்கையில் கற்று பட்டம் பெற்றார் (HND செய்தவர்களுக்கு University of Greenwich  தனது computer science degree யில்  2 வருட விலக்களித்திருந்தது)
அதன் பின்னர்   software company ஒன்றில் 25 000 ரூபாய் சம்பள்த்தில் வேலைக்குச் சேர்ந்தவர், 
 
இன்று
 
தனது திறமையினால் முன்னேறி வேறொரு நிறுவனத்தில் 90 000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்,  அன் நிறுவனத்தில் மிகச் சிறந்த programmer ஆக இருக்கிறார்
 
வெளி நாட்டுக்கு வந்து master degree ஏதவது செய்யுங்கள் என சொன்னேன்.
அவர் சொன்னார்
computer software இல் degree யை விட நீங்கள் செய்யக்கூடிய வேலைக்குத் தான் மதிப்புக் கூட  , தற்போது நான் வேலை செய்யும் நிறுவனத்தில்  நல்ல அனுபவங்களைப் பெற்றுள்ளேன் பல Programm களை எழுதியுள்ளேன், பல application களை உருவாக்கியுள்ளேன் client meeting க்கு எல்லாம் நான் தான் தனியே செல்கிறேன் meeting எல்லாம் பெரும்பாலும் 5 star hotel களில் தான் clients பொதுவாக கிழக்காசிய மற்றும் சைனா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
நான் சொந்தமாக ஒரு software company தொடங்க இருக்கிறேன், எனது பெயரில் பதிவும் செய்து விட்டேன் . company தொடங்கிய பின்னர் தான்  வெளிநாட்டில் வந்து ஏதாவது படிக்கலாம் என நினக்கிறேன் , படித்துக் கொண்டு எனது company க்கு  clients  உம் சேர்க்கலாம் என இருக்கிறேன் என்கிறார், என்னையும் clients  எடுத்து தரச் சொல்கிறார், mobile application எல்லாம் tip top ஆகச் செய்யலாம் என்கிறார்.....
 
அன்று வீடியோ கடைவைத்திருந்த ஒருவர் இன்று கணணி மென் பொறியியலாளர்.
 
இப்படி தாயகத்தில் பல வீரிய வித்துகள் இருக்கின்றன , அவை பெரு விருட்சமாவதும் வீணாகிப் போவதும் எமது கைகளில் தான்
(பல திறமையான மாணவர்கள் ஏற்கனவே வீணாகிப் போய் விட்டார்கள்)
 நாம் நினைத்தால் எவ்வளவோ பெரிய மாற்ற‌த்தினை நாட்டில் உருவாக்கலாம்.
 
இவருக்கு நான் ஏற‌க்குறைய 14 000 பிராங் வரையில் பணம் அனுப்பியிருந்தேன். இதனை நான் கடனாகக் கொடுத்தேன் என்று தான் சொல்ல வேண்டும் ஏனெனில் அவரும் இலங்கையிலுள்ள எனது வங்கிக்கணக்கிற்கு மாதமாதம் அவரால் முடிந்தளவு பணத்தினை திருப்பிச் செலுத்துகிறார், இதுவரை 565,000 ரூபாய்கள்  செலுத்தியுள்ளார்.
 வருகிற வருடம் இன்னுமொரு மாணவனுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளேன்.
 
இந்தத்திரியில் சென்று வாசித்துப் பாருங்கள் இவர்கள் ஒரு சிறிய அமைப்பாக இருந்து கொண்டு எத்தனை பேரை உருவாக்கியிருக்கிறார்கள் என, 
எமது புலம் பெயர்ச் சமூகம் நினைத்தால்  மிகப்பெரிய‌ மகத்தான  மாற்றத்தினை தாயகத்தில் ஏற்படுத்தலாமென.....
 
 
 
தொடரும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஆதவன்..எனக்கும் இவ்வாறு உதவுவது மிகவும் பிடித்த விடையம். :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.